jarunkumar Profile picture
அடக்கமாகும் வரை அடக்கமாக இரு
Apr 18, 2021 30 tweets 4 min read
வண்டிவண்டியை மறிக்கும் கர்ணன்!#karnanreview #Karnan #thehindutamil
நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டிகள் சில குறிப்பிட்ட இடங்களில் நின்று சாமி கும்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அவை, சாலையோர தெய்வங்கள். இவற்றுள் பிரபலமான தெய்வங்களும் உண்டு – ஆரல்வாய்மொழி முப்பந்தல் இசக்கியம்மன், ஆண்டிபட்டி கணவாய் தர்ம சாஸ்தா, இப்படிப் பல. இப்படித் தெருவோரம் நிற்கும் தெய்வங்கள் அனைத்தும் மரணத்தோடு தொடர்புடையவை. மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ திரைப்படம், அப்படியொரு சாலை மரணத்தோடே ஆரம்பிக்கிறது.வாகனப் போக்குவரத்துக்கு நடுவே, ஒரு சிறுமி வலிப்பு கண்டு இறந்துபோகிறாள்.
Apr 15, 2021 15 tweets 3 min read
தடாகம் பள்ளத்தாக்கு... தனி சாம்ராஜ்யம்!
கோவை மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையின் மடியை அறுத்துக் கூறு போட்டுக் கொண்டிருப்பவர்களின் தாரக மந்திரம் இதுதான். தடாகம் பள்ளத்தாக்கு தமிழ்நாட்டிற்குள், தாய்நாட்டிற்குள் தான் இருக்கிறதா அல்லது தனியான சட்டம் கொண்ட தனி நாடாகி விட்டதா என்று சந்தேகப்படும் அளவுக்கு, அங்கே அத்தனை சட்டவிரோதமும், விதிமீறல்களும் அப்பட்டமாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறார்கள் அல்லது கைநீட்டி காசு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.