ம.சரவணகுமார் Profile picture
எழுத்தாளர்
Jan 2 4 tweets 1 min read
ஐயப்பன் கடவுள் இல்லை. மாறாக கடவுள் இல்லையென்ற நாத்திக ஆசீக சமயத்தை உருவாக்கி அதை இந்தியா முழுவதும் பரப்பியவர். வைதீக ஆரிய இந்து மதம் சூத்திரர்களுக்கும் பெண்களுக்கும் கல்வி கற்கவும் முக்தி அடையவும் தடைவிதித்தது.

1/n முக்தி அடைய வேதம் கற்க வேண்டும். உபநயனம் செய்ய வேண்டும். ஆனால் அதை செய்ய சூத்திரர்களுக்கு தகுதி இல்லை. அதனால் அவர்கள் முக்தி அடைய முடியாது. இருபிறப்பாளர்கள் (பிராமணர்கள்) மட்டுமே முக்தி அடைய முடியும் என்றார் ஆதிசங்கரன்.

2/n
Aug 24, 2020 4 tweets 1 min read
@Udhaystalin உதயநிதி அவர்களே!

வடநாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் பிள்ளையார் தமிழ்நாட்டில் வேறுவிதமாக இருக்கிறார். மரத்தடியில், கரைகளில் நாட்டார் தெய்வமாகவே இருக்கிறார். பெருங்கோயில் இன்னும் தீட்டானவராக கோயிலுக்கு வெளியே தான் பார்ப்பனர்கள் வைத்திருக்கிறார்கள்.
1/n
பிள்ளையாருக்கு தனித்த பெருங்கோயில்கள் இல்லை. (பிள்ளையார் பட்டியை தவிர).

மேலும் பிள்ளையார் மக்களிடம் தண்டனை பெறும் தெய்வமாக இருக்கிறார். பிள்ளையார் சிலையை செருப்புக்காலில் உதைத்து தள்ளி விடுவார்கள். அதன் மீது சாணி, மிளகாய் கரைசலை ஊற்றுகிறார்கள். 2/n.
Aug 3, 2020 5 tweets 2 min read
எச்சரிக்கை தோழர்களே!

நான் பிறந்த மாவட்டம் திண்டுக்கல். தேனி மற்றும் மதுரைக்கு இடைப்பட்ட தமிழ் எங்களுடையது. எனது நூல்கள் பெரும்பான்மை மொழிநடையை எனது ஊர் வழக்கையே பின்பற்றுகிறேன்.

நான் படித்த பழனி எனது திண்டுக்கல் மாவட்டம் ஆனாலும் அங்கு கொங்கு தமிழே பேசுவோர்கள். 1/n அதனால் கொங்கு தமிழும் எனக்கு தெரியும். நான் வேலை பார்க்கும் சென்னை தமிழும் எனக்கு தெரியும். இலக்கிய வாசிப்பின் வாயிலாக நடுக்காட்டு தமிழும், நாஞ்சில் தமிழும் தெரியும்.

பழக்கத்தின் ஊடாக தமிழீழ தமிழும் தெரியும். அதில் யாழ்பாண, மட்டகளப்பு தமிழிலும் தெரியும் 2/n
Jul 21, 2020 4 tweets 1 min read
சீதை பூமியை கிழித்து கொண்டு பிறந்ததால் பூமிக்கு கீழே விளையும் வெங்காயம் பூண்டு, கிழங்கு வகைகளை பார்ப்பனர்கள் உண்பதில்லை. ஆனால் ஆங்கிலேயன் கொண்ட உருளைக்கிழங்கை ஏற்றுக் கொண்டார்கள். இது போல கீரையையும் பார்ப்பனர்கள் உண்பதில்லை. எந்த கோயில் படையல்களிலும் கீரையை அனுமதிப்பதில்லை. மருத்துவம் வளர்ந்த இந்த 20 ஆண்டுகளில் தான் கீரை, வெங்காயம் பூண்டை உண்ண தொடங்கி இருக்கிறார்கள். இன்னும் அதை கடைபிடிப்பவர்களும் இருக்கிறார்கள்
Jul 15, 2020 5 tweets 1 min read
திராவிடர் கழகமும் பெரியார் தொண்டர்களும் பெரும் அடக்குமுறையை சந்தித்தது காமராஜர் ஆட்சி காலத்தில் தான்.

1957 நவம்பர் 26ல் பெரியார் தொண்டர்கள் 10000 க்கும் மேற்பட்டோர் சாதியை பாதுகாக்கும் அரசியல் சட்ட பிரிவை எரித்து 4000 பேர்கள் 3மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை 1/1 Image பெற்றார்கள். 18 பேர்கள் மாண்டார்கள். பெரியாரும் சிறை சென்றார். சாதி ஒழிப்புக்காக இப்படி ஒரு போராட்டம் நடந்து இத்தனை பேர்கள் சிறைப்பட்டதில்லை. சட்ட எரிப்பு போராட்டத்தில் பெரியார் தொண்டர்கள் காட்டிய நெஞ்சுரமும் தியாகமும் லட்சிய வேட்கையும் வியக்கத்தக்கது. 1/2
Jul 8, 2020 4 tweets 1 min read
பெரியாரை பற்றி அண்ணன் மணிசெந்திலின் @manisendhil ஆழமான சிறப்பான பார்வை.

"தமிழன் என்று சொன்னால் ஆரியன் வந்து புகுந்து விடுவான் என்கிற கவலையும் அவருக்கு இருந்தது. மேலும் அக்காலத்தின் பெரியார் சிந்தனை வெளிக்கு மாற்றாக தமிழ்த்தேசியத்தினை முன்வைத்த மறைமலை அடிகளார்,ம.பொ.சி, திரு.வி.க போன்றோர் சமய ஆதரவாளர்களாக திகழ்ந்தது பெரியாரின் கவலையை அதிகரித்தது.ஆனால் பெரியாரின் கொள்கைகள் சமூகத்தளத்தில் வலுவாக வேரூன்றிய பின்னர் எழுந்த பாவாணர், பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாரதிதாசன் போன்றோர் பெரியாரை உள்வாங்கி, அதை மேலும் செழுமைப்படுத்தி காலத்திற்கு ஏற்றாற் போல்
Jun 25, 2020 4 tweets 1 min read
புலிகளை சாதியவாதிகளாக நிறுவ துடிக்கும் மகாப்பொய்யன் அரைப்பெடல் ஷோபாசக்திக்கு மூன்று தரமான மறுப்புகள் வந்திருக்கிறது.

தனது பொய்களுக்கு யாரும் மறுப்பு கொடுப்பதில்லை என்ற ஊக்கம் தான் மேலும் மேலும் பொய் சொல்ல வைத்திருக்கிறது. பொய்யை சொல்லிவிட்டு படைப்பாளி என்றும் முற்போக்குவாதி என்றும் பெரியார், மார்க்ஸ் பின்னாடி போய் தந்திரமாக ஒழிந்து கொள்வது.

இவனை எல்லாம் ஒரு அறிவுஜீவியாக நினைக்கும் ஒரு கும்பல் தமிழ்நாட்டில் இருக்கிறது.
Jun 17, 2020 4 tweets 1 min read
வரிப் போடுவது எஞ்சாமி
வாரிச் சுருட்டுவது உஞ்சாமி

புடுங்கி தின்பது உஞ்சாமி
பகிர்ந்தளிப்பது எஞ்சாமி

கண்ட இடத்தில் பிறந்தது உஞ்சாமி
கால் கவுட்டில் பிறந்தது எஞ்சாமி

தொட்டுக் கும்புடுவது எஞ்சாமி
தொட்டா தீட்டு உஞ்சாமி

நெறஞ்சு கும்புடுவது எஞ்சாமி
நா பேசுறதே புரியாதது உஞ்சாமி நாளு, மாசம் சொல்லி கூப்பிடுறது உஞ்சாமி
நெனைக்குறப்ப வாடாங்கிறது எஞ்சாமி

கோபுரம், கோயிலுனு கேக்கும் உஞ்சாமி
மண்மேடோ மரத்தடியோ போதுமுடாங்கிறது எஞ்சாமி

குளிச்சாத்தேன் ஏத்துக்கும் உஞ்சாமி
குடிச்சாலும் ஏத்துக்கும் எஞ்சாமி