அதானியின்”காட்டுப்பள்ளி துறைமுக” விரிவாக்கத் திட்டம் தேவையற்ற திட்டம்.இதன் நோக்கம் சென்னை, எண்ணூர்,தூத்துக்குடி துறைமுகங்களை மூடவைப்பதுதான். கொரோனா காலகட்டத்திற்கு முன்னுள்ள துறைமுக பயன்பாட்டு தரவுகளை வைத்து பார்க்கும்போது இந்த சந்தேகம் உறுதியாகிறது. தமிழகத்தில் உள்ள மூன்று பெரிய
துறைமுகங்களின் சரக்குகளை கையாள்வதற்கான கூட்டுதிறன் வருடத்திற்கு 274.9 மில்லியன் டன்கள். ஆனால் 2019-20ல் இந்த மூன்று துறைமுகங்களும் சேர்ந்து கையாண்டது 122.3மி.டன்கள். அதாவது 44% மட்டுமே.ஏற்கனவே உள்ள துறைமுகங்களின் நிலையே இப்படி இருக்கும் போது காட்டுப்பள்ளி துறைமுகம் 320மி.டன்களை
கையாளும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. அதாவது இந்தியாவில் உள்ள அனைத்து துறைமுக கையாளும் திறனில் இது ஒன்றில் 6 பங்கு. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள கூட்டு திறனைவிட 20%க்கும் கூடுதல். அப்படியெனில் அதானி துறைமுகம் வெற்றிபெறவேண்டுமெனில் மற்ற துறைமுகங்கள் கையாளும் சரக்கு இங்கே
பூச்சிகள் சூழ் உலகம் :
இவ்வுலகில் உள்ள மக்கள் தொகையை விட 17 மடங்கு அதிகமான பூச்சிகள் உள்ளன. கடந்த பல பத்தாண்டுகளாக உரம் சார்ந்த விவசாயம், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் பூச்சிகள் அழிவை சந்தித்து வருகின்றன. பாலூட்டிகள், பறவைகள் ஊர்வனவற்றிற்கு ஏற்படும் அழிவை விட பூச்சிகள் 8
மடங்கு அதிக அழிவுகளை சந்திக்கின்றன.40% பூச்சிகள் அழியும் நிலையில் உள்ள என்றும் வருடத்திற்கு 2.5% பூச்சிகள் அழிந்து கொண்டிருக்கின்றன என்கின்றன உலகளாவிய ஆய்வுகள், இந்த ஆய்வுகளை மேற்கோள் காட்டி ஆஸ்திரேலிய நாட்டின் சிட்னி பல்கலைக்கழக ஆய்வுகள் உறுதிபடுத்துகின்றன.இந்த நிலை தொடர்ந்தால்
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பூச்சிகள் இல்லா உலகமாகிவிடும்.
பூச்சிகள் இல்லைனா சூப்பர் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள், ஒரே ஒரு செய்தி, பூச்சிகள் இல்லையெனில் மனிதகுலம் இல்லாமல் போய்விடும், அவ்வளவுதான்.
பூச்சிகள்தான் பறவைகளுக்கு உணவு, பறவைகள் இல்லையெனில் .....? மரகந்த சேர்க்கை
அதானிக்கு இப்போது தமிழகத்தின் மிகப்பெரிய நிலப்பரப்பு தேவை. சூழல் முக்கியத்துவம் வாய்ந்த, லட்சகணக்கான மக்களின் மீன்பிடி பகுதியாகவுள்ள இந்நிலத்தில் யாருமே கோராத துறைமுகத்தை அமைக்க இந்த நிலப்பரப்பை ஆக்கிரமிக்க போகிறது. #StopAdaniSavePulicat @NityJayaraman
துறைமுகத் திட்டம் பல்லுயிரியத்தை அழிக்கப்போவதோடு மட்டுமல்லாமல் சென்னையை நிரந்திரமாக தண்ணீர் பஞ்சத்திலும், வெள்ள அபாயத்திலும் வைக்கப்போகிறது. பழவேற்காடு சதுப்பு நிலத்திற்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே உள்ள குறுகிய நிலப்பரப்பு அதானி துறைமுகம் ஏற்படுத்தப்போகும் கடலரிப்பால்
காணாமல் போய் கடல்நீர் உட்புகுந்து இரண்டும் ஒன்றோடுஒன்று கலந்துவிடும்.பல்வேறு நாடுகளில் உள்ள பூர்வகுடி மக்கள் அதானியை வரவிடாமல் தடுத்து வருகிறார்கள், இந்தியாவில் மட்டும் அவருடைய கரங்கள் விரிவடைந்து வருகின்றன, பலம்பொருந்திய நண்பர்களின் துணையால் @NityJayaraman#StopAdaniSavePulicat
கொரோனா போன்ற தொற்று நோய்களை அதிகரிக்க விரும்புகிறாரா அமைச்சர் கடம்பூர் ராஜு ?:-
8 வழிச்சாலை திட்டத்தினால் மக்கள் பாதிக்கப்படவில்லை- மத்திய அரசு வழங்கியுள்ள அற்புதமான திட்டம் என தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
10,000 ஏக்கர் விவசாய நிலம், நூற்றுக்கணக்கான நீர்நிலைகள்,
ஆயிரக்கணக்கான கிணறுகள், வழிபட்டு தலங்கள், பள்ளிகள் வீடுகள், சிறு வணிக வளாகங்கள்,19 கி.மீ தூரத்திற்கு காப்பு காடுகள், பல்லாயிரக்கணக்கான மரங்கள் என இவை அனைத்தையும் அழித்து 277 கி.மீ தூரத்திற்கு அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த சாலையினால் ஏற்படும் ஏதாவது ஒரு நன்மையை சொல்ல முடியுமா
அமைச்சரே? சென்னை-சேலம் எட்டு வழிச்சாலையில் நினைத்த இடத்தில் எல்லாம் இணைய முடியாது. சாலையின் இரண்டு பக்கமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போடப்படும் இந்த சாலையில் மூன்று இடங்களில் மட்டுமே இணையமுடியும். இந்த சாலையில் இரு சக்கர வாகனங்கள் செல்ல முடியாது, கார்கள்,பேருந்துகள், பெரிய
ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம் உத்தவ் தாக்கரே மீது. ஆனால் இந்தியாவில் அவர் ஒருவர் மட்டும்தான் பாசிச வாதிகளுக்கு அவர்களது மொழியிலேயே பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
இன்று புதிதாக கிளம்பியிருக்கும் கருத்து சுதந்திர போராட்ட வீரர்கள் கொஞ்சம் அவர்களுடைய வரலாறை லேசாகத் திரும்பிப்
பார்த்தால் தெரியும், அவர்களது போர் கொடியின் சாயம் எப்படி வெளுத்துக் கொண்டிருக்கிறது என்று.
இந்தியாவில் எத்தனை பத்திரிகையாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்? கௌரி லங்கேஷின் கொலை வழக்கு என்ன ஆனது? எத்தனை பத்திரிகையாளர்கள் மீது வழக்குகள்? எத்தனை பத்திரிகையாளர்கள் மீது
தாக்குதல்கள்?
இன்று தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டு இருப்பதை கருத்து சுதந்திரத்திற்கு விடப்பட்ட சவால் என்று சொல்வதற்கு உங்களுக்கு கூச்சமாக இல்லை?
கோஸ்வாமியின் மீதான வழக்கு அப்போதிருந்த பாஜக அரசால் மூடப்பட்டது. இன்றைய அரசு அதை கையில்
நேற்று தமிழ்நாடு தினம் பற்றி முகநூலிலும் டிவிட்டரிலும் பல பதிவுகள். தலைவர்கள் வாழ்த்துகள். பல நிகழ்வுகள்.
கவனிக்க வேண்டிய விசயம்,இது போல கடந்த வருடமோ அதற்கு முந்தைய வருடங்களோ தமிழ்நாடு தினம் இப்படி கடைபிடிக்கப்பட்டிருக்கிறதா என்பதுதான்.
கடந்த ஒன்றிரண்டு வருடங்களாகவே இது போன்ற
தினங்கள் கூடுதல் உற்சாகத்தோடு சமூக ஊடகத்தில் கொண்டாடப்படுகிறது.சமூக ஊடகத்தின் பரவலாக்கம் ஒரு காரணம்,ஆனால் அது மட்டுமே காரணம் என்று சொல்லமுடியாது.
நேற்று தமிழ்நாடு தினம் போலவே கேரள தினமும், ஆந்திர தினமும் கொண்டாடப்பட்டிருக்கிறது. பொட்டி ஸ்ரீராமலுவுக்கு மரியாதை செலுத்திய ஜகன் மோகன்
ரெட்டி ஆந்திர பிரதேசத்துக்கு கடந்த 64 ஆண்டுகளாகவே அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்.
தமுஎசவின் மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் காங்கிரஸை சேர்ந்த முதல்வர் கலந்து கொள்கிறார்.
இதெல்லாம் எதிர்வினை. வினை, பா.ஜ.கவின் ஒரே தேசம் முயற்சி.
ஒரே தேசம் என்ற பெயரில் மாநிலங்களின்
மழைக்காலம் பெரிதும் மாறுவது தெரிந்த விஷயம் தான். பருவநிலை மாற்றம் இந்த மாற்றத்தை மேலும் அதிகரித்துவிடுகிறது,இதனால் விவசாயிகளால் பயிர்களின் சுழற்சி முறையையும், விரும்பிய பயிர் வகைகளையும் பயிரிட முடிவதில்லை,” என்கிறார் பாம்பே இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் காலநிலை ஆய்வுகள் இடைநிலை
திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் பேரா.பார்த்தசாரதி.மகாராஷ்டிராவின் நாஷிக் மற்றும் கொங்கன் மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மழை அதிகரித்துள்ளது,அதுவேதானே மாவட்டத்தில்1976-77ஆம் ஆண்டு பெய்த கனமழைக்கு பிறகு மழை பொழியும் நாட்களில் மாற்றம் கண்டுள்ளதையும் அவரது ஆய்வில் கண்டறிந்துள்ளார்
“பருவநிலை மாற்றம் மழைப்பொழிவின் மீது தாக்கம் செய்துள்ளது.மழைக் காலத்தின் தொடக்கம், மழையின் முடிவு, மழை பெய்த நாட்கள்,பெய்யாத நாட்கள், ஒட்டுமொத்த மழைப்பொழிவு என அனைத்தும் மாறியுள்ளன. இவை விதைக்கும் தேதி, முளைக்கும் விகிதம், மொத்த விளைச்சலில் மோசமான தாக்கத்தை செலுத்துவதால் பெருமளவு
2008ஆம் ஆண்டு, அன்று டில்லியை ஆண்ட அரசு INTACH அமைப்புடன் கூட்டு சேர்ந்து டில்லி பற்றிய தகவல்களை ஆவணப்படுத்த ஆரம்பித்தது. அதன் நோக்கம் டில்லிக்கு யுனெஸ்கோ “பாரம்பரிய தலைநகரம்” என்கிற அந்தஸ்த்தை பெறவேண்டும் என்பது. ஆவணப்படுத்தல் முடிவுற்று 2012ஆம் ஆண்டில் மத்திய அரசால்
யுனெஸ்கோ
அமைப்பிடம் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் திடீரென்று 2015ஆம் ஆண்டில் அந்த விண்ணப்பம் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டது. அதற்கான காரணம் சமீபத்தில் தெரிய வந்தது.
அப்படி அந்த அந்தஸ்த்தை டில்லி பெற்றிருந்தால் அந்த பகுதியில் எந்த மாற்றத்தையும் அரசால் செய்யமுடியாது. அதாவது இப்போது
20,000 கோடியில் அறிவிக்கப்பட்டுள்ள “ராஜவீதி”(central vista) திட்டத்தை செயல்படுத்த முடியாது. இந்த திட்டம் தேவையற்ற திட்டமட்டுமல்ல, இதில் மொத்த விஷயங்களும் மூடி மறைக்கப்படுகின்றன.
அதே நேரம், பாரிஸில் உள்ள நாட்ரே-டாமே தேவாலயம் தீயினால் பாதிக்கப்பட்டது. அதை சீரமைக்க அந்த நாட்டு அரசு
அசாம் மாநிலத்தில் உள்ள குவகாத்தி உயிரியல் பூங்காவில் உள்ள புலிகளுக்கு உணவாக மாட்டுக்கறியை தரக்கூடாது என்று மறியல் போராட்டம் நடத்தியுள்ளார் அம்மாநில பாஜகவின் முக்கிய தலைவர் சத்ய ரன்ஜன் போரா. மாடுகள் புனிதமானவை, அவற்றை உணவாக தரக்கூடாது என்று உணவை கொண்டுவந்த லாரிகளை மறித்துள்ளார்.
அதைவிட அவர் மாற்று யோசனை இன்னும் அதிர்ச்சி; அந்த பூங்காவில் உள்ள கடமான்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அவற்றை புலிகளுக்கு உணவாக கொடுக்கவேண்டும் என்ற கோரியுள்ளார். இந்திய வனபாதுகாப்பு சட்டப்படி, வன உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை மற்ற விலங்குகளுக்கு உணவாக தரக்கூடாது. மேலும்,
சர்வதேச பல்லுயிரிய பாதுகாப்பு பட்டியலின் படி “கடமான்” அருகிவரும் இனம், அவற்றை கொல்லக்கூடாது. ஆனால் இந்த “அறிவாளி” இப்படி ஒரு யோசனை சொல்கிறார்.
இவர்களிடம் இந்த மாதிரியான விசயங்களைதான் எதிர்பார்க்கமுடியும்.!!!😠😠
இது தான் அவர்கள் கட்டமைக்க விரும்பும் இந்தியா:
அவர்களைப் பொறுத்தவரை தலித் மக்கள் இந்துக்கள் இல்லை, இந்துக்கள் இல்லாதவர்கள் இந்தியர்கள் இல்லை. அதனால் ஒரு தலித் உடல் அத்துமீற படும் போது, ஒரு தலித் உயிர் ஆதிக்கத்தால், அதிகாரத்தால் காவு வாங்கப்படும் போது, இறந்த பிறகும் அந்த உயிருக்கு
அநீதியும் அவமானமும் இழைக்கப்படும் போது அதை எதிர்த்து யாரும் கேள்வி எழுப்ப கூடாது.
இதுதான் அவர்கள் கட்டமைக்க விரும்பும் இந்தியா.
இங்கு ஒரே தேசம், ஒரே மொழி போல ஒற்றை அதிகாரம் தான் கோலோச்சி நிற்கும். அரசின் எந்த அத்துமீறலையும் எதிர் நின்று கேள்வி கேட்பது எதிர்கட்சி தலைவர் என்றாலும்
சரி, மக்களின் ஆதரவு பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் என்றாலும் சரி அவர்கள் அவமானப்படுத்த படுவார்கள்.
இங்கு எதிர் கேள்விகளுக்கு பதில் அவமானங்கள். விமர்சனங்களுக்கு பதில் வழக்குகள். எதிர்ப்புணர்வுக்கு பதில் சிறைக்கம்பிகள்.
இது தான் அவர்கள் கட்டமைக்க விரும்பிய இந்தியா. இதுதான் உத்திரப்
முந்நூற்று ஐம்பதுகோடி ஆண்டுகளுக்கு முன் எளிய ஒற்றைச் செல்லில் துவங்கி இன்று மூன்று கோடிக்கும் அதிகமான சிக்கலான சிற்றின்ங்களாய் பரிணமித்திருக்கும் உயிரினங்களின் வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது. பல மர்மங்களும் சோகங்களும் ஆச்சரியங்களும் சூழ்ந்தது.
ஒவ்வொரு உயிரினங்களுக்குள்ளும்
இருக்கும் நேர்த்தியையும் பிற உயிர்களோடு அவற்றின் ஒத்திசைவையும் கண்டு வியக்காதவர்களே இருக்கமுடியாது.
எப்படி இந்த ஒத்திசைவும் ஒழுங்கும் சாத்தியமாயிற்று?
இதற்குப்பின் ஒரு ஆன்மாவோ பேராற்றலோ இருக்கிறதா?
அது எல்லையற்றக் கருணையோ இல்லை பழிவாங்கும் வலுவோ பெற்றிருக்கிறதா?
இல்லையெனில்
இது தற்செயலாய் எப்படிச் சாத்தியமானது?
குரங்குக்கு மனிதன் பிறப்பது சாத்தியமா?
முடியாதெனில் பரிணாமம் எப்படி நடந்தது?
பரிணாமம் உண்மையெனில் அதற்குச் சான்று இருக்கிறதா?
இப்படி எண்ணெற்றக் கேள்விகளுக்கான எளிய அறிவியல் பதில்கள்தான் பூவுலகின் நண்பர்கள் முன்னெடுக்கும் இந்த உரையாடல்.
பென்னிகுயிக் எப்படி தமிழர்களின் இல்லங்களில் வாழ்கிறாரோ அதைப்போலவே நாம் கொண்டாட வேண்டிய இன்னொருவர் “ஜான் மார்ஷல்”;-
97 வருடங்களுக்கு முன் செப்டம்பர் மாதம் 20ம் தேதி தொல்லியல் ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவரின் முக்கியமான வரிகள் Illustrated London News பத்திரிகையில் இடம்பிடித்தன.
*'மறக்கடிக்கப்பட்ட ஒரு பழைய நாகரிகத்தை கண்டுபிடிக்கும் தருணத்தில் நாம் இருக்கிறோம். இந்திய சமூகத்தின் வயதாக இதுவரை நாம் கருதிக் கொண்டிருக்கும் காலம் இந்த கண்டுபிடிப்பால் இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி போகலாம்'* என்ற வரிகளே அவை. அந்த வரிகளுக்குள் ஆங்காங்கே உலகின் மிக
தொன்மையான ஒரு நகர நாகரிகத்தின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
*சிந்து சமவெளி நாகரிகம்!*
1924ம் ஆண்டு மண்ணுக்குள்ளிருந்து வெளிப்பட்ட சிந்து நாகரிகம், வைகைக்கரை வரை நம் வரலாற்றை தூக்கி சுமந்து ஓடிக் கொண்டிருக்கிறது. *இந்திய ஒன்றிய வரலாறு இனி 'சிந்துவிலிருந்து வைகை வரை' என எழுதப்பட
உள்ளூர் அளவிலாகட்டும் இல்லை உலக அளவிலாகட்டும் இன்று நாம் எதிர்கொள்ளும் சுற்றுச்சூழல் சிக்கல்களைப் பட்டியலிடத் தொடங்கினால் பல்லாயிரம் பக்கங்கள் தேவைப்படும்.ஆனால் நாம் இன்று எதிர்கொண்டிருக்கும் இந்த சூழல் அச்சுறுத்தல்களுக்கும் சமூகப் பொருளாதார அவலங்களுக்கும் ஒற்றைப்பெரும் காரணமாகப்
பின்னிருப்பது இன்றைய நவீனப் பொருளாதார உற்பத்தி முறைதான். இந்த உற்பத்தி முறையையும் அதன் பின்னிருக்கும் அரசியலையும் பற்றிப் பேசாமல் பெரும்பாலான நேரங்களில் நாம் ஒவ்வொரு சூழல் பிரச்சினைகளையும் தனித்தனியாக அணுகிப் போராடிச் சோர்ந்து போகிறோம். தீர்வுகளை நோக்கி நகரவேண்டுமாயின் நாம் எங்கு
தொடங்கி வேண்டும்? எது நாம் வேண்டும் மாற்றத்தைத் தரும்?
உலகின் மகத்தான மாற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் அதை நிகழ்த்திக் காட்டியோரின் பெரும் கனவு ஒன்று மறைந்திருக்கும். பெரும் சமூக அவலத்தை முடிவுக்குக் கொண்டுவந்த “எனக்குள் ஒரு கனவு இருக்கிறது” என்ற மார்ட்டின் லூத்தர் கிங்கின்
இந்தியாவில் பிடி பருத்தி கடந்த 20 ஆண்டுகளாக பயிரிடப்படுகிறது, அது எவ்வளவு பெரிய தோல்வியை சந்தித்துள்ளது என்பதை @sbyravan எழுதியுள்ள இந்த கட்டுரை விளக்குகிறது. இந்தியா முழுவதும் நடைபெற்ற அறிவியல் பூர்வமான ஆய்வுகளை வைத்து மரபணு விதைகளை பயன்படுத்தியதால் பருத்தி உற்பத்தியும்
அதிகரிக்கவில்லை, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடும் மிக அதிகமாக அதிகரித்துள்ளது என்பது நிறுவப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், 2018ஆம் ஆண்டில் ஒரு ஹெக்டேகருக்கு 1,750 ரூபாய் பூச்சிக்கொல்லிகளுக்கான செலவு அதிகரித்துள்ளது, ஒப்பீட்டளவில் மரபணு
விதைகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்னர் செல்வானதை விட 37% அதிகம் என அந்த ஆய்வறிக்கை மூலம் அறிந்துகொள்ளமுடிகிறது. இந்த காரணங்களால மரபணு விதைகளை பயன்பாட்டில் இருந்து விலக்கிவிட்டு இந்த மண்ணிற்கு ஏற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும் என்கிறது, அதுமட்டுமல்ல மரபணு பயிர்களான பிடி
இராணுவம்,எல்லையில் வீர்ர்கள் மடிகிறார்கள் என்று தொடர்ந்து ஒருவிதமான “ஜிங்கோயிஸம்” செய்ததன் விளைவுகளை நாம் சந்திக்கிறோம். மீரட் நகரில் மாரடைப்பால் மரணமடைந்த இராணுவ வீரருக்கு ஊரே திரண்டு அஞ்சலி செலுத்துகிறது,ஆனால் இன்னொருபுறம் கொரோனாவிற்கு சிகிச்சை அளித்து உயிர்நீத்த மருத்துவரை
அடக்கம் செய்யவிடாமல் தடுக்கிறது. சமூகம் இவ்வளவு மோசமாக மாறியதற்கு காரணம் கடந்த சில ஆண்டுகளாக இந்த அரசும் அதை இயக்கக்கூடிய அமைப்புகளும் செய்துவரக்கூடிய போலி தேசியவாத பிரச்சாரம்தான். நாட்டு மக்களை எப்போதும் அச்சதுடனும், இருக்கமாகவும் வைத்திருக்க இவ்வகை பிரச்சாரங்கள் உதவுகின்றன. தேச
நலனை எல்லையில் நிற்கும் இராணுவ வீரன் மட்டும் காப்பாற்றவில்லை,
துப்புரவு தொழிலாளர்,மருத்துவர், ஆசிரியர்,விளையாட்டு வீரர்,ஒட்டுநர் என இந்த நாட்டை உருவாக்க பணியாற்றும் அனைவரின் பங்களிப்பும் இராணுவ வீரர்களின் பங்களிப்பைக் காட்டிலும் மகத்தானது.
அதனால் இந்த ஜிங்கோயிஸத்தை நிறுத்துங்கள்.
கொரோனா தொற்று கடவுளின் செயல் என்பதால் ஜிஎஸ்டி வரியில் மாநிலங்களுக்கு கிடைக்கவேண்டிய பங்கு கிடைக்காது என்காறார் நிதி துறை அமைச்சர் @nsitharamanoffc . இவர் அறிவியல் படித்துவிட்டுதான் வந்தாரா என தெரியவில்லை, இந்த தொற்றுக்கு காரணம் காடழிப்பு மற்றும் பல்வேறு சூழல் சீர்கேடுகள்தான் என
வல்லுநர்கள் தெரிவித்துவிட்டனர். அப்படி இருக்கையில், “இருப்பு” குறித்து கேள்விகள் உள்ள கடவுளின் மீது பழிபோடுவது,இந்த ஆட்சியின் “செயலற்ற திறனை” மூடி மறைப்பதற்கான விசயமேயன்றி வேறு எதுவுமில்லை.இந்த ஆட்சியில் பிரதமர் முதல் அமைச்சர்கள் வரை திறமையில்லாமல் (lack of talent) உள்ளனர் எனபதை
பல்வேறு விசயங்கள் நமக்கு காண்பித்துக் கொடுக்கிறன. ஒன்றிய அரசு வசூலிக்கும் வரியில் குறிப்பிட்ட சதவீதம் மாநிலங்களுக்கு கொடுக்கவேண்டும் என்பதை நம்பிதான் மாநிலங்கள் ஜிஎஸ்டியில் இணைந்தன,இப்போது அது இல்லையெனில் ஜிஎஸ்டியை கலைத்துவிட்டு,மாநிலங்கள் வசூல் செய்யட்டும், குறிப்பிட்ட சதவீதம்
உபியில் இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு, சமஜ்வாடி கட்சி 108 அடி உயரத்தில் பரசுராமருக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்து, பரசுராமரை விஷ்ணுவின் 6வது அவதாரம் என்கிறது. பகுஜன் சமாஜ் கட்சி தாங்கள் வெற்றி பெற்றால் அதைவிட உயரமான சிலை அமைக்கப்படும் என அறிவிக்கிறது.
காங்கிரஸ் தலைவர் ஜித்தின் பிரசாத், பரசுராம் ஜெயந்தியை அரசு விடுமுறையாக அறிவிக்க கோருகிறார். இவையெல்லாம் இந்த கட்சிகளுக்கு ஓட்டுக்கள் வாங்கித்தரும் என நினைத்தால் அவர்களை விட முட்டாள்கள் யாரும் இல்லை, இப்படி செய்வதால் இந்த அஜெண்டாவை வைத்த பாஜகவிற்குதான் லாபம், வெற்றி. இதை புரிந்து
கொள்ளவில்லை எனில் இந்த கட்சிகளுக்கு வெற்றியே கிட்டாது. நமக்கு இந்த பாடத்தை கற்றுக்கொடுப்பது பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்ம் தான்,இந்தியாவில் மதசார்பற்ற அரசியல்தான் வெற்றிபெரும் என இருந்த காலகட்டத்தில் கூட அவர்கள் இந்துத்துவ கொள்கைகளை விட்டுவிடவில்லை. ஏனெனில் மதசார்பற்ற கொள்கை பாஜகவை தவிர
நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனை எது அதிகமாக தயாரிக்கிறது என்று ட்விட்டரில் கேள்வி கேட்டு இருந்தேன்.அதற்கு 51% மேல் காடுகள் தான் என தேர்வு செய்திருந்தனர்.
உண்மை என்னவெனில்,நாம் சுவாசிக்கும் ஆக்சிஜனில் 70% தயாரிப்பது பெருங்கடல்கள்தான்.25%த்தை அமேசான்,போர்னியா போன்ற வெப்பமண்டல காடுகளும்,
மீதமிருக்கும் 5%தான் நாம் வளர்கின்ற மரங்களும் செடிகளும் கொடுக்கின்றன.
பெருங்கடல்கள் தயாரிக்கின்றன என்றால் எப்படி?.எந்த அதானியும், அம்பானியும் அங்கே தொழிற்சாலை வைத்து ஆக்சிஜனை தயாரிக்கவில்லை,கடலில் உள்ள சின்ன சின்ன உயிரினங்களும் தாங்கள் உணவு தயாரிக்கும் முறையில் ஆக்சிஜனை
வெளியிடுகின்றன,நமக்கு ஆக்சிஜனை கிடைக்கிறது. நம்முடைய கட்டைவிரலின் மேற்பகுதியில் உள்ள அளவில் மட்டும் சுமார் 10லட்சம் உயிரினம் இருக்கும் அளவிற்கு சிறியதொரு உயிரினம், "ப்ரொக்ளோரோகாக்கஸ்" (prochlorococcus).அந்த சிறிய உயிரினம்தான் நாம் சுவாசிக்கக்கூடிய ஐந்தில் மூச்சில் ஒரு மூச்சிற்கான
Good morning!
Here are the details for this evening’s (6 pm sharp) meeting:
Zoom I'd : 965 0931 7810 (there’s no password);
or simply click on the following link: zoom.us/j/96509317810
The meeting will be held like a Quaker gathering; it will be a self-regulated meeting
and there will be no regimented one-person coordination.Please introduce yourself and speak your mind and heart as and when you feel for about three to five minutes each.There may be pauses and silences but then it will help us internalize the thoughts and feelings of speakers
and think and feel deeper about the predicament we and our country are in.Once all the invited speakers finish speaking, we will open it up for the other guests to speak. And they would follow the same pattern. Please avoid the usual rush and push and treat this as a meditative
ஜூலை மாத பூவுலகு இதழ் வெளிவந்துவிட்டது:-
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று சுற்றுச்சூழல் பேசுபொருளாகியிருக்கிறது. குறிப்பாகச் சுற்றுச்சூழலை அச்சுறுத்தும் EIA2020 க்கு எதிராக இன்று வெமக்களிடம் வெளிப்படும் விழிப்புணர்வும் ஒருங்கிணைப்பும் பிரம்மிப்பூட்டுகிறது. தனிமனிதர்களாகவும்
சமூகமாகவும் பெரும் உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகளை எதிர்கொண்டிருக்கும் நிலையிலும் சூழல் விரோதச் சட்டத்துக்கு எதிரான இந்திய தேசத்தின் மக்களிடமிருந்து எழும் அறச்சீற்றம் நம்பிக்கையூட்டுகிறது. இந்நிலையில் EIA2020 சிறப்பிதழாக வெளிவருகிறது ஜூலைமாத பூவுலகு இதழ்.
சிறப்பிதழின்
முதன்மையானக் கட்டுரையாக வெளிவந்திருக்கிறது தோழர். பிரபாகரனின் ‘சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை 2020 ஏன் எதிர்க்கப்பட வேண்டியது?’ என்ற கட்டுரை. சூழல் தாக்க அறிக்கையின் அச்சுறுத்தும் அம்சங்களை விரிவாகவும் ஆழமாகவும் அலசுகிறது இக்கட்டுரை.
இன்றைய நெருக்கடியான சூழலில் நமது