Avvai 🇮🇳 Profile picture
Jun 14 17 tweets 3 min read Twitter logo Read on Twitter
நாரதர் ஒரு சமயம் "கிருஷ்ணா! உங்களுடைய மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.பிரம்மத்தை (தெய்வத்தை) உணர்ந்த பிரம்மஞானி தேவரிஷியாகிய நானும் மாயையால் பாதிக்கப்படுவேனா?"என்று கேட்டார்.கிருஷ்ணர், நாரதரின் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், Image
சற்று தூரத்திலிருந்த ஒரு குளத்தை சுட்டிக்காட்டி,"நாரதரே!அதோ அந்தக் குளத்தில் மூழ்கி எழுந்து வாருங்கள்"என்று கூறினார். கிருஷ்ணர் கூறியபடியே,நாரதர் தன் கையில் இருந்த மகதி என்ற வீணையை,குளக்கரையில் வைத்துவிட்டு,குளத்தில் சென்று மூழ்கி எழுந்தார்.மூழ்கி எழுந்தாரோ இல்லையோ,
அவர் அழகிய இளம் பெண்ணாக மாறியிருந்தார்!தான் நாரதர் என்ற பழைய நினைவுகள் அனைத்தும் அவருக்கு அறவே இல்லாமல் போயிற்று.குளக்கரையில் அவர் வைத்த வீணையும் இல்லை. கிருஷ்ணரும் அங்கு இல்லை.இப்போது நாரதப் பெண்,குளத்தின் படிகளில் ஏறி மேலே வந்து கொண்டிருந்தாள்.அந்த வழியாக அந்த நாட்டு அரசன்,
குதிரையில் வேகமாக வந்தான்.அவன் இளைஞன்,அழகானவன். நாரதப் பெண்ணை அவன் பார்த்தான்.அவளைத் திருமணம் செய்து கொள்ள விரும்பினான்.நான் இந்த நாட்டின் அரசன்.உன்னைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன்,உனக்குச் சம்மதமா? என்று கேட்டான்.நாரதப் பெண் மவுனமாகத் தலையசைத்து,
தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.அரசன் அவளைத் தன்னுடன் அரண்மனைக்கு அழைத்துச்சென்றான்.இருவருக்கும் முறைப்படி திருமணம் விமரிசையாக நடந்தது.இருவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள்.சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன.ஒரு சமயம் பக்கத்து நாட்டு அரசன்,
இந்த நாட்டு அரசன் மீது போர் தொடுத்தான்.இருதரப்புக்கும் கடுமையாகப் போர் நடந்தது.போர்க்களத்தில் நாரதப் பெண்ணின் கணவன் கொல்லப்பட்டான்.அதைத் தொடர்ந்து,நாரதப் பெண் இருந்த நாட்டின் தலைநகரை,கைப்பற்றுவதற்கு பகைவர்கள் விரைந்து வந்தார்கள்.அப்போது வீரர்கள் சிலர்,
போர்க்களத்தில் இருந்து தப்பி அரண்மனைக்கு வந்து நாரதப் பெண்ணிடம்,"அரசியாரே!போரில் நமது அரசர் கொல்லப்பட்டார்! பகைவர்கள் அரண்மனையை கைப்பற்ற நெருங்கி வந்துக் கொண்டிருக்கிறார்கள்! உங்களையும்,நமது அரச குமாரர்களையும், பகைவர்கள் சிறை பிடிப்பதற்குள் இங்கிருந்து நீங்கள் தப்பிச்
சென்றுவிடுங்கள்"என்று கூறினர்.நாரதப் பெண்ணும், தன் குழந்தைகளுடன் அரண்மனையிலிருந்து தப்பி ஓடினாள்.ஆனாலும், பகைவர்கள் இதை அறிந்துவிட்டனர்.அவளை தேடிச்சென்றனர். அவர்கள் தன்னைத் துரத்திவரும் சப்தம் அவளுக்குக் கேட்டது.அவள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க வேகவேகமாக அருகிலிருந்த காட்டிற்குள்
ஓடினாள்.விரைந்து ஓடியபோது,அவள் தன் மூத்தமகனின் கையைத் தவறவிட்டாள்.இப்போது அவள் தன் ஒரு குழந்தையை மார்போடு அணைத்தபடியே ஓடிக்கொண்டிருந்தாள்.இதற்குள் பகைவர்கள் அவளை மிகவும் நெருங்கிவிட்ட ஆரவாரம் கேட்டது.இதனால் பயந்து வேகத்தை அதிகரித்தபோது,அவள்கையில் இருந்த குழந்தையும் தவறி கீழே
விழுந்தது.குழந்தையை எடுக்க முடியவில்லை.பகைவர்களிடம் சிக்காமல் தப்ப கல்லிலும் முள்ளிலும் விழுந்தாள்.அதனால் உடலில் பலமான காயங்கள் ஏற்பட்டன.நீண்ட தூரம் ஓடிய பிறகு, பகைவர்கள் துரத்தி வந்த சப்தம் கேட்கவில்லை.எதிரிகளிடம் தப்பியதை அவள் உணர்ந்தாள்.
காட்டிலிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து தன் நிலையை நினைத்து அவள்,ஐயோ!என் நிலை இப்படி ஆகிவிட்டதே! நான் என் கணவரை இழந்துவிட்டேன்!குழந்தைகளையும் பறிகொடுத்து விட்டேன். நாட்டையும் பகைவர்கள் பிடித்து விட்டார்கள்.ஆதரவற்ற அநாதையாக நான் இப்போது இருக்கிறேன்.இனிமேல் நான் யாருக்காக,
உயிர் வாழ வேண்டும்?கல்லிலும் முள்ளிலும் அடிபட்டு உடல் முழுவதும் ஏற்பட்ட இந்தக் காயங்களின் வலியை என்னால் பொறுக்க முடியவில்லை.பசியும் தாகமும் என்னை வருத்துகின்றன! என்று பலவாறுக் கூறி கதறி அழுதாள்.
அப்போது கிருஷ்ணர் ஒரு முதியவர் வடிவத்தில் அங்கு வந்து,"அம்மா! நீ யார்? ஏன் இப்படி இந்தக் காட்டில் தனிமையில் அழுதுகொண்டி ருக்கிறாய்?"என்று கேட்டார்.நாரதப் பெண்,தன்னுடைய அவல நிலையை அவரிடம் கூறி அழுதாள்.முதியவர் அவளிடம்,"அம்மா! அதோ தெரியும் அந்தக்குளத்தில் நீராடி விட்டு வா!
அதனால் உனக்கு நன்மை ஏற்படும்"என்று தெரிவித்தார்.முதியவர் கூறியபடியே நாரதப் பெண் குளத்தில் மூழ்கி எழுந்தாள்.உடனே நாரதப் பெண் உருவம் மாறி,பழைய நாரதர் வடிவம் கொண்டார். அவருக்கு நடந்தவை அனைத்தும் நினைவுக்கு வந்தன.குளத்தின் படிகளில் ஏறி வந்த நாரதர்,குளக்கரையில் தான் வைத்துச்சென்ற,
வீணையை எடுத்துக் கொண்டார்.சற்று தூரத்தில் கிருஷ்ணர் நின்று கொண்டிருப்பதையும் பார்த்தார்.நடந்ததையெல்லாம் நாரதர் நினைத்துப் பார்த்தபடியே கிருஷ்ணரிடம் சென்று,"பகவானே! நான் கர்வம் கொண்டதற்கு என்னை மன்னியுங்கள். உங்கள் மாயை மிகவும் வலிமை வாய்ந்தது என்பது உண்மை தான்.
மாயைக்கு நான் ஒருபோதும் வசப்படாமல் இருக்க வேண்டும் என்று என்னை ஆசீர்வதியுங்கள்"என்று வணங்கி கேட்டுக்கொண்டார். கிருஷ்ணரும் நாரதரின் பிரார்த்தனையை ஏற்று ஆசீர்வதித்தார்.

வாழ்க்கை என்று ஒன்று இருக்கும் வரை, மாயை இருக்கும்.
இதில் இருந்து விடுபட ஒரே வழி இறைவனைச் சரணடைவதுதான்🙏

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Avvai 🇮🇳

Avvai 🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Avvaitweets

Jun 16
ஆடைகளை அணிவிக்க வேண்டிய 14 நக்ஷத்திரங்கள்:

வஸ்த்ராபரண நக்ஷத்திரங்கள் என்று கூறப்படுபவை 14.

- அஸ்வினி நக்ஷத்திரத்தில் புதிய ஆடை அணிந்தால் ஏராளமான ஆடைகள் பெருகும்.

- ரோஹிணி நக்ஷத்திரத்தில் அணிந்தால் தன ப்ராப்தி, அதாவது செல்வம் சேரும். Image
- புனர்பூசம் நக்ஷத்திரத்தில் புத்தாடை அணிந்தால் சுபம்.

- பூசம் மற்றும் பூரம் ஆகிய நக்ஷத்திரங்களில் அணிந்தால் செல்வம் சேரும்.

- ஹஸ்த நக்ஷத்திரத்தில் புத்தாடை அணிந்தால் கர்ம சித்தி, அதாவது காரிய வெற்றி உண்டாகும்.

- சித்திரை நக்ஷத்திரத்தில் அணிந்தால் சுபம் உண்டாகும்.
- ஸ்வாதி நக்ஷத்திரத்தில் புதிய ஆடை அணிந்தால், உத்தம போஜனம் அதாவது நல்ல சாப்பாடு கிடைக்கும்.

- விசாக நக்ஷத்திரத்தில் புத்தாடை அணிந்தால், ஜனப்பிரியர் ஆகலாம். அதாவது மக்களால் போற்றப்படுவர்.

- அனுஷம் நக்ஷத்திரத்தில் புத்தாடை அணிந்தால், நண்பர்களின் சேர்க்கை ஏற்படும்.
Read 5 tweets
Jun 16
குளிகை என்றால் என்ன:

தொட்டத துலங்கச் செய்யுமா குளிகை நேரம்..?

இராவணனின் மனைவி மண்டோதரி, கருவுற்று நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள். எப்போது வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம் என்ற நிலையில் இராவணன் தனது குல குருவான சுக்கிராச்சார்யாரைச் சந்தித்தான். Image
யாராலும் வெல்ல முடியாத வீரமும், மிகுந்த அழகும், நிறைந்த அறிவும் கொண்ட மகனே தனக்குப் பிறக்க வேண்டும் என்று குலகுருவிடம் கேட்டுக் கொண்ட இராவணன், அதற்கு வழிமுறைகள் என்ன என்றும் அவரிடம் கேட்டான்.
அதற்குப் பதில் அளித்த சுக்கிராச்சாரியார், “கிரகங்கள் அனைத்தும் ஒரே கட்டத்தில் இருக்கும்
நேரத்தில் உனக்குப் பிள்ளை பிறந்தால், அந்தக் குழந்தை நீ விரும்பிய எல்லாச் சிறப்புகளும் கொண்டதாக இருக்கும்..”என்று யோசனை கூறினார். உடனடியாக, நவக்கிரகங்கள் அனைத்தையும் சிறைப் பிடித்து, ஒரே அறைக்குள் அடைத்துவிட்டான் இராவணன். ஒரே அறையில் இருந்த நவக்கிரகங்கள் யாவும் தவித்துப் போயினர்.
Read 15 tweets
Jun 15
நரசிம்மர் வழிபாடு பற்றிய 20 சிறப்பு தகவல்களை பார்க்கலாம்.

நரசிம்மரை தொடர்ந்து வழிபட்டு வருபவர்களுக்கு எத்தகைய திருஷ்டி தோஷமும் ஏற்படாது.

நரசிம்மருக்கு சிவப்பு நிற அரளி மற்றும் செம்பருத்தி பூக்கள் மிகவும் பிடித்தமானவையாகும்.

கணவன்-மனைவி அடிக்கடி சண்டை போடுகிறார்களா? Image
நரசிம்மரை வழிபட்டால் தம்பதி இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் விலகி விடும்.

நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று கலசம் வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வெறும் படத்தை வைத்தே பூஜைகள் செய்யலாம்.

நரசிம்மர் அருள் பெற பெண்களும் விரதம் இருக்கலாம்.
ஆனால் பெண்கள் மிகவும் சுத்தமாகவும், தூய்மையாகவும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

வீட்டில் நரசிம்மரை வழிபாடு செய்யும்போது வாயு மூலை எனப்படும் வடமேற்கில் வைத்து வழிபடுவது மிகவும் நல்லது.

நரசிம்ம ஜெயந்தி தினத்தன்று வீட்டில் உள்ள சிறுவர்- சிறுமிகளுக்கு நரசிம்ம அவதார கதையை படித்து
Read 11 tweets
Jun 12
பராசர பட்டர் என்பவர் ஒருமுறை காட்டுபாதையில் சென்றுக் கொண்டிருந்தார்.திடீரென்று அங்கே ஏதோ ஒரு காட்சியைக் கண்டு மயங்கி விழுந்துவிட்டார்.நெடுநேரம் ஆகியும் பட்டர் வீடு திரும்பாததால் அவரைத் தேடிச்சென்ற சீடர்கள்,அவர் மயங்கிக் கிடப்பதைக் கண்டார்கள்.அவரை மெதுவாக வீட்டுக்கு அழைத்து வந்து Image
மயக்கம் தெளிவித்தனர். பட்டர் எழுந்தவுடன், “காட்டில் என்ன ஆயிற்று? கொடிய மிருகங்கள் ஏதாவது உங்களைத் தாக்க வந்தனவா? இயற்கைச் சீற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டனவா?” என்றெல்லாம் வினவினார்கள் சீடர்கள்.ஒன்றுமே இல்லை. நான் ஒரு காட்சியைக் கண்டேன். அதனால் மயங்கி விழுந்துவிட்டேன்"என்றார் பட்டர்.
“என்ன காட்சி?” என்று பதற்றத்துடன் சிஷ்யர்கள் கேட்டார்கள். “ஒரு வேடன் ஒரு முயல்குட்டியைப் பிடித்தான். அதை ஒரு சாக்குப்பையில் மூட்டைக்கட்டி எடுத்துச்சென்றான். இதைக்கண்ட அந்த முயல்குட்டியின் தாய்முயல், அந்த வேடனைத் துரத்திச்சென்று, அவன் கால்களை பிடித்துக்கொண்டு மன்றாடியது.
Read 10 tweets
Jun 11
குருக்ஷேத்திரத்தில்,
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையிலான யுத்தத்தில், ஒன்பது நாள்கள் முடிந்துவிட்டன. "ஒன்பது நாட்கள் கடந்தும் பாண்டவர்களை வீழ்த்த முடியவில்லையே" என்று நினைத்த துரியோதனன், மகாரதராக இருந்த பீஷ்மரிடம், தான் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்துவிட்டான். Image
"பீஷ்மர், பாண்டவர்களை ஒழிக்க வேண்டும் என்ற உறுதியுடன் போரிடவில்லை" என்று நினைத்தான். தன் எண்ணத்தை மிகக் கோபத்துடன் பீஷ்மரிடம் தெரிவித்தான். துரியோதனின் கடுமையைக் கண்ட பீஷ்மரும், அதேக் கடுமையுடன் மறுநாள் போரில் பாண்டவர்களை அடியோடு வீழ்த்துவதாக சபதம் செய்தார்.
ஆனால் துரியோதனனோ, "பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று சொல்லாதீர்கள். அவர்களை போரில் கொல்வேன் என்று சொல்லுங்கள்" என்றான். செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க வேண்டுமே என்பதற்காக பீஷ்மரும், "அப்படியே ஆகட்டும்" என்று கூறிவிட்டார்.
Read 20 tweets
Jun 10
ஒரு மன்னன், தெரியாத்தனமாக ஒரு பிராமணனைக் கொன்றதால், அவரை ‘பிரம்மஹத்தி’ பாவம் பிடித்துக் கொண்டது. ஒரு ரிஷியின் ஆஸ்ரமத்துக்குச் சென்று பரிஹாரம் கேட்க முடிவு செய்தார். அங்கே சென்றபோது ரிஷி இல்லை. அவருடைய மகனே இருந்தார். அவரிடம் தான் வந்த காரணத்தை மன்னன் கூறினார்.
#Spirituality Image
அவர் “நானே பரிஹாரம் சொல்கிறேன். பக்தியுடன் மூன்று முறை 'ராம, ராம, ராம' என்று சொல்லுங்கள். அந்தப் பாவம் போய்விடும்” என்றார். இவ்வாறு அவர்கள் உரையாடிக் கொண்டிருந்த தருணத்தில்  ரிஷியும் வந்துவிட்டார். என்ன விஷயம் என்பதை அறிந்தார். அவருக்கு மகன் மீது கடும் கோபம் வந்தது.
“அட மூடனே! ஜன்ம ஜன்மாந்தரங்களில் செய்த பாவங்களும், ராமனின் நாமத்தை ஒரு முறை சொன்னாலேயே போய்விடுமே. உனக்கு எப்படி நம்பிக்கை குறைந்து மூன்று முறை சொல்லச் சொன்னாய்? இந்த நம்பிக்கைக் குறைவினால் அடுத்த ஜன்மத்தில் நீ வேடனாகப் பிறப்பாயாக” என்று சபித்தார்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(