கலகக்காரன்🌚 Profile picture
Apr 6, 2021 6 tweets 5 min read
தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் பதிவு....

பேருந்து, ரயில், விமானம் பிடித்து ஊருக்கு போய் சனநாயகக கடமை ஆற்றப்போகிற நண்பர்களே, இந்த தேர்தலோடு அனைத்து பிரச்சனைகளும் முடிவுக்கு வந்துவிடுமென நம்பி அடுத்த 5 வருடத்தை கடக்காதீர்கள். எந்த ஒரு ஆட்சியும் நம் கோரிக்கையை ஏற்கவேண்டுமெனில் நாம் தான் போராட வேண்டும். தேர்தல் மட்டுமே நாம் பங்கேற்கும்-பங்களிக்கும் களமல்ல. தேர்தலுக்கு பின்பே நமக்கான பொறுப்பு அதிகரிக்கிறது. கேள்வி கேட்கப்படாத எதுவும் நமக்கானதாக மாறிவிடாது. அரசியல்வாதிகளும், ஆட்சியாளர்களும் மக்களால் கண்காணிக்கப்படுகிறார்கள் எனும்நிலை வரும்போதே
Jun 17, 2020 7 tweets 3 min read
ஒரு முழம் உயரமுள்ள குழவிக் கல்லுக்கு நமது நாட்டில் எத்தனை கோடி ரூபாய்கள் சொத்தும் எவ்வளவு வருமானமும் இருக்கின்றன?
இப்படி எத்தனை ஆயிரக் கணக்கான குழவிக்கல்லுகள் நமது நாட்டில் செல்வத்தோடு, யானை, குதிரை, ஒட்டகம், பல்லக்கு, இரதம், தேர் முதலிய வாகனங்களோடு பல பெண்டாட்டிகளோடு, பல கல்யாணங்களோடு வாழ்கின்றன என்பவைகளை நேரில் பார்க்கும் ஒரு யோக்கியன் நமது நாடு தரித்திரநாடு என்று சொல்ல வருவானா?
இதை எந்த பொருளாதார நிபுணராவது கவனித்து நமது நாடு தரித்திரம் உள்ள நாடு என்று சொல்கின்றானா?