M.SivaRajan Profile picture
May 31 9 tweets 2 min read Twitter logo Read on Twitter
#பக்தி_கதைகள்

துரோணாச்சார்யாரிடம் யாசகம் கேட்ட கிருஷ்ணர் :

மகாபாரதம் கிளைக் கதைகள் :

துரோணர் ஏகலைவனின் கட்டை விரலை குரு தட்சணையாகப் பெற்று
அதை ஒரு பொக்கிஷமாகப் போற்றி ஒரு தாயத்தில் மறைத்து வைத்து தனது கழுத்தில் கட்டிக் கொண்டார். Image
இதன் பின்னால் உள்ள தேவ ரகசியம் எவருக்கும் தெரியாது.

அதாவது குரு தட்சணையாகப் பெற்ற பொருள் குருவின் உயிரைக் காக்கும்.

இந்த ரகசியத்தை அறிந்தவர் கிருஷ்ணர் ஒருவர் தான்.

பாரதப்போரில் துரோணர் கௌரவர்கள் பக்கம் நின்று போரிட்ட நிலையில் தர்மத்தை காக்க அவரை அழிக்க வேண்டும்.
அவர் குரு தட்சணை என்ற
தர்ம கவசத்தை தன்னுடைய கழுத்தில் அணிந்து கொண்டிருக்கும் நிலையில் அவரை யாராலும் வெல்ல முடியாது.

தர்மத்தை நிலை நாட்ட முயற்சிப்பவரை தர்மம் காப்பாற்றும் என்ற வேத வாக்கின்படி கிருஷ்ணருக்கு தர்ம தேவதை துரோணரை வீழ்த்தும் உபாயத்தை அவர் காதில் சொன்னது.
அதன் படி ஒரு முதியவர் வேடத்தில் கிருஷ்ணர் துரோணரிடம் சென்றார்.

சுவாமி என்னுடைய ஒரே பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இப்போது ஒரு வரன் அமைந்திருக்கிறது.

ஆனால் மாங்கல்யம்
வாங்கக் கூட என்னிடம்
பணம் இல்லை.
நீங்கள் தான் கருணை கூர்ந்து உதவி செய்ய வேண்டும்.

உங்களால் முடியாது என்று சொல்லிவிட்டால் நான் உயிரை விடுவதைத் தவிர வேறு வழி இல்லை என்று சொல்லி விட்டு துரோணரின் கழுத்தில் தொங்கிய தாயத்தையே
அந்த முதியவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்ட துரோணர் முதியவரின் யாசகத்தை நிராகரிக்க முடியாமல் மன வேதனையுடன் கழுத்தில் இருந்த தாயத்தை கழற்றி அவரது கைகளில் கொடுத்து ஐயா பெரியவரே இது மிகவும் மதிப்பு வாய்ந்த தங்கத் தாயத்து.
இதை அப்படியே உங்கள் மகளுக்கு மாங்கல்யமாக அளித்து திருமணத்தை
நடத்தி விடுங்கள் என்று கூறி மானசீகமாக மணமக்களை போர் முனையில் இருந்தே ஆசீர்வதித்தார்.

வந்த வேலை முடிந்தவுடன் முதியவரான கிருஷ்ணர் துரோணருக்கு வணக்கம் செலுத்தி விட்டு திரும்பினார்.
துரோணரிடமிருந்து பெற்ற ஒப்பற்ற பரிசான குரு பக்திக்கு உதாரணமான ஏகலைவனின் கட்டை விரலை தன்னுடைய புல்லாங்குழலில் பதித்து வைத்துக் கொண்டார்.

அதன் மூலம் குரு பக்திக்கு உரிய மரியாதையையும் குருவை போற்றும் உத்தம சீடனின் மேன்மையையும் அனைவருக்கும் உணர்த்தினார்.
அதன் பின் தனது யுக்தியால் துரோணரை அழித்தார்.

#துரோணர்

#கிருஷ்ணர்

#கிருஷ்ணர்_கேட்ட_யாசகம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with M.SivaRajan

M.SivaRajan Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @MSivaRajan7

May 31
#சந்திராஷ்டம_வழிபாடு

சந்திராஷ்டம பாதிப்பு நீங்க ஒரு எளிய வழிபாடு :

சந்திராஷ்டமம் நாளில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது என்று சொல்வார்கள்.

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடக்கூடாது என்றும் சொல்வார்கள். Image
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கும் இரண்டே கால் நாட்களைத் தான் சந்திராஷ்டம காலம் என்கிறோம்.

அதிலும் குறிப்பாக நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு 17 வது நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் காலம் தான் சந்திராஷ்டம நாளாகும்.
ஒருவருடைய மனதுக்கு அதிபதி சந்திரன்.

அவர் ஒரு ராசிக்கு எட்டாவது வீட்டில் மறைவு பெற்றிருக்கும் போது,

மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக் கூடும்.

மனம் அமைதியின்றி தவிக்கவும் நேரிடும்.

தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் போகும்.
Read 9 tweets
May 30
#பக்தி_கதைகள்

ஒருவர் திருச்செந்தூர் முருகனின் பக்தராக விளங்கினார்.

அவருக்குச் சொந்தமாக ஒரு மருந்துக் கடை இருந்தது.

அந்த கடையின் ஒரு மூலையில், திருச்செந்தூர் முருகன் படம் வைத்திருந்தார்.

தினமும் கடையை திறந்த உடன், கடையை சுத்தம் செய்து விட்டு, Image
திருச்செந்தூர் முருகனின் படத்தையும் சுத்தம் செய்வார்.

மிகுந்த மரியாதையோடு அந்தப் படத்திற்கு தூபம் ஏற்றுவார்.

அவருக்கு ஒரு மகன், அவன், தன் படிப்பை முடித்துக் கடையில் உட்கார்ந்து கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தான்.
அவருடைய அப்பா செய்து கொண்டு இருக்கும் இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு இருப்பான்.

ஆனால் கடவுள் நம்பிக்கை கிடையாது.

இந்த விஷயம் பற்றி அவனிடம் வாதாட அல்லது விவாதம் பண்ண விரும்பாமல், பக்தர் அமைதி காத்தார்.

காலம் கடந்து சென்றது. அவருக்கும் வயதாகி விட்டது.
Read 18 tweets
May 30
#ராமர்_பாதம்_பட்ட_குடிசை

அம்மா..... அம்மா....

குழந்தைகளின் அலரல் அந்த தெருவையே திரும்பிப் பார்க்க வைத்தது.

ஏன் இப்படி உயிர் போற மாதிரி தெருவில் நின்று கத்துறீங்க... உள்ளே வாங்களேன்.

பாம்பு இருக்குமா... பெரிய பாம்பு...

பயத்தில் குழந்தைகளுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை. Image
பாம்பு ஏற்கனவே தவளையை முழுங்கி சாப்பிட்டாச்சு...

உங்களை ஒன்றும் செய்யாது,,

வீட்டிற்குள் வந்து கைகால்களை அலம்பிட்டு,

துணியை மாற்றி தோசை சாப்பிடுங்க..

பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த அம்மா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை.
வீடு என்றால் ஏதோ
பெரிதாக கற்பனை செய்து விடாதீர்கள்...

அது ஒரு குடிசை வீடு.

பல்லாவரத்தில் பல குடிசைகளுக்கு நடுவில்
ஸ்ரீ னிவாச ஐயங்கார் அவர்களின் குடும்பம் வசிக்கும் இடம்.
Read 26 tweets
May 29
#குப்பைத்_தொட்டி

வீட்டில் குப்பைத் தொட்டி எங்கு வைக்கலாம் :

வீட்டின் தெற்கு பகுதியில் குப்பைத் தொட்டி வைப்பது நல்லது.

உடைந்த குப்பைத் தொட்டி வைப்பது மிகவும் தவறானது.

வாஸ்து படி, உங்கள் வீட்டின் வடமேற்கில் மேற்கு பகுதியிலும்,

தென்கிழக்கு தெற்கு பகுதியிலும், Image
தென் கிழக்கு பகுதியிலும் மற்றும் தென் மேற்கு திசையில் தெற்கிலும் குப்பை தொட்டி வைக்கலாம்.

வீட்டின் ஈசான்ய மூலை எனும் வடகிழக்கு திசையில் குப்பை தொட்டியை வைக்கவே கூடாது.

ஏனெனில் இது வீட்டின் தெய்வீக பகுதியாகும்.

அப்படி வைப்பதால் உங்கள் மன ஆரோக்கியத்திற்கு இடையூறு விளைவிக்கும்.
நீங்கள் எப்போதும் நிச்சயமற்ற தன்மை மற்றும் பதற்றத்தில் மூழ்கி இருப்பீர்கள்.

வீட்டின் கிழக்கு திசையில் குப்பைத் தொட்டியை வைத்திருப்பதால் உங்களை தனிமையாக உணர வைக்கும்.

மேலும், இது உங்கள் வளர்ச்சிக்கு ஒரு தடையாக செயல்படும்.
Read 6 tweets
May 29
#ஸ்ரீ_பொன்வாசிநாத_ஸ்வாமி

பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ளது பொன்னை வாரி வழங்கும் பொன்வாசிநாதர் ஆலயம்.

புதுக்கோட்டை அருகே உள்ளது இலுப்பூர்.

இலுப்பை மரங்கள் நிறைந்து விளங்கியதால் ‘இலுப்பையூர்’ என அழைக்கப்பட்டு, Image
பின்னர் அதுவே மருவி தற்போது ‘இலுப்பூர்’ என அழைக்கப்படுகிறது.

ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது.

ஆலயத்தின் முன்னால் ஒரே கல்லால் செய்த கொடி கம்பம் உள்ளது.

இக்கொடி கம்பத்தின் அடிப்பகுதியில் கிழக்கில் விநாயகர், வடக்கில் ஒற்றை காலை மடக்கி தவம் புரியும் முனிவரின் உருவம்,
மேற்கில் லிங்கத்தின் மீது பால் பொழியும் பசுவின் சிற்பம், தெற்கில் பீடத்தின் மீது அமர்ந்து காணப்படும் முனிவரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இதனை அடுத்து 16 கால் மண்டபம் உள்ளது.

கோவிலின் நுழைவு வாசலில் மூன்று நிலை ராஜகோபுரம் கம்பீரமாகக் காட்சி தருகிறது.
Read 16 tweets
May 29
#ஸ்ரீ_வைத்தீஸ்வர_ஸ்வாமி

உடற்பிணி மனப்பிணி மற்றும் பிறவிப்பிணி நீக்கும் சிந்தாமணி நல்லூர் வைத்தீஸ்வரர் :

விழுப்புரம் அருகிலுள்ள சிந்தாமணி நல்லூரில், வைத்தீஸ்வரர் என்ற பெயருடன் சிவன் அருள்பாலிக்கிறார். Image
இவரை பவுர்ணமிஅன்று வழிபட்டால், தீராத நோய்கள் தீர்ந்து புத்துணர்ச்சியுடன் திரும்பலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தல வரலாறு: 

ருத்ராட்ச மணியாலும், "சிவாயநம' என்னும் மந்திரத்தாலும், திருநீறு என்னும் மருந்தாலும் பக்தர்களின் நோயைப் போக்குவதால்,
இங்குள்ள சிவனை வைத்தீஸ்வரர் என்று அழைக்கின்றனர்.

இந்த மூன்றையும் "மணி, மந்திரம், மருந்து' என்று சேர்த்து குறிப்பிடுவது வழக்கம். 

இந்த பகுதியை ஆட்சி செய்த விக்கிரம சோழன், தன் பெற்றோரின் நினைவாக கட்டினார்.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(