தனது பதினேழாம் வயதில்... தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் நான்காவது பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றவர்
பிரபாகரன் ஈழம் செல்லும் முன் கள நிலவரத் தகவல்களைத் தானே நேரில் சென்று சேகரித்தவர்
இந்தியப் படைகளுக்கு எதிராக தென்மராட்சி பகுதியில் இருந்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்
1991ல் யாழ் மாவட்ட சிறப்புத் தளபதியாக செயற்பட்டார்
1993ல் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர்
காரைநகரில் ஸ்ரீலங்கா படையினர் மீதான தாக்குதல்
மன்னார் சிலாபத்துறை ஸ்ரீ லங்கா படைத்தளம் மீதான தாக்குதலுக்கு தளபதி
பூநகரி ஸ்ரீ லங்கா படைத்தளம் மீதான தவளை நடவடிக்கையில் காலிலே விழுப்புண் பெற்றார்
#ஓயாத_அலைகள்3 ன் கட்டளைத் தளபதி
👉விடுதலை அமைப்பின் கொள்கையை முன்னெடுப்பது
👉மக்களை அணிதிரட்டுவது
👉விடுதலை இயக்கத்திற்கு எதிரான அனைத் துலகத்தின் இராஜதந்திர சமர்களுக்கு முகம் கொடுப்பது
👉மக்களைத் தொடர்ந்து உறுதி கொள்ளச் செய்வது
என்று இருந்தார்

அனுராதபுரம் விமானப் படை முகாம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் “எல்லாளன் நடவடிக்கை” ஆல் மிகப் பெரும் இழப்பை சந்தித்திருன்த சிங்கள ஆட்சி பீடம் அரங்கேற்றிய மிலேச்ச தனமான தாக்குதலில் (உறக்கத்தில்)இறந்தார்

#சுப_தமிழ்ச்செல்வன்
இவனை பெற்றெடுக்க
முடியவில்லையே யென்று
தமிழ்த் தாய்களால்
தத்தெடுக்கப் பெற்று
தாலட்டப்பட்டவன்....
தன் புன்சிரிப்பை
ஈழத்தின் அடையாளமென
அகிலத்திற்கும் பறைசாற்றியவன்..
உலகத்தை வலம் வந்து
சிங்களத்தின் ஊணத்தை
உலகிற்கு காட்டியவன்....
தேசியத் தலைவரின்
சிந்தனைக்கு ஒப்பாய்
ஈழத்தின் இன்னல்களை
மேடைப் பேச்சுக்களில்
நேர்மையுடன் முழங்கியவன்...
அரசியலுக்கு வந்தவன்
அன்புடன் பழகி
எதிரியின் இதயத்தையும்
வென்றவன்...
அன்னை பாலசிங்கத்திடம்
பயின்ற மாணவன்
அகிலத்திடம் தன் ஆற்றலை
வெளிக் காட்டிய ஈழ காவலன்...
எதிரிகளின் கூற்றுக்கு
சிறப்பாய் பதில்களை தந்தவன்
உரக்கமாய் சொன்னவன்...
இது
தமிழ்ச்செல்வனின் சிறப்பு
தரணியில் வாழும் தமிழருக்கெல்லாம்
அவன் மீது மதிப்பு...
இவன் சிரிப்புக்கு முன்னால்
எமனே வந்தாலும் ஏமாந்திடுவான்..
இந்த புன்னகைப் பூவை பறித்திட
உறங்கிய வேலையில்
வானுர்தியை அனுப்பினர்
கருகியது எம் கார்த்திகைப் பூக்கள்
பெருகியது எம் கண்களில் நீர் அலைகள்...
முன்பு ஈழநிலத்தை மீட்டிட
தன் கால்களை கொடுத்தவன்
அன்று ஈழ விடுதலைக்கு
தன் உயிரையே தந்துவிட்டான்....
நீ இறக்கவில்லை
எங்களுடனேயே இருக்கின்றாய்...
ஈழ விடுதலையில் யாரும் புதைக்கப்படுவதில்லை
விதைக்கபடுகிறார்கள்
#ஒளிவேந்தன் (13)
#சுப_தமிழ்ச்செல்வன் வாரிசுகள்...
தமிழ்செல்வனின் மனைவி சசிரேகா(இசைச்செல்வி - போராளி-- அரசியல்களத்தில் இப்ப இல்ல) தனது மகள் மற்றும் மகனுடன் 2014ல் பிரான்சு போய்ச் சேர்ந்தார்
(விடுதலைப் புலிகளின் திருமண திட்டப்படி நடந்த முதல் திருமணம் இவர்களுடையது)
நெடுமாறன், வைகோ, சீமான், மற்றும் கொளத்தூர் மணி போன்றவர்கள் தங்களை கண்டுபிடித்து வெளிப்படுத்தி விடுவார்களோ என்கிற அச்சம் காரணமாக இந்தக் குடும்பம் தங்களைப் பற்றிய சுயவிபரங்களை அதிகம் வெளிக்காட்டாமலே நடந்து கொண்டார்கள்
அரசியலில் ஈடுபடாததால்... இலங்கை அரசு இவரை விடுவித்ததை தவறாக பரப்புரை செய்வோருமுண்டு

ஆனால், என்னை வைத்து தமிழ் மக்களை வதைக்கலாம் என்பதால் என்னை உயிரோடு வைத்திருந்தார்கள்" - சசிரேகா
நாங்கள்பிடிபடுவ்தற்கு மிகமுக்கிய காரணமாகஇருந்தது போராளியாகஇருந்து பிடிபட்டவர்களும்,பொதுமக்களும் என்னசெய்வது என்று தெரியாமல் திகைப்புடன் எங்களைப் பார்த்ததே- சசிரேகா
அதன்பிறகு, நான் போராளி ரூபனை இரண்டாம் திருமணம் செய்துகொண்டதாக சில விஷயங்களைச் செய்தார்கள்- சசிரேகா
நான் எனக்குத் தெரிந்தவற்றைச் சொன்னேன். தெரியாதவற்றை, தெரியாது என்றே சொன்னேன். அவர்கள் எனக்கு எதுவும் தெரியவில்லை என்பதை உணர்ந்த பிறகு, மற்ற மக்கள் தங்கியிருக்கும் முகாமுக்கு அனுப்பினார்கள்- சசிரேகா
பிறகு, மக்கள் தங்கள் விவரங்களைப் பதிவு செய்யும் இடத்துக்கு அழைத்துச் சென்றார்கள் - சசிரேகா
அவர் எங்களை விட்டுவிடார். அடுத்த பதிவில் இருந்தவரிடம் இதே விவரங்களைக் கூறியபோது, தமிழ்செல்வன் எங்கே என கேட்டார். நான் அவர் 2007ல் இறந்துவிட்டர் என கூறினேன் - சசிரேகா
இவர்களை வன்னியில் இருக்கவைத்து தமிழீழத்துக்காக போராடவைத்தது உன் புருஷன் தான். இனி தமிழ்ச்செல்வன் குடும்பம் உயிருடன் இருக்கக்கூடாது என்று சொல்லிக் கத்தினான்-சசிரேகா
அந்தஇடத்தில் அந்தபோலீஸுக்கும் கமாண்டருக்கும் கால்மணிநேரமாக சண்டை கமாண்டர் எங்களைக்கொல்லவேண்டும் என்கிறார் ஆனால் ராணுவபோலீஸோ அவர்களைகொல்வதற்கு இப்போது உத்தரவில்லை அதனால் அனுமதிக்கமுடியாதென்றது- சசிரேகா
நாங்கள் கேம்பில் இருந்தவரை மிருகக்காட்சியில் இருக்கும் விலங்குகளைப் பார்த்து செல்வது போல் தான் ராணுவத்தினர் எங்களைப் பார்த்து சென்றனர் - சசிரேகா

வாழ்க்கையே போர்க்களம்...
வாழ்ந்து தான் காட்டணும் 💪
ஜார்ஜ் நந்தசேனா கோத்தபய ராஜபக்ஷே என்று அவரது முழுப் பெயர் சொன்னா தெரிந்து விடும்
ஆம் மஹிந்த ராஜபக்ஷவின் தம்பி தான் அவர்
கோத்தபாய மே 1972ல் இலங்கை இராணுவத்தில் இரண்டாம் நிலை லெஃப்டினன்டாக வேலைக்குச் சேர்ந்தவர்

ஓய்வு பெற வேண்டிய இறுதி காலத்தில் ராணுவ பயிற்சி கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்து இளம் இராணுவ வீரர்களை உருவாக்கிக் கொண்டுருந்தவர்
1992ல் அமெரிக்காவில் குடியேறி அந்த நாட்டின் குடியுரிமையையும் பெற்றிருந்தவர் #கோத்தபாய
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல ஆட்சியின் தொடக்கத்திலேயே அட்டகாசமாக ஒவ்வொன்றையும் செயல்படுத்த தொடங்கினர்
பிரபாகரன் இதுவரையில் எதிர்பார்க்காத தந்திரம், முரட்டுத்தனம், களமாடிய அனுபவ பெற்ற இந்த புதிய மூவர் கூட்டணி உருவானது
வேட்டை நாய் போல வேட்டையாடத் தொடங்கினர்

எதிரிகள் முக்கியம்
அதைவிட எதிரிகளுக்கு உதவிக் கொண்டுருப்பவர்கள் அதை விட முக்கியம்
அதையே தொடக்கத்திலேயே கோத்தபயா தெளிவாக செய்ய மனித உரிமைக் கழகம் அறிக்கை விடும் அளவிற்கு வந்து நின்றது
இம் என்றால் சிறைவாசம்
ஏன் என்றால் சிவலோக பதவி- இதான் கோத்தபாய சென்ற பாதை