H Raja Profile picture
Official Twitter Account of Shri.H Raja | Nationalist | Ex-MLA from Karaikudi Assembly Constituency , Tamil Nadu.
Shivamurugan Profile picture Haja Mohaideen Profile picture 2 subscribed
Nov 28, 2020 6 tweets 1 min read
மகான்களின் வாழ்வில்

எத்தனையோ மகான்கள் இந்த ஞானம் பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்...

குளிர் காற்று ஊசியாகத் துளைத்தது. மடத்தின் வராண்டாவில் குறுக்கும் நெடுக்குமாய் கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம் போல கையில் கோலுடன் குலாவிய அந்த சுவாமி குளிரால் நடுங்கினார். 1/6 அவர் மனதில் அப்போது ஆசையொன்று தலை தூக்கியது. 'கம்பளி சால்வை ஒன்று இருந்தால் எவ்வளவு இதமாக இருக்கும்' என்று நினைத்தார். சற்று நேரத்தில் அந்த ஆசையை முற்றிலும் மறந்து போனார்.

மறுநாள் பக்தர் ஒருவர் புதுச்சால்வை ஒன்றை அந்த சுவாமிக்கு காணிக்கையாக்கினார்.
சுவாமி திடுக்கிட்டார். 2/6
May 18, 2020 6 tweets 1 min read
திராவிட அரசியல்...

சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும்,

இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்திய எதிர்ப்பதும்,

கர்நாடகாவிடமிருந்து தண்ணீர் தரவில்லையென்றால் தமிழ்நாடு தனி நாடு ஆகுமெனச் சொல்லிக்கொண்டே... ஜோலார்பேட்டை தண்ணீர் சென்னைக்கு தரவிடமாட்டோமென்கிறதும்,

தன்னுடைய பிள்ளைகளை பல லட்சங்களை கட்டி பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டே...

அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும்...

இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே...
Dec 17, 2019 10 tweets 4 min read
சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி. சுமார் 6 வருட காலம் சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் செக்கிழுத்து எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார். அவர் விடுதலையாகி வெளியே வந்தபோது சிறைவாசலில் அவரது மனைவி, சுப்ரமணிய சிவா உள்பட நான்கு பேர்களே இருந்தனர். கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, சுமார் 15 நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ப.சிதம்பரம் ஊழல் வழக்கில் கைதானார். சிறையில் கட்டில், தலையணை, வெஸ்டர்ன் டாய்லெட், டி.வி., வீட்டிலிருந்து சாப்பாடு என எல்லா வசதிகளையும் கேட்டுப் பெற்றார்.
Dec 16, 2019 9 tweets 2 min read
தெரிந்த கதை தெரியாத வரலாறு..!

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். அது என்ன கம்பன் வீட்டு கட்டுத்தறி என்பதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.

ஒருமுறை புலமையில் மிகவும் தேர்ந்த அம்பல சோமாசி என்ற புலவர் கம்பரைக் காண வந்தார்.அவருக்கு தான் அனைத்தும் கற்றோம் என்ற 1/9 செருக்கு மிகுந்துள்ளது. கம்பரின் வீட்டிற்கு வந்த பொழுது அவர் வீட்டிற்கு முன்னால் சாணி தட்டும் ஒரு பெண்மணியிடம் கம்பர் எங்கே என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி கம்பரை காண்பதற்கு நிறைய பேர் வந்திருக்கிறார்கள் கூட்டம் மிகுந்து உள்ளது ஆதலால் சற்று காத்திருங்கள் காணலாம் என்று 2/9
Dec 4, 2019 8 tweets 2 min read
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினையழித்திடுவோம்..
இது பாரதியின் வரிகள் என்று
படித்த மாத்திரத்திலயே அனைவரும் அறிந்திருப்போம்.

ஆனால்.. இந்த வரிகள் எழுத காரணமாக இருந்தவர்தான் "நீலகண்ட பிரம்மச்சாரி"

உலகிற்கே சோறு போடும் தஞ்சை மண்ணில் பிறந்தவர். சுதந்திர போரில் சிறைசென்று 1/8 விடுதலையாகி வெளியே வந்தபின், உண்ண உணவின்றி மதராஸ் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தார்.

அம்மா.. பசிக்கிறதே என்ன செய்வேன் நான்?
பகலெல்லாம் பாரதத் தாயின் விடுதலை பிரச்சாரம். இரவிலே கரியை பூசி அடையாளத்தை மறைத்துக்கொண்டு "அம்மா.. தாயே.. ராப் பிச்சைம்மா" என்று வயிற்று பிரச்சாரம். 2/8
Dec 1, 2019 12 tweets 2 min read
#ஸ்படிகமாலை

1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார். திடீரென்று பெரியவா அவரிடமும், அங்கு இருந்தவர்களிடமும், ”மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார். 1/12 யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார்,”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?

யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார். அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர். பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்துவிட்டு, மற்றொரு கேள்வியை 2/12
Oct 14, 2019 13 tweets 2 min read
சிறந்த வானியலாளரான மகரிஷி வால்மீகி...

மகரிஷி வால்மீகி சமஸ்கிருதத்தில் ஒரு சிறந்த கவிஞராகவும் சிறந்த வானியலாளராகவும் இருந்தார். மகரிஷி வால்மீகி பற்றி அறிந்துகொண்டால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள். அவரின் சிறந்த படைப்பான 1/13 இராமாயணத்தின் மூலம் அவரின் வானியல் புலமையை அறிய முடிகிறது. ராமாயணத்தில் விவரிக்கப்பட்டுள்ள வானியல் குறிப்புகள் துல்லியமானவை என்று நவீன தொழில்நுட்பங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வேதங்கள் குறித்த அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் 2/13
Aug 22, 2019 6 tweets 1 min read
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனைபேருக்கும் நமது வணக்கங்கள்...

பாரதம் விடுதலை பெற்றபோது காஷ்மீர் மன்னர் ஹரிசிங்கிற்கு இந்தியாவுடன் சேர்வது சரியா தவறா என்ற குழப்பம் இருந்தது. இது விஷயமாக அவர் பேசுவதற்காக சர்தார் வல்லபாய் பட்டேல் அன்று ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவராக...1/6 இருந்த ஸ்ரீ குருஜி (மாதவ சதாசிவ கோல்வல்கரை) அனுப்ப முடிவு செய்தார் அதற்கு ஸ்ரீ குருஜியும் சம்மதம் தெரிவித்தார்.

ஸ்ரீ குருஜி டெல்லியிலிருந்து விமானம் மூலம் 1947 அக்டோபர் 17 அன்று ஸ்ரீநகர் சென்றார். மறுநாள் ஸ்ரீ குருஜி அரண்மனைக்குச் சென்றதும் மன்னர் ஹரிசிங் அவரது மனைவியும் ...2/6
Aug 1, 2019 5 tweets 1 min read
ஓ இந்தியா! மறவாதே!

ஓ இந்தியா! உனது பெண்மையின் லட்சியம் சீதை, சாவித்திரி, தமயந்தி என்பதை மறவாதே! நீ வணங்கும் கடவுள் துறவியர்கள் எல்லாம் பெருந்துறவி ,அனைத்தையும் தியாகம் செய்த உமாபதி சங்கரர் என்பதை மறவாதே! உன் திருமணம், உன் செல்வம், உன் வாழ்க்கை இவை புலனின்பத்திற்காக அல்ல...1/5 , உன் தனிப்பட்ட இன்பத்திற்காக அல்ல என்பதை மறவாதே! அன்னையின் பீடத்தில் பலியிடுவதற்கே நீ பிறந்துள்ளாய் என்பதை மறவாதே! உன் சமுதாயம் மகா மாயையான தேவியின் நிழல் என்பதை மறவாதே! தாழ்ந்த ஜாதியினர், அறிவிலிகள், ஏழைகள், படிக்காதவர்கள் எல்லோரும் உன்னுடைய ரத்தம்,சகோதரர்கள் என்பதை மறவாதே! 2/5
Jul 22, 2019 6 tweets 2 min read
தேசிய கல்விக்கொள்கை 2019 பற்றி அதன் பெயரையே தவறாக புரிந்து கொண்டு பலரும் பேசி வருகின்றனர்.இது புதிய கல்விக் கொள்கை அல்ல.1986-1992ல்
2 முறை கொண்டு வரப்பட்ட தேசிய கல்விக் கொள்கையில் உள்ள குறைபாடுகளை கலைவதற்காக 2019 வரைவுத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
1/n
#NationalEducationPolicy Internet மற்றும் digital கல்வியும் கல்வித் திட்டத்தில் சேர்க்கவும் ஏழை, கிராமப்புற மற்றும் பழங்குடியினருக்கும் கல்வி சென்றடைய இந்த தேசிய கல்வித் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மும்மொழி கல்விக் கொள்கை ஏற்கனவே அமலில் உள்ள தேசிய கல்விக்கொள்கையிலும் உள்ளது.2/n #NationalEducationPolicy