அன்பெழில் Profile picture
Jun 13 6 tweets 2 min read Twitter logo Read on Twitter
#பஞ்சமுக_ஆஞ்சநேயர்
இராமருக்கும், இராவணனுக்கும் போர் நடந்தது. இதில் இராவணன் நிராயுதபாணியானான். இதனால் இராமர் இராவணனை கொல்ல மனமின்றி, இன்று போய் நாளை வா என திருப்பி அனுப்பி விட்டார். இராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்குத்தான் என்பதை இராவணன் உணரவில்லை. மீண்டும் இராமருடன் போர் Image
செய்ய நினைத்த இராவணன் மயில் இராவணன் என்ற மற்றொரு அசுரனது துணையுடன் போருக்கு கிளம்பினான். இராமரை அழிப்பதற்காக மயில் இராவணன் கொடிய யாகத்தை நடத்த திட்டமிட்டான். இந்த யாகம் நடந்தால் இராம-லட்சுமணனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதை உணர்ந்த விபீஷணன், யாகத்தை தடுத்து நிறுத்த ஆஞ்சநேயரை
அனுப்பும்படி இராமரிடம் கூறினான். இராமர் கூறியதன் பேரில் ஆஞ்சநேயர் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார். இந்த தெய்வங்கள் அனைவரும் போரில் அனுமன் வெற்றி பெற தங்களின் உருவ வடிவின் சக்தியை அனுமனுக்கு அளித்தனர். இதன் Image
மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மனித குல வாழ்விற்காக மயில் இராவணனை அழித்தார். இப்படி பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால், பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளை தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக #பஞ்சமுக_ஆஞ்சநேயர் விளங்குகிறார். அத்துடன் வெற்றியையும்
வளத்தையும் குறிக்கும் வகையில் #ஜயமங்களா என்றும் அழைக்கப்படுகிறார். பஞ்ச முகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததால் பஞ்ச முகத்தில் உள்ள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நரசிம்மரின் அருளால் எடுத்த காரியங்களில் வெற்றியும், லட்சுமி கடாட்சமும், ஹயக்கிரீவரின் அருளால் உண்மையான அறிவாற்றல், ஆன்மிக
பலமும், வராகரின் அருளால் மனத் துணிவும், கருடனின் அருளால் அனைத்து விதமான நஞ்சின் ஆபத்து விலகும் தன்மையும், ஆஞ்சநேயரின் அருளால் மன அமைதியும், சகல ஸௌபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
ஜெய் ஆஞ்சநேயா
ஜெய் ஸ்ரீராம்
சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏 Image

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 14
#கீழப்பாவூர்_நரசிம்மர்_கோவில்
இந்தியாவில் உள்ள நரசிம்மர்
கோவில்களில் அபூர்வமானதும்,
வேறெங்கும் காண இயலாத பல்வேறு
சிறப்புகள் நிறைந்த தலமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில். நரசிம்மருக்குத் தன் பக்தர்கள் மீது பிரியம் அதிகம். நம்மை அறியாமலே, அவர் நாமத்தை சொன்னாலே போதும், ஓடோடிவந்து Image
காப்பான் என்று எம்பெருமானின் ஈகைக் குணத்தை எடுத்துக் கூறுகிறார் #பொய்கையாழ்வார். முதன் முதலில் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது அகோபிலம் திருத்தலத்தில். மீண்டும் அவதாரம் எடுத்த தலம் கீழப்பாவூர். அகோபிலத்தில் இருந்து வைகுண்டம் திரும்பி விட்டாலும் நரசிம்மரின் மனம் முழுவதும் பக்தர்களைச் Image
சுற்றிச் சுற்றியே வந்ததாம். கலியுகத்தில் கலி புருஷனின் மாயையில் சிக்கி, பக்தர்கள் அல்லலுறுவார்களே, அவர்களை மாயையில் இருந்து விடுவித்துக்
காக்க வேண்டுமெனத் தவித்தார் திருமால். அகோபிலத்தில் வெறும் இரண்டு நாழிகைகள் நீடித்திருந்து பணியை முடித்துவிட்டு அவசர அவசரமாகத் திரும்பிவிட்டார் Image
Read 14 tweets
Jun 14
#மகாபெரியவா
ஒரு பக்தரின் அனுபவங்கள்

வழக்கம்போல அந்த ஒரு ஏகாதசியன்றும் நானும் என் நண்பர் கோபுவும் காஞ்சி ஸ்ரீமடத்திற்கு சென்றிருந்தோம். அப்பொழுது எல்லாம் மஹாப்பெரியவாள் எப்பொழுது வேண்டுமானாலும் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ஸ்ரீசங்கர மடத்தின் பின்புறத்தில் அவர் உபயோகித்த Image
மேனாவிற்கு அருகில் தரிசனம் தருவது வழக்கம். நாங்கள் சென்றிருந்த பொழுது அந்த மஹான் 2 வெளி நாட்டுப் பெண்களுடன் கொஞ்சம் தள்ளி வேறுபக்கமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். அந்த வெளிநாட்டுப் பெண்கள் இருவரும் 25 வயதுக்குள்ளானவர்கள். நாங்கள் மற்றவர்களுடன் சுமார் 45 நிமிடங்கள் பெரியவர்
தரிசனத்திற்காக காத்துக் கொண்டு இருந்தோம். பரமாச்சாரியாரும் தொடர்ந்து அந்தப் பெண்களுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர் மூவரைத் தவிர, அந்த பக்கத்தில் வேறு ஸ்ரீமடத்தைச் சேர்ந்தவர்கள் யாருமே இல்லை. அந்தப் பெண்களிடம் பெரியவாள் என்ன பாஷையில் பேசுகிறார்கள் என்று எங்கள் எவருக்குமே
Read 25 tweets
Jun 14
#திருமலையில்_மணி
திருமலையில் இன்றும் பூஜை தீபாராதனை நேரங்களில் மணி அடிப்பது இல்லை. காஞ்சிபுரத்திற்கு அருகேயுள்ள துப்புல் கிராமத்தை சேர்ந்தவர்கள் அனந்தசூரி தோத்தாரம்பா என்கிற வைணவ தம்பதியர். குழந்தை பாக்கியம் வேண்டி இருவரும் கால்நடையாக திருப்பதி சென்றனர். அன்றிரவு இருவரும் Image
சத்திரத்தில் தங்கியிருந்த போது திருமலைவாசனின் சந்நிதியில் அடிக்கப்படும் மணியை, தான் விழுங்கியது போன்று கனவு கண்டார் தோத்தாரம்பா அம்மையார். திடுக்கிட்டு கண் விழித்த அவர், தான் கண்ட கனவை கணவரிடம் கூறிக் கொண்டிருந்த அக்கணம் திருமலை சந்நிதியில் ஒரே பரபரப்பு. பூஜை மணியை காணாததால் Image
ஆளுக்கொரு பக்கமாக அனைவரும் பதட்டத்துடன் தேடிக் கொண்டு இருந்தனர். அப்போது அசரீரியாய் ஒரு குரல் “அந்த மணியை யாரும் தேட வேண்டாம். புரட்டாசி சிரவண நட்சத்திரத்தில் அந்த மணி ஒரு அற்புத மனிதராக, வேங்கடநாதன் என்கிற பெயரில் துப்புல் அனந்தசூரி தோத்தாரம்பா தம்பதியருக்கு பிறப்பார். அவர்
Read 5 tweets
Jun 14
#ஶ்ரீராகவேந்திரசுவாமி
ஸ்ரீ ராகவேந்திரர் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார். இறந்தவரையும் கூட உயிர்ப்பித்திருக்கிறார். கிரீடகிரி என்னும் கிராமத்தில் அவர் நிகழ்த்திய அற்புதம், இறைவனுக்கு எவ்வளவு நெருக்கமானவர் என்று உலகுக்கு எடுத்துச் சொன்னது! கிராமத் தலைவரின் வீட்டில் மூலராமருக்கான Image
பூஜையும், அதன்பின் பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விருந்தில் பரிமாறுவதற்காக மாம்பழச் சாறு ஒரு அண்டா நிறைய நிரப்பப்பட்டிருந்தது.
விளையாடிக் கொண்டிருந்த அந்த வீட்டுக் குழந்தை, மாம்பழச்சாறு நிரம்பியிருந்த அண்டாவுக்குள்
எட்டிப் பார்க்க முனைந்து, தடுமாறி அண்டாவினுள் விழுந்து விட்டது. வெளியே வர முடியாமல் தத்தளித்து மூழ்கி விட்டது. அத்தனை பேரும் ஸ்ரீ ராகவேந்திரர் செய்யும் மூலராமரின் பூஜையிலிருந்து விழிகளை அகற்ற இயலாமல் ஈடுபட்டிருந்தனர். சமையல் அறையில் நடந்த விபரீதம் அவர்கள் யாருக்குமே தெரியாது!
Read 9 tweets
Jun 14
#மகாபெரியவா
ஒருமுறை காஞ்சிப் பெரியவா மயிலாப்பூர் வந்த போது, "மணி அய்யர் வீட்டில் இருக்கிறாரா" என்று சீடர்களிடம் விசாரித்தார். அது காலை நேரம். வீட்டில் தான் இருப்பார் என்று தெரிந்ததும், உடனே கிளம்பி கற்பகாம்பாள் நகரில் இருக்கும் மதுரை மணியின் வீட்டுக்கு வந்துவிட்டார். மணி Image
அய்யருக்கு தூக்கிவாரிப் போட்டு விட்டது. மகா பெரியவாளை பக்தியுடன் வரவேற்றார்.

"ம்....பாடு!" என்றார் மகா பெரியவா.

"நான் இன்னும் ஸ்நானம் கூடப் பண்ணலை, பெரியவா!"
என்றார் மணி அய்யர்.

"நீ சங்கீதம் என்கிற சாகரத்தில் மூழ்கி இருப்பவன். குளிக்காவிட்டாலும் பரவாயில்லை.. பாடலாம்!" என்றார்.
"மிருதங்கம் வாசிக்கிறவா இப்போதான் போனா" என்று இழுத்தார் மணி அய்யர்.

"நான் தாளம் போடுகிறேன், நீ பாடு!" என்று அங்கேயே உட்கார்ந்து கைகளால் தாளம் போட ஆரம்பித்து விட்டார் மகா பெரியவா.

வேறு வழி இல்லை. காஞ்சி மகான் முன் அந்தக் காலை நேரத்தில் பாடினார் மதுரை மணி அய்யர்.
Read 4 tweets
Jun 13
#ஹனுமந்த_வாகனம்
ஹனுமன் கருடனை போல் நித்யசூரி இல்லை. அவன் ஒரு சிரஞ்சீவி இன்னும் பூமியில் தானே வசிக்கிறான். அப்படி இருக்க ஏன் ஹனுமந்த வாகனம்?

இராமாயணத்தில் ஶ்ரீஇராம இராவண யுத்ததத்தில் ஒரு நிகழ்வு. ஶ்ரீராமனுடன் போரிட வந்த இராவணனை லக்‌ஷ்மணன் முதலில் எதிர்த்து போரிடுகிறார். ராவணன் Image
எய்யும் ஒவ்வொரு அஸ்திரத்தையும் செயலிழகச் செய்து கொண்டே வருகிறான். ஶ்ரீலஷ்மணனின் போர் திறமையை கண்டு வியந்த ராவணன் இலக்குமணனை அவ்வளவு எளிதில் அழிக்க முடியாது என கண்டு கொண்டு பிரம்மா விசேஷமாக தனக்கு தந்த அஸ்திரத்தை லஷ்மணன் மேல் ஏவுகிறான் ராவணன். தன் மார்பை நோக்கி வரும் அஸ்திரத்தை
மகிமையை உணர்ந்த லஷ்மணன் அதனை எதிர்க்காமல் விட அந்த வேல் மார்பில் பட்டு இலக்குமணன் மூர்ச்சை ஆகிறான். ராவணன் வேகமாக வந்து லஷ்மணனை இலங்கையின் உள்ளே தூக்கி செல்ல எத்தனிக்கிறான். அவனால் துளிகூட லக்ஷ்மணன் உடலை அசைக்க முடியவில்லை பத்து கைகளை கொண்டும் முயல்கிறான் ஹும் முடியவில்லை. இதை
Read 15 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(