Profile picture
கவி தா @kavitha129
, 43 tweets, 7 min read Read on Twitter
#இடஒதுக்கீடு #தரம் பற்றிய வரிசையில்... ஒரு பதிவு தொடர்கீச்சாக உங்களோடு...

👉🏿ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான தேர்வு எந்த மொழியில் நடந்தது...?

🖐🏿1950 முதல் 1965 வரை ஆங்கிலத்தில் மட்டுமே நடந்தது
👉🏿ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட அந்தத் தேர்வு எழுதியவர்கள் யார்?

🖐🏿அப்போ ஆங்கிலம் தெரிந்து இருந்தவர்கள் பெரும்பாலும் பிராமணர்கள் என்பதால் அவர்களே பெரும்பாலும் தேர்வு எழுதி, வெற்றி பெற்று பதவிகளை அடைந்தனர்
👉🏿#இடஒதுக்கீடு அப்போது இருந்ததா?

🖐🏿பெரியாரின் முயற்சிகளால் முதல் சட்டத்திருத்தம் மூலம் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டுமே இருந்தது
👉🏿அந்த இடஒதுக்கீட்டால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு கிடைத்த நன்மைஎன்ன பிராமணர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புஎன்ன?
🖐🏿தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியறிவே இல்லாதவர்களாக அதற்கும்மேலாக ஆங்கிலம்என்றால் என்னவென்று தெரியாதநிலையில் இருந்ததால் அந்தஇடஒதுக்கீடு பிராமணர்களுக்கு எந்தபாதிப்பும் ஏற்படுத்தவில்லை
👉🏿1965 ல் என்ன நடந்தது?

🖐🏿ஐஏஎஸ் தேர்வு இனி மேல் இந்தியில் மட்டுமே நடக்கும் என்று அறிவித்தார்கள்
👉🏿அதன் விளைவு என்ன?

🖐🏿இந்தி மொழி பேசுபவர்களைத் தவிர யாரும் ஐஏஎஸ் தேர்வு எழுத முடியாது
🖐🏿 இந்தி பேசும் மாநிலங்களில் பிராமணர்கள் தவிர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் யாரும் படிப்பதற்கான சூழல் இல்லை. பிற மாநிலங்களில், குறிப்பாக தென்னிந்தியாவில் யாருக்கும் இந்தி தெரியாது. அதனால் பிராமணர்களுக்கு போட்டியே இல்லாமல் வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தது
👉🏿1965 ல் மத்திய அரசு அப்படி ஒரு முடிவு எடுத்த போது. மாநிலங்களின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?
🖐🏿எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. அதனால் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு இல்லை
🖐🏿ஆனால் மெட்ராஸ் என்ற பெயரில் தமிழ்நாடு என்று​ ஒரு மாநிலம் இருந்தது
🖐🏿அண்ணா என்ற தலைவர் மத்திய அரசின் முடிவை கடுமையாக எதிர்த்து, போராட்டம் நடத்தி மாநிலத்தை ஸ்தம்பிக்கவைத்தார்
🖐🏿மத்திய அரசு அடி பணிந்தது.... தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடக்கத் தொடங்கின
👉🏿ஆங்கிலம் மற்றும் இந்தியில் தேர்வு எழுதுபவர்கள் எந்த வகுப்பினர்?

🖐🏿பெரும்பாலும் பிராமணர்களே
👉🏿பிறகு என்ன நடந்தது?

🖐🏿அண்ணாவுக்கு பிறகு தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்த #கலைஞர் ஐஏஎஸ் தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்
👉🏿அதன் விளைவு என்னவாக இருந்தது?

🖐🏿1974 ம் ஆண்டு கோத்தாரி அவர்கள் தலைமையில் ஐஏஎஸ் தேர்வில் சீர்திருத்தம் கொண்டு வருவது தொடர்பான கமிட்டி உருவாக்கப்பட்டு அந்த கமிட்டி 1978 ல் "மாநில மொழிகளிலும் ஐஏஎஸ் தேர்வுகளை நடத்த வேண்டும்" என்ற பரிந்துரையை சமர்ப்பித்தது.
🖐🏿அதன் விளைவாக 1979 ம் ஆண்டு முதல் ஐஏஎஸ் தேர்வுகளை தமிழ் உட்பட எட்டாவது அட்டவணையில் இருக்கும் எல்லா மொழிகளிலும் எழுதலாம் என்று அறிவிப்பு வந்தது.
அப்படின்னா தமிழ் வழியில் படித்தவர்களும் ஐஏஎஸ் ஆகலாம் என்ற சூழ்நிலை உருவாகியிருக்கே!!!!! மகிழ்ச்சி.....

ரொம்ப சந்தோஷபட வேண்டாம், அதில் ஒரு சிக்கல் இருக்கிறது..... இப்போது வரை சரி செய்யப்படவில்லை.....
👉🏿என்ன சிக்கல் அது?

🖐🏿ஐஏஎஸ் தேர்வில் விடைகளை தமிழில் எழுதலாம், ஆனால் கேள்விகள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே இருக்கும்
👉🏿அப்படி என்றால் கேள்வி புரியாமல் எப்படி தமிழில் பதில் எழுதுவது?

🖐🏿நிச்சயம் முடியாது!!!! அது தான் தேர்வு நடத்துபவர்களுக்கு வேண்டும்
🖐🏿ஐஏஎஸ் தேர்வில் மெயின் (main) தேர்வுகள் மட்டுமே தமிழில் விடைஎழுத முடியும்.
🖐🏿ஆனால் அதற்கு முன்பு பிரிலிமினரி (preliminary) தேர்வு என்பது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றால்தான் மெயின் தேர்வு
🖐🏿கேள்விகளைத் தமிழிலே கொடுக்காதவர்கள் எப்படி தமிழில் எழுதப்பட்ட விடைத்தாள்களைத் திருத்துவார்கள்
(கேள்வி தமிழ்ல குடுத்துட்டா மட்டும் தமிழ்னு ஒத்துக்கவா போறீங்கனு நீட் பிரச்சனை எல்லாம் நினைவுக்கு வருதா)
👉🏿இட ஒதுக்கீட்டால் நாசமாப் போச்சு நாடு... தகுதி தரம் இவற்றுக்கெல்லாம் மதிப்பே இல்லாம போச்சு என்பவர்கள் சொல்லுவாங்களா ஐஏஎஸ் தேர்வில் இடஒதுக்கீடு ஒதுக்கீடு எப்ப வந்ததுனு?
🖐🏿1990 ம் ஆண்டில் வி.பி.சிங் பிரதமராக இருந்த போது மண்டல் கமிசன் பரிந்துரையை ஏற்று...
🖐🏿பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம் வழங்கிய பிறகுதான் 1994 முதல் தான் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது
👉🏿பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆரம்பித்து 24 வருடங்கள் தான் ஆகுதா?

🖐🏿ஆமா, ஆனால் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே 70 ஆண்டுகளா இட ஒதுக்கீடுனால நாடு சீரழிந்து போயிடுச்சு... திராவிடத்தால் வீழ்ந்தோம் னு அழுது புலம்புவாங்க
👉🏿இப்படி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவிகிதம், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15 சதவிகிதம், பழங்குடியினருக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்தால் மேல் சாதியினர் பாதிக்கப்படமாட்டாங்களா?
🖐🏿இது மூன்றையும் கூட்டினால் 49.5 சதவிகிதம் வருகிறது. மீதமுள்ள 50.5 சதவிகிதத்தில் பிற சாதியினர் வராதவாறு, ஐஏஎஸ் தேர்வை நடத்தும் யுபிஎஸ்சி பார்த்துக் கொள்ளும்
🖐🏿அறிவிக்கப்படாத 50.5 சதவிகித இடஒதுக்கீடு முன்னேறிய வகுப்பினருக்கு இருக்கிறது என்பது தான் உண்மை
👉🏿மத்திய பணியாளர்நல அமைச்சக ஆண்டறிக்கை DoPT (2017-18) படி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பினருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட மத்தியஅரசு Group A பணிகளில் #இடஒதுக்கீடு எவ்வளவு?
🖐🏿பிற்படுத்தப்பட்டோருக்கு 3.02 %
தாழ்த்தப்பட்டோருக்கு​ 13.38 %
பழங்குடியினருக்கு 5.92 %
👉🏿மொத்தம் 32.32 சதவிகிதம் மட்டுமே தானே வருகிறது....

அப்படின்னா ஓசி (இட ஒதுக்கீடு இல்லாத #OtherCaste ) 50.05 சதவிகித இடஒதுக்கீடு என்பது ???
🖐🏿தவறு!!!அரசின் அறிக்கையின் படியே அவர்களுக்கு 67.68%
👉🏿#வெற்றிகரமான_தோல்வி போலவே அவர்கள் இதற்கு ஒரு கணக்கு சொல்வார்களே அதென்ன?
🖐🏿பிற்படுத்தப்பட்டவர்கள் 21 %, தாழ்த்தப்பட்ட மக்கள் 17 % , பழங்குடியினர் 8 % என்பார்கள் ( Group, B, C, D என்று எல்லா பணிகளையும் சேர்த்து சொல்வார்கள்)
👉🏿அந்த கணக்கின் படியும் ஒடுக்கப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு 46% தானே மீதி 54% ஏற்கனவே முன்னால் இருப்போருக்குத் தானே?
🖐🏿ம்ம்ம்... அது தோல்விகரமான வெற்றி என்பதை வெளியே சொல்லக்கூடாது (அதனால் தானே மொத்தம் எவ்வளவு என்று சொல்லாமல் தனித்தனியே அவர்களுக்கு இவர்களுக்கு என்று இழுத்தது)
👉🏿இந்த குறைந்த அளவிலான இடஒதுக்கீட்டின் படியும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் கொஞ்சம்கொஞ்சமாக உயர்பதவிக்கு வரத்தானே செய்கிறார்கள்?
🖐🏿அதான் மேலஇருக்கிறவங்க பிரச்சனை
அதை தடுப்பதற்காகத்தான் தரமான தகுதியான நிர்வாகசீர்திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்று சொல்வார்கள்
👉🏿நிர்வாக சீர்திருத்தம் என்பது நல்ல விசயம் தானே, அதை வச்சு எப்படி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களை உயர் பதவிக்கு வராமல் செய்ய முடியும்?
🖐🏿#DeMonetisation போலத்தான் - சீர்திருத்தம் செய்வதே... எளிய மக்களை வாட்டி வதைக்கத்தான் என்பது ஆராய்ந்து பார்த்தால் விளங்கும்👇🏿
🧐பணியாளர் அமைச்சக ஆண்டறிக்கையை படித்தால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் சராசரியாக ஐஏஎஸ், ஐபிஎஸ் பணியில் சேரும் போது அவர்களுடைய வயது 28
🧐அப்படியென்றால் பணியில் சேரும் பெரும்பாலானவர்கள் 29, 30, 31, 32.... வயதுக்கு மேற்பட்டவர்கள்.......
🧐நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த கமிட்டிகள்

1. Y.K. Alagh Committee (2001) - 26 வயது
2. P.C. Hota committee (2004) - 27 வயது
3. Administrative Reforms Commission (2008) - 28 வயது
4. B.S. Baswan committee (2016) - 29 வயது
🧐இந்த நான்கு கமிட்டிகளும் ஐஏஎஸ் தேர்வு எழுத பரிந்துரை செய்த உச்ச வயது வரம்பை பார்த்தால் புரிகிறதா?
🖐🏿 இதன் மூலம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி மாணவர்கள் வருவதை தடுக்க முடியும்
👉🏿நடைமுறைக்கு இந்த பரிந்துரைகள் வந்துவிடுமா?
🖐🏿அங்கே தான் அவர்களுக்கு சிக்கல், அரசியல் ரீதியாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவு இருந்தால் தான் மத்தியில் ஆட்சி அமைக்க முடியும் என்ற சூழ்நிலை இருப்பதால் இதை செயல்படுத்த முடியாமல் தவிக்கிறார்கள்
👉🏿பஸ்வான் கமிட்டி தாய்மொழியில் தேர்வு எழுதுவது தொடர்பாகச் சொன்ன பரிந்துரை என்ன?
🖐🏿’மாநில மொழிகளில் தேர்வு நடத்தும் முறையை நீக்க வேண்டும்’ என்று பரிந்துரைத்திருக்கிறது பஸ்வான் கமிட்டி
👉🏿அப்படி என்றால் இந்தி தவிர பிற மொழி பேசும் மாணவர்கள் எதிர்காலம்?

🖐🏿நீங்கள் ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு மதம் என்று​ யோசித்தால் சரியாக​ இருக்கும்
👉🏿இந்த ஒரு நாடு ஒரு மொழி ஒரு மதம்... பாஜக கோஷமாச்சே?
🖐🏿மத்தியில் எந்த கட்சி வந்தாலும் இதே பாதையில் தான் பயணிப்பார்கள் (ஹிந்தி திணிப்பை ஆரம்பித்து வைத்தது காங்கிரஸ் என்பதை மறவாதீர்)
👉🏿ஏன் எந்தகட்சி வந்தாலும் இதேநிலை?
🖐🏿ஒவ்வொரு துறையிலும் Secretary பொறுப்பில் அரசியல் தலைமைகளுக்கு ஆலோசனை வழங்கும் இடத்தில் ’அவர்கள்’ மட்டுமே இருப்பதால் இந்த பிரச்சனை
🖐🏿ஐஏஎஸ் அதிகாரிகள்​ அரசியல் தலைமைகளுக்கு ஆலோசனை வழங்குவதுபோல் தற்போது மத்தியில் பாஜகவுக்கு ஆர்எஸ்எஸ்
👉🏿ஆர்எஸ்எஸ் ஐஏஎஸ் தேர்விலே இப்போது என்ன தலையீட்டைச் செய்திருக்கிறது?
🖐🏿ஆர்எஸ்எஸ் ஆலோசனையில் உருவான "நிதி அயோக்" Strategy for New India என்ற தலைப்பில் தற்போது ஐஏஎஸ்​ தேர்வுக்கான வயது வரம்பை 27 ஆக குறைக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறது
👉🏿 #LateralEntry என்றால் என்ன?
🖐🏿(கொல்லைப் புற வழி வழியே வீட்டிற்குள் வந்து உட்காருவது)
இந்த ஆண்டு முதல் Secretary பொறுப்பில் பணியில் இருக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதிலாக தனியார் துறையில் 15 ஆண்டு அனுபவம் வாய்ந்த உயர் பதவியில் இருப்பவர்களை நியமிப்பது
👉🏿தனியார் துறையில் திறமையானவர்கள் இருப்பதால் அவர்களை உயர் பொறுப்புக்கு​தேர்வு செய்வது நல்லது தானே?
🖐🏿அங்கே தான் பிரச்சனையே
🧐யுபிஎஸ்சி நடத்தும் தேர்வு மூலம் ஐஏஎஸ் பணிகளை நிரப்பினால் இட ஒதுக்கீடு முறையில் பணி வழங்க வேண்டும்
🧐#LateralEntry மூலம் பணி வழங்கினால் #இடஒதுக்கீடு இல்லாமல் செய்து விட முடியும்
🧐இதன் மூலம் உயர் பதவிகளுக்கு BC, MBC, SC, ST வகுப்பினர் வராமல் செய்ய முடியும்
👉🏿பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பழங்குடி வகுப்பு மக்கள் எழுதும் ஐஏஎஸ் தேர்வு என்பது ஏதோ ஒரு தேர்வு அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் தர வேண்டும்?
🖐🏿நாட்டின் உயர் பொறுப்புகளுக்கு அனைத்து பிரிவுகளை சேர்ந்தவர்களும் சரியான விகிதத்தில் வந்தால் தான் சமூக நீதியை நிலை நாட்ட முடியும்
🖐🏿ஓசி வகுப்பைச் சேர்ந்த யாரோ எடுக்கும் முடிவுகளால் தான் இங்கே பெரும்பான்மையான மக்கள் பாதிப்படைகிறார்கள்
🖐🏿நேர்மை, தகுதி, நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் நம்மை ஏமாற்றி வருகிறார்கள்
🖐🏿இந்த சதிகளை முறியடிக்க விழிப்புடன் இருக்க வேண்டும்
🖐🏿#நம்நாடு #நம்உரிமை #நம்கடமை
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to கவி தா
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member and get exclusive features!

Premium member ($30.00/year)

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!