அன்பெழில் Profile picture
Jun 4 5 tweets 2 min read Twitter logo Read on Twitter
#மகாபெரியவா
இராமேஸ்வரத்திலிருந்து ஒரு புரோகிதர் வந்தார். மூன்று தலைமுறைகளாக அந்த ஊரிலேயே இருந்து வருவதாகச் சொன்னார்.

"ராமநாதஸ்வாமி கோவில் நடராஜாவைப் பார்த்திருக்கியோ?"

"பார்த்திருக்கேன். சேவார்த்திகளை அழைத்துக் கொண்டு போய் காட்டியிருக்கேன்."

"நடராஜாவுக்கு ஏழு திரைகள் உண்டோ?" Image
புரோகிதருக்குக் குழப்பம் வந்து விட்டது. என்ன பதில் சொல்வதென்று புரியவில்லை.

பெரியவர் சொன்னார்.
"திருவாதிரை அன்னிக்கு, ஏழு படுதாக்கள் திரையாகப் போட்டு, நடராஜருக்குப் பூஜை செய்வார்கள். ஏழு திரை விலகியதும் நடராஜரைத் தரிசிக்கலாம். சரி அந்தக் கோவிலில் எத்தனை நடராஜர் இருக்கு?"
ராமேஸ்வரத்தாருக்குக் கொஞ்சம் நடுக்கம்.

"நான் ஒரு நடராஜரைத் தான் பார்த்திருக்கேன்"

"மூணு நடராஜர் இருக்கு! போய்ப் பார்."

"ராமேஸ்வரம் கோவிலில், குருவாயூரைப் போல், செக்கு ஆட்டிய நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது வழக்கமா?"

"ஆமாம்" என்று ஒரு போடு போட்டார், வந்தவர்.

"ராமேஸ்வரத்தில்
செக்கே கிடையாது! அந்த க்ஷேத்திரத்து ஸ்வாமி, மண்ணைப் பிடித்து வைத்து உருவாக்கப்பட்டவர். செக்கு ஆட்டக் கூடாது என்று ஓர் ஐதீகம்."

பின்னர், அந்தப் புரோகிதர் மனத்தில் ஒரு குறை இருக்கக் கூடாது என்பதற்காக, குடும்ப க்ஷேமலாபங்கள் விசாரித்துப் பிரசாதம் கொடுத்தார், பெரியவர்.

மஹாபெரியவா
திருவடிக்கு சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 5
#குறுங்காலூஸ்வரர்_கோவில் கோயம்பேடு (கோ - பசு, அயம் - இரும்பு வேலி, பேடு - காப்பிடம், வால்மீகி காலத்தில் பசுகள் சம்ரக்‌ஷணை செய்யும் இடமாக இருந்தது)
கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே (நாதெள்ளா திருமண மண்டபம் எதிரே) மெயின் ரோட்டில் இருந்து பிரியும் தெருவுக்குள் நுழைந்தால், கூப்பிடு Image
தூரத்தில் இருக்கிறது கோயில். இடைக்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்த பெரிய குளத்தை உள்ளடக்கிய கோயில். சிறிய ஆவுடையாரின் மேல் சுமார் 4 அங்குல உயரம் கொண்ட பாணம். லவனும் குசனுக்கு ஸ்தாபித்து வணங்கி வழிபட்ட லிங்கத் திருமேனி. அறம் வளர்த்த நாயகி பாசம், அங்குசம், வரதம், அபயம் தாங்கிய 4 Image
கைகளுடன், இடது பாதத்தை முன் எடுத்து வைத்த நிலையில் வீற்றிருக்கிறார். சீதையை விட்டுவிட்டு வருமாறு இராமர் ஆணையிட இலட்சுமணர் சீதையை அழைத்துக் கொண்டு இங்கு வந்து விட்டு விட்டு சென்றுவிட்டார். தனிமையில் விடப்பட்ட சீதையை திருவான்மியூர் வனப் பகுதியில் ஆசிரமம் அமைத்து தங்கி இருந்த Image
Read 15 tweets
Jun 5
#மகாபெரியவா
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்
ஒரு கூர்கா, தரிசனத்துக்கு வந்தார். முகத்தில் கவலை தெரிந்தது.

"என்ன சமாசாரம்னு கேளு" என்று தொண்டரிடம் சொன்னார்கள் பெரியவா.

கூர்கா சொன்னார். "நான் பிறந்ததிலிருந்தே கஷ்டங்களைத்தான் அனுபவித்துக் கொண்டு Image
இருக்கிறேன். ஆனால் ஏதோ புண்ணிய வசத்தால் தெய்வ ஸ்வரூபமான பெரியவா தரிசனம் கிடைச்சிருக்கு. இனி எனக்கு ஜன்மாவே வரக் கூடாது என்று அனுக்ரஹம் பண்ணணும்.”

"ஆகா,அப்படியே ஆகுக! உனக்கு இனி ஜன்மாவே கிடையாது!" என்று பெரியவாள் சொல்லி விடவில்லை.

பின் மெதுவாகச் சொன்னார்கள்.

"அந்த மாதிரி வரம்
கொடுக்கும் சக்தி எனக்கு இல்லை. நான் தினந்தோறும் பூஜை செய்யும் சந்த்ரமௌளீஸ்வரரையும் த்ரிபுர சுந்தரியையும் உனக்காகப் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.”

கூர்காவுக்கு இந்தப் பதில் நியாயமாகப் பட்டது போலும். ஒரே குதூகலம் அவருக்கு. பிரசாதம் பெற்றுக் கொண்டு "எனக்கு இனிமேல் ஜன்மா கிடையாது.
Read 5 tweets
Jun 5
#மகாபெரியவா அருள்வாக்கு
நம் அப்பாவையும் அம்மாவையும் ஸ்வாமியாக நினைக்க வேண்டும். இதையே மாற்றி ஸ்வாமியையும் அப்பா அம்மா என்ற உருவங்களில் நினைக்க வேண்டும். ‘கொன்றை வேந்தன்’ என்ற நீதி நூலில் ஒளவைப் பாட்டி முதலில் ‘அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்’ என்கிறாள். இது தாய் தந்தையரைத் Image
தெய்வமாக நினைப்பது. இதை அடுத்தே ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்கிறாள். ‘ஆலயம் தொழுவது’ என்றால் ஆலயத்திலுள்ள தெய்வத்தைத் தொழுவதேயாகும். அப்படித் தொழும்போது அத்தெய்வத்தையே தாய் தந்தையர் என அன்புடன் எண்ண வேண்டும். ஸ்வாமி எல்லா இடங்களிலும் இருக்கிறார் என்றால் அவருக்கு நம்மைப்போல்
உருவம் இருக்க முடியாது. ஆனால் உருவம் இல்லாத ஒருவரை எப்படி நினைப்பது? அதனால் அவரை அப்பா அம்மா என்ற இரு உருவங்களில் நினைக்க வேண்டும். நமக்குத் தெரிந்தவர்களில் நம்மிடம் ரொம்ப அன்பாக இருப்பது தாய், தந்தையர் தானே? அன்பாக இருப்பவர்களை நினைத்துக் கொண்டால்தான் நமக்கும் சந்தோஷமாக
Read 5 tweets
Jun 5
#மகாபெரியவா
தொகுப்பாசிரியர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
சொன்னவர்- எம். சுப்புராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்

மும்பை வேத ரக்ஷண நிதிக்குழுவினர் (சுமார் 150 பேர்) தரிசனத்துக்கு வருவதாக முன்னதாகவே தகவல் கொடுத்திருந்தோம்.
சாதுர்மாஸ்ய விரதத்தைப் பக்திப் பரவசத்துடன் நடத்தி வந்த Image
உள்ளூர்ப் பிரமுகர்களை அழைத்தார்கள் பெரியவா.
“எனக்காக (வேதத்துக்காக) உழைக்கும் பக்தர்கள் மும்பையில் இருந்து வருகிறார்கள். அவர்களை நல்ல முறையில் வரவேற்க வேணும்”
பெரியவா ஒரு வார்த்தை சொன்னால் போதாதா! ரயில்வே ஸ்டேஷனில் எங்களுக்கெல்லாம் மாலை மரியாதை; வழி நெடுகிலும் தோரணங்கள்! கோலாகலம்
உற்சாகம், அமர்க்களம் எங்களுக்கு எல்லாம் ரொம்பவும் திகைப்பாக இருந்தது. நாங்கள் என்ன முக்கியப் பிரமுகர்களா? கோடீஸ்வரகளா? பலவித அலுவல்கள் செய்து வரும் சாதாரண மக்கள். எங்களுக்கு ஏன் இவ்வளவு தடபுடலான வரவேற்பு? எங்களில் ஒருவர், உள்ளூர்ப் பிரமுகரைக் கேட்டேவிட்டார்.
“ஸ்ரீசரணாளே
Read 15 tweets
Jun 4
#மகாபெரியவா
திருமதி பிரேமா ரமணி அவர்களின் அனுபவங்கள்.
சுமார் முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் நாங்கள் ஹைதராபாத்தில் இருந்தபோது ஒரு தோழியின் திருமணத்திற்கு புடவை வாங்க அவளுடன் காஞ்சிபுரம் வந்தேன். அங்கே ஒரு தோழி வீட்டில் தங்கினோம். காலையில் மகா பெரியவாளை தரிசித்து விட்டு பின் மாலை Image
புடவை வாங்கப் போகலாம் என்று இருந்தோம். அவர்கள் வீட்டு மாடியில் ஒரு மாமி குடியிருப்பதாகவும் பக்ஷணங்கள் நன்றாகச் செய்வதாகவும் தங்கியிருந்த வீட்டுத் தோழி சொன்னாள். அப்போது அந்த மாமியே கீழிறங்கி வந்தார். அவர் கையில் ஒரு தட்டு. அதில் அழகழகாய் சீனி மிட்டாயில் விதவிதமான பொம்மைகள்.
கல்யாணத்தில் மாலைநேரம் விளையாடலில் வைப்பார்கள். தான் முதன் முதலாக செய்ததாகவும் முதலில் பெரியவாளுக்கு படைத்தபின் பிறருக்கு செய்யப் போவதாகவும் சொன்னார். நாங்களும் பெரியவாளைத்தான் பார்க்கப் போகிறோம் என்றவுடன் எங்களுடனேயே வந்தார். நாங்கள் சீக்கிரமே போய் விட்டதால் மடத்தில் அதிகம்
Read 11 tweets
Jun 4
#அறிவோம்_மகான்கள்
#ஸ்ரீ_ஸ்ரீபாதராஜர்

ஸ்ரீ ஸ்ரீபாதராஜரின் மங்கலாசரண சுலோகம
நமோ ஸ்ரீபாதராஜயே நமஸ்தே வியாஸ யோகினே
நம புரந்தரயாய விஜயார்யதே நமஹ !!

ஸ்ரீபாதராய அல்லது லக்ஷ்மிநாராயண தீர்த்தர் அல்லது ஸ்ரீபதராஜா (1422-1480) ஒரு த்வைத ஆசார்யர், மத்வாச்சார்யா மடத்தின் மடாதிபதி ஆவார். Image
நரஹரி தீர்த்தருடன் இணைந்து ஹரிதாச இயக்கத்தை நிறுவியவர். கிருஷ்ணரைப் புகழ்ந்து எழுதப்பட்ட அவரது பாடல்கள் மற்றும் கீர்த்தனைகள் மற்றும் த்வைத கொள்கைகளின் கருத்துக்கள் உள்ளன. அவர் ஹரியைப் புகழ்ந்து பல கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். சாளுவ நரசிம்ம தேவராயரின் குருவாக இருந்த அவர், இளம் Image
வியாசதீர்த்தருக்கு வழிகாட்டினார். ஜெயதீர்த்தரின் நியாய சுதாவுக்கு வாக்வஜ்ரா என்ற வர்ணனையையும் எழுதியுள்ளார்.
#தாஸ_ஸாகியத்தின்_பிதாமகர் என்ற சொல்லுக்கு சொந்தக்காரரான இவர் கர்நாடக மாநிலத்தில் கன்வா நதிக்கரையில் அப்பூருக்கு
அருகில் உள்ள சென்னப்பட்னாவைச் சேர்ந்த சேஷகிரிக்கும்
Read 24 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(