M.SivaRajan Profile picture
May 20 17 tweets 3 min read Twitter logo Read on Twitter
#சூர்ப்பனகை

சூர்ப்பனகை மிகவும் நல்லவள் :

சூர்ப்பனகை மிகவும் கெட்டவள் என்று நினைத்து இருப்பவருக்கு இந்த பதிவு படியுங்கள் உண்மை தெரியும்

சூர்ப்பனகை தன் கணவனான வித்யுத்ஜிகவனின் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தாள்
இருவரும் மிக அன்பாக சந்தோஷமாக இல்லறம் நடத்தி வந்தனர். Image
சூர்ப்பனகை காலகேயர்கள் என்ற பலம் வாய்ந்த அரக்கர்கள் கூட்டத்தில் ஒருவனான வித்யுக்ஜிகவன் என்பவனை திருமணம் செய்திருந்தாள்

ஒருமுறை இராவணன் தன் தவ வலிமையை அதன் பெருமையை மூவுலகுக்கும் காட்ட மூவுலகுக்கும் திக்விஜயம் செய்தான்
திக்விஜயம் செய்த இராவணன்,
மேலுலக தேவர்களையும் கந்தவர்களையும் வென்றான்

இறுதியாகக் அரக்கர்களில் பலம்வாய்ந்த காலகேயர்கள் என்பவர்களை எதிர்க்க துணிந்தான்

காலகேயர்கள் என்பவர்கள் அரக்கர்களில் ஒரு விசேச பிரிவினர்.

அவர்கள் பொன்னை போன்ற தங்கமயமான நிறத்தை உடையவர்கள்.
அந்த காலகேயர்களும் இராவணனனைப் போலவே பிரம்மாவை நோக்கி தவமிருந்து அளவற்ற வரங்களை பெற்றவர்கள்

அவர்களும் மனிதர்களைத் தவிர வேறு யாராலும் தங்களை வெல்ல அழிக்க முடியாத அளவு வரம் பெற்றவர்கள்,

எனவே அரக்கனான இராவணனனால் இவர்களை ஜெயிக்க இயலாது.
இராவணன் காலகேயர்களை எதிர்க்க சென்றான்‌. முக்கிய காலகேயர்கள் இல்லாததால் அந்த காலகேயர்கள் சார்பாக சூர்பனகையின் கணவர் வித்யுத்ஜிகவன் இராவணனை எதிர்த்தான்

இராவணனன் அவருடன் போரிட்டு வெற்றி பெற முடியாமல் ஒரு சூழ்ச்சி செய்து இரக்கமின்றி
தனது தங்கையின் கணவனான வித்யுத்ஜிகவனைத் தன் வாளால் வெட்டி வீழ்த்தி வெற்றி பெற்றதாக கொக்கரித்தான்.

கணவனின் மரண செய்தியறிந்து ஓடோடி வந்து சூர்ப்பனகை கதறி துடித்து அழுது புரண்டாள்,
தனது தங்கையின் வாழ்க்கையை அழித்த மனவுறுத்தல் கிஞ்சித்தும் இன்றி வெற்றி களிப்பில் இராவணன் தனது பயணத்தைத் தொடர்ந்து இலங்கைக்கு சென்று விட்டான்.

சூர்பனகை தன் கணவன் சடலத்தின் முன் சபதமேற்கிறாள்.

என் பிராணநாதனே உம்மை கொன்றவனை நான் கொல்வேன்.
என்னால் நேரடியாக முடியாவிட்டாலும் உன்னை சூழ்ச்சி செய்து கோன்றது போல் சூழ்ச்சி செய்தாவது கொடியவனான என் அண்ணன் இராவணனை அழிப்பேன் என வீர சபதமேற்றாள் சூர்ப்பனகை.

ஒரு மானிடரால் மட்டும் தான் இராவணனைக் கொல்ல முடியும் என உணர்ந்தவள்
இராவணனை அழிக்க தக்கக் காலத்திற்காகவும் காத்திருந்தாள்.
அப்படியாக வாழ்ந்து வரும் சமயத்தில் தான் பஞ்சவடியில் அண்ணல் ஶ்ரீ இராமரைக் கண்டு இவரால் தன் அண்ணன் இராவணனை அழிக்க முடியும் என எண்ணி
ஶ்ரீ இராமருக்கும் இராவணனுக்கும் தொடர்பை ஏற்படுத்த தன்னால் என்ன செய்ய முடியும் என சிந்தித்தே,
ஶ்ரீ இராமரை திருமணம் செய்ய விரும்புவதாக பிடிவாதம் பிடித்து இலட்சுமணரால் மூக்கறுபட்டாள்.

உடனே இராவணனின் ஆணைப்படி பஞ்சவடியை ஆண்டு வந்த தன் மற்ற சகோதர்களான கர தூஷணாதிகளிடம் ஶ்ரீ இராமனால் தனக்கேற்பட்ட அவமானத்தைக் கூறினாள்.
அவர்களும் பெரும் படையுடன் வந்து எதிர்த்தனர் அவர்களை தனியாக நின்று இராமர் அழித்ததையும் கண்ணாரக் கண்டாள்.

தான் இராவணனைக் கொல்ல சரியான நபரைக் கண்டு விட்டோம் என ஆனந்தபட்டு நேரே இலங்கைக்குச் சென்றாள்.
பஞ்சவடியில் நடந்ததை அப்படியே சொல்லாமல் கொஞ்சம் மாற்றி சொன்னாள்.

விருப்பமில்லாதப் பெண்ணை  தொட்டால் தலை வெடித்துச் சாவாய் என ரம்பை இராவணனைச் சபித்ததையும் இணைத்து ஒரு திட்டம் போட்டாள்.
ரம்பையின் அந்த சாபத்தின் காரணத்தால் தான் அவன் சீதையைத் தூக்கி வந்த பின்னும் தொடவில்லை தன் மரணத்திற்கு அஞ்சியே சீதையைத் தொட அஞ்சினான்.

சூர்பனகைக்கு தெரியும் தன் அண்ணன் பெரிய பெண்பித்தன் என்று...

எனவே அவள் சீதையின் அழகைப் பலமடங்காக சிலாகித்து வர்ணித்தாள்.
அண்ணா அவ்வளவு அழகான சீதையை நீ அடையாவிடில் உன் பெருமைக்கு மாபெரும் இழப்பு எனத் தூண்டிவிட சூர்பனகை விரித்த வலையில் மாட்டிய இராவணன் இறுதியில் சூர்பனகை எண்ணப்படியே சீதா தேவியை சிறை பிடிக்க செய்து அதனாலேயே ஶ்ரீ இராமரால் கொல்லப்பட்டான்.
மகாபாவி இராவணன் இறந்ததைக் கண்ணாரக் கண்டுகளித்தச் சூர்ப்பனகை,

ஶ்ரீ இராமரையும் சீதையையும் ஆத்மார்த்தமாக வணங்கி விட்டு தன் சபதம் முடிந்தத் திருப்தியில்,

தனது சகோதரனான விபீஷணனின் ஆட்சியின் கீழ் அவள் இருக்க விரும்பாமலும்,
தன் கணவனை கொன்ற இராவணன் ஆட்சி செய்த இடத்திலும் அவள் இருக்க விரும்பாமலும் கண்கானாத இடத்திற்கு சென்று இறுதி காலத்தை கழித்தாள்

சூர்பனகையின் பதிபக்தியும் மதியூகமும் தன் வாழ்வை அழித்ததால் பழி தீர்த்த மனவுறுதியும்,
அவள் நல்லவள் என்ற முகம் மறைக்கப்பட்ட ஒரு பரிதாபமான ஜீவனே.

#சூர்ப்பனகை

#சூர்ப்பனகை_சபதம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

May 20
#ஸ்ரீ_ரங்கநாதர்

ஸ்ரீ ரங்கநாதனை பார்க்காத இந்த கண்கள் எதற்கு?

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், மிகச்சிறப்பு வாய்ந்ததுமானது ஸ்ரீ ரங்கம்.

திருவரங்கம், பெரியகோயில், பூலோக வைகுண்டம் என்று பலபெயர் கொண்டு போற்றப்படும் இத்திருக்கோயிலில் சயனித்திருப்பவர் ஸ்ரீ ரங்கநாதர். Image
த்வைத, அத்வைத மற்றும் விசிஷ்டாத்வைதத்தை சேர்ந்த மகான்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாதனைக் குறித்து பாடியுள்ளனர்.

அதே போல், த்வைத சம்பிரதாயத்தை சேர்ந்த ஹரி - தாஸர்கள் பலரும் ஸ்ரீரங்கநாதனை பாடியுள்ளனர்.

அவற்றில் ஒரு பாட்டு தான் இன்றைய பதிவில் பார்க்கப் போவது.
புரந்தர தாஸர், விஜயதாஸர் இவர்களுக்கெல்லாம் முதல்மையானவர் - தாஸர்களுக்கெல்லாம் பிதாமகர் - என்று அழைக்கப்படுபவர் - ஸ்ரீ பாதராயர் ஆவார்.

வாழ்ந்த ஆண்டு 1420 - 1486.

ஏகப்பட்ட கன்னட பக்தி பாடல்களை
இயற்றியுள்ள ஸ்ரீ பாதராயர், துருவரின் அவதாரமாக கருதப்படுபவர்.
Read 11 tweets
May 20
#ஸ்ரீ_நெல்லிகேஸ்வர_ஸ்வாமி

கோபம் நீங்கிட நாம் வணங்க வேண்டிய திருத்தலம் :

"திருநெல்லிக்காவல்". இத்திருத்தலம் திருவாரூரில் உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் திருநெல்லிகேஸ்வரர்.

பஞ்சகூடபுரம்' என்று சொல்லப்படும் ஐந்து தலங்களுள் ஒன்று. Image
இத்தலம் சூரியன், பிரம்மன், திருமால், சந்திரன், சனிபகவான், கந்தர்வர், துர்வாசர்,ஆகியோர் வழிபட்ட ஸ்தலம்.

கோபத்திற்கு பெயர் பெற்றவர் துர்வாசர், இவரின் கோபம் இத்தலத்திற்கு வந்து குறைந்த காரணத்தால், இங்கு சென்று வணங்குபவர்களின் கோபமும் குறையும்.
ஒரு மனிதனுக்கு கட்டுப்பட்ட நியாயமான கோபங்கள் வரலாம், ஆனால் அளவிற்கு மீறிய கோபத்தால் ஒரு மனிதன் தானும் அழிந்து பிறரையும் அழித்து விடுவான்.

மேலும் இத்தல சிவனை வழிபட குஷ்டம் போன்ற கொடிய தோல் வியாதிகள் நீங்கும்.
Read 6 tweets
May 19
#ஸ்ரீ_தார்மீக_நாத_ஸ்வாமி

பித்ரு தோஷம் நீக்கும் குணசீலம் தார்மீக நாதர் ஆலயம் :

2,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது குணசீலத்தில் உள்ள தார்மீக நாதர் ஆலயம்.

இது ஒரு பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகும். Image
ஆலய வரலாறு :

சூறைக்காற்று, பேய் மழை, ஊரெங்கும் வெள்ளம்.

காவிரியில் நொங்கும் நுரையுமாகப் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது.

பிரளயம் ஏற்பட்டு விட்டதோ என மக்கள் மனதில் அச்சம் பரவத் தொடங்கியது.

வெள்ளத்தில் உருக்குலைந்த எந்த ஆலயத்திலிருந்தோ சிவபெருமானின் திருமேனி ஒன்று
காவேரி வெள்ளத்தில் அசுர வேகத்தில் அடித்துக் கொண்டு வந்தது.

வந்த வேகத்தில் அந்த திருமேனி இரண்டாகப் பிளந்தது.

அதன் ஒரு பகுதி காவிரியின் வடகரையிலும் இன்னொரு பகுதி தென்கரையிலும் ஒதுங்கியது.

வடகரையில் ஒதுங்கிய திருமேனி சித்தர் ஒருவரின் பார்வையில் பட்டது.
Read 21 tweets
May 18
*#கழற்சிங்கர்_நாயனார்_குருபூஜை*

பல்லவ நாட்டை கழற்சிங்கர் என்பவர் மணிகண்டப் பெருமானின் பேரருளால் அறநெறி குன்றாது அரசோச்சி வந்தார்.

இவர் வடபுலத்து மன்னர்களை வென்று வாகை சூடி பொன்னும் பொருளும் பெற்றார். Image
இவ்வாறு பெற்ற பெரு நவநிதிகளை ஆலய வழிபாட்டிற்கும், அடியார்கள் வழிபாட்டிற்கும் பயன்படுத்தினார்.

ஒரு சமயம் மன்னர் திருவாரூரில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானைச் சந்திக்க எண்ணினார்.

தமது பிராட்டியாருடனும், பரிவாரங்களுடனும் புறப்பட்டார்.
திருவாரூரை அடைந்த நாயனார் பிறைமுடிப் பெருமான் குடிகொண்டிருக்கும் பூங்கோயிலை அடைந்தார்.

புற்றிடங்கொண்ட நாயகரின் திருமுன் வீழ்ந்து வணங்கி எழுந்தார்.

பூங்கோயில் புண்ணியரின் அருள்வடிவத்திலே மெய்மறந்து கண்ணிலே நீர்மல்க உள்ளத்திலே அன்பு பொங்கப்,
Read 15 tweets
May 18
#ஸ்ரீ_தட்சிணாமூர்த்தி

ரிஷபத்தின் முன் நின்ற 
கோலத்தில் காட்சி தரும்

ஸ்ரீ தட்சிணாமூர்த்தியின் 
அபூர்வக் கோலம் :

விழுப்புரத்திலிருந்து 26 கி.மீ தொலைவில் உள்ள தேவாரத் தலம் திருநாவலூர்.

இறைவன் திருநாமம் பக்தஜனேஸ்வரர்.

இறைவியின் திருநாமம் மனோன்மணி அம்மை. Image
எம்பிரான் சுந்தரர் சுவாமிகள் அவதரித்த தலம்.

 தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 219 வது தேவாரத்தலம் ஆகும்.

பிரம்மா, விஷ்ணு . சண்டிகேசுவரர், சப்தரிஷிகள், கருடன், சுந்தரர்,சடைய நாயனார், இசைஞானியார், நரசிங்க முனையர் வழிபட்ட தலம்.
பொதுவாக எல்லா சிவாலயங்களிலும் தென்முக கடவுளான தட்சிணாமூர்த்தி ஆல மரத்தின் கீழ், அமர்ந்த நிலையில்தான் காட்சிகொடுப்பார்.

கலைகளுக்கும் கல்விக்கும் குருவாக விளங்குவதால் குரு தட்சிணாமூர்த்தி என்று அழைக்கபடுவார்.
Read 8 tweets
May 13
#அப்பர்_சுவாமிகள்_குருபூஜை

சித்திரை - சதயம் அப்பர் சுவாமிகள் குருபூஜை இன்று.

#அப்பர்_சுவாமிகள்_வரலாறு

இது ஒரு மிகப்பெரிய திரேட்.

ஆகவே அனைவரும் அப்பர் சுவாமிகளின் முழு வரலாறையும் பொறுமையாக படிக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

இந்த பதிவை அவசியம் ரீடுவிட் செய்ய வேண்டுகிறேன். Image
*திருமுனைப்பாடி பல்லவ நாட்டின்கண் அமைந்துள்ளது.

இத்தலத்தில் ஓங்கி உயர்ந்த மாடங்களும், கூடகோபுரங்களும், பண்டக மாலைகளும், மணிமண்டபங்களும் சிவத் தலங்களும் நிறைந்துள்ளன.

புத்தம் புதுமலர்க் கொத்துக்களைத் தாங்கிக் கொண்டு பெருகி ஓடிவரும் பெண்னை ஆற்றின்
பெருவளத்திலே செந்நெல்லும், செங்கரும்பும் செழித்து காணப்பட்டன.

இங்கு வாழும் மக்கள் நல்லொழுக்கத்திலும், நன்னெரியிலும் தமக்குவமை இல்லாதவர்களாய் வாழ்ந்து வந்தனர்.

உலகமெங்கும் சைவநெறியை நிலைநிறுத்திய சமயக்குரவர் நால்வருள்
Read 285 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(