K.Annamalai Profile picture
அறம் செய்ய விரும்பு. State President - TN BJP
கற்றது கை அளவு Profile picture Piyush pagey Profile picture Natarajan Selvam Profile picture Varun Profile picture 5 subscribed
Feb 23 12 tweets 9 min read
இன்றைய மாலை #EnMannEnMakkal பயணம், சைவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சங்கரநாராயணர் அருள்பாலிக்கும் சங்கரன்கோவில் தொகுதியில், அரசியல் மாற்றம் வேண்டும் என்ற மாபெரும் எழுச்சியுடன் மக்களின் ஆரவாரத்துடன் சிறப்பாக நடந்தேறியது. சங்கரன் கோவிலில் மட்டும் நான்காயிரம் விசைத்தறி கூடங்கள் செயல்படுகின்றன. விவசாயத்தையும் விசைத்தறியையும் நம்பியே சங்கரன்கோவில் உள்ளது. (1/12)

@NainarBJP @ponbalabjpImage
Image
Image
Image
பொங்கல் தொகுப்புக்காக நெசவாளர்களிடம் கொள்முதல் செய்யும் வேட்டி சேலையில் 10 சதவீத கமிஷன் அடிப்பது என்று தொடங்கிய திமுக அரசு இந்த ஆண்டு கொடுத்த இலவச வேட்டி வழங்குவதில் செய்த மாபெரும் விஞ்ஞான ஊழலை சில நாட்களுக்கு முன்பாக வெளியிட்டு, லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் அளித்துள்ளோம். (2/12)Image
Image
Image
Image
Feb 19 10 tweets 5 min read
இன்றைய #EnMannEnMakkal பயணம், கார் உற்பத்தி தொழிற்சாலைகள், வாகன உதிரிபாகம் தயாரிக்கும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை அதிக அளவு நிறைந்திருக்கும் தொகுதியான செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில், மறைமலை அடிகளாரின் பெயர் கொண்ட மறைமலை நகரில், பொதுமக்கள் பேராதரவுடன் வெகு சிறப்பாக நடந்தேறியது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது மாணவி பிரசித்தி சிங், 8 வகையான சிறிய பழமரங்கள் கொண்ட வனத்தை உருவாக்கி, 9000 மரங்களுக்கு மேல் நட்டுள்ளார். இந்தச் சாதனையை இந்திய சாதனைகள் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த இளம் சாதனையாளருக்கு, நமது பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பால புரஸ்கார் விருது வழங்கி கௌரவித்தார். (1/10)Image
Image
Image
Image
தமிழகத்தில், பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் வண்ணத்தில், புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி, வண்ண பஞ்சு மிட்டாய்க்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு, மாரத்தான் போட்டிகளில் ஓடுவது, அமைச்சர் உதயநிதி பின்னால் ஓடுவது, முதலமைச்சர் ஸ்டாலின் உடன் நடைபயிற்சி செல்வது, உதயநிதி நடித்த படங்களுக்கு விமர்சனம் கூறுவது என இத்தனை வேலைகளுக்கு நடுவில் பஞ்சுமிட்டாயில் புற்றுநோய் உண்டாக்கும் வேதிப்பொருட்கள் இருப்பதை கண்டறிந்து அதை தடை செய்திருப்பதைப் பாராட்டத்தான் வேண்டும். ஆனால், தமிழக அரசு, டாஸ்மாக் நிறுவனம் மூலமாக விற்பது சத்து மருந்தா? அரசு விற்பனை செய்யும் சாராயம் குடித்தால், கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் போன்றவை வராது என சுகாதாரத் துறை சான்றிதழ் கொடுக்க முடியுமா? பிறகு ஏன் டாஸ்மாக்கில் சாராய விற்பனையை அரசே செய்து கொண்டிருக்கிறது? (2/10)Image
Image
Image
Image
Feb 10 9 tweets 5 min read
நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், பிரசித்தி பெற்ற திருவேற்காடு கருமாரியம்மன் வாழும் ஆவடி சட்டமன்ற தொகுதியில், பெரும் எழுச்சியோடு பொதுமக்கள் சூழ, ஒரு மாநாடு போல சிறப்பாக நடைபெற்றதில் பெரும் மகிழ்ச்சி.

நம் எல்லோரையும் காக்கும் ஆதி சக்தியாக அன்னை கருமாரி விளங்குகிறாள். ஆனால், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கோவில் அவல நிலையில் உள்ளது. எப்படி பகுதிநேர ஆசிரியர், தற்காலிக செவிலியர்கள் நியமிப்பார்களோ, அதுபோல, கோவில் நிர்வாகம் தற்காலிக அர்ச்சகர் நியமித்து, அவர் நேற்று அம்மன் கழுத்தில் இருக்கும் 8 சவரன் நகையைத் திருடி பிடிபட்டிருக்கிறார். கண்காணிப்பு கேமரா இருக்கும் காரணத்தினால் அவர் பிடிபட்டார். பழனி கோவில் தேவஸ்தான நிர்வாக கடையில், காலாவதியான பிரசாதத்தை பக்தர்களுக்கு விற்பனை செய்துள்ளார்கள். திருச்செந்தூர் கோவிலில், பக்தர்கள் காணிக்கையாக கொடுத்த 5,309 பசு மாடுகளைக் காணவில்லை. தமிழகம் முழுவதும் கோவில்களுக்குச் சொந்தமான 2 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் காணவில்லை. கோவில் உண்டியலில் பக்தர்கள் போடும் காணிக்கை, அறநிலையத்துறை அதிகாரிகளின் கேளிக்கைக்கு செலவாகிறதே தவிர, ஆன்மீக மேம்பாட்டுக்கு இல்லை. இதனால்தான், பாஜக ஆட்சிக்கு வந்ததும், அறநிலையத் துறை கலைக்கப்படும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறோம். (1/9)Image
Image
Image
Image
கடந்த 1961ஆம் ஆண்டு, பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் முயற்சியால் ஆவடிக்கு கொண்டுவரப்பட்டது தான் ஆவடி ராணுவ தொழிற்சாலை. காங்கிரஸ் ஆட்சியில், பாதுகாப்பு தொடர்பான தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. நமது பிரதமர் மோடி அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, “மேக் இன் இந்தியா" திட்டத்தின் மூலம் பெரும் பலனடைவது, இந்தத் தொழிற்சாலையும், இங்குள்ள பணியாளர்களும்தான். கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ராணுவத்தின் தேவைக்கு சென்னை ஆவடி ராணுவத் தொழிற்சாலைக்கு அர்ஜுன் ரக டேங்குகள் தயாரிக்க 7,523 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆவடி ராணுவத் தொழிற்சாலை புத்துயிர் பெற்றுள்ளது. (2/9)Image
Image
Image
Feb 9 6 tweets 5 min read
நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், மாபெரும் சமயப் புரட்சிகள் செய்து சனாதன தர்மத்தில் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை நிறுவிய, ஸ்ரீராமானுஜர் அவதரித்த திருத்தலமான ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில், தமிழகத்தில் ஊழலற்ற அரசியல் மாற்றம் உருவாக வேண்டும், என்ற நோக்கத்தோடு, பெரும் திரளாகக் கூடி ஆதரவளித்த பொதுமக்கள் அன்பினால் சிறப்புற்றது. நமது பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், சின்ன ஜீயர் அவர்களின் முயற்சியில், ஐதராபாத்தில் 216 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட ஸ்ரீராமானுஜரின் சிலையை, (Statue of Equality), கடந்த 2022 ஆம் ஆண்டு திறந்து வைத்தது, ஸ்ரீபெரும்புதூர் மக்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமையே. (1/6)Image
Image
Image
Image
சைவப் பெரியவர் சேக்கிழார் பிறந்ததும் ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு உட்பட்ட குன்றத்தூரில் தான். இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்த இவர், சிவபெருமானின் மீதுள்ள பக்தியால் பெரியபுராணத்தை எழுதினார். ஆதிகேசவ பெருமாள் கோவில், குன்றம் முருகன் கோவில், மாங்காடு காமாட்சி அம்மன் கோவில் என பல புகழ்பெற்ற கோவில்களால் நிறைய பெற்ற தொகுதி. ஸ்ரீ பெரும்புதூர் அனைத்து பக்கங்களும் தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் தொழில் நகரம். மத்திய அரசின், Production Linked Incentive programme (PLI) திட்டத்தில் அமையப்பெற்ற ஐபோன் தயாரிக்கும் நிறுவனம் அமைந்திருக்கும் தொகுதி. (2/6)Image
Image
Image
Image
Feb 9 7 tweets 8 min read
நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், பல்லவ மன்னர்களாலும், சோழ மாமன்னர்களாலும், விஜயநகரத்தாலும் ஆளப்பட்ட ஆன்மீக பூமியான திருவள்ளூர் சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் பேராதரவால் சிறப்புற்றது. இங்குள்ள வீரராகவ பெருமாள் கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். ஆழ்வார்களின் தமிழால் சிறப்பு செய்யப்பட்ட பூமி திருவள்ளூர்.

தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. V.G. ராஜேந்திரன் திருவள்ளூர் பாண்டூரில் நடத்தி வரும் மருத்துவக் கல்லூரிக்காக, கடந்த 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தவர். பல ஏழை, எளிய, சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவியரின் மருத்துவக் கல்விக் கனவை நீட் நிறைவேற்றி வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு, திருவள்ளூர் மாவட்டத்தில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 92. கொள்ளை அடிப்பதையே கொள்கையாக கொண்ட திமுகவினருக்கு கல்வியை பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லை. (1/7)Image
Image
Image
Image
தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, கடந்த 5 வருடங்களாக தொகுதி பக்கமே எட்டிப் பார்க்காமல், தற்போது திடீரென வந்து ராமர் கோவிலை ஏன் அதானி திறந்து வைத்தார் என்று குழம்பியிருக்கிறார். காங்கிரஸ் கட்சியில் யார் அதிகமாக உளறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரு போட்டி நடந்து கொண்டிருக்கிறது. தனது வெற்றிக்குக் காரணம் திமுக தான் என்று பேசியவர் இவர். தமிழகத்தில் தேர்தலில் இடம் வாங்கவே காங்கிரஸ் கட்சி இருக்கிறது என்று தமிழக அமைச்சர் ராஜ கண்ணப்பன் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை.

முதலமைச்சர் ஸ்டாலின், பகுதி நேர முதலமைச்சர் ஆகியிருக்கிறார். இதுவரை மூன்று முறை முதலீடு என்ற பெயரில் வெளிநாடு பயணம் சென்றுள்ள முதலமைச்சர், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் துபாய் சென்று வந்தபின், ரூ. 6,100 கோடி முதலீடு வரும் என்று சொன்னார் இரண்டு ஆண்டுகள் கடந்தும், இன்னும் 1 ரூபாய் கூட வரவில்லை. துபாய் நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனம், தமிழகத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யப்போகிறார்கள் என்று சொன்னார்கள். அந்த நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் இயங்கி வருகிறது என்பதைக் கண்டறிந்து, துபாயிலிருந்து வரப் போவது யாருடைய பணம் என்ற கேள்வி எழுப்பியதும், அந்த முதலீட்டை மறந்து விட்டார்கள். 14,700 வேலை வாய்ப்புகள் வரும் என முதலமைச்சர் சொன்னார். யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. (2/7)Image
Image
Image
Image
Feb 7 6 tweets 5 min read
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் நல்லாட்சியால் ஈர்க்கப்பட்டு, அவரது கரங்களை வலுப்படுத்த, இன்றைய தினம் டெல்லியில், மத்திய இணை அமைச்சர் திரு @Rajeev_GoI, மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS, @BJP4TamilNadu பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளர் திரு @MenonArvindBJP, @BJP4TamilNadu இணைப் பொறுப்பாளர் திரு @ReddySudhakar21, முன்னாள் மத்திய அமைச்சர் திரு @PonnaarrBJP, @BJP4TamilNadu சட்டமன்றக் குழுத் தலைவர் திரு @NainarBJP, @BJPMahilaMorcha தலைவி மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் திருமதி @VanathiBJP, @BJP4TamilNadu மாநிலத் துணைத் தலைவர் @KPRamalingamMP ஆகியோர் முன்னிலையில், தமிழகத்தின் மாற்றுக் கட்சிகளிலிருந்து அரசியல் அனுபவமிக்க மக்கள் பிரதிநிதிகள், பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்.

மக்கள் நலன் சார்ந்த நேர்மையான தேசியக் கண்ணோட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்ட,

கரூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு கே.வடிவேல் அவர்கள்

கோயம்புத்தூர் முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு சேலஞ்சர் துரைசாமி அவர்கள்

பொள்ளாச்சி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. எம்.வி.ரத்தினம் அவர்கள்

சிங்காநல்லூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆர்.சின்னசாமி அவர்கள் (1/6)Image
Image
Image
Image
அரவக்குறிச்சி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.எஸ்.கந்தசாமி அவர்கள்

தேனி தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.ஆர்.ஜெயராமன் அவர்கள்

வலங்கைமான் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் தமிழக அமைச்சர் திருமதி. கோமதி சீனிவாசன் அவர்கள்

வேடசந்தூர் தொகுதி முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ்.எம்.வாசன் அவர்கள் (2/6)Image
Image
Image
Image
Feb 7 12 tweets 8 min read
நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், சோழ மன்னர்களால், பல்லவ மன்னர்களால் ஆளப்பட்ட மண். தென்னிந்திய அரசியலைப் புரட்டிப் போட்ட சோழப் பேரரசுக்கும் இராஷ்டிரகூடர்களுக்கும் இடையே தக்கோலப் போர் நடந்த மண். ஆயிரம் ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட ஜலநாதீஸ்வரர் கோவில், கங்காதீஸ்வரர் கோவில், கோதண்டராம சுவாமி ஆலயங்கள் அமைந்திருக்கும் பகுதியான அரக்கோணம் சட்டமன்றத் தொகுதியில், பெரும் எழுச்சியோடு, புதிய அரசியல் வரலாறு படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தோடு கூடிய பொதுமக்கள் அன்பால் சிறப்புற்றது. (1/12)Image
Image
Image
Image
மும்பையிலிருந்து சென்னை ராயபுரத்துக்கு வந்த தென்னிந்தியாவின் முதல் ரயில், அரக்கோணம் சந்திப்பு வழியாகவே பயணப்பட்டது. தெற்காசியாவின் மிக நீளமான ரன்வே அமைந்திருக்கும் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான நிலையம் அமைந்திருக்கும் ஊர் என்பதும் இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய உணவுக் கிடங்கு அமைந்திருக்கும் ஊர் என்பதும் அரக்கோணத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. (2/12)Image
Image
Image
Image
Feb 6 11 tweets 7 min read
நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், சோழர், பல்லவர், விஜய நகரப் பேரரசு, ஆற்காடு நவாப் என தொண்டை மண்டலத்தில் தனிச் சிறப்பு வாய்ந்த மண்ணான ஆற்காடு சட்டமன்றத் தொகுதியில், தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிச்சயம் வரவேண்டும் என்ற ஆர்வத்துடனும், எதிர்பார்ப்புடனும், பொதுமக்கள் பெரும் திரளெனக் கூடி உற்சாக வரவேற்பு அளித்ததில் சிறப்புற்றது. (1/11)Image
Image
Image
Image
ஆர் என்றால் அத்தி மரங்கள். அத்தி மரங்கள் அதிகமாக இருந்த காடு என்பதால் ஆற்காடு என்ற பெயர் பெற்றது. 1100 ஆண்டுகள் பழமையான வரதராஜர் கோவில், வடராமேஸ்வரம் ராம நாதேஸ்வரர் கோவில் என ஆன்மீகம் பெருகும் மண். 110 ஆண்டுகளாக துல்லியமாகக் கணக்கிடும் ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கம் இந்தப் பகுதியின் சிறப்பு. தென் தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை பற்றியும், இஸ்ரேல் பாலஸ்தீன் போர் பற்றியும் ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் துல்லியமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது சிறப்புக்குரியது. (2/11)Image
Image
Image
Image
Jan 31 10 tweets 7 min read
நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், சனாதன தர்மத்தைக் காக்கும் புண்ணிய பூமி, பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகிய திருவண்ணாமலை மண்ணில், பெரும் எழுச்சியுடன் கூடிய பொதுமக்களின் உற்சாக ஆரவாரத்துடன் வெகு சிறப்பாக நடந்தேறியது. காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தாலே முக்தி என்ற சொல், திருவண்ணாமலையின் பெருமையைக் கூறும். சக்தி படைத்த சித்தர்கள், ரமண மகரிஷி, விசிறி சாமியார், யோகி ராம்சுரத்குமார் என ஆன்மீகப் பெரியோர்கள் நம்மை ஆசிர்வதிக்கும் பகுதி. பெருந்தலைவர் காமராஜர் அவர்களால், 1958 ஆம் ஆண்டு கட்டப்பட்ட சாத்தனூர் அணையின் மூலம், 8,000 ஹெக்டேரில் கரும்பு, 5,000 ஹெக்டேர் அளவிற்கு உளுந்து, 3,500 ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடி நடைபெறும் விவசாய பூமி. (1/10)Image
Image
Image
Image
அநியாயமும் அராஜகமும் திமுகவினர் ரத்தத்தில் ஊறியிருப்பது. கடந்த ஆண்டு, தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன் என்பவர் தன் குடும்பத்துடன், நீண்ட நேரம் உண்ணாமுலையம்மன் கருவறை முன்பு நின்று கொண்டிருந்ததால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் ஒதுங்கி நிற்குமாறு கூறிய பெண் ஆய்வாளரை, கோயில் நிர்வாகமே தங்களிடம்தான் இருக்கிறது என்று கூறி அடித்து இருக்கிறார். இது சம்மந்தமாக @BJP4Tamilnadu குரல் கொடுத்த பிறகே வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது ஜாமீன் மனு மூன்று முறை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டும், இன்று வரை கைது செய்யவிடாமல் காவல்துறையினரின் கைகளை கட்டிப்போட்டுவைத்திருக்கிறார்கள். தங்கள் சகோதரிக்கு நியாயம் கிடைக்க, திருவண்ணாமலை காவல்துறையினரால் எதுவும் செய்யமுடியவில்லை என்பது வேதனைக்குரியது. (2/10)Image
Image
Image
Image
Jan 24 6 tweets 7 min read
இன்றைய மாலை #EnMannEnMakkal பயணம், வரலாற்றுச் சிறப்புமிக்க காட்டுமன்னார் கோவில் சட்டமன்றத் தொகுதியில், பொதுமக்கள் பெரும் ஆரவாரத்துடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் கதைக்கான கரு உருவான கோவில், செம்பியன் மாதேவி கண்டராதித்த சோழரை திருமணம் செய்த கோவில் இங்கிருக்கும் அனந்தீஸ்வரர் கோவில். வழக்கொழிந்திருந்த நாலாயிர திவ்ய பிரபந்தத்தை மீண்டும் உலகத்திற்கு கொண்டு வந்த நாதமுனிகள் பிறந்த மண். முதலாம் பராந்தக சோழனின் பெயரான வீரநாராயணன் என்கிற பெயரே சென்னைக்கு நீர் கொடுக்கும் வீரநாராயண ஏரி. (1/6)

@VinojBJPImage
Image
Image
Image
இந்தப் பகுதியை ஆண்டு வந்த நவாப், தீராத வியாதியில் துன்பப்பட்டபோது, ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமி கோவில் தீர்த்தம், துளசி பிரசாதம் உட்கொண்டு பூரண குணமடைந்தார். அதனால் அவர் கிள்ளை தோப்பு என்ற இடத்தில் ஒரு மண்டபத்தை கட்டி, அங்கு பெருமாளுக்கு உற்சவம் சிறப்பாக நடைபெற ஏராளமான நிலங்களை எழுதி வைத்தார். இன்றும் ஸ்ரீ முஷ்ணம் தலத்தில் மாசி மாதத்தில் நடைபெறும் பிரம்மோற்சவத்தில், நவாப் உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மசூதியின் எதிரில் சுவாமியை நிறுத்தி, மாலை அணிவித்து சர்க்கரை, பழம் நைவேத்தியம் கொடுத்து கற்பூர தீபாராதனை செய்கின்றனர். பின்னர் சுவாமி கோயில் சார்பாக கற்பூர ஆரத்தியை மசூதிக்குள் எடுத்துச் சென்று வலம் வருகிறார்கள். இதுதான் சனாதன தர்மம். இந்த மாதிரியான மத நல்லிணக்கத்தைத் தான் சனாதன தர்மம் வலியுறுத்துகிறது. ஆனால் திராவிடம், மக்களை ஜாதி மத ரீதியாகப் பிரித்து, மக்களிடையே பிரச்சினையை உருவாக்கி அரசியல் செய்கிறது. 70 ஆண்டு காலமாக, ஊழல் அரசியலையும், குடும்ப அரசியலையும் மட்டுமே முன்னெடுத்து, தமிழகத்தின் முன்னேற்றத்தைத் தடுக்கிறது. (2/6)Image
Image
Image
Image
Jan 5 10 tweets 11 min read
இன்றைய #EnMannEnMakkal பயணம், சேலம் மேற்கு, சேலம் வடக்கு மற்றும் சேலம் தெற்கு சட்டசபை தொகுதிகளில், தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிச்சயம் வர வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன், பொதுமக்கள் பெரும் திரளாகக் கூடி அளித்த வரவேற்பில் சிறப்புற்றது. (1/10)


Image
Image
Image
Image
சேலம் மாநகரம், பல்லாயிரமாண்டு புகழ் தாங்கி நிற்கும் சுகவனேஸ்வரர் கோவில், நிலத்தை காக்கும் பெருந்தாயான கோட்டை மாரியம்மன் கோவில், ஊத்துமங்கலம் முருகன் கோவில், தாரமங்கலம், கைலாசநாதர் கோவில் என வரலாற்று சிறப்புமிக்க கோவில்கள் நிரம்பியுள்ள பகுதி. எஃகு நகரமாக அறியப்படும் சேலம் மக்களின் உழைப்பும் உறுதியும் எஃகினைப் போன்றதே என்பதை யாராலும் மறுக்க முடியாது. சேலம் கோனேரிப்பட்டியில் ரோம பேரரசின் வெள்ளி நாணயங்கள் கிடைத்ததை வைத்து பார்க்கும் போதே இந்தப் பகுதி சங்க காலத்திற்கு முன்பிருந்தே பெருந்தொழில் நகரம் என்பது உறுதியாகிறது. விவசாயம், நெசவு, கனிமவளம், இயந்திர உற்பத்தி என எல்லா துறையிலும் சேலம் உயர்ந்து விளங்குகிறது. தரமான பட்டுநூல் தயாரிப்பு, உலகப் புகழ்பெற்ற மல்கோவா மாம்பழம், இரும்பு உற்பத்தி என தொழில் நகரமாகவும், கடந்த ஆண்டு மார்ச் மாதம் நமது மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கிய சேலம் ஜவ்வரிசியாலும், புகழ்பெற்றது. சேலம் மாம்பழம், சேலம் கத்திரிக்காய் மற்றும் சேலம் கொலுசுக்கு புவிசார் குறியீடு வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக பாஜக முன்னெடுத்து செல்லும். (2/10)Image
Image
Image
Image
Jan 3 7 tweets 6 min read
ஸ்ரீராமரின் குருவான வசிஷ்ட மகரிஷியின் பெயரிடப்பட்ட வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள புண்ணியத் தலமான, சேர சோழர் ஆண்ட ஆத்தூர் தொகுதியில், #EnMannEnMakkal பயணம், மாற்றத்தை விரும்பும் பொதுமக்கள் சூழ, வெகு சிறப்பாக நடந்தேறியது. (1/7)


Image
Image
Image
Image
வசிஷ்ட முனிவருக்கு, சிவபெருமான் ஜோதி வடிவாக காட்சி தந்த காயநிர்மாலேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும் அற்புதமான பூமி. ஆத்தூர் அருகே உள்ள கோனேரிப்பட்டியில் முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த ரோமானிய நாணயங்கள் கிடைத்துள்ளன. தமிழகக் கடற்கரைப் பகுதியையும் மைசூரையும் இணைக்கும் வணிகப் பெருவழியில் ஆத்தூர் கணவாயும் ஒன்று. இந்திய தொல்லியல் அளவீட்டு நிறுவனத்தால், பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னமாக அறிவிக்கப்பட்ட கோட்டைகளில் ஆத்தூர் கோட்டையும் ஒன்று. மலேசியாவில் உள்ள பத்துமலை முருகன் சிலையை விட 6 அடி அதிகமான, உலகிலேயே உயரமான 146 அடி உயர முத்துமலையில் முருகன் கோவில் அமைந்துள்ள தொகுதி. (2/7)Image
Image
Image
Image
Jan 1 6 tweets 4 min read
On this New Year's Day, I have been thinking about our Hon PM Thiru @narendramodi avl’s interaction with the family of Ms Meera Didi in Ayodhya a few days back. Among the many interactions that he does every day, this one that is in public view shows our PM for who he is.

I felt I’d attempt to highlight five remarkable qualities of his many and what truly makes him a very special human being. (1/6) 1. Empathy:

Empathy is a non - non-negotiable quality for anyone in public service. The very act of service starts from treating anyone’s problem as our own & trying to find a way to lessen their pain/sorrow.

Many of the schemes that our Hon PM brought, including a free Bank Account, help in building a concrete House, Free Food Grains every month, Free Cooking Gas to begin with & heavily subsidised later; ₹5,00,000 Health Insurance & many others are meant to accelerate one’s economic & social progress many times faster over what they would have achieved over their normal course of lives.

‘13.5 Crore Indians escaped Multi-Dimensional Poverty in the last 5 Years.’



Modi avl made this dent in poverty only by combining multiple schemes and targeting a single individual so that they escape the cycle of poverty that was holding them back for multiple generations.

We will be shocked to know that for a person born in our country in a low-income household to approach the mean income in our society, it takes 7 generations.

The ‘Poverty Trap’ is so grinding that an unexpected major health crisis in that family can set their progress by another 1 - 2 generations. It’s this challenge that our Hon PM took on in 2014. In this context, one has to measure our country’s economic progress and our Govt’s work in lifting millions of our countrymen out of poverty. (2/6)niti.gov.in/sites/default/…Image
Dec 26, 2023 6 tweets 6 min read
நேற்றைய மாலை #EnMannEnMakkal பயணம், ஆதி கும்பேஸ்வரரும் சாரங்கபாணி பெருமாளும் அருள்பாலிக்கும் கோவில்களால் சூழப்பட்ட திருக்குடந்தை என்றழைக்கப்படும் கும்பகோணம் நகரில், நல்லரசியல் வேண்டும் என்று திரளெனக் கூடிய பொதுமக்கள் எழுச்சியோடு சிறப்பாக நடந்தது. இந்தியாவின் பசியை போக்கிய, பசுமைப் புரட்சியின் தந்தை திரு எம்.எஸ்.சுவாமிநாதன், உலகப்புகழ்பெற்ற கணித மேதை ராமானுஜம் ஆகியோர் வாழ்ந்த மண். தெற்காசியாவை சனாதன தர்மத்தின் வழி நடத்திய ராஜராஜ சோழன் அவர்களின் சமாதி அமைந்திருக்கும் உடையாழூர் உள்ள தொகுதி.

12 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் கும்பகோணம் மகாமக திருவிழா உலகப் புகழ்பெற்றது. மகாமக குளத்தில் குளித்தால் பாவங்கள் அனைத்தும் போய்விடும் என்பது ஐதீகம். (1/6)Image
Image
Image
Image
சுதந்திரப் போராட்டத்தில், ஜாலியன் வாலாபாக் படுகொலை போன்று, கும்பகோணம் காங்கேயன் குளத்தின் கரையில், 1942 ஆகஸ்ட் 16 அன்று, வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், 23 பேரை ஆங்கிலேய அரசு சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். இது குறித்த கல்வெட்டு, கும்பகோணம் போர்ட்டர் ஹால் வெளிச் சுவரில் இருக்கிறது. இத்தனை ஆண்டுகளாக, இந்த வரலாறு சொல்லப்படவில்லை. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும்போது, ஜாலியன் வாலாபாக் போல, கும்பகோணம் தியாகிகளுக்கு உரிய மரியாதை செலுத்தப்படும். (2/6)Image
Image
Image
Image
Oct 29, 2023 5 tweets 6 min read
நேற்று மாலை #EnMannEnMakkal பயணம், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே ஆணும் பெண்ணும் சமம் என்ற சனாதனக் கருத்தை நிலைநிறுத்திய அம்மையப்பன் அர்த்தநாரீஸ்வரர் வாழும் திருச்செங்கோடு மண்ணில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்களால் சிறப்புற்றது.

போர் வெல் ரிக் உற்பத்தியில் இந்தியாவின் மையமாக இருப்பது திருச்செங்கோடு. கிட்டத்தட்ட 20,000 இயந்திரங்களை வைத்துள்ள திருச்செங்கோடு ரிக் உற்பத்தியாளர்கள் நாடு முழுவதும் தங்கள் ரிக்குகளை எடுத்துச் செல்கிறார்கள். சுமார் 5 லட்சம் பேருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

நாங்கள் ஆரியர்களுக்கு தான் எதிரி ஆன்மீகத்திற்கு இல்லை என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இவர்கள் சொல்கிறபடி விந்திய மலைக்கு வடக்கே இருப்பவர்கள் ஆரியர்கள் என்றால், வட இந்தியாவில் இருக்கும் இவரது இந்தி கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை எதிர்க்கிறாரா? (1/5)

@Murugan_MoS @KPRamalingamMP @apmbjp



Image
Image
Image
Image
இந்த திருச்செங்கோடு அடுத்துள்ள புதுப்பாளையத்தில் மகாத்மா காந்தி ஆசிரமம் உள்ளது. காந்தி அவர்கள் இரண்டு முறை இங்கே தங்கி உள்ளார்கள். இந்த ஆசிரமத்தின் முக்கிய பணி மதுவிலக்கு பிரச்சாரம் மற்றும் கைத்தறி வலியுறுத்தும் பிரச்சாரம். ஆனால், காந்தி ஆசிரமம் இருக்கும் இதே திருச்செங்கோட்டில் தான் டாஸ்மாக்கில் குடிபோதையில் ஒருவர் இன்னொருவரை வெட்டிக் கொலை செய்தார். இப்படி மக்களை மதுவுக்கு அடிமையாக்கி வைத்திருப்பது தான் திராவிடம் மாடலின் சாதனை. (2/5)



Image
Image
Image
Image
Oct 27, 2023 8 tweets 7 min read
நேற்று #EnMannEnMakkal பயணம், ஈரோடு கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீது பேரன்பு கொண்ட மக்கள் பெரும் திரளாகச் சூழ வெகு சிறப்பாக நடைபெற்றது. மகாகவி பாரதி, மனிதனுக்கு மரணமில்லை என்ற அற்புதமான உரையாற்றிய மண் ஈரோடு. விவசாயம், நெசவுத் தொழில், தொழிற்சாலைகள் என அனைத்தும் ஒன்றையொன்று சார்ந்து சிறக்கும் மண் ஈரோடு. கணித மேதை ராமானுஜம், பாசனத் தந்தை எம் ஏ ஈஸ்வரன், நமது நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய மாவீரன் தீரன் சின்னமலை போன்றவர்கள் பிறந்த புனிதமான மாவட்டம் ஈரோடு.

திமுக, தமிழக காவல்துறையின் கையைக் கட்டிப் போட்டிருக்கிறது. காவல்துறையின் தரத்தை தாழ்த்தியிருக்கிறது. திமுக தலைவர்களும், அமைச்சர்களும், தொடர்ச்சியாக ஆளுநர் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதன் விளைவுதான் ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீச்சுக்கு காரணம். ஆனால், காவல்துறையினரை முடக்கி வைத்திருக்கிறது திமுக. (1/8)



Image
Image
Image
Image
கடந்த முப்பது மாதங்களாக, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு இதுவரை இல்லாத அளவுக்குச் சீர்குலைந்து இருக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்குப் பத்து லட்சம் நிவாரணம் கொடுக்கும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், டாஸ்மாக் சாராயத்தைக் குடித்தவர்களால் பல்லடம் அருகே கொலை செய்யப்பட்டவர்களுக்கு இரண்டு லட்சம் மட்டுமே நிவாரண நிதி கொடுக்கிறார். கோவை தற்கொலைப் படை தாக்குதலை, தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்து, தீவிரவாதிகளைக் கைது செய்த பிறகும், சிலிண்டர் வெடிப்பு என்று சமாளித்துக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். (2/8)



Image
Image
Image
Image
Oct 25, 2023 5 tweets 6 min read
இன்றைய #EnMannEnMakkal பயணம், அகத்தியர் மணலால் உருவாக்கி வணங்கிய, நடு ஆற்றில் குடிகொண்ட காங்கேயன்பாளையம் நட்டாற்றீஸ்வரர் ஆசிர்வதிக்கும் பகுதியான மொடக்குறிச்சியில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீது பேரன்பு கொண்ட பொதுமக்கள் திரள் நடுவே வெகு சிறப்பாக நடந்தேறியது.

ஈரோடு மாவட்டம் காவிரிக் கரையில் அமைந்துள்ள குலவிளக்கு அம்மன் கோவில், சுற்றியுள்ள 18 கிராம மக்களின் குலதெய்வமாகும். இந்தக் கோவிலை திமுகவின் சுப்புலட்சுமி ஜெகதீசன் குடும்பத்தார் ஆக்கிரமித்து அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார்கள். கோவில் கதவில் பெரியார், அண்ணா, தெரேசா உருவத்தை வரைந்து, கோவிலின் புனிதத்தைக் கெடுத்திருக்கிறார்கள். இதனால் தான், தமிழக பாஜக தொடர்ச்சியாக இந்து அறநிலையத்துறையின் பிடியில் இருந்து கோவில்களை விடுவிக்க வேண்டுமென்கிறோம். (1/5)

@drcksaraswathi @apmbjp



Image
Image
Image
Image
மத்திய அரசு விவசாயிகளிடமிருந்து அரிசியை 34 ரூபாய்க்கு கொள்முதல் செய்து அதில் 32 ரூபாய் மானியம் கொடுத்து இங்குள்ள ரேஷன் கடைகளுக்கு கொடுக்கிறது. ஆனால், தஞ்சை நெற்களஞ்சியத்தில் இருக்கக்கூடிய விவசாயிகள் ஒரு மூட்டை நெல்லை கொண்டு போனால் 60 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டே நெல் கொள்முதல் செய்கிறார்கள். விவசாயிகள் விரோத ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நெசவாளர்களுக்கு என்று தனி கூட்டுறவு வங்கி தொடங்கும் என்று சொன்னார்கள். பள்ளி சீருடை நெசவாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் என்று சொன்னார்கள். ஆனால் வாக்குறுதிகள் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. மின்சாரக் கட்டணம் 15 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்ந்து இருக்கிறது. மின் கட்டண உயர்வால் நெசவுத்தொழில் செய்ய முடியவில்லை. அது போக, மூலப்பொருட்கள் விலை உயர்வும் நெசவாளர்களை வாட்டுகிறது. தமிழக பாஜக மட்டுமே, நெசவாளர்களுக்கு உறுதுணையாக இருந்து, பஞ்சு, நூல் விலை என்று ஒவ்வொன்றுக்கும் போராடிக் கொண்டிருக்கிறது. (2/5)



Image
Image
Image
Image
Oct 17, 2023 7 tweets 6 min read
கடந்த செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி நடைபெறவிருந்த மேட்டுப்பாளையம் #EnMannEnMakkal பயணம், மிலாதுநபி ஊர்வலம் காரணமாக இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்கவும், கட்சிப் பணிகள் காரணமாகவும் சில முறை தேதி மாற்றப்பட்டாலும், மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு @PiyushGoyal அவர்கள், மத்திய இணையமைச்சர் அண்ணன் திரு @Murugan_MoS அவர்கள் மற்றும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அக்கா திருமதி @VanathiBJP, @BJP4TamilNadu மாநில பொதுச் செயலாளர் திரு @apmbjp ஆகியோர் பங்கேற்க, உற்சாகம் குறையாமல் பெரும் திரளெனக் கூடிய பொதுமக்கள் பேரன்போடு இனிதே நடந்தேறியது.

மாநிலத்தின் மற்ற பகுதிகளில் வியர்வை சிந்தி கட்சி வளர்ந்தால், மேட்டுப்பாளையத்தில் தொண்டர்கள் ரத்தம் சிந்தி கட்சியை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். 1998 ஆம் ஆண்டு கோவை குண்டு வெடிப்பில், இந்தப் பகுதியில் ஏழு பேர் உயிர் தியாகம் செய்தனர். தீவிரவாதத்துக்கு எதிரான போரில், அவர்கள் தியாகம் வீண் போகாது. பவானி ஆற்றின் கரையில் அமர்ந்து அனைவரையும் காக்கும் வனபத்திரகாளியம்மன் துணையிருப்பாள். (1/7)



Image
Image
Image
Image
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில், உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையமான உதகையின் நுழைவு வாயிலாக இருப்பது மேட்டுப்பாளையம். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருந்து பவானி ஆறு சமவெளியை அடைந்து மேட்டுப்பாளையம் வழியாகவே ஈரோடு மாவட்டத்துக்குச் செல்கிறது. பவானி ஆற்றின் கொடையால் வேளாண்மை இங்கு முக்கிய தொழிலாக நடைபெறுகிறது. விவசாய தொழிலுக்கு அடுத்த படியாக கைத்தறி நெசவுத் தொழிலை அதிகம் பேர் செய்து வருகின்றனர். கொங்கு பகுதியின் காஞ்சிபுரம் என்ற பெருமை கொண்டது சிறுமுகை. 5000 நெசவாளர்கள் உள்ள பகுதி இந்த சிறுமுகை. பட்டு புடவைகளுக்கு பெயர் போன ஊர். சிறுமுகை பட்டுக்கு தமிழகம், இந்தியா, வெளிநாடுகளில் மவுசு அதிகமாக உள்ளது

தமிழ்நாட்டில் கறிவேப்பிலை பயிரிடப்பட்டுள்ள மொத்தமுள்ள 2,540 ஹெக்டேர் பரப்பளவில், இந்தப் பகுதியில் உள்ள காரமடை வட்டாரத்தில் மட்டும் 1240 ஹெக்டேர் கறிவேப்பிலை விவசாயம் நடைபெற்று வருகிறது. காரமடை செங்காம்பு கறிவேப்பிலைக்கு தனி மகத்துவம் உண்டு.மனித உடலுக்கு தேவையான பல சத்துக்கள் மட்டுமின்றி இதன் சுவையும் மணமும் அதிகம். இதற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை, தமிழக பாஜக முன்னெடுத்து செல்லும். (2/7)



Image
Image
Image
Image
Oct 3, 2023 6 tweets 4 min read
Captivating analytics by SBI & IIM Bengaluru depicting the impact of our Hon PM Thiru @narendramodi avl’s most tuned-in radio broadcast, the #MannKiBaat.

To begin with, our Hon PM’s call for empowering girl children through the “Beti Bachao Beti Padhao” & “Sukanya Samrithi Yojana” has become extremely popular after our Hon PM’s mention in Mann Ki Baat.

TN has over 30 Lakh children benefitted from the Sukanya Samrithi Yojana. (1/6)

Image Yoga has never been this popular; the UN announced June 21 as the International Day of Yoga based on the concept presented by our Hon PM Thiru @narendramodi avl in September 2014.

The popularity of yoga surged after our Hon PM’s mention of it in Dec 2014 & June 2015. (2/6) Image
Sep 28, 2023 6 tweets 7 min read
இன்றைய #EnMannEnMakkal பயணம், ஊட்டி மாவட்டம் குன்னூர் சட்டமன்றத் தொகுதியில், மக்கள் பேரன்புடனும் ஆதரவுடனும் மகிழ்ச்சியாக நடந்தது. நீலகிரி, தேசியத்தையும், ஆன்மீகத்தையும் போற்றும் மண். மலைப்பகுதியின் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் மண்.

கடந்த 2021 டிசம்பர் 8 அன்று, குன்னூரில் நடைபெற்ற கோர விபத்தில், முப்படைகளின் தலைவராக இருந்த ஜெனரல் பிபின் ராவத் காலமானார். அவருக்கு, வழி நெடுகிலும் நின்று, அஞ்சலியும் வீர வணக்கமும் செலுத்திய தேசியவாதிகள் நிறைந்த பகுதி குன்னூர். தேசமே மீளாத் துயரில் இருந்தபோது, குன்னூர் மக்களின் உணர்வு, அனைவருக்குமே மன நம்பிக்கையையும் மன வலிமையையும் கொடுத்தது. நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், குன்னூர் மக்களின் தேசப்பற்றை, பாராளுமன்றத்தில் பெருமையுடன் நினைவுகூர்ந்தார். (1/6)



Image
Image
Image
Image
குன்னூர் மட்டுமல்ல, நீலகிரி மாவட்டம் முழுவதுமே நிறைய தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கின்றன. ஆனால் இங்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் 2G புகழ் ஆ.ராஜா, சுற்றுலாப் பயணி வருவது போல, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தொகுதிக்கு வருகிறார். மக்கள் பிரச்சினைகளைப் பற்றிப் பேசச் சொன்னால், சனாதன தர்மத்தை தரக்குறைவாகப் பேசிக் கொண்டிருக்கிறார்.

காட்டு விலங்குகள் பிரச்சினை, 10000 குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சார வசதி இல்லாமல் இருப்பது, பட்டா இல்லாமல் இருப்பது, தனியார் வன உரிமைச் சட்டம் என மக்கள் பிரச்சினைகளைப் பாராளுமன்றத்தில் பேச, வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில், பாஜக உறுப்பினரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். (2/6)



Image
Image
Image
Image
Sep 28, 2023 9 tweets 9 min read
ஊட்டி #EnMannEnMakkal பயணம், கடுமையான குளிரையும், மழையையும் பொருட்படுத்தாமல் மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள் மீது கொண்டுள்ள பேரன்பும், பாஜக மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவும், பெருந்திரளெனக் கூடி மக்கள் ஒரு புரட்சி செய்திருக்கிறார்கள்.

இந்தியா முழுவதிலும் இருந்து, ஊட்டி நோக்கி மக்கள் பயணம் வருகிறார்கள். ஆனால், ஊட்டி மக்களுடைய பிரச்சனைகளைக் காலம் காலமாக இருக்க கூடிய அரசியல் கட்சிகள் தீர்க்கத் தவறி விட்டனர். ஆளுங்கட்சி சம்பாதிப்பதற்காக மட்டுமே திட்டங்கள் போடுகிறார்கள். சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு சரியான வாகன நிறுத்த வசதிகள் செய்யவில்லை. ஊட்டி நகராட்சியில் சொத்து வரி கட்டணம் மிக மிக அதிகம். இவற்றையெல்லாம் சரி செய்ய வேண்டும். (1/9)



Image
Image
Image
Image
திராவிட முன்னேற்ற கழகம் பல பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஊட்டி படுகா சமுதாயத்தினருக்கு, பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவோம் என்று தேர்தல் வாக்குறுதி எண் 280ல் திமுக கூறியது. ஆனால், கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம், இந்தப் பகுதி திமுக அமைச்சர் ராமச்சந்திரன், படுகா சமூக மக்கள் வசதியாக இருக்கிறார்கள். அவர்களுக்கு, பழங்குடியினர் அந்தஸ்து பெறத் தகுதி இல்லை என்று கூறியிருக்கிறார். நரிக்குறவ சமூக மக்கள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வழங்கிய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், படுகா சமூக மக்களுக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவார் என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது. (2/9)



Image
Image
Image
Image