M.SivaRajan Profile picture
May 26 23 tweets 4 min read Twitter logo Read on Twitter
#பலராமர்

நன்றிக் கடனாக உருவான அவதாரம் ..!!

திருமாலின் மற்ற அவதாரங்கள்,

வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி எடுக்கப்பட்டவை.

ஆனால் பலராம அவதாரம் அவரது கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்புடையது. Image
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரம் பலராம அவதாரம்.

இது மற்ற அவதாரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. .

வேதத்தைத் திருடிச் சென்ற சோமுன் என்ற அசுரனை அழித்து,

வேதத்தை மீட்பதற்காக எடுக்கப்பட்டது மச்ச அவதாரம்.
தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க வேண்டி மேரு மலையை தாங்க எடுக்கப்பட்டது கூர்ம அவதாரம்.

இரண்யாட்சனை அழித்து கடலுக்கு அடியில் இருந்து பூமியை மீட்க எடுக்கப்பட்டது வராக அவதாரம்.

தன் பக்தனான பிரகலாதனை காப்பாற்ற எடுக்கப்பட்டது நரசிம்ம அவதாரம்.
மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அடக்க எடுக்கப்பட்டது வாமன அவதாரம்.

ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற உன்னத தத்துவத்தை உணர்த்த எடுக்கப்பட்டது ராம அவதாரம்.
தர்மத்தின் வாழ்வுதனை சூதுகவ்வும், இருப்பினும் மறுபடியும் தர்மமே வெல்லும் என்பதை உணர்த்த எடுக்கப்பட்டது கிருஷ்ண அவதாரம்.

ஆனால் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்வுக்கு உற்ற துணையாக இருந்தவர்களை, உன்னதமாக நினைக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட அவதாரமே, பலராமர் அவதாரம்.
திருமாலின் அவதார வரிசை பற்றிய சந்தேகம் நாரதருக்கு ஏற்பட்டது.

அப்போது திருமால் கிருஷ்ண அவதாரத்தில் இருந்தார்.

நேராக அவரிடம் சென்ற நாரதர், “இறைவா! இந்த கிருஷ்ண அவதாரம் உங்களுடைய எத்தனையாவது அவதாரம்?” என்று கேட்டார்.
அதற்கு கிருஷ்ணர்,

“இது என்னுடைய ஒன்பதாவது அவதாரம்” என்று பதிலளித்தார்.

“அப்படியானால் எட்டாவது அவதாரம் எது?” என்ற நாரதரின் கேள்விக்கு, “இப்பிறவியில் எனக்கு அண்ணனாக பிறந்துள்ள பலராமன் தான், என்னுடைய எட்டாவது அவதாரம்” என்றார்.
குழப்பம் அடைந்த நாரதர், “எப்படி பெருமாளே! தங்களின் படுக்கையாக இருக்கிற ஆதிஷேசன் என்ற நாகம் தானே பலராமனாக பிறந்துள்ளது.

அப்படியிருக்க, பலராமன் எப்படி தங்களது அவதார கணக்கில் வர முடியும்?” என்று கேட்டார்.
“நாரதரே, எனது ராம அவதாரத்தில் எனக்கு தம்பியாக பிறந்து சதா சர்வகாலமும்,

‘அண்ணா.. அண்ணா..’ என்று என் காலையே பிடித்து கொண்டிருந்த லட்சுமணனுக்கு,

நான் இதுவரை எதுவுமே செய்யவில்லையே.

அதனால் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.
ஆதிசேஷன் மூலமாக எனது அண்ணனாக அவனை படைத்து, தினமும் அவன் காலில் நான் விழுந்து எனது நன்றிக் கடனை தீர்த்துக் கொள்வதோடு, எனது அவதாரத்தில் ஒரு பங்கையும் அவனுக்கு தந்துள்ளேன்” என்றார் பரந்தாமன்.

இப்படி திருமாலே உருகி உருவாக்கிய உன்னத அவதாரமே, பலராமர் அவதாரம்.
கலப்பையை ஆயதமாகக் கொண்ட பலராமர், உறவுமுறையில் கிருஷ்ணரின் சகோதரர்,

கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் முதல் மனைவி ரோகிணியின் வயிற்றில் உதித்தவர்.

இவரை ‘பலதேவன்’, ‘பலபுத்திரன்’, ‘கதாயுதன்’ என்று போற்றுவர்.
பெருமாள் வெண்ணிறத்தில் தோன்றிய அவதாரம் இது.

பலராமரின் தங்கை பெயர் சுபத்திரை.

பலராமர் பிறந்தபோது, அவனுக்கு யதுகுல குருவாகிய கர்கர், சடங்குகள் செய்து ராமன் என்று பெயரிட்டார்.

மேலும் அந்தக் குழந்தை மிகவும் பலசாலியாக இருந்ததால், ‘பலராமன்’ என்றும் அழைக்கலாம் என்றார்.
ரோகிணியின் வயிற்றில் உதித்த பலராமனும், தேவகி வயிற்றில் உதித்த கண்ணனும் இணை பிரியா சகோதரர்கள் ஆயினர்.

பிருந்தாவனத்திலும், ஆயர்பாடியிலும் இவர்கள் நடத்திய திருவிளையாடல் கொஞ்ச நஞ்சமல்ல.
கோவர்த்தனகிரியில் இவர்கள் மாடு மேய்க்கும் காலத்தில்,

மனித மாமிசத்தை உண்ணும் வழக்கம் கொண்ட கழுதை வடிவிலான தேனுகன் என்பவனையும்,

வில்வ மரத்தடியின் கீழ் வில்வ பழத்தால் பந்தாடிய காலத்தில் பிரலம்பன் என்பவனையும்,
நரகாசுரனின் வானரத் தலைவனான துவிதனின் சகோதரன் மயிந்தன் என்பவனையும் இருவரும் சேர்ந்தே அழித்தனர்.
#மகாபாரதத்தில்_பலராமர்

துரியோதனனுக்கு லட்சுமளை என்ற பெண் இருந்தாள்.

அவளுக்கு திருமணம் செய்ய சுயம்வரம் ஏற்பாடு செய்தான், துரியோதனன்.

சுயம்வரத்திற்கு வந்த சாம்பன், லட்சுமளையை தூக்கிச் சென்றான்.

சாம்பன் வேறுயாருமல்ல, கிருஷ்ணருக்கும் ஜாம்பவதிக்கும் பிறந்த மகன் தான்.
தன் மகளை சாம்பன் தூக்கிச் சென்றதும், துரியோதனன் தன் படையோடு வந்து சாம்பனுடன் பேரிட்டான்.

அவர்களை எதிர்த்து நின்றான் சாம்பன்.

இருப்பினும் அந்த படையில் பலம் வாய்ந்த பீஷ்மரும், துரோணரும் இருந்ததால், சாம்பன் சிறைபடுத்தப்பட்டான்.
இதுபற்றி அறிந்ததும் பலராமர்,

அஸ்தினாபுரம் வந்து துரியோதனனைச் சந்தித்தார்.

“துரியோதனா! நீ செய்ததில் நியாயம் இல்லை.

தனி ஒருவனாக போராடிய சாம்பனை, படையோடு சென்று சிறைபடுத்தியிருக்கிறாய்.

நாங்கள் உன்னுடைய உறவினர் என்பது மறந்து போயிற்றா?
ஏன் எப்பொழுது பார்த்தாலும் எங்களோடு பகைமை பாராட்டிக் கொண்டே இருக்கிறாய்?

சாம்பனை விடுவித்து, உன்னுடைய மகளை அவனுக்கு திருமணம் செய்து கொடு” என்றார்.

ஆனால் அதை கொஞ்சமும் காதில் வாங்கிக் கொள்ளாமல் துரியோதனன்,
பலராமரையும் அவர் குலத்தையும் இழிவாகப் பேசினான்.

அதனால் பலராமருக்குக் கோபம் பீறிட்டது.

“உங்களோடு சண்டை போட்டு ஜெயிக்க வேண்டும் என்ற அவசியமே எனக்கு இல்லை.

கணப் பொழுதில் உங்களைக் கூண்டோடு துவம்சம் செய்கிறேன்” என்று கூறி,

தன் ஆயுதமான கலப்பையை எடுத்து தரையில் அடித்தார்.
அடுத்த நொடி அஸ்தினாபுரமே வேரோடு பெயர்ந்து கிளம்புவது போல் ஆட்டம் கண்டது.

கங்கையில் நதியில், அந்த நகரமே மூழ்கிப் போகுமோ என்ற பயம் அனைவரையும் தொற்றிக் கொண்டது.

உடனே துரியோதனன், பலராமர் காலில் விழுந்து தன்னை மன்னிக்கும் படி வேண்டினான்.
அத்துடன் லட்சு மளையை, சாம்பனுக்கு மணம் முடித்துக் கொடுக்கவும் சம்மதித்தான்.

அதன்பிறகு, தன் கலப்பையை மீண்டும் தரையில் மோதி ஆட்டம் கண்டு நின்ற அஸ்தினாபுரத்தை முன் இருந்த நிலைக்கு பலராமர் கொண்டுவந்து நிலைப்படுத்தினார்...

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

May 26
#இலுப்பை_எண்ணெய்

ஐஸ்வர்யம் தரும் இலுப்பை எண்ணெய் :

திருஇரும்பை மாகாளம், திருப்பழமணிப் படிக்கரை, திருக்கொடி மாடச் செங்குன்னூர், திருவனந்தபுரம் முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தல விருட்சமாக இருக்கிறது. Image
இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்யெண்ணை எனப்படுகிறது. 

இலுப்பை எண்ணெய் சகல தேவர்களுக்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது.

ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது.
இந்த எண்ணெயை  விளக்கில் ஊற்றி இறைவனை வழிபட காரியங்கள் வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலை 04 - 30 மணி முதல் 06 மணி வரை நேரம் குறிப்பிடப் படுகிறது.

அந்நேரம் இறைவன், இறைவி  நம் வீட்டிற்கு வரும் அற்புதமான நேரமாகும்.
Read 7 tweets
May 25
#ஆதிசங்கரர்_உபதேசம்

ஆதிசங்கரரின் கடைசி உபதேசம் :

ஆதிசங்கரர் கடைசியாக செய்த உபதேசம் ஸோபான பஞ்சகம் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.

ஸோபானம் என்றால் படிகளின் வரிசை என்று பொருள்.

பங்சகம் என்றால் ஐந்து என்று அர்த்தம்.

ஸோபான பஞ்சகம் என்பது ஐந்து சுலோகங்கள் கொண்ட சிறிய நூலாகும். Image
இதனை உபதேச பஞ்சகம் அல்லது ஸாதனா பஞ்சகம் எனவும் கூறுவர்.

இதில் சங்கரர் மோட்ச சாம்ராஜ்யத்தை அடைய நாற்பது படிகளைக் கடக்க வேண்டும் என்று விளக்குகிறார்.
1. தினந்தோறும் தவறாமல் வேதம் ஓது.

அதில் விதித்துள்ள கர்மாக்களை முறைப்படி செய்.

பகவானை திருப்தி செய்ய பூஜைகள் செய்.

இவ்வாறு நீ செய்யும் கர்மாக்களின் பலனை எதிர்நோக்காமல் இது பகவானுக்கு என அர்ப்பணம் செய்து விடு.
Read 13 tweets
May 25
#சோமாசி_மாற_நாயனார்

சோழநாட்டில் திருவம்பர் என்னும் ஊரில் அந்தணர் குலத்தில் தோன்றியவர் மாறநாயனார்.

சிவபக்தியும் சிவனடியார்களுக்கு திருவமுதமும் அளித்தவர் இவர்.

அகிலத்தை எல்லாம் கட்டிகாக்கும் பரமனே முதல்வன் என்று வேள்விகள் பலய்து உலகம் முழுவதும் அறியும்படி செய்தவர் இவர். Image
வேள்விகளில் சிறந்த சோம வேள்வியால் எம்பெருமானை வழிபட்டதால் இவர் சோமாசிமாற நாயனார் என்று அழைக்கப்பட்டார்.

தான் செய்யும் வேள்வியின் அவிர்பாகத்தை சிவபெருமான் நேரடியாக வந்து பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது.
அப்படியென்றால் சிவபெருமானிடம் தூது செல்ல அவரது அன்புக்கு பாத்திரமான சுந்தரராரிடம் நட்பு கொள்ள வேண்டும் என்றும் நினைத்தார்.

எம்பெருமானுக்கும், சுந்ராருக்கும் இருக்கும் அன்பு பிணைப்பை முன்னமே அறிநதிருந்தார் சோமாசி மாற நாயனார்.

சுந்தரராரின் நட்பை பெறுவது எப்படி என்று எண்ணினார்.
Read 12 tweets
May 20
#சூர்ப்பனகை

சூர்ப்பனகை மிகவும் நல்லவள் :

சூர்ப்பனகை மிகவும் கெட்டவள் என்று நினைத்து இருப்பவருக்கு இந்த பதிவு படியுங்கள் உண்மை தெரியும்

சூர்ப்பனகை தன் கணவனான வித்யுத்ஜிகவனின் மீது அளவற்ற காதல் கொண்டிருந்தாள்
இருவரும் மிக அன்பாக சந்தோஷமாக இல்லறம் நடத்தி வந்தனர். Image
சூர்ப்பனகை காலகேயர்கள் என்ற பலம் வாய்ந்த அரக்கர்கள் கூட்டத்தில் ஒருவனான வித்யுக்ஜிகவன் என்பவனை திருமணம் செய்திருந்தாள்

ஒருமுறை இராவணன் தன் தவ வலிமையை அதன் பெருமையை மூவுலகுக்கும் காட்ட மூவுலகுக்கும் திக்விஜயம் செய்தான்
திக்விஜயம் செய்த இராவணன்,
மேலுலக தேவர்களையும் கந்தவர்களையும் வென்றான்

இறுதியாகக் அரக்கர்களில் பலம்வாய்ந்த காலகேயர்கள் என்பவர்களை எதிர்க்க துணிந்தான்

காலகேயர்கள் என்பவர்கள் அரக்கர்களில் ஒரு விசேச பிரிவினர்.

அவர்கள் பொன்னை போன்ற தங்கமயமான நிறத்தை உடையவர்கள்.
Read 17 tweets
May 20
#ஸ்ரீ_ரங்கநாதர்

ஸ்ரீ ரங்கநாதனை பார்க்காத இந்த கண்கள் எதற்கு?

108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையானதும், மிகச்சிறப்பு வாய்ந்ததுமானது ஸ்ரீ ரங்கம்.

திருவரங்கம், பெரியகோயில், பூலோக வைகுண்டம் என்று பலபெயர் கொண்டு போற்றப்படும் இத்திருக்கோயிலில் சயனித்திருப்பவர் ஸ்ரீ ரங்கநாதர். Image
த்வைத, அத்வைத மற்றும் விசிஷ்டாத்வைதத்தை சேர்ந்த மகான்கள் அனைவரும் ஸ்ரீரங்கநாதனைக் குறித்து பாடியுள்ளனர்.

அதே போல், த்வைத சம்பிரதாயத்தை சேர்ந்த ஹரி - தாஸர்கள் பலரும் ஸ்ரீரங்கநாதனை பாடியுள்ளனர்.

அவற்றில் ஒரு பாட்டு தான் இன்றைய பதிவில் பார்க்கப் போவது.
புரந்தர தாஸர், விஜயதாஸர் இவர்களுக்கெல்லாம் முதல்மையானவர் - தாஸர்களுக்கெல்லாம் பிதாமகர் - என்று அழைக்கப்படுபவர் - ஸ்ரீ பாதராயர் ஆவார்.

வாழ்ந்த ஆண்டு 1420 - 1486.

ஏகப்பட்ட கன்னட பக்தி பாடல்களை
இயற்றியுள்ள ஸ்ரீ பாதராயர், துருவரின் அவதாரமாக கருதப்படுபவர்.
Read 11 tweets
May 20
#ஸ்ரீ_நெல்லிகேஸ்வர_ஸ்வாமி

கோபம் நீங்கிட நாம் வணங்க வேண்டிய திருத்தலம் :

"திருநெல்லிக்காவல்". இத்திருத்தலம் திருவாரூரில் உள்ளது.

வணங்க வேண்டிய தெய்வம் திருநெல்லிகேஸ்வரர்.

பஞ்சகூடபுரம்' என்று சொல்லப்படும் ஐந்து தலங்களுள் ஒன்று. Image
இத்தலம் சூரியன், பிரம்மன், திருமால், சந்திரன், சனிபகவான், கந்தர்வர், துர்வாசர்,ஆகியோர் வழிபட்ட ஸ்தலம்.

கோபத்திற்கு பெயர் பெற்றவர் துர்வாசர், இவரின் கோபம் இத்தலத்திற்கு வந்து குறைந்த காரணத்தால், இங்கு சென்று வணங்குபவர்களின் கோபமும் குறையும்.
ஒரு மனிதனுக்கு கட்டுப்பட்ட நியாயமான கோபங்கள் வரலாம், ஆனால் அளவிற்கு மீறிய கோபத்தால் ஒரு மனிதன் தானும் அழிந்து பிறரையும் அழித்து விடுவான்.

மேலும் இத்தல சிவனை வழிபட குஷ்டம் போன்ற கொடிய தோல் வியாதிகள் நீங்கும்.
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(