Dr.தனநந்தர்™❇️I.N.D.I.A Profile picture
முடிவில்லா பயணத்தில் இடையில் வந்து செல்லும் - அன்பை தேடும் யாத்திரிகன். சகமனிதனை நேசிப்போம். முனைவர் மருத்துவர் அல்ல. 💞 சாதியற்ற சமூகம்💞 ❤️இயற்கை❤️
சிட்டுக்குருவி Profile picture 1 subscribed
May 31, 2023 4 tweets 1 min read
நம் சூழலில் பல்கலைக்கழகங்களை ஆராய்ச்சிப் படிப்புகள் உள்ளிட்ட உயர்கல்வி மையங்கள் என்று சொல்வது பெயரளவுக்குத்தான். இவை சாதாரணமாக ஒரு தன்னாட்சிக் கல்லூரி செய்யும் வேலையைத்தான் செய்துகொண்டிருக்கின்றன. ஆண்டின் இரண்டு பருவங்களுக்குரிய தேர்வுகளுக்கு வினாத்தாள் தயாரித்தல், தேர்வு நடத்துதல், விடைத்தாள் திருத்துதல், சான்றிதழ்கள் வழங்குதல் ஆகிய எளிய அலுவலக வேலைகளைத்தான் துணைவேந்தர், பதிவாளர், தேர்வாணையர் உள்ளிட்ட பெரும் அதிகாரிகள் மேற்பார்வையுடன் பல்கலைக்கழகங்கள் செய்கின்றன. இந்த வேலைகளிலும் ஏராளமான குளறுபடிகள். தேர்வே எழுதாத மாணவன் தேர்ச்சி பெறுவது, தேர்வு
May 31, 2023 13 tweets 2 min read
""" நுகர்வுப்பசி"""

சமீபத்தில் ஒரு யூடியூப் பிரபலத்துக்கு திருமணம் நடந்தது நினைவிருக்கலாம். திருமண நிகழ்வுகளும் விடீயோவாக்கபட்டு ரீல்களாக ஆக்கப்பட்டு சுற்றிகொண்டிருந்தன. நிற்க. இவர் எதற்கு பிரபலம் என்றால், இவர் ஒரு food Vlogger. ஊர் ஊராக ஒவ்வொரு ஓட்டலுக்கும் சென்று பிரியாணி பரோட்டா, சுக்கா எல்லாம் சாப்பிட்டு சர்டிபிகேட் கொடுப்பவர். இன்றைய உணவு ஆய்வாளர்கள் எல்லோருக்கும் இவர் தான் முன்னோடி. நிற்க.

இந்த பதிவு எதற்கு என்றால், இவரை “பிரபலம்” என்று சொல்லிக்கொள்வது எதனால் என்று தான் யோசிக்க வேண்டி இருக்கிறது. ஏதாவது மக்களுக்கு உபயோகமான, நாட்டுக்கு
Oct 26, 2021 5 tweets 1 min read
கந்துவட்டிக்காரன் ஆபீஸ் போயிருக்கீங்களா?

1) உலகத்தில இருக்கற அத்தனை சாமி படத்தையும் மாட்டி வெச்சிருப்பான்.

2) அதுல ஸ்பெசலா அவன் குலதெய்வ
சாமி படம் பெருசா இருக்கும்.

3) ஊதுபத்தி, சாம்ராணி புகை,
அகல் விளக்கு கட்டாயம் இருக்கும். 4) தினமும் சாமி படத்துக்கு பூ போடுவான். வெள்ளிக்கிழமை
தடபுடலா பூஜை செய்வான்.
நாம போனா நமக்கு பொரி குடுப்பான்.

5) சேர்ல உட்கார்றதுக்கு முன்னாடி பூரா சாமி படத்தையும் தொட்டு கும்புட்டு ஒரு சாமி படத்துக்கு முன்னாடி கண்ண மூடீட்டு கைகூப்பி அமைதியா கொஞ்ச நேரம் நிற்பான்.
Jun 8, 2020 8 tweets 1 min read
கோவை டூ திருப்பூர் பஸ்...மாலைநேரம்.
நல்லகூட்டம்.பின்னால ஒரு சீட்ல ஏறி உட்கார்ந்து கொண்டேன்.
ஒரு 50வயசு மதிக்கத்தக்க அம்மா ஏறுனாங்க.அவங்க பையன்போல ஏற்றிவிட வந்தது.
பஸ் கோவை டிராஃபிக்ல நத்தையா ஊறி லட்சுமி மில் தாண்டறுதுக்குள்ள
இருபது நிமிசமாகிடுச்சு.
அந்த அம்மா பக்கத்தில வந்த கண்டக்டரிடம் 'கருமத்தம்பட்டி வந்தா சொல்லுங்க"னு சொல்லுச்சு.
அவரும் தலையாட்டி டிக்கெட் குடுக்கறதுல பிசியாகிட்டாரு.
அந்தம்மா சீட்ல தலைசாய்ஞ்சு தூங்க ஆரம்பிச்சாங்க.
வண்டிநீலம்பூர் தாண்டி போய்க்கொண்டு இருந்தது.
அந்தம்மா கண்ணுமுழிச்சு
'கருமத்தம்பட்டி வந்திருச்சா..
கண்டக்டர் 'வந்தா
Jun 2, 2020 5 tweets 2 min read
கலைஞர் அன்று குமரி முனையில், திருவள்ளுவர் சிலை அமைக்காமல் விட்டிருந்தால், இன்றைய மத்திய ஆட்சியாளர்கள் யார் சிலையை அங்கு நிறுவி இருப்பார்கள் என்று புரிந்துக்கொள்ளுங்கள்.

7 கோடி தமிழரும் வெட்கி தலை குனிந்திருக்க வேண்டும்.

ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் இம்மண்ணில் நிலவும் ஆரிய சூழ்ச்சியை தன் மதிநுட்பத்தால் வென்றவர் கலைஞர்.

♥ விவேகானந்தரை வீழ்த்த ஒரு வள்ளுவர் சிலை

♥ சீதையை சிறகொடிக்க ஓர் கண்ணகி

♥ மகாபாரதத்தை மறக்கடிக்க சிலப்பதிகாரம்

இது போல தமிழர்களிடையே இருந்த தேவையற்ற ஆரிய திணிப்பு ஒன்றை அப்புறப்படுத்த, அதை விட சரியான ஒன்றை தமிழிலிருந்தும்
Apr 15, 2020 8 tweets 1 min read
இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் ஐதராக்சிகுளோரோகுயினின் என்னும் வேதிப்பொருள் பெருமாள்கோவில் துளசி தீர்த்தத்திலேயே இருக்கிறது. நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல என்றொரு குழுவினர் சொல்கிறார்களே?? உண்மை என்ன?

துளசி என்னும் திருத்துழாய் மருத்துவக்குணம் நிறைந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால், வைரசு என்னும் தீநுண்மியை அழிக்கவல்லது என்று சொல்வது உண்மைக்குப்புறம்பானது. உண்மையில், இயற்கையிலிருந்து எடுக்கும் மூலிகை வேதிப்பொருள்களை (Natural Products), அவற்றின் வேதிவடிவத்தைப் (Chemical structures) பொறுத்து,
Oct 25, 2019 9 tweets 2 min read
எனது அன்பு பி.ஜே.பி நண்பர்களுக்கு ஒன்றை மனப்பூர்வமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தில் தோராயமாக திமுகவினர் 30%.. அதிமுகவினர் 30%.. தி.க, மதிமுக, காங்கிரஸ், பிற திராவிட இயக்க உணர்வாளர்கள், சிறுபான்மை அமைப்பினர், கம்யூனிஸ்டுகள் என 20% பேர் இருப்பார்கள். இங்கு உங்கள் கருத்திற்கும், சித்தாந்தத்திற்கும் எதிராக இருப்பவர்கள் குறைந்தபட்சம் 80% பேர்!!

இதுவரை தமிழகத்தில் ஒரு இயக்கம் அடுத்த இயக்கத்தை கருத்தியல் ரீதியாக எதிர்த்துள்ளதே தவிர தங்களுக்கு எதிரான எவரது வணிகத்தையும் அமைப்பு ரீதியாக திட்டமிட்டு காலி செய்ததும் இல்லை.. அது எங்கள்
Oct 20, 2019 17 tweets 3 min read
வரலாறு என்றால் என்ன? 33 ஆண்டுக்கு பிறகும் இப்படி யாராவது ஒருவன் அதைப் பற்றி பேசி அதன் பிண்ணனியை உலகுக்கு கூறிட வேண்டும். ஆனால் தவறான வகையில் பேசுபவனுக்கு தகுந்த வழியில் வரலாறை மூளைக்குள் எட்டுகிற மாதிரி கூற வேண்டும். எப்போதுமே சில சரித்திர சின்னங்கள் தானாக வந்து அமைவதில்லை. அதற்கு பின்னால் பல அவமானங்கள், சினம், சீற்றம் உள்ளடங்கி இருக்கும். அப்பேற்பட்ட ஒரு அவமானத்தையும், அதன் பின்னர் நடந்த ஒரு நினைவையும் இன்று காண்போம்

அப்போதெல்லாம் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற வளாகத்திலேயே தான் ஒவ்வொரு
Sep 1, 2019 7 tweets 1 min read
டீமானடைசேஷன் என்பது தோல்வி (failure) அல்ல, பெருந்தோல்வி(fiasco). இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் சில உள்ளது. குறிப்பாக ஐடியில் வேலை செய்யும் இளைஞர்கள்.

1) அமர்த்தியா சென், மன்மோகன் சிங், ப.சிதம்பரம் ஆகியோர் தான் பொருளாதார நிபுணர்கள். ஆர்.ஜே.பாலாஜியும், ஜெயமோகனும், அவர்களைப் போன்றவர்களும் வெறும் ஜால்ரா நிபுணர்கள்.

2) ஃபோட்டோஷாப்பில் எல்லாமே அழகாகத் தெரியும். ஆனால் அது குஜராத்தா, சைனாவா என ஒரு நொடி இணையத்தில் சரிபார்த்து நண்பர்களிடையே பரப்பினால் வீட்டுக்கும், நாட்டுக்கும் நல்லது.

3) வளர்ச்சி என்பதும், முன்னேற்றம் என்பதும்
Jun 5, 2019 6 tweets 1 min read
Sivasankaran Saravanan

1969 ம் ஆண்டு தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் டாக்டர் கலைஞர் கல்வித்துறையின் மீதுள்ள அக்கறையால் தமிழ்நாடு பாடநூல் கழகம் என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தி அதன் தலைவராகவும் பொறுப்பேற்கிறார். ஒரு மாநில முதல்வரே பாடநூல் கழகத்திற்கு தலைவராவது எல்லாம் இந்தியாவில் நினைத்துக்கூட பார்க்கமுடியாத விஷயம்.

1970 களில் கலைஞர் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட பாடப்புத்தகங்களை பார்க்கும்போது தமிழ்நாடு வளர்ந்த மேற்கத்திய நாடுகளில் ஒன்றோ என்று தான் தோன்றுகிறது . அப்போதே கணினியின் பயன்பாடு பற்றி ஒரு புத்தகத்தை முதல்வர் வெளியிட்டுள்ளார்.