#கைலாயம்
சிவபெருமானும் பார்வதி தேவியும் வாழும் கைலாயத்தில் மற்ற தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் கின்னரர்கள் ரிஷிகள் போன்றோரும் வாழ்கின்றனர். ப்ரம்ம தேவனின் இருப்பிடம் சத்யலோகம். விஷ்ணுவின் இருப்பிடம் வைகுண்டம். சிவனின் இருப்பிடம் கைலாயம். சத்ய லோகமும் வைகுண்டமும் சாதாரண
மனிதர்களின் கண்ணுக்கு தெரிவதில்லை. ஆனால் நமது கண்களால் கண்டு தரிசனம் பெற்று முக்தி அடையும் வகையில் சிவனின் இருப்பிடமான கைலாயம் அமைந்து உள்ளது. இதில் கைலாயம் என்பது சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் திபெத் நாட்டில் அமைய பெற்று இருக்கிறது. சிந்து சட்லெஜ் பிரம்மபுத்திரா போன்ற பல
நதிகள் இந்த கைலாயத்தில் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. கைலாயம் 6638 மீட்டர் உயரம் கொண்டுள்ளது. இங்கு வரும் அனைவரும் வணங்கும் #மானசரோவர் ஏரியை ப்ரம்ம தேவர் அவரது கைகளால் உருவாக்கியது. உலகின் மிக உயரத்தில் இருக்கும் நன்னீர் ஏரி மானசரோவர் மட்டுமே. வேறு எங்கும் இது போன்ற ஏரிகள் இல்லை.
அழிந்து போனதாக சொல்லப்படும் அன்னப் பறவைகள் இன்னமும் இங்கு வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. ப்ரம்ம முகூர்த்த நேரத்தில் தெய்வங்களும் தேவர்களும் கின்னரர்களும் யக்ஷர்களும் வந்து நீராடும் இடமாக மானசரோவர் ஏரி விளங்குகிறது. இதன் காரணமாகவே இங்கு நீராடியபின் கைலாயத்தை தரிசித்தால் முக்தி
என்று மக்கள் நம்புகின்றனர். 52 கிமீ சுற்றளவு கொண்ட கைலாய மலையை பரிக்கிரமமாக சுற்றி வரும் போது சுகு, ஜெய்தி எனும் இரு இடங்களில் கைலாய மலையின் பிம்பம் மானசரோவர் ஏரியில் விழுவதை பார்க்க முடியும். மிகவும் அரிய இந்த இடங்களை சிவனும் பார்வதியும் சேர்ந்து காட்சியளிக்கும் இடமாக மக்கள்
வழிபடுகிறார்கள். கௌரிசங்கர் என்று இதற்கு பெயரும் வைத்து இருக்கிறார்கள். தேவியின் 51 சக்தி பீடங்களில் மானசரோவர் தான் சதி தேவியின் வலது உள்ளங்கை விழுந்ததாக கூறப்படுகிறது.
மானஸரோவருக்கு வெகு அருகிலேயே ராட்சத தலம் என்று இன்னொரு ஏரியும் உண்டு. ராவணன் தவம் செய்த இந்த ஏரி உப்பு நீர்
தன்மை கொண்டுள்ளது. தெளிந்த பளிங்கு நீர் போல மானசரோவர் அமைதியாக இருக்கிறது. ராட்சத ஏரியோ ஆரவாரம் கொண்ட அலைகளை கொண்டு கொந்தளிப்பாகவே காட்சியளிக்கிறது. அதே போல மானஸரோவரில் வலம் வரும் பறவைகள் எதுவும் ராட்சத தல ஏரிக்கு வருவதில்லை. சிவபெருமானும் பார்வதி தேவியும் வாழும் இந்த கைலாயத்தில்
மற்ற தேவர்கள் முனிவர்கள் சித்தர்கள் கின்னரர்கள் ரிஷிகள் போன்றோரும் வாழ்கின்றனர். அவர்களுக்கான மாளிகைகள் குகைகள் ஆகியவை கைலாய மலையில்தான் ரகசியமாக இருக்கின்றன. சில சமயங்களில் இரவு நேரங்களில் மினுமினுக்கும் வகையில் இந்த இடங்கள் தங்களை வெளிக் காட்டி கொள்ளும் என்று கூறப் படுகிறது.
8000 மீட்டருக்கும் மேல் உயரம் கொண்ட எவெரெஸ்ட் சிகரத்தில் ஏறுபவர்களால் கூட 7000 மீட்டர் உயரம் கொண்ட இந்த கைலாயத்தில் ஏற முடியவில்லை. தப்பி தவறி யாரேனும் ஏறினாலும் அவர்கள் வழி தவறி விடுகின்றனர். அமானுஷ்ய ரகசியங்கள் கொண்டது கைலாய மலை. இந்துக்கள் மட்டுமல்லாமல் புத்தம், சமணம் பொம்பா
போன்ற மற்ற மதத்தினரும் கைலாய மலையை கடவுளாக பார்க்கின்றனர். சாட்டிலைட் மூலம் கைலாயத்தை புகைப்படம் எடுத்த போது மிக பெரிய ஆவுடையாருடன் கூடிய லிங்க ரூபமாக கைலாய மலை காட்சியளிப்பது கடவுளை நேசிக்காதவருக்கும் வியப்பை தருகிறது. பிரபஞ்சத்தின் மைய பகுதியில் இருக்கும் கைலாயம் இந்துகள்
நம்பிக்கை படி அவர்களுக்கு தந்தையாகிறது. மானசரோவர் ஏரி தாயாகிறது. காலங்கள் ஸ்தம்பித்து போகும் குகைகள் கைலாயத்தின் அடியில் ஏராளமாக இருக்கிறது என்றும் இங்குதான் மகா அவதார் பாபாஜி மற்றும் எண்ணற்ற சித்தர்கள் வசிப்பதாகவும் நம்பப்படுகிறது.
இங்கு வருகை தரும் பக்கதர்களின் நகங்கள், முடி
12 மணி நேரத்தில் வளர்கின்றன என்கிறார்கள். இதன் மூலம் கைலாயத்தில் காலம் வேகமாக நகர்கிறது என்று அனைவரும் புரிந்து கொள்ளலாம். சூரியனின் கதிர்களால் பொன்னிறமாக ஜொலிக்கும் இந்த கைலாயம் இன்னும் எவ்வளவோ அதிசயங்களையம் அமானுஷ்யங்களையும் தன்னிடம் கொண்டிருக்கிறது. ஏற்கனவே இறைவனால் வெளிப்பட்ட
அதிசயங்கள் இன்னமும் முடிவின்றி மனித மூளைகளால் ஆராயப்பட்டுக் கொண்டே இருக்கும் போது வெளிவராத கைலாயத்தின் ஆச்சர்யங்கள் இன்னும் ஏராளமாக உள்ளன.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
@threadreaderapp unroll
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
Divya Desam – 84 of 108 #Thiruvananthapuram_Sri_Anantha_Padmanabha_Swamy_Temple Kerala The Moolavar is Sri Anantha Padmanabhaswamy. He is in Kidantha (lying) kolam in Bhujangha Sayanam facing east. He gave his Prathyaksham for Indran, Chandran and the Ekadesai Ruthraas. Thayar
of this sthalam is #Sri_HariLakshmi Thayar. The name of the city of 'Thiruvananthapuram' in Malayalam and Tamil translates to "The City of Ananta" (Ananta being a form of Vishnu). The origin of Sri Padmanabha swamy Temple starts with the sage Divakara Muni. One day, Vishnu
appeared to the sage as a lovely child, which caught Divakara’s attention. When the sage requested the child to stay with him, he agreed to do so on the condition that he would be treated with respect. If the sage failed to do so, however, he would vanish immediately. The god
#Barbarika was the grandson of Bhima, son of Ghatotkacha and Princess Maurvi, though other references state that he was a warrior from the south. He was from the one of major powerful warriors in Mahabharata who can change whole cenerio of battle in just few minutes. He was the
devotee of Devi Durga and lord Shiva. Barbarika was originally a yaksha, reborn as a man due to a curse from Brahma for his haughtiness when he said that he single handedly can destroy all evil forces and Maha Vishnu need not take any incarnation. He was bound by his principle of
of always fighting on the weaker side, which led him to stand witness to the Kurukshetra war without taking part in it. Even in his childhood, Barbarika was a very brave warrior. He learnt the art of warfare from his mother. The gods (ashtadeva) gave him the 3 infallible arrows.
#புனித_நதியாம்_கங்கை_பிறந்த_வரலாறு
ஸ்ரீ ராமபிரான் தோன்றிய சூரிய வம்சத்தில் ஸகரன் என்ற அரசன் அசுவமேதம் என்னும் யாகத்தைச் செய்தான். அந்த யாகத்தைச் சேர்ந்த குதிரையை இந்திரன் ரகசியமாகக் கபில மகரிஷி ஆசிரமத்தில் கட்டி வைத்து மறைந்து விட்டான். ஸகர குமாரர்கள் குதிரையைத் தேடச் சென்றனர்.
கபிலருடைய ஆசிரமத்தில் குதிரை இருக்கக்கண்டு, கபில மகரிஷிதான், தன் தவத்தின் மகிமையினால் இங்கே கொண்டு வந்துவிட்டார், என்று நினைத்து அறியாமையினால் அவரடைய தவத்தைக் கலைத்தார்கள். கபில மகரிஷியின் தவதிற்கு இடையூறு செய்தவர்களைச் சாம்பல் ஆகும்படி சபித்து விட்டார். இதை அறிந்த மன்னன், தன்
பேரனான அம்சுமானைக் குதிரையைப் பெற்று வர அனுப்பினான். அவனும் மகரிஷியிடம் சென்று மன்னிப்புக் கேட்டுச் சாம்பலாகச் சென்றவர்கள் நல்ல கதியை அடைவதற்கு வழியும் வேண்டினான். அதைக் கேட்ட கபில மகரிஷி தேவலோகத்தில் உள்ள கங்கா ஜலம் இவர்கள் மேல் பட்டால் நற்கதியை அடைவார்கள் என்று சொன்னார். அந்த
#DivyaDesam #Thiruvanparisaaram #SriKuralappa_Perumal_Temple
Thiruppathisaram, Kanyakumari, Tamilnadu
The Moolavar is #Thirukkuralappan. He is also named as #ThiruvaazhMaarbhan
Moolavar is in Veetrirundha (sitting) Thirukkolam facing East. Prathyaksham for Vinadhai, Kaari,
Udaya Nangai and Garudan. The Thaayar here is #Kamalavalli_Naachiyaar. Thiru indicates respect, vazh means live and marban indicates the heart of the person. Since Vishnu held his consort in his heart in this place, he is commonly referred Thiruvazhmarban. There is a big tank
inside the temple premise and that is believed to have miraculous power to heal various diseases. This tank is known as #Somateertha. Once upon a time the seven saints known as Saptarshis were meditating and they were given a visit by Lord Shiva, on whose advice they moved to the
#Do_not_be_afraid_of_Death
Death is one thing every one is scared of. At the time of samudra manthan (churning of ocean), a pot full of nectar came up and all the demons and even Gods were eager to have it. If they themselves can't resist how can we ordinary human being be
exceptions? Birth and death are are the rules of the creation and it's very much necessary for the balance of universe or humans will dominate each other. How?
Once a king went to monk sitting below a tree outside his kingdom. He said, "Oh learned one, please let me know if
there is any herbal medicine by which I can become immortal" The Monk said, "Oh King, please cross the 2 mountains in front of you and there you will find a lake. You drink the water from the lake and you will become immortal." After crossing the mountains he found the lake.
#காயாரோகணேஸ்வரர்_திருக்கோவில்
காஞ்சிபுரம்
புண்டரீக மகரிஷி, சிவபெருமானை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். அவருடைய தவத்தை ஏற்ற சிவன், வேண்டிய வரத்தை தருவதாக வாக்களித்தார். மகரிஷி சிவனிடம், ஐயனே! மனிதனின் உயிர் மட்டுமே முக்தி இன்பம் பெறும். உடலோ மண்ணோடு மண்ணாகி விடும். நான் உயிரால்
மட்டுமல்ல, உடம்போடும் முக்தி பெற விரும்புகிறேன். தாங்கள் எனக்கு அந்த பாக்கியத்தை அருள வேண்டும், என்று கேட்டார். சிவனும் அவருடைய காயத்தை (உடம்பை) தன்னோடு தழுவி ஏற்றார். இதனால் காயாரோகணேஸ்வரர் என்று பெயர் பெற்றார். காயம்+ஆரோகணம்+ஈஸ்வரர் என்று இந்தச்சொல்லைப் பிரிக்கலாம். காயம்
என்றால் உடம்பு. ஆரோகணம் என்றால் தழுவுதல். ஈஸ்வரர் என்றால் சிவன். பக்தனை உடலோடு தழுவிய சிவன் என்பதே சமஸ்கிருதத்தில் காயாரோகணேஸ்வரர் ஆயிற்று. இறைவி பெயர் கமலாம்பிகை. கோயிலுக்கு தெற்கில் காயாரோகண த்தீர்த்தம் உள்ளது. இதற்கு தாயார்குளம் என்றும் பெயருண்டு. பைரவி என்னும் துறவி இனத்தவர்