சாமானியனின் சவுக்கு© Profile picture
யாதும் ஊரே யாவரும் கேளிர் | மானமிகு சுயமரியாதைகாரன்
Nov 17, 2019 11 tweets 2 min read
''குற்றால அருவியில் பார்ப்பனர்கள் மட்டும்தான் குளிக்க முடியும், ஏனைய சாதியைச் சார்ந்த யாரும்
குளிக்க கூடாது", என்றிருந்த ஜாதி வெறியை உடைத்து அனைவரும் குளிக்கலாம் என்று உத்தரவிட்டவர் "ஆஷ்'' என்ற வெள்ளைக்கார கலெக்டர் என்பது, நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் ? இது போன்ற சீர்திருத்த நடவடிக்கைகளினாலேயே ஆங்கிலேய கலெக்டர் ஆஷ் துரை, சாதி வெறியனான வாஞ்சி நாதனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒரு நாள் ஆஷ் துரை மாலை நேரத்தில்
தனது குதிரையோட்டி முத்தா ராவுத்தர் உடன் நடைபயிற்சி போகிறார். நடந்து கொண்டிருந்தவர் காதில் ஏதோ அலறல் சத்தம் பலமாக கேட்கிறது