I Am Pavanz Sharma Profile picture
Do your 'BEST' and Leave the 'REST'
Jun 29, 2022 5 tweets 1 min read
சங்கடங்களை உடனடியாக நீக்குவார் சக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார் பின்னால் நரசிம்மர் இருப்பது ஏன் ??

திருமாலின் கையிலுள்ள சக்கரத்தை சக்கரத்தாழ்வார் என்பர்.

திருமாலால் ஏவப்படும் ஆயுதம் இது.
சக்கரத்தை வழிபட்டால் துன்பம் உடனடியாக
தீரும் என்பது ஐதீகம்.

பக்தனான பிரகலாதனை காக்க Image திருமால், நரசிம்மாராக அவதரித்தார்.

தாயின் கருவில் இருந்து வராததாலும் , கருடருடன் வராத காரணத்தாலும், இந்த அவதாரத்தை அவசர திருக்கோலம் என்பர்.

பக்த பிரகலாதனுக்காக ஓடிவந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி யோக வடிவில் சக்ரத்தாழ்வார்க்கு பின்புறத்தில் இருப்பார்.

நமக்கு ஒரு கஷ்டம் இருப்பதை
Jun 29, 2022 15 tweets 3 min read
புதன் பகவான் திருவெண்காடு புதன் பகவான் 108 போற்றி மற்றும் புதன் காயத்ரி மந்திரம் இன்று 29/6/2022 புதன்கிழமை பதிவு செய்துள்ளோம். புதன் பகவான் திருவடிகளே போற்றி
புதன் திசை மற்றும் புதன் புத்தி நடைபெறும் போது இந்த காயத்ரி மந்திரம் சொல்லி வரும் போது Image புதன் பகவனால் ஏற்படும் திங்கு விளகி நன்மை உண்டாகும். ( குறைந்தது 36, 54 முறை சொல்லி வரவும்) புதன் பகவான் அதிபதி மஹாவிஷ்ணுவை தொடர்ந்து வழிபட்டு வரவும். புதன் ஷேத்திரம் திருவெண்காடு, மதுரை மீனாட்ஷி கோவில், மற்றும் திருவெலங்காடு, சென்று வழிபட்டுவரவும். இதுசிறந்தபரிகாரம் ஆகும்.
Jun 29, 2022 7 tweets 2 min read
தஸ்யஸா நரஸிம்ஹஸ்ய
ஸிம்ஹோரஸ்கஸ்ய பாமிணி..

' எங்கும் ஒவ்வொரு இடத்திலும் அவனைப் பார்க்கிறேன்' என்று நரஸிம்ஹனாகவே ஸ்ரீராமனைப் பார்த்தான் மாரீசன் . ராமாயணத்தில் எங்கு பார்த்தாலும் நரஸிம்ஹ பிரபாவம்.

ராமாயணத்தில் மாரீசன் ராவணனுக்கு உபதேசம் பண்ணுகிறான் : " சீதையை அபகரிக்க வேண்டும் என்கிறாயே, அவள் எங்கிருக்கிறாள் தெரியுமா ? அவள் கிட்டே நாம் நெருங்க முடியாது; தெரிந்து கொள்! ராமனிடம் போக முடியுமா? அவன் யார் தெரியுமா ?? சீதை யார் மடியில் அமர்ந்திருக்கிறாள் தெரியுமா.. நரஸிம்ஹ அவதாரமாக தோன்றினானே, அவன் மடியிலே
Jan 23, 2022 15 tweets 2 min read
மனபயம் அச்சம் தீர்க்க லட்சுமி நரசிம்மர் வழிபாடு!!!ருணம் எனும் கடன் ரோகம் எனப்படும் வியாதிகள்
தீராத பிரச்னைகள், செவ்வாய் தோஷம் பிரச்சனைகள் தீரும் !
கடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு!!!
🪔🌺🙌🙏 "லட்சுமி நரசிம்மம் சரணம் பிரபத்யே " 🪔🌺🙌🙏
கடன் தொல்லையால் அவதிபடுபவர்கள் இந்த வழிபாட்டை செய்து வந்தால் பலன் அடையலாம்.
கடன்பட்டார் நெஞ்சத்தை உவமையாக கம்பர் ராமாயணத்தில் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். கடன்தொல்லையில் இருந்து மீள ருணவிமோசன லட்சுமி நரசிம்மர் ஸ்தோத்திரத்தை பாராயணம் செய்வது நல்லது.
Jan 23, 2022 4 tweets 1 min read
*அகத்திய மகரிஷியின் திருமண நாள் இன்று..*

காசி மகராஜாவின் பெண் லோபமுத்ரா. அவரைத் திருமணம் செய்து கொண்டு பொதிகைக்கு அகத்தியர் வரும் பொழுது, அங்கிருக்கும் யோகிகள், ஞானிகள், சித்தர்கள் அனைவரும் அகத்தியரின் திருமண நிகழ்வை காண வேண்டும் என்று வேண்டிக் கொண்டதால், அவர்களுக்கு அகத்தியர் தன் திருமணக் காட்சி தந்து அருளினார்.

அகத்தியர் உட்கார்ந்து இருக்கக்கூடிய இந்தப் பாறையின் மேலிருக்கும் இந்த மரம் ஒரு ' *தேவதாரு மரம்* '.

அகத்தியர் அணிந்திருக்கக் கூடிய ஆபரணங்களான *"தோள்வளை, கீரிடம், கைவளை, சண்ணவீரம், கால்வளை, தோடகம்*", போன்ற அனைத்தும் '
Jan 23, 2022 58 tweets 6 min read
ஸ்ரீகூரத்தாழ்வான் 1013ஆவது திருநட்சித்திரம்,தை ஹஸ்தம் இன்று
(23/01/2022)-பதிவு -3/3
🙏🌻🌼🌷🌺🙏
அண்ணலும் இளவலும்!!!
🎖👍☝️🖕👏👌🏅
இன்று (23/01/2022) தை ஹஸ்தம்.
ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்வாமியின் 1013 ஆவது திருநட்சித்திரம்.ராமானுஜரை விட 8 ஆண்டுகள் மூத்தவரான கூரத்தாழ்வான் ஸ்ரீராமபிரானின் அம்சமாக அவதரித்தார் என்பர்.
ஆதிசேஷனின் அம்சமாக அவதரித்த ராமானுஜர் திரேதாயுகத்தில்,
இளையபெருமாள் லட்சுமணராக
அவதரித்தார்.அப்போது ராம கைங்கர் யமே பிரதானம் என்று வாழ்ந்தார்.
அவர் செய்த கைங்கர்யங்களுக்கு
(சேவை) எதைக் கொடுத்தாலும்
ஈடாகாது என்று உணர்ந்த ராமர்,தாமே
Jan 23, 2022 9 tweets 2 min read
உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.

அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்

பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி தன்னோ பரணி ப்ரசோதயாத்

கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்

ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்

மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
Jan 23, 2022 8 tweets 2 min read
தியாகராஜர் ஆராதனை ஸ்பெஷல் !

எந்தரோ மஹானுபாவுலு அந்தரிகி
வந்தனமுலு....

(எத்தனையோ மஹான்கள். அனைவருக்கும்
என் வணக்கங்கள் இது தான் அர்த்தம்)

பக்தி செய்வதில் பலவகை இருக்கிறது. இசையால் பக்தி
செய்வது அதில் ஒரு வகை.
ராமபக்திக்கு தியாகய்யர்
மிகச்சிறந்த உதாரணம். அதனால்
தான் இறைவன் அவருக்கு தரிசனம்
தந்ததாக சொல்வார்கள்.

தியாகராஜரின் கீர்த்தனைகள் அனைத்தும் தெலுங்கில் இருந்தாலும் அவை தமிழர்கள் உட்பட அனைவராலும் ரசித்துக் கொண்டாடப்படுவதற்கான காரணம் அதிலுள்ள உணர்வுபூர்வமான பக்திரசம்தான். அப்பாடல்களில் இருக்கும் உயிரோட்டம், கேட்பவர்களின் ஆன்மாவுடன் கலந்து
Jan 23, 2022 22 tweets 3 min read
நீங்கள் அனுமனை தரிசித்தபோதோ அல்லது அனுமனின் படத்தைப் பார்த்தபோதோ கவனித்திருக்கலாம் அனுமனின் வாலில் ஒரு மணி தொங்கிக் கொண்டிருக்கும். வாலில் அந்த மணி எப்படி வந்தது தெரியுமா? அது ஒரு கதை. படியுங்கள்.

தந்தை தசரதன் தன் பத்தினி கைகேயிக்கு கொடுத்த வாக்குப்படி ஸ்ரீராமன் சீதா பிராட்டியுடனும் தன் சகோதரன் லட்சமணனுடனும் பதினான்கு ஆண்டுகள் வனவாசத்திற்கு சென்றதும் அந்த வனத்தில் சீதாப்பிராட்டியை ராவணன் கடத்திச் சென்ற கதையும் நமக்கெல்லாம் தெரிந்ததே.

சீதாப்பிராட்டியை மீட்க ராவணனுடன் போர் புரிய இலங்கைக்கு புறப்படும் முன் ஸ்ரீ ராமன் வானரப்படையை திரட்டிக்
Jan 22, 2022 4 tweets 1 min read
ஓம் பாஸ்கராய நமஹ !!

ஃ பணம் , பதவி, அதிகாரத்தை காந்தம் போல் இழுக்கும் சூரியகாந்தக் கல் :-

ஃ நவகிரகங்களில் முழுமுதற் கிரகமான சூரிய பகவான் மட்டும் நமக்கு பலமாக இருந்து விட்டால் போதும் மற்ற 8 கிரகங்களின் பாதிப்புகள், கெடு பலன்கள் நம்மை அண்டாது. நம்முடைய முன்னோர்கள் ஆதிகாலம் முதலே கண்கண்ட தெய்வமாக சூரிய பகவானை வணங்கினர் ஏனெனில் சூரியனும்- சிவனும்- பெருமாளும் ஒன்று இதனால் தான் சிவசூரிய நாராயணன் என சொல்கிறோம். இத்தகைய சக்திவாய்ந்த சூரிய பகவானின் ஆதிக்கம் நிறைந்த சூரியகாந்த கல்லை கையில் பிரேஸ்லெட்டாகவோ , கழுத்தில் மணிமாலையாகவோ
Jan 22, 2022 11 tweets 2 min read
>> #நரசிம்மர் மீண்டும் அவதாரம் எடுத்த தலம் - #கீழப்பாவூர்_நரசிம்மர்_கோவில் <<

இந்தியாவில் உள்ள நரசிம்மர் கோவில்களில் அபூர்வமானதும், வேறெங்கும் காண இயலாத பல்வேறு சிறப்புகள் நிறைந்த தலமாக கீழப்பாவூர் நரசிம்மர் கோவில் விளங்குகிறது.

தலம், மூர்த்தி, தீர்த்தம் மட்டுமின்றி பல்வேறு சிறப்புகள் நிறைந்தது கீழப்பாவூர் நரசிம்மர் ஆலயம்.

இந்தியாவில் மூன்று இடங்களில் தான் 16 திருக்கரங்களுடன் கூடிய நரசிம்மர் ஆலயம் உள்ளது.
ஒன்று ராஜஸ்தான் மாநிலத்திலும், மற்றொன்று பாண்டிச்சேரி அருகே சிங்ககிரி எனும் சிறுகுன்றிலும் உள்ளது.

மூன்றாவதாகக் கீழப்பாவூரில் மட்டுமே
Jan 22, 2022 9 tweets 2 min read
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம:
கூரத்தாழ்வான் வைபவம் பகுதி - 5
கூரமாநகர் அரசர் ஒரு சாதாரண பிரஜையின் குறையை தீர்த்தல்

ஆழ்வான் அவதரித்த கூரம் என்கிற இடம், பழங்காலத்திலே கூரமாநகர் என பிரசித்தி பெற்ற ராஜ்யமாக இருந்தது. அதில் இவர் தாமே அரசாட்சி செய்து வந்தார்.

ஒரு நாள் இரவு நகர்வலம் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வீட்டில் கதவை தாளிட்டு சில பேர் பேசிக்கொண்டிருந்தார்கள்.

உண்மையை அறிய, ஆழ்வான் அவர்கள் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார். அவர்கள் அந்த வீட்டுத்தலைவரின் பெண்ணைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.

அவர்கள் பேசியதாவது, “இந்தப்
Jan 22, 2022 8 tweets 1 min read
ஆழ்வான்:

கூரத்தாழ்வானுக்கு "ஸ்ரீவத்ஸாங்கர்" என்பது இயற்பெயராகும்.

அவருக்கு எம்பெருமானார் தான், "ஆழ்வான்" என்ற திருப்பெயர் சூட்டினார்.

எம்பெருமானாருக்கு ஆழ்வானிடத்தில், திருவாய்மொழி காலஷேபம் கேட்க ஆசை.

ஆனால், ஆழ்வானோ எம்பெருமானாரின் சீடராகையாலே, அப்படி செய்தால், தான் எம்பெருமானாருக்கு ஆசார்யனாக இருக்க நேரிடுமே என்று எண்ணி, அப்படி செய்ய அவருக்கு விருப்பமில்லை.

ஆகையால், மற்றொரு ஏற்பாட்டை எம்பெருமானார் செய்தார்.

அதாவது முதலியாண்டான், மற்றுமுண் டானவர்கள் ஆழ்வானின் காலஷேபத்திற்கு சென்று திருவாய்மொழியின் பொருளைச் கேட்டு, அதை அவர்கள் அப்படியே
Jan 22, 2022 9 tweets 2 min read
ஸ்ரீ கருட பகவான் மந்திரம் :ஒருவர் தொடர்ந்து ஆறு மாதம் கருட மந்திரத்தை உச்சரித்து வந்தால், அவருக்கு தன் சக்தியின் ஒரு துளியை கருடன் தருகிறார் என்பது ஐதீகம். அந்த கருட மந்திரம்...
சர்ப்ப தோஷம் நீங்க,விஷம் நீங்க
ஸ்ரீ கருட காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே| ஸ்வர்ண பக்ஷாய தீமஹி |
தன்னோ கருட ப்ரசோதயாத் ||
ஸ்ரீ கருடன் பகவான் ஸ்ரீ மன் நாராயணனின் வாகனமாவார்.பெரிய திருவடி என்றும் சுபர்ணன் என்றும் அழைக்கப்படுகிறார்.

அமிர்த கலசத்தை தன் கையில் ஏந்தியவரே, அனைத்து தேவ, தேவியர்களால்
Jan 21, 2022 8 tweets 2 min read
*#ராமானுஜர்_திருமேனியில்_ஆழ்வார்_ஆச்சார்யர்_எங்கு_உள்ளனர்_என்று_தெரிந்து_கொள்வோம்*

1. தலை : நம்மாழ்வார் . அவரை சேவித்தால் கிருஷ்ண பக்தி பெருகும்

2. முகம் : நாதமுனிகள். நாலாயிரம் இயல் இசை நாடகம் கிடைக்கும்

3. கண் : உய்யக்கொண்டான். நாத்முனிகளின் சிஷ்யர் , நாலாயிரம் கிடைக்கும் 4. இரண்டு கன்னங்கள்: மணக்கால்நம்பி, உய்யக்கொண்டான், சிஷ்யர் , நாலாயிரம் கிடைக்கும் .

5. திருமரு : ஆளவந்தார், ஆச்சார்ய கடாட்சம் கிட்டும்.

6. திருக்கழுத்து: பெரியநம்பிகள். த்வய மகா மந்த்ரம் கிடைக்கும்.

7. இரண்டு கைகள் : திருகோஷ்டியூர்நம்பி . திருமந்த்ரம், ச்ரம ஸலோஹம் கிடைக்கும்.
Jan 20, 2022 7 tweets 2 min read
இந்த உடலை விட்டு உயிர் பிரியும் வாசலகள் 1-to-11 வாசல்கள்...

அவர் அவர் செய்த பாப புண்ணியத்திற்க்கு. ஏற்ப உயிர் அந்தந்த வாசல் வழியாக பிரியும் என அகத்தியர் தனது கர்ம காண்டம் நூலில் விளக்கமாக விவரித்து கூறுகிறார்.

(1) பழி பாவம் செய்தவர்களுக்கு மலத்துடன் மல வாசல் வழியாக பிரியும். இவை நேரே நரகத்திற்க்கு செல்லும் திரும்ப ரிட்டன் ஆக நாளாகும் வந்தாலும் நல்ல பிறவி கிடையாது.

( இப்போ எல்லாம் ஹர்ர்ட் அட்டாக் வருபவர் களுக்கு maximum அபாண வாயு & மலத்துடனே சூக்சும சரீரம் போகும் accident case இப்படியே )

(2) பாவஞ் செய்தவர்களுக்கு நீர்வாயில் வழியாக
Jan 20, 2022 10 tweets 2 min read
திருமால் பெருமை

”முன்னம் குறளுருவாய் மாவலிமண் கொண்டளந்த
மன்னன் சரிதைக்கே மாலாகிப் பொன் பயந்தேன்” என்று வாமனன் சரிதம் தன்னைக் கவர்ந்தபடியைத் திருமங்கையாழ்வார் பாசுரமிடுகிறார்.

‘அடி மூன்றை இரந்து அங்கே நின்று, ஆழ்கடலும் மண்ணும் விண்ணும் ஈரடியால் முடித்துக்கொண்டதைக் ‘கேட்குந்தோறும் என்நெஞ்சம் நின் தனக்கே கரைந்துருகும்’ என்று நம்மாழ்வாரும் வாமனாவதார சரிதையை (திருவாய்மொழி (5.10.9)ல்) அநுபவிக்கிறார்

ஸ்ரீய:பதியான, எம்பெருமான், , வாமனனாக வந்து, மூன்றடி நிலம் கேட்டு மாவலியிடம் இரந்து நிற்கிறான். வந்திருப்பது திருமால் என்றுகூறி,
Jan 16, 2022 18 tweets 5 min read
சரீரத்தில் ராசி, நட்சத்திரங்களின் ஆதிக்கம்!!!
---------------------------------------------------------------------------------

🌻 27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை :

* மேஷம்
* ரிஷபம்
* மிதுனம்
* கடகம்
* சிம்மம்
* கன்னி
* துலாம்
* விருச்சிகம்
* தனுசு
* மகரம்
* கும்பம்
* மீனம்

ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்
--------------
Jan 15, 2022 10 tweets 2 min read
தானம் செய்வதில் தர்மர் எப்போதும் வல்லவர், ஆனால் அனைவரும் கர்ணனின் புகழையே பெருமையாக பேசினர். இதனால் அதிருப்தி அடைந்த அர்ச்சுனன், கிருஷ்ணனிடம் போய் முறையிட்டான். கிருஷ்ணனும் யோசித்து விட்டு, "வா அர்ச்சுனா, நேரில் சென்றே பார்த்து விடுவோம்" என கூறி அந்தனர் வேடமிட்டு இருவரும் Image சென்றனர்.

முதலாவதாக, தருமரின் அரண்மனைக்குச் சென்று, "தருமரே, நாங்கள் சமைக்க விறகு வேண்டும், மழை பெய்து கொண்டிருப்பதால் விறகு கிடைக்க வில்லை. சிறிது விறகு தானமாக கொடுங்கள்" என கேட்டனர்.
தருமரோ, "அந்தணர்களே, அரண்மனையில் இருந்த விறகுகள் சமைக்க பயன்படுத்தப்பட்டு விட்டன, மழை
Jan 15, 2022 8 tweets 1 min read
ஈகை எவ்வளவு பெரிய விசயம்.....##

படித்ததில் மெய்சிலிர்த்தேன்.##

*உடல் அழியக் கூடியது. ஆத்மா அழியாது* என்று *அர்ஜுனனுக்கு கீதோபதேசம்* செய்த *கண்ணன்* அழுத இடம் ஒன்று உண்டு.

அஃது எந்த இடம் தெரியுமா?

*கர்ணன்* அடிபட்டு இறக்கும் தருவாயில் இருக்கிறான். *அவன் செய்த தர்மம்* * அவனைக் காத்து நின்றது.*

*அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான்* .

*கண்ணனுக்கே* தாங்கவில்லை. *"உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்"* என்றான்.

அப்போதும் *கர்ணன் "மறு பிறவி* என்று ஒன்று வேண்டாம். அப்படி *ஒரு வேளை பிறக்க நேர்ந்தால்,*
Jan 15, 2022 6 tweets 2 min read
#இன்று_சனிக்கிழமை

#ஸ்ரீ_லக்ஷ்மீ_ந்ருஸிம்ஹர்
#அஷ்டோத்தர_சதநாம_ஸ்லோகம்

நாரஸிம்ஹோ மஹாஸிம்ஹோ
திவ்யஸிம்ஹோ மஹாபல:

உக்ரஸிம்ஹோ மஹாதேவ:
உபேந்த்ரச்’சாக் நிலோசந:

ரௌத்ர: சௌ’ரிர் மஹாவீர:
ஸுவிக்ரம பராக்ரம:

ஹரிகோலாஹலச்’சக்ரீ
விஜயச்’ச ஜயோ(அ)வ்ய்ய: Image தைத்யாந்தக: பரப்ரஹ்மாப்ய
கோரோ கோரவிக்ரம:

ஜவாலாமுகோ ஜ்வாலமாலீ
மஹாஜ்வாலோ மஹாப்ரபு:

நிடிலாக்ஷ: ஸஹஸ்ராக்ஷோ
துர்நிரீக்ஷ்ய: ப்ரதாபன:

மஹாதம்ஷ்ட்ராயுத: ப்ராஜ்ஞோ
ஹிரண்யக நிஷூதன:

சண்டகோபீ ஸுராரிக்ன:
ஸதார்த்திக்ந: ஸதாசி’வ:

குணபத்ரோ மஹாபத்ரோ
பலபத்ரஸ் ஸுபத்ரக: