Universal Citizen (Jai SriRAM🇮🇳) Modi Family Profile picture
சனாதனம்,அன்பு,ஒற்றுமை,தர்மம்,நல்லறம், ஜீவகாருண்யம், பாடல். செந்தமிழ் நாடெனும் போதினிலே, 😁🍯பாயுது👂🏼கொங்கு தேசம்
May 17, 2024 12 tweets 7 min read
மந்திர மாவது நீறு
வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு
துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு
சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன்
திருஆல வாயான் திருநீறே.  1


Image
Image
Image
Image
வேதத்தி லுள்ளது நீறு
வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு
புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு
உண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த
திருஆல வாயான் திருநீறே.  2

பேரூர் அருள்மிகு பட்டீஸ்வரர் பெருமான்
Image
பேரூர் பட்டீஸ்வரர் கோயிலின் கனகசபையில் நான்கு வேதங்கள் தூண்களாக அருள்மிகு சிவகாமி அம்மன் சமேத நடராஜப் பெருமானை வணங்குகின்றன. 🙏🏼💐🙏🏼💐🙏🏼💐
May 5, 2024 11 tweets 6 min read
2-ம் இரஜராஜனின் பிறந்த நாள் நட்சத்திர

தமிழ் கலாச்சாரத்தின் படி தமிழர்கள் பிறந்த நாளை நட்சத்திரத்தின் அடிப்படையில் கொண்டாடுவார்கள். ஆங்கில நாட்காட்டிபடி 2024-ன் சித்திரை உத்திரட்டாதி இன்று (05/05/2022), வீழ்ந்த வைணவத்தை மீளவெடுத்தவரும் புகழ்பெற்ற தாராசுரம் கோவிலைக் கட்டியவரும்,


Image
Image
Image
Image
2/
சோழநாடு செழிக்காமல் இருக்க அன்றே காவிரியை அடைத்ததை எதிர்த்து இராஐராஜன் காலத்தில் சோழர் படை இயற்கையாக பாயும் காவிரிநீரை எப்படி அடைக்கலாம் என்று போரிட்டு அணையை உடைத்து காவிரியை சோழ நாட்டில் தவழ விட்டவருமான இரண்டாம் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இன்று.
Apr 28, 2024 13 tweets 2 min read
தமிழகத்தில் உள்ள அனைத்து இயற்கை ஆர்வலர்கள், பசுமை விரும்பிகள், மரங்கள் மீது,மண்ணின் மீது எதிர்காலத்தில் வரும் பருவநிலை மாற்றத்தால் வெயில், வெப்பம் அதிகரிப்பதை தடுக்க நினைப்பவர்கள், இப்போ பலரும் உணர்வது, அனுபவிப்பது, தெரியும் நாம் கட்டிய வீட்ல கூட குடியிருக்க இயலவில்லை 🎋 Image 2/

வெயில் சுடுவதால்,இரவில் தூங்க முடிவதில்லை ஒருநாளைக்கு மூன்று நான்கு முறை குளிப்பது, இரவில் வெக்கை என அனுபவித்து வருகிறோம், ஆகவே அதிகமா மரங்களை நடுவோம், வெப்பத்தை குறைப்போம், ஒவ்வொரு ஊரிலும் பஞ்சாயத்தில் உள்ளவர்கள் ஊருக்கு பத்தாயிரம் மரங்களை நட்டு வளர்த்தால் போதும்,
Apr 14, 2024 11 tweets 8 min read
இனிய தெய்வீகத் தமிழ் புத்தாண்டு!

அகத்தியர் சொல்படி வழிபட்டு வாழும் உன்னத தமிழருக்கு, சிறந்த சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

தொல்காப்பியரின் தொன்மையைப் பேசும், தொய்வில்லா தமிழருக்கு, தெளிவான சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Image
Image
Image
2/

ஆழ்வார்கள் சொன்ன பாசுரங்கள் சேவிக்கும் அற்புத தமிழருக்கு, அருமையான சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

நாயன்மார்கள் நவின்ற பதிகங்கள் பாடும் நன்மைமிகு தமிழருக்கு நல்லதான சித்திரைப்
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Image
Image
Image
Mar 7, 2024 5 tweets 2 min read
இன்று (07/03/0924) திருக்கழுக்குன்றம் அருள்மிகு சொக்கநாயகி உடனமர் ஸ்ரீ வேதகிரீஸ்வரர் திருக்கோவில், சங்கு தீர்த்த குளத்தில், சங்கு பிறந்துள்ளது.

இங்கு மார்க்கண்டேயர், சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சேரமான்பெருமாள் நாயனார், சேக்கிழார் முதலியோர் இறைவனை வழிபட்டுள்ளனர்.


Image
Image
Image
Image
இக்கோயிலின் புண்ணிய தீர்த்தமான சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கொரு முறை சங்கு பிறக்கும் அவ்வாறு கடந்த 2011 ஆம் வருடம் செப்டம்பர் 1 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி திருநாளன்று சங்கு பிறந்தது. 12 ஆண்டுகளுக்கு பிறகு இன்று சங்கு தீர்த்த குளத்தில் இடம்புரி சங்கு பிறந்தது.
Feb 16, 2024 23 tweets 4 min read
Aditya Hridaya Stotra is a heartwarming prayer dedicated to Lord Surya. It is a hymn in praise of Lord Surya & his glory.

This prayer was taught to Lord Rama by his spiritual guide Sage Agastya. When he had taken a position on the battlefield to defeat the Lanka King Ravana

Image
Image
Image
2/

King Ravana, was a great Shiva bhakta.

Lord Shri Rama recited Aditya Hridaya Stotra and was successful in achieving victory by killing Ravana. The hymn gave physical and mental strength to Lord Rama to face the enemy on the battlefield.
Jan 22, 2024 4 tweets 2 min read
முத்தைத்தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர-எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும்-அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு பட்டப்பகல் வட்டத் திகிரியில்-இரவாகப் Image 2/
பத்தற்கிர தத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத்தகுபொருள் பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் - ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி திக்கொட்கந டிக்கக் கழுகொடு - கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர் தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக Image
Jan 14, 2024 20 tweets 3 min read
கதையோடு ஸ்ரீராம அஷ்டோத்திரம்

தசரதன் ஒரு சிறந்த
ராஜ குமார ராம்
அவரது தர்ம
பத்தினிகள் மூவ ராம்

பலநாள் பிள்ளைப் பேறு
இன்றித் தவித்தா ராம்
புத்திர காமேக்ஷ்டி யாகம்
ஒன்றைச் செய்தா ராம்

நிவேதனப் பாயசம்
துணைவிகள் அருந்தின ராம்
அதன் பலனாய் மகவு
நால்வரைப் பெற்றன ராம் Image 2/
அதன் பலனாய் மகவு நால்வரைப் பெற்றன ராம்
கோசலையின் தவப் புதல்வன் ஸ்ரீராமச்சந்திர ராம்

கைகேயி மகன் பரதன் என்பவ ராம்
சுமத்திரை ஈன்றது லஷ்மண சத்ருக்னன ராம்

நால்வரும் படிக்கக்குருகுலம் சென்றன ராம்
பிள்ளைகளின் குரு விஸ்வாமித்ர முனிவ ராம்
Oct 23, 2023 11 tweets 2 min read
சகலகலாவல்லி மாலை பாடல் (காசியில் குமரகுருபரர் இயற்றிய 10 பாடல்கள்)

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத்
தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித்
துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.

1/10

Image
Image
Image
2/10

நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற்
காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே.
Jun 15, 2023 13 tweets 2 min read
Thread
1/n
சூரிய நமஸ்கார மந்திரங்கள்:

சூரிய நமஸ்காரத்தின்போது உச்ச‍ரிக்கப்படும் 12 மந்திரங்களும் அதன் அர்த்த‍ங்களும்!

உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்து வாழ்வதற்கு சூரியனே காரணம்.
சூரியனை கடவுளாக வணங்கும் பழக்கம் பழங்கால தொட்டெ இருந்து வருகிறது. Image 2/

சூரிய நமஸ்காரம் நமது ஆன்மீக வாழ்வுடனும், ஆரோக்கிய வாழ்வுடனும் ஒன்றிய அறிவியல் மருத்துவக் கூறுகளை உள்ளடக்கிய நோய் தீர்க்கும் யோக பயிற்சியாகும்.

கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா? என்ற பழமொழி உண்டு.

சூரிய நமஸ்காரத்திற்கும் கண்ணிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இதுகாட்டுகிறது.
Jan 28, 2023 4 tweets 2 min read
சேல்பட்டு அழிந்தது செந்தூர் வயல்பொழில்!
தேங்கடம்பின்
மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம்
மாமயிலோன் வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்!
அவன் கால் பட்டு அழிந்தது! அயன் என் தலைமேல் எழுதிய கையெழுத்தே!
#கந்தர்அலங்காரம்
#40 #சேல்பட்டு #கௌமாரம்
kaumaram.com/alangkaram/ala…



Image
Image
Image
Image
சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள
வயல்கள் அழிந்துபோயின;

மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது
சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால்
அழிந்துபோயிற்று.
Jul 2, 2020 29 tweets 4 min read
இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திரு உத்திரகோசமங்கை பற்றிய தகவல்கள்:

தமிழ்நாடு இராமநாதபுர மாவட்டத்திலுள்ள திரு உத்திரகோசமங்கை கோவிலின் சிறப்புகள். அதில் முக்கியமான மூன்று விஷயங்கள்.

1. இந்தக்கோவில்தான் உலகின் முதல் சிவன் கோவில் 8000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது.

1/n Image 2. இங்குள்ள இலந்தை மரம் 3300 ஆண்டுகளுக்கு மேலாக இன்றும் பூத்துக் குலுங்குகிறது. 🙏🏼💐

3. இங்குதான் இராவணன், மண்டோதரியின் திருமணம் நடைபெற்றதற்கு சாட்சியாக கல்வெட்டுக்கள் உள்ளன. 💐🙏🏼

எனவே #இராமாயணம் ஒரு கட்டுக்கதை என்று கூறுபவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

2/n