M.SivaRajan Profile picture
May 27 21 tweets 4 min read Twitter logo Read on Twitter
மிக மிக முக்கியமான பதிவு :

கங்கையில் கரைக்கப்படும் பாவங்கள் எங்கே மறைகின்றது?

ஒரு முறை, பாவங்கள் எதுவும் செய்யாத புண்ணியாத்மாவான முனிவர் ஒருவர், கங்கையில் நீராட சென்றார்.

அப்போது, அங்கே குளித்துக் கொண்டு இருந்தவர்கள், Image
"மாதா கங்கே,
என் பாவத்தினை போக்கி காத்தருள்க"
என்று கூறி நீராடினார்கள்
இதை கேட்ட அந்த முனிவருக்கு ஒரு சந்தேகம் வந்தது.

"இப்படி பாவங்களை ஒழுக்கி விடப்படும் கங்கையில் நான் குளித்தால் இந்த பாவங்கள்
என்னை வந்து ஒட்டி கொள்ளுமல்லவா?"
எனவே அதில் குளிக்காமல் இருப்பதே நலம் என்று புறப்படலானார்.

அந்நேரம் ஒரு பெண் அங்கு வந்து, ஏன் முனிவரே நீங்கள் குளிக்காமல் செல்கிறீர்கள் என்று கேட்க முனிவர் தன் சந்தேகத்தை அவரிடம் கூறினார்.
இந்த நீர் ஓடி சென்று கடலில் கலக்கிறது, எனவே இந்த பாவங்கள் கடலை சென்று அடைகிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்,

எனவே நீங்கள் இந்த கங்கையில் நீராடுங்கள் என்று கூற முனிவர்,

அந்த பெண்ணை பார்த்து நீங்கள் சாதாரண பெண்ணாக தெரியவில்லை,

நீங்கள் யார் என்று கேட்க,
அதை நீங்கள் போக போக தெரிந்து கொள்வீர்கள் என்று கூறி, அங்கிருந்து சென்று விட்டாள்.

நாம் சமுத்திர தீரத்திற்கு செல்வோம் சென்று சமுத்திரத்தை நோக்கி செல்லலானார்.

அங்கே சென்ற முனிவர், சமுத்திர தேவனான வருணனை தபம் செய்தார்.
வருண தேவனும், அவர் முன் தோன்ற, முனிவர் தன் சந்தேகத்தை அவரிடம் கூறினார். ?

"வருண தேவனே, கங்கையில் ஒழுக்கி விடும் பாவங்கள் அனைத்தும்,

சமுத்திரத்தில் வந்து அடைகின்றன,
அப்படி இருக்க, எப்படி சமுத்திரத்தில் நீராடினால் புண்ணியம் ஆகும்?
இதற்கு, வருண தேவன் "முனிவரே கடலில் கலக்கும் பாவங்கள் அனைத்தும் சூரிய பகவானின் ஒளிக்கதிர்களால் ஆவியாக மாற்றி இழுத்து கொள்வதால், கடல் ஒருபோதும் பாவங்களை தன்னுள் வைத்துக் கொள்ள வில்லை. எனவே, கடல் புண்ணிய நீராடலுக்கு உகந்தது தான்". என்று கூறி வருண பகவான் மறைந்தார்.
இத்துடன் தன் சந்தேகம் தீராத முனிவர், தன் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சூரிய தேவனை நோக்கி பிரார்த்தனை செய்தார். .

"சூரிய பகவானே! கடலில் சேரும் பாவங்களை தன் ஒளிக்கதிர்களால் ஈர்த்துக்கொள்ளும் தங்களை அது பாதிப்பதில்லையா?" என்று கேட்டார்.
அதற்கு சூரிய பகவான், முனிவரே தங்கள் சந்தேகம் யதார்த்தமானது தான் சொல்கிறேன் கேள் என்று சூரிய பகவான் விளக்கலானார்

"முனிவரே, என் ஒளிக்கதிர்களால் ஆவியாக்கப்படும் பாவங்கள்,
என் உஷ்ணத்தால் என்னை நெருங்குவதில்லை.
இவை மேகங்களாக வானிலே தங்கிவிடுகிறது"
உடனே, முனிவர்
"அப்படியென்றால், இந்த பாவங்களின் தாக்கம் என்ன ஆகிறது?" என்று கேட்க", அதை நீங்கள் மேகத்திடமே கேட்டு அறிந்து கொள்ளலாம்", என்று கூறி மறைந்தார் சூரிய தேவன்.
உடனே, முனிவர் மேகத்தை வேண்டி தன் கேள்வியை எழுப்பினார்.
முனிவரின் சந்தேகத்தினை அறிந்த மேகம், "முனிவரே, சூரியனின் ஒளிக்கதிகளால் ஈர்த்தெடுக்கப்பட்ட பாவங்கள், காரிருள் மேகங்களாக வானில் வலம் வருகின்றது.

ஆனால் அதன் தாக்கம் அதிகரிக்கும் போது மழை பெய்விக்கப்படுகின்றது.

அங்ஙனம் மழையுடன் அந்த பாவங்கள் பூமிக்கே திரும்பவும் அனுப்பப்படுகின்றது.
அதை பொறுமையின் தேவதையான பூமியும் ஏற்றுக்கொள்கிறாள்".

ஆகவே, தங்கள் சந்தேகத்தை பூமாதேவியிடமே கேட்டறிந்து கொள்ளுங்கள்" என்றது மேகம்.

எனவே, தன் பிரார்த்தனையை பூமாதேவியிடம் திருப்பினார்

முனிவரின் பிரார்த்தனையில் மெச்சிய பூமாதேவி முனிவருக்கு அருளலானார்.
"முனிவரே, பொறுமைக்கு இலக்கணமாகிய எனக்கு, மழை மூலம் என்னை நோக்கி வரும் பாவங்களை ஏற்றுக்கொள்வது என் கடமை.

என்றாலும், நான் உட்கொண்ட பாவங்கள், என்னில் தங்குவதில்லை என்பதை நீங்கள் அறிந்தாலும்.

அத்தகைய பாவங்கள்,
மரம் செடிகள் வேர்கள் மூலம் உறிஞ்சி எடுத்து,
அதன் காய் கனிகளில் அடைத்து விடுகின்றது.

அக்காய் கனிகளை சம்பந்தப்பட்ட மனிதர்கள் உண்ணும் போது மீண்டும் அப்பாவங்கள் அவர்களையே சென்றடைகிறது.

மனிதர்கள் மீண்டும் கங்கைக்கு சென்று பாவத்தை போக்கி கொள்கின்றனர்.
இங்கனம், மேற்கொண்ட பாவங்கள் அவர்களை மீண்டும் மீண்டும் வந்தடையும்.

முனிவரே இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?

"இல்லை பூமி மாதா"என்றார் முனிவர்.

என்றால், "நீங்கள் கங்கை கரைக்கே செல்லுங்கள், அங்கு நீங்கள் முதலில் கண்ட பெண்மணியை சந்தித்தால்,
முழு விளக்கவும் உங்களுக்கு கிடைக்கும் என்றார் பூமி மாதா.

இதை கேட்ட முனிவர் மீண்டும் கங்கை கரைக்கே சென்றார்.

அங்கே அவர் முதலில் கண்ட பெண்மணியை காணலானார்.

இதை பார்த்த அப்பெண்மணி,
இப்போது உங்களுக்கு என்ன சந்தேகம்? என்று வினவ
"நீங்கள் வெறும் சாதாரண பெண்மணி இல்லை என்று நான் அறிகிறேன்,

தாங்கள் யார் என்பதை எனக்கு உணர்த்தியருளுங்கள்", என்று முனிவர் கேட்க,

தன் சுயரூபத்தை காண்பித்து, நான் தான் கங்காதேவி என்று முனிவருக்கு அருளினார்.

இதனால் மகிழ்ச்சியுற்ற முனிவர்,
"மாதா, மனிதர்கள் செய்யும் பாவங்கள், சுழன்று சுழன்று மீண்டும் மனிதர்களையே சென்றடைகிறது.

மனிதர்கள் மேலும் மேலும் பாவங்களை செய்து கங்கையில் கரைப்பதால், கங்கா நதியில் பாவத்தின் பாரம் அதிகமாகி கொண்டே செல்லுமல்லவா?

"முனிவரே, இந்த சந்தேகம் ஒருமுறை எனக்கும் வந்தது,
அந்நேரம் நான் சிவபெருமானை வேண்டி என் சந்தேகத்தை முன் வைத்தேன்,

சிவபெருமான் :

தேவி, கங்கையில் பாவம் செய்தவர்கள் மட்டுமே நீராடுவதில்லை.

பூமியில் புண்ணியாத்மாக்களும் உண்டு என்பதை அறிந்து கொள்ளவும்.

அங்ஙனம் புண்ணியம் செய்தவர்கள் கங்கையில் நீராடும் போது,
கங்கையில் ஒழுகிவரும் பாவங்களின் ஒரு பாகம்,

அந்த புண்ணியாத்மாவின் புண்ணியத்திற்கேற்ப, எரிந்து நாசமாகிறது.

"முனிவரே, இப்போது உங்கள் சந்தேகம் தீர்ந்ததா?" என்று கங்கா தேவி கேட்க,
"ஆம்" என்றார் முனிவர்.

"அதனால் தான் தங்களை நீராடுமாறு கேட்டுக்கொண்டேன்" என்று தேவி கூற.

"நிச்சயமாக செய்கிறேன்", என்று கூறி முனிவர்
நீராட சென்றார்.

#கங்கா_நதி

#கங்கை_தீர்த்தம்

#கங்கா_தேவி_முனிவர்_உரையாடல்

#கங்கா_ஸ்நானம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

May 28
#ஸ்ரீ_மாங்களீஸ்வர_ஸ்வாமி

மாங்கல்ய பாக்கியம் அருளும் மாங்களீஸ்வர ஸ்வாமி :

இடையாற்று மங்கலம் என்ற சிற்றூரில் உள்ளது ஸ்ரீ மாங்களீஸ்வரர் ஆலயம்.

இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மாங்களீஸ்வரர்.

இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ImageImage
முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரமும், மகாமண்டபமும் காணப்படுகின்றன.

மகாமண்டபத்தினுள் தெற்கு முகப்பு வழியே உள்ளே நுழைந்ததும் எதிரே அன்னை மங்களாம்பிகையின் சன்னிதி உள்ளது.

இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள்.
அன்னை தனது மேல் இரு கரங்களில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் இளநகை தவழும் இன்முகத்துடன் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

மகா மண்டபத்தை அடுத்த அர்த்த மண்டபம் உள்ளது.
Read 13 tweets
May 28
#சிவ_அடியார்_பூசனை

சிவபூசனைக்குரிய நிலைக்களங்கள் மூன்று என்பர்.

அவை

சிவலிங்கப் பூசனை,

சிவ அறிவு பெற்ற சிவ ஆசான் பூசனை,

சிவ அடியார் பூசனை என்பனவாகும்.
மக்களால் கட்டப் பெற்ற,
படம் வரையப் பெற்ற கொடிச்சீலையை உடைய திருக்கோயிலில் இயங்காமல் எழுந்து அருளியிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை அன்பினால் படைத்தால் அது எங்கும் இயங்குகின்ற உயிர்களின் உடம்பாகி கோயிலினுள் எழுந்து அருளியிருக்கின்ற இறைவனுக்குப் போய்ச் சேறாது என்கின்றார் திருமூலர்.
ஆனால் எழுந்து இயங்கும் உயிர்களின் உடம்பாகிய கோயிலினுள் எழுந்து அருளியிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளைக் கொடுத்தால் அச்சிவனுக்கு படைத்தல் ஆவதுடன், கொடிச்சீலை ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுக்குப் போய்ச்சேரும் என்பதனை,
Read 31 tweets
May 28
#விளக்கின்_நவகிரக_தத்துவம்

கோயில்களிலும் ,வீடுகளிலும் நாம் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.

விளக்கிற்க்கும் நவகிரகங்களுக்கும் உள்ள தொடர்பு பலருக்கும் தெரியாது.

இந்த பதிவில் அதனை தெரிந்து கொள்வோம் . Image
1). விளக்கு = சூரியன் ஆகும்

2). நெய்/எண்ணெய் - திரவம் = சந்திரன்

3) திரி = புதன்

4). அதில் எரியும் ஜ்வாலை =செவ்வாய்

5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு

6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி

8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது

9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை);

அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்.
Read 4 tweets
May 27
#ஜோதிடம்_அறிவோம்

இல்லற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகாத ராசிகள் :

ஒவ்வொரு ராசிக்கும் ஒருசில அடிப்படை குணாதிசயங்கள் பொதுவாக இருக்கும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது ஒரு சிலர் மத்தியில் வேறுப்பட்டு கூட போகலாம். Image
இதன் அடிப்படையில் பார்க்கும் போது இரண்டு ராசிகளின் குணாதிசயங்கள் ஒன்றாக சேரும் போது அங்கு நன்மை, தீமை இரண்டும் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த வகையில் ஒருசில ராசிகள் ஒன்றிணைந்தால் அவர்கள் இயல்பாகவே மகிழ்ச்சியாக இருப்பார்கள்,
ஒருசில ராசிகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பார்கள்.

இதில் இல்லற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப் போகாத ராசிகள் எவையென இனிப் பார்க்கலாம்…
Read 16 tweets
May 26
#பலராமர்

நன்றிக் கடனாக உருவான அவதாரம் ..!!

திருமாலின் மற்ற அவதாரங்கள்,

வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி எடுக்கப்பட்டவை.

ஆனால் பலராம அவதாரம் அவரது கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்புடையது. Image
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரம் பலராம அவதாரம்.

இது மற்ற அவதாரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. .

வேதத்தைத் திருடிச் சென்ற சோமுன் என்ற அசுரனை அழித்து,

வேதத்தை மீட்பதற்காக எடுக்கப்பட்டது மச்ச அவதாரம்.
தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க வேண்டி மேரு மலையை தாங்க எடுக்கப்பட்டது கூர்ம அவதாரம்.

இரண்யாட்சனை அழித்து கடலுக்கு அடியில் இருந்து பூமியை மீட்க எடுக்கப்பட்டது வராக அவதாரம்.

தன் பக்தனான பிரகலாதனை காப்பாற்ற எடுக்கப்பட்டது நரசிம்ம அவதாரம்.
Read 23 tweets
May 26
#இலுப்பை_எண்ணெய்

ஐஸ்வர்யம் தரும் இலுப்பை எண்ணெய் :

திருஇரும்பை மாகாளம், திருப்பழமணிப் படிக்கரை, திருக்கொடி மாடச் செங்குன்னூர், திருவனந்தபுரம் முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தல விருட்சமாக இருக்கிறது. Image
இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்யெண்ணை எனப்படுகிறது. 

இலுப்பை எண்ணெய் சகல தேவர்களுக்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது.

ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது.
இந்த எண்ணெயை  விளக்கில் ஊற்றி இறைவனை வழிபட காரியங்கள் வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலை 04 - 30 மணி முதல் 06 மணி வரை நேரம் குறிப்பிடப் படுகிறது.

அந்நேரம் இறைவன், இறைவி  நம் வீட்டிற்கு வரும் அற்புதமான நேரமாகும்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(