M.SivaRajan Profile picture
May 28 31 tweets 6 min read Twitter logo Read on Twitter
#சிவ_அடியார்_பூசனை

சிவபூசனைக்குரிய நிலைக்களங்கள் மூன்று என்பர்.

அவை

சிவலிங்கப் பூசனை,

சிவ அறிவு பெற்ற சிவ ஆசான் பூசனை,

சிவ அடியார் பூசனை என்பனவாகும்.
மக்களால் கட்டப் பெற்ற,
படம் வரையப் பெற்ற கொடிச்சீலையை உடைய திருக்கோயிலில் இயங்காமல் எழுந்து அருளியிருக்கும் சிவனுக்கு ஒரு பொருளை அன்பினால் படைத்தால் அது எங்கும் இயங்குகின்ற உயிர்களின் உடம்பாகி கோயிலினுள் எழுந்து அருளியிருக்கின்ற இறைவனுக்குப் போய்ச் சேறாது என்கின்றார் திருமூலர்.
ஆனால் எழுந்து இயங்கும் உயிர்களின் உடம்பாகிய கோயிலினுள் எழுந்து அருளியிருக்கும் இறைவனுக்கு ஒரு பொருளைக் கொடுத்தால் அச்சிவனுக்கு படைத்தல் ஆவதுடன், கொடிச்சீலை ஆடுகின்ற இயங்காக் கோயிலினுள் எழுந்தருளியிருக்கின்ற இறைவனுக்குப் போய்ச்சேரும் என்பதனை,
“படமாடக் கோயில் பகவற்குஒன்று ஈயின்,
நடமாடக் கோயில் நம்பர்க்குஅங்கு ஆகா,
நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயின்,
படமாடக் கோயில் பகவற்கு அதாமே”

என்று குறிப்பிடுகின்றார்.
திருக்கோயில்களில் உள்ள பெருமானின் திருமேனிகள் மந்திர ஆற்றல்களால் சிவனாகவே விளங்குதல் போல
அடியார்களின் இறை அன்பின் உறைப்பாலும் இறைவனை இடைவிடாது எண்ணும் இயல்பாலும் சிவஅறிவு உணர்வாலும் அடியார்களின் உடம்பு எனும் கோவிலில் இறைவன் நிலைபெற்று இருக்கிறான் என்கிறார் திருமூலர்.

பெருமானை ‘மகேசுவரர்’ என்றும் அடியார்களை ‘மாகேசுவரர்’ என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.
சிவபெருமானிடத்திலிருந்து எந்த ஒன்றாலும் தங்களைப் பிரிக்க முடியாத உள்ளத்தை உடைய அடியார்கள் உண்ட பொருள், மூன்று உலகத்திலும் உள்ளவர்கள் உண்டதின் பயனாய் விளையும் என்கின்றார் திருமூலர்.
இத்தகைய அடியார்கள் பெற்றுக்கொள்ளும் பொருள்கள் மூன்று உலகத்தில் உள்ளவர்களும் பெற்றுக்கொண்ட பொருளின் பயனை அளிக்கும் என்றே நந்தி பெருமான் தனக்கு உரைத்ததாகத் திருமூலர் குறிப்பிடுவார்.
இத்தகைய அடியார்களை வணங்கி அவர்களுக்கு உணவும் உடையும் பிறவும் கொடுத்தலே அடியார் பூசனை எனப்படுகின்றது.

சிவன், சிவலிங்கப் பூசனையை ஏற்று மகிழ்வதனைக் காட்டிலும் தன் அடியவர் பூசனையை ஏற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைவானே ஆயினும்,
சிவ ஆசான் பூசனையையும்,

சிவ அடியார் பூசனையையும்,

மட்டும் செய்து சிவலிங்கப் பூசனையை விட்டுவிடுதல் தவறு என்று திருமூலர் தெளிவுபடுத்துகின்றார்.

சிலர் சிவபெருமானிடத்து மட்டும் அன்பு வைத்துச் சிவ அடியாரிடத்து அன்பு இல்லாது இருப்பதனால்,
நீண்ட நாள் சிவனை வழிபட்டும் சிவனின் அருள் மிகக் கிடைக்காது வருந்துவதற்கு இதுவே காரணம் என்கின்றார் திருமூலர்.

சிவபெருமானை அடைய விரும்புவோர் சிவனடியார்களை விரும்பி வழிபடல் இன்றியமையாதது என்ற கருத்தினைத் திருமூலர் உணர்த்துகின்றார்.
இதனையே பெரியபுராணத்தில் குறிப்பிடப்படும் நாயன்மார்களும் வாழ்ந்து காட்டினார்கள் என்பது நினைவுகூறத்தக்கது. “அடியவர்க்கு அன்பிலார் ஈசனுக்கு அன்பிலார்” என்று அருள் நந்தி சிவாச்சாரியாரின் சிவஞானசித்தியார் என்ற சித்தாந்த சைவ மெய்கண்ட நூலும் இதனையே குறிப்பிடுகின்றது.
“காளையை ஊர்தியாகவும் கொடியாகவும் உடை இறைவா, எங்கள் பெருமானே” என்று சிவனை எப்பொழுதும் போற்றி வணங்கி, அவனது அருள் வடிவாகிய திருநீற்றை அன்புடன் அணிகின்றவர்கள் அவனது அடியவர் ஆவார்கள்.
இவர்களை நிலவுலகில் காணப்படுகின்ற தேவர்கள் என்றும் சிவபெருமான் என்றும் கருதி, இவர்களைச் சராசரி மக்களில் இருந்து வேறாக வைத்து வழிபடுகின்றவர்களுக்குக் குவிந்து கிடக்கும் வினைகள் கெட்டு ஒழியும் என்பதனை,
“ஏறுஉடையாய் இறைவா எம்பிரான் என்றே,
நீறிடுவார் அடியார் நிகழ் தேவர்கள்,
ஆறணி செஞ்சடை அண்ணல் இவர்என்று,
வேறுஅணிவார்க்கு வினை இல்லை தானே”

என்று குறிப்பிடுகின்றார். சிவனைத் தவிர வேறு ஒரு தேவரை வழிபடாத,
சிவனின் அருள்வீழ்ச்சி கிடைக்கப்பெற்ற இத்தகைய அடியார்களை வானவர்களுக்கு ஒப்பாகவும் இவர்களை வழிபட்டால் அது சிவபூசனையாகிப் பிறப்பை அறுக்கும் என்றும் திருமூலர் குறிப்பிடுகின்றார்.

“மக்கள் தொண்டு மகேசன் தொண்டு” என்ற வழக்கு ஒன்று தமிழர்களிடையே புழக்கத்தில் உள்ளதனை அறிவோம்.
சராசரி உயிர் வகைகளுக்குச் செய்யும் உதவியும் அடியார்களுக்குச் செய்யும் உதவியும் வேறு என்கின்றார் திருமூலர்.

சராசரி உயிர் என்கின்ற நிலையில் நில்லாது, சிவனிடத்தில் நிலைபெற்று நின்று சிவமாம் தன்மையில் நிற்கும் அடியவர்க்குச் செய்யும் உதவியும் வழிபாடும்,
நம் வினையைப் போக்கிப் பிறவி அறுக்கும் என்கின்றார் திருமூலர்.

சராசரி உயிர்களுக்குச் செய்யும் உணவு அளித்தல், உறையுள் அளித்தல், பிற உதவிகளைச் செய்தல் என்பதானது உயிர்களுக்குச் செய்யும் நல்வினையாய் மட்டுமே முடியும் என்பதனைத் திருமூலர் உணர்த்துகின்றார்.
உயிர் நல்வினைகள் சிவ நல்வினைகளாய் மாறுதற்குப் படிக்கல் என்பதும் உணர்தற்பாலது.

மாகேசுவர பூசனை என்பது சிவஅடியார்களுக்கு உணவு அளித்தல் என்பதனால் இதனைப் பெரும்பாலும் இல்லறத்தார்களே செய்யும் கடப்பாட்டினை உடையவர் ஆகின்றனர்.
இல்லறத்தார்க்குச் சிறப்பாக உரிய விருந்தோம்பலில் அடியார்க்கு உணவு அளிப்பதனை மாகேசுவரப் பூசனையாகக் குறிப்பிடுவர்.

விருந்தோம்பல், தென்புலத்தாரை வழிபடல், தெய்வங்களை வழிபடல் என்பதனை இயற்றுவதற்கு அந்தணர்கள் என்று அழைக்கப்படும் பிராமணர்களை வழிபடுவதும்,
அவர்களுக்கு உதவிகள் செய்வதும் வேண்டும் என்பது வேத அடிப்படையில் நிலவும் வைதீக நெறி என்று தருமை ஆதீனப் புலவர், சித்தாந்தக் கலைமணி, மகாவித்துவான், முனைவர் சி.அருணை வடிவேலனார் குறிப்பிடுகின்றார்.
இல்லறத்தார்க்கு உரிய கடமைகளாகத் திருவள்ளுவரும் குறிப்பிடும் விருந்தோம்பல், தென்புலத்தாரை வழிபடல், தெய்வங்களை வழிபடல் என்பனவற்றை மாகேசுரர் பூசிவர் என்ற சிவனடியார்களுக்குச் செய்தலே சைவ நெறி என்று முனைவர் குறிப்பிடுகின்றார்.
சிவனடியார்களை, ‘பராவுசிவம்’ அல்லது நடமாடும் சிவம் என்று அருணந்திசிவம் சிவஞானசித்தியாரில் குறிப்பிடுவதனால் சிவஅடியார்களுக்கு உணவளிப்பதே இறந்த நம் முன்னோர்க்காச் செய்யப்படும் மிகச் சிறந்த பிதிர்க்கடன் என்று நிறுவுகின்றார்.
அந்தணர் என்று அழைக்கப்படுபவருக்குப் பசு, குடை, தானி வகைகள், காய்கறிவகைகள், செருப்பு, தங்க அணிகலன்கள், வீதிகள், மாடமாளிகைகள், இன்னும் பிற நன்மைகள் செய்து கொடுப்பது உயிர் நல்வினையே அன்றி சிவஅடியாருக்குச் செய்யும் உதவியினால் கிட்டும் பெரும் பயனைக் கூட்டுவிக்காது என்பதனை,
“அகரம் ஆயிரம் அந்தணர்க்கு ஈயில்என்,
சிகரம் ஆயிரம் செய்தே முடிக்கில்என்,
பகரும் ஞானி பகல்உண் பலத்துக்கு,
நிகர்இலை என்பது நிச்சயம் தானே”

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

‘அகரம்’ என்பது அக்கிரகாரம் அல்லது திருக்கோயிலின் முதற்சுற்று.
கோயிலைச் சூழ்ந்த முதற்சுற்று வீதிகளே அந்தணர்கள் இருத்தற்குரிய இடம் என்பது வைதீக முறைமையாகும்.

அந்தணர்களை மாடமாளிகையில் தான் வாழ வைத்தல் வேண்டும் என்பதும் வைதீக நெறியாகும்.

இது சைவ நெறிக்குப் பொருந்தாது என்கின்றார் காஞ்சிப் புராணம் பாடிய சிவஞானயோகிகள்.
திருக்கோயிலை நடுவாக வைத்து அதனைச் சூழ ஏழு சுற்று அமைய மதில்கள் எழுப்ப, அவற்றில் அமையும் வீதிகள் யாவும் மாடவீதிகள் என்கின்றார்.

அவ்வீதிகளில் பரத்தையர் எனப்படும் விலைமகளிர் போன்றோரைத் தவிர யாவரும் கலந்தே வாழ வேண்டும் என்பதே சைவ நெறி என்றும் குறிப்பிடுகின்றார்.
ஆறு அங்கங்களால் தெளிய உணர்த்தப்படும் வேள்விகளைச் செய்கின்ற வரும் வேதம் ஆகிய நூலை ஓதுகின்றவரும் முப்புரிநூல் அணிபவரும் ஆகிய அந்தணர் என்று அழைக்கப்படுகின்றவர்கள் கோடி பேர் உண்டு மகிழ்வதனால் உண்டாகின்ற பயனைக் காட்டிலும்,
திருநீற்றை அணிகின்ற சிவ அடியார் சிலர் உண்டு மகிழும் மகிழ்ச்சியால் விளையும் பயன் மேலானது என்பதனை,

“ஆறிடு வேள்வி அருமறை நூல்சாலவர்,
கூறிடும் அந்தணர் கோடிபேர் உண்பதில்,
நீறிடும் தொண்டர் நினைவின் பயன்நிலை,
பேறுஎனில் ஓர்பிடி பேறுஅது ஆகுமே”

என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.
இதனால் தானங்களில் தலையதாகிய அன்னதானமும் அந்தணர் என்று அழைக்கப்படுவோருக்குச் செய்தலைக் காட்டிலும் சிவ அடியாருக்குச் செய்தல் கோடான கோடி மடங்கு மிக்க பயனைத் தரும் என்று தெளிதல் வேண்டும்.

உலகப் பற்றுக்களாகிய இழிநிலையில் இருந்து நீங்கி உயர் நிலையை அடைந்தவர்களாயினும்
மீண்டும் அந்த இழிநிலைப் பற்றுக்கள் வந்து பற்றாதபடி என்றும் சீலம், நோன்பு, செறிவு, அறிவு ஆகிய அரிய தவங்களை விடாது இயற்றும் உண்மைச் சிவனடியார்களை வணங்கி, அவர்களுக்கு உதவிகளைச் செய்வோம்.

வினைப் பயன்களைப் போக்கிப் பிறவி அறுவோம்!

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

May 28
#ஸ்ரீ_மாங்களீஸ்வர_ஸ்வாமி

மாங்கல்ய பாக்கியம் அருளும் மாங்களீஸ்வர ஸ்வாமி :

இடையாற்று மங்கலம் என்ற சிற்றூரில் உள்ளது ஸ்ரீ மாங்களீஸ்வரர் ஆலயம்.

இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் மாங்களீஸ்வரர்.

இறைவியின் திருநாமம் மங்களாம்பிகை.

இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ImageImage
முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரமும், மகாமண்டபமும் காணப்படுகின்றன.

மகாமண்டபத்தினுள் தெற்கு முகப்பு வழியே உள்ளே நுழைந்ததும் எதிரே அன்னை மங்களாம்பிகையின் சன்னிதி உள்ளது.

இங்கு அன்னைக்கு நான்கு கரங்கள்.
அன்னை தனது மேல் இரு கரங்களில் தாமரை மலரை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரையுடன் இளநகை தவழும் இன்முகத்துடன் நின்ற கோலத்தில் தென்திசை நோக்கி அருள்பாலிக்கிறாள்.

மகா மண்டபத்தை அடுத்த அர்த்த மண்டபம் உள்ளது.
Read 13 tweets
May 28
#விளக்கின்_நவகிரக_தத்துவம்

கோயில்களிலும் ,வீடுகளிலும் நாம் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.

விளக்கிற்க்கும் நவகிரகங்களுக்கும் உள்ள தொடர்பு பலருக்கும் தெரியாது.

இந்த பதிவில் அதனை தெரிந்து கொள்வோம் . Image
1). விளக்கு = சூரியன் ஆகும்

2). நெய்/எண்ணெய் - திரவம் = சந்திரன்

3) திரி = புதன்

4). அதில் எரியும் ஜ்வாலை =செவ்வாய்

5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = ராகு

6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = குரு
7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = சனி

8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = கேது

9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = சுக்கிரன் (ஆசை);

அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்.
Read 4 tweets
May 27
#ஜோதிடம்_அறிவோம்

இல்லற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகாத ராசிகள் :

ஒவ்வொரு ராசிக்கும் ஒருசில அடிப்படை குணாதிசயங்கள் பொதுவாக இருக்கும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது ஒரு சிலர் மத்தியில் வேறுப்பட்டு கூட போகலாம். Image
இதன் அடிப்படையில் பார்க்கும் போது இரண்டு ராசிகளின் குணாதிசயங்கள் ஒன்றாக சேரும் போது அங்கு நன்மை, தீமை இரண்டும் உண்டாகும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த வகையில் ஒருசில ராசிகள் ஒன்றிணைந்தால் அவர்கள் இயல்பாகவே மகிழ்ச்சியாக இருப்பார்கள்,
ஒருசில ராசிகள் முன்னுக்குப் பின் முரணாக இருப்பார்கள்.

இதில் இல்லற பந்தத்தில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப் போகாத ராசிகள் எவையென இனிப் பார்க்கலாம்…
Read 16 tweets
May 27
மிக மிக முக்கியமான பதிவு :

கங்கையில் கரைக்கப்படும் பாவங்கள் எங்கே மறைகின்றது?

ஒரு முறை, பாவங்கள் எதுவும் செய்யாத புண்ணியாத்மாவான முனிவர் ஒருவர், கங்கையில் நீராட சென்றார்.

அப்போது, அங்கே குளித்துக் கொண்டு இருந்தவர்கள், Image
"மாதா கங்கே,
என் பாவத்தினை போக்கி காத்தருள்க"
என்று கூறி நீராடினார்கள்
இதை கேட்ட அந்த முனிவருக்கு ஒரு சந்தேகம் வந்தது.

"இப்படி பாவங்களை ஒழுக்கி விடப்படும் கங்கையில் நான் குளித்தால் இந்த பாவங்கள்
என்னை வந்து ஒட்டி கொள்ளுமல்லவா?"
எனவே அதில் குளிக்காமல் இருப்பதே நலம் என்று புறப்படலானார்.

அந்நேரம் ஒரு பெண் அங்கு வந்து, ஏன் முனிவரே நீங்கள் குளிக்காமல் செல்கிறீர்கள் என்று கேட்க முனிவர் தன் சந்தேகத்தை அவரிடம் கூறினார்.
Read 21 tweets
May 26
#பலராமர்

நன்றிக் கடனாக உருவான அவதாரம் ..!!

திருமாலின் மற்ற அவதாரங்கள்,

வெவ்வேறு காலகட்டங்களில் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி எடுக்கப்பட்டவை.

ஆனால் பலராம அவதாரம் அவரது கிருஷ்ண அவதாரத்துடன் தொடர்புடையது. Image
விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் எட்டாவது அவதாரம் பலராம அவதாரம்.

இது மற்ற அவதாரங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. .

வேதத்தைத் திருடிச் சென்ற சோமுன் என்ற அசுரனை அழித்து,

வேதத்தை மீட்பதற்காக எடுக்கப்பட்டது மச்ச அவதாரம்.
தேவர்களுக்கு அமிர்தம் கிடைக்க வேண்டி மேரு மலையை தாங்க எடுக்கப்பட்டது கூர்ம அவதாரம்.

இரண்யாட்சனை அழித்து கடலுக்கு அடியில் இருந்து பூமியை மீட்க எடுக்கப்பட்டது வராக அவதாரம்.

தன் பக்தனான பிரகலாதனை காப்பாற்ற எடுக்கப்பட்டது நரசிம்ம அவதாரம்.
Read 23 tweets
May 26
#இலுப்பை_எண்ணெய்

ஐஸ்வர்யம் தரும் இலுப்பை எண்ணெய் :

திருஇரும்பை மாகாளம், திருப்பழமணிப் படிக்கரை, திருக்கொடி மாடச் செங்குன்னூர், திருவனந்தபுரம் முதலிய திருக்கோயில்களில் இலுப்பை மரம் தல விருட்சமாக இருக்கிறது. Image
இதன் விதையிலிருந்து பிழிந்தெடுக்கப்படும் எண்ணெய் இலுப்யெண்ணை எனப்படுகிறது. 

இலுப்பை எண்ணெய் சகல தேவர்களுக்கும், சகல தெய்வங்களுக்கும், சிவனுக்கும் பிரியமானது.

ஆலயங்களில் தீபமேற்ற சிறந்தது.
இந்த எண்ணெயை  விளக்கில் ஊற்றி இறைவனை வழிபட காரியங்கள் வெற்றி பெறும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை.

பிரம்ம முகூர்த்த வேளையான அதிகாலை 04 - 30 மணி முதல் 06 மணி வரை நேரம் குறிப்பிடப் படுகிறது.

அந்நேரம் இறைவன், இறைவி  நம் வீட்டிற்கு வரும் அற்புதமான நேரமாகும்.
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(