செ. இன்பா 🩵 Profile picture
தமிழன் 😍🔥
Apr 20, 2021 4 tweets 1 min read
பகுத்தறிவு பேசி வந்தவர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல வடமாநிலங்களிலும் உண்டு. ஆனாலும் அங்கு அது எடுபடவில்லை. இங்கு எடுபட்டதற்கு காரணம் இங்குள்ள தமிழ் மக்களின் மரபு வழி கடத்தப்பட்ட சிந்திக்கும் திறன்.
+2 வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்குதான் பாராட்டுக்களே ஒழிய ஆசிரியர்களுக்கல்ல. இதே பெரியார் தமிழ்நாடு தாண்டி இதை பேசியிருந்தால் கல்லெறிதான் விழுந்திருக்குமே தவிர, கைத்தட்டு கேட்டிருக்காது. பெரியாரை விடவும் மேம்பட்ட அம்பெத்கர், பூலே போன்றோரெல்லாம் முட்டி மோதி தோல்வியைத் தழுவிய வரலாறு உள்ளங்கை நெல்லிக்கனி. பெரியாருக்கு முன்பும் இங்கே அய்யா வைகுண்டர் வள்ளலார்,
Mar 18, 2021 8 tweets 2 min read
எனக்கு நெருங்கிய தோழியின் வாழ்கை இது!
முழுமையாக வாசிக்க வேண்டுகிறேன்.

அவளுக்கு திருமணமான போது அவள் கணவரின் வருவாய் தோராயமாக மாதம் ஒரு லட்ச ரூபாய்.
வீடு, கார், சொந்த தொழில் என குறைவில்லா வாழ்வில் மகிழ்ந்திருந்தனர்.
திடீரென ஒரு நாள் அவள் கணவருக்கு சிறு விபத்து. அதன்பால்... அன்றாடம் சில மாத்திரைகளை உட்கொள்ள வேண்டிய நிர்பந்தம். சில மாதங்கள் இது தொடர்ந்தது. சில மாதத்தில் கண் பார்வை சிறிது மங்கலானதால் மீண்டும் மருத்துவமனை, மீண்டும் மாத்திரைகள். உடல் நலிவுறுவதை அறிந்து மீண்டும் மருத்துவமனை பரிசோதனை. அங்கேதான் முதல் இடி...