மகிழினி தஞ்சை 🖤♥️ Profile picture
The Spirit of Magilini Writes ✍️🇮🇱✡️
Feb 5 27 tweets 3 min read
விவாதம் :-

நியூஸ் 7’’ தொலைக்­காட்­சி­யில் ‘குறி­வைக்­கப்­ப­டு­கி­றார்­களா ‘இந்­தியா கூட்­டணி தலை­வர்­கள்.?’ என்ற தலைப்­பில் நடை­பெற்ற கேள்வி நேரம் பகு­தி­யில் நடை­பெற்ற விவா­தத்­தில் பங்­கேற்­றுப் பேசிய மூத்­தப் பத்­தி­ரி­கை­யா­ளர் திரு­மதி லட்­சுமி சுப்­பி­ர­ம­ணி­யன் ‘‘ஊழல் செய்­த­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுப்­போம் என்று சொல்­லி­விட்டு ஊழல்­வா­தி­களை பா.ஜ.க.வில் சேர்ப்­பது ஏன்.?’’ என்று ஆணித்­த­ர­மா­கக் கேள்வி எழுப்­பி­னார்.

சுகிதா சாரங்­க­ராஜ்:-
லட்­சுமி, ஒரு மணி நேரம் நான்கு பேர் இங்கே பேசி­ய­தை­யும் கேட்­டீர்­கள், பத்­தி­ரி­கை­யா­ள­ராக
Oct 12, 2023 25 tweets 3 min read
பகுதி-2 மாதவிடாய்

அந்த நேரங்களில் ஏற்படும் உடல் உபாதைகளுக்காக விடுப்பு எடுக்கும் பொழுது, அமைப்புசாரா நிறுவனங்கள் மற்றும் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்யும் பெண்களின் பொருளாதாரம் மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது. தீட்டு என்று புனிதங்களிலிருந்து ஒதுக்கி வைக்கும் பெண்ணை பொருளாதார நெருக்கடிகளுக்காக உழைப்பதிலிருந்து யாரும் விலக்குக் கொடுப்பதில்லை.

பின் தங்கிய மாநிலங்களில் ஒன்றாக அறியப்படும் பீகாரில் இந்தியாவிலேயே முதல்முறையாக 1992இல் அமைப்பு சார்ந்த மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாயின் பொழுது சம்பளத்துடன்
Jun 7, 2023 17 tweets 2 min read
காலை நக்குவதற்கு உரிமையாம்

கனம் கோர்ட்டார் அவர்களே! ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியார் தூங்கும் போது அவர் காலை நக்கலாமென்று போனேன். அதே மாதிரிச் செய்தேன்! அவர் திடீரென்று விழித்துக் கொண்டு, “சீ! நாயே” - என்று அதட்டி, காலால் உதைத்தார்! ஆதலால் பக்தி வரும் போதெல்லாம் அவர் காலை நக்குவதற்கு எனக்குப் பிரஜா உரிமை வழங்க வேண்டும்”- என்று உயர் திருவாளர் உதவாக்கரைப் பிள்ளை வழக்குத் தொடர்ந்தாராம்!

நீதிபதி கே. எஸ். பி. அய்யங்கார் என்பவர் கீழ்க்கண்டவாறு தீர்ப்பளித்தாராம்:-
Jun 6, 2023 21 tweets 3 min read
பகுதி -2

அண்ணாமலை தான் ஐபிஎஸ் ஆவதற்கு காரணமாக குறிப்பிடும் அந்த இரண்டு நிகழ்வுகளில் ஒன்று, 2008 ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்; மற்றொன்று ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார். 1/1 Image அண்ணாமலை குறிப்பிடும் முதல் நிகழ்வு 26/11 அன்று மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலாகும். இந்த நிகழ்வின் போதுதான் மராட்டிய மாநில தீவிரவாத தடுப்புப் படையின் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரே மர்மமாக படுகொலை செய்யப்பட்டார்.1/2
May 24, 2023 14 tweets 2 min read
கட்டுரை 👇

எம்.ஜி.ஆரின் சமகாலத் தலைமுறையை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் இப்போதுள்ள தலைமுறையில் சிலர் கூட எம்.ஜி.ஆரை பாரிவள்ளல் அளவுக்கு தர்மச் சிந்தனை படைத்த நபர் என்றும், ஏழைகளின் வறுமைத் துயர் துடைப்பதற்கென்றே தன் வாழ்நாளை அர்பணித்துக் கொண்டவர் என்றும் இன்றும் கருதிக்கொண்டு
1/1
இருப்பதை நம்மால் மறுக்க முடியாது.
இப்படி எம்.ஜி.ஆரைப் பற்றி மக்கள் மத்தியில் ஆணித்தரமாக உருவாக்கி பராமரிக்கப்படும் பிம்பம் உண்மையில் அவருக்குப் பொருத்தமானதுதானா? அதில் ஏதாவது குறைந்தபட்ச நியாயமாவது உள்ளதா?1/2
May 2, 2023 14 tweets 6 min read
#திராவிடத்தால்_வாழ்ந்தோம்_வாழ்வோம்
இலவச அரிசி கிடைத்த பிறகே பசியில்லாத நிலை பிறந்தது.

இலவச பேருந்து அட்டை கிடைத்ததால் தான் நகர்புறங்களுக்கு சென்று படித்தோம்.

இலவச புத்தகம் கொடுத்ததால் தான் படிக்கவே முடிந்தது.
@karikaalan555 @Varshha4ever @TRBRajaa இலவச மின்சாரம் கிடைத்ததால் தான் வீட்டில் ஒத்த லைட்டாவது ஒளிர்ந்தது
இலவச டிவி கொடுத்த பிறகு தான் அடுத்த வீட்டில் சென்று நிலைபடிக்கு வெளியில் அமர்ந்து டிவி பார்த்து அவமானப்பட்டது தடுக்கப்பட்டது. கலர் டிவியே அப்போது தான் புழக்கத்திற்கே வந்தது.
@EllorumNamudan @V_Senthilbalaji
Feb 21, 2023 12 tweets 2 min read
Thread
பிராமணர் களாகிய நாங்களே ஆங்கிலேயர்கள் பள்ளிக்குப் போகாத போது சூத்திரனாகிய நீ உன் பையனைப் படிக்க அனுப்புவது தப்பு என்று தோன்றவே இல் லையா?” என்று உரத்த குரலில் கேட்டார்.
(1/1) திலகர் பெருமானின் வழிகாட்டுதலில் நிச்சயமாக நாம் சுயராஜ்யம் பெற்றுவிடுவோம்” என்று உற்சாக மாகத் தன் நண்பர்களிடம் கூறிக்கொண்டு இருந்த இளைஞனாகிய வாசுதேவஹரி, திலகரிடம் பணி யாற்றும் சேடக் வருத்தம் தோய்ந்த முகத்துடன் சென்று கொண்டிருப்பதைக் கண்டு, அவரை அழைத்து விசாரித்தார்.(1/2)
Feb 20, 2023 5 tweets 3 min read
#பெண் சில கேள்விகள்...

முதன் முதலாக
பெண்ணை வருணிக்கத்
தேர்ந்தெடுத்த வார்த்தை எது? ஆதாமின் முத்தம்
ஏவாளின்
எந்த பாகத்திற்கு
முதலில் கிடைத்திருக்கும்?
Feb 18, 2023 11 tweets 3 min read
எவ்வளவு அயோக்கியனானாலும் இந்த விரதத்தை கொண்டாடினால் மோட்சம் கிடைக்கும் என்று மக்கள் கருதி இந்த விரதம் அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பதேயாகும். (1/2) Image ஒரு வேடன். அவன் தன் உணவுக்குத் தினமும் பல பிராணிகளை வேட்டையாடி கொன்று தின்பது வழக்கம், அந்தப்படி ஒரு நாள் காட்டில் வேட்டையாடி இரை தேட சென்றதில் அவனுக்குக் கொல்ல ஒரு பிராணியும் கிடைக்கவில்லை. அவன் மனக் கலக்கமடைந்து சோர்ந்து திரிந்தான். அந்நேரத்தில் அந்தக் காட்டில் ஒரு புலி,(1/2) Image
Feb 16, 2023 6 tweets 2 min read
என்ன உள்ளது இந்த புத்தகத்தில் ?

ஏன் இந்தப் புத்தகம் என்று கேட்டால், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்த செய்திகள் இல்லாத நாளே இப்போது இல்லை. 90 ஆண்டுகளுக்கு முன்பே பாலின சமத்துவத்தைப் பேசிய புத்தகம் இது. உலகிலேயே முதல்முறையாக பெண் விடுதலை பற்றிப் பேசியது #பெரியார் தான்.(1/2) இந்தப் புத்தகத்திற்கு பின்பு 20 ஆண்டுகள் கழித்துதான் 'The Second Sex' என்ற புத்தகம் வருகிறது. இந்தப் புத்தகத்தை பதின்பருவத்தில் உள்ள மாணவர் ஒருவர் தன் தாய்க்குப் பரிசாக அளித்துள்ளார். கணவனை இழந்த அவரது தாயார், "இந்தப் புத்தகத்தை காலம் கடந்து படித்திருக்கிறேன்.(1/2)
Feb 15, 2023 9 tweets 2 min read
பெண் ஏன் அடிமையானாள்?' நூலுக்கு அரசுப் பள்ளி மாணவர்களின் விமர்சனம்!

திருவண்ணாமலை, ஜவ்வாதுமலை உண்டு உறைவிடப் பள்ளியில் பெண் ஏன் அடிமையானாள் நூல் 200 பிரதிகள், சிலரின் நன்கொடையில் வாங்கப்பட்டிருக்கின்றன. இதுகுறித்து, அப்பள்ளியின் ஆசிரியை மகாலட்சுமியின் கருத்தைக் கேட்டபோது, (1/1) என்னை விட, இந்தப் புத்தகத்தைப் படித்த மாணவர்கள் சிலர் பேசுவதைக் கேளுங்க" என்றார். ஆர்வத்துடன் பேசிய மாணவர்களிலிருந்து ஒரு சிலரின் கருத்துகள்:
(1/2)
Feb 14, 2023 4 tweets 1 min read
கள்ளுக்கடை மறியல்:

1921 ஆம் ஆண்டு கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அவர், தன்னுடைய தோட்டத்திலிருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தார். இப்போராட்டத்தில், கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனையும் பெற்றார். 1921-1922-ல் (1/1) ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியலில் ஈடுபட்ட அவர், மீண்டும் கைது செய்யப்பட்டார்.
1922-ல் சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக தேர்தெடுக்கப்பட்டார். துவக்கத்தில் இருந்தே வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை ஆதரித்து வந்த தந்தை பெரியார் அவர்கள்
Feb 10, 2023 5 tweets 2 min read
தமிழுக்காக சிறை சென்றார் அண்ணா

அறிஞர் அண்ணாவை அரசியல் களத்தில் முழுக்க முழுக்க இழுத்துவிட்ட பெருமை இராஜாஜி அவர்களையே சாரும். சென்னை மாகாண முதலமைச்சராக பதவியேற்றிருந்த இராஜாஜி, 1937-ம் ஆண்டு தமிழ்நாட்டில் கட்டாய இந்தித் திணிப்பை நடைமுறைப்படுத்தியதுதான் இதற்குக் காரணம்.(1/1) இந்தித் திணிப்பை எதிர்த்து, பெரியாரின் சுயமரியாதை இயக்கம் சார்பில் காஞ்சி மாநகரில் மாநாடு கூட்டப்பட்டது. பெரியார் பெரும்படையின் தளபதியாய் விளங்கிய அண்ணா தலைமையில், எண்ணற்ற இளைஞர்கள் பொழிப்போரில் இறங்கினர்.(1/2)
Feb 10, 2023 8 tweets 2 min read
Thread!

இவ்வளவு ஆணவத்துடன் நடந்துகொள்ளும் பார்ப்பனர்களின் உயர்சாதி எண்ணத்தை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
~பெரியார் (1/1) சேரன்மாதேவியில், வ.வே.சு ஐயர் என்கிற தேச பக்தர், காந்திய நெறிமுறைப்படி குருகுலம் ஒன்றை நடத்தி வந்தார். இதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ரூ.10,000 நிதி அளித்திருந்தது. பொதுமக்கள் சார்பிலும் நிதியுதவி அளிக்கப்பட்டது. பல்வேறு காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள்,(1/2)
Feb 9, 2023 14 tweets 2 min read
Thread!

ஆண்டாளின் பக்தியை சிலாகித்து, ஜெ.பார்த்தசாரதி என்பவர் ‘திரிவேணி’ ஜூன் இதழில், ‘ஆண்டாளின் காதல் கதை’ (The Romance of(The Romance ofAndal) என்ற தலைப்பில் எழுதிய ஒரு கட்டுரைக்கு மறுப்பாக, இராஜ கோபாலாச்சாரியார் அதே பத்திரிகைக்கு இந்த மறுப்பை எழுதியிருக் கிறார்.(1/1) Image இராஜகோபாலாச்சாரியார் அனுமதியோடு இது வெளியிடப்படு கிறது என்கின்ற முன்னுரையுடன் ‘திருவேணி’ இதழ் அந்தக் கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. இராஜ கோபாலாச்சாரியின் ஆங்கிலக் கட்டுரையையும் அதன் தமிழாக்கத்தையும் ‘நிமிர்வோம்’ பதிவு செய்கிறது.
(1/2)
Feb 4, 2023 16 tweets 3 min read
ஶ்ரீ இராஜகோபாலாச்சாரியார் என்கிற ஓர் அய்யங்கார் பார்ப்பனர், தமிழ்நாடு முழுவதும் பெரிய சீர்திருத்தக்காரர் என்று பெயர் வாங்கியவர். தமிழ் மக்களையெல்லாம் அடியோடு ஏய்த்தவர். தனக்கு சாதி வித்தியாசம் இல்லை என்பதாகச் சொல்லிக் கொண்டும்,
1/1 தன்னிடம் பார்ப்பனத்தன்மை இல்லை என்று சொல்லிக் கொண்டும், பார்ப்பனீயத்தை விட்டு வெகுகாலமாகிற்று என்று சொல்லிக் கொண்டும், சில பார்ப்பனரல்லாத வாலிபர்களை ஏமாற்றிக் கொண்டும், பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை ஒழித்து, பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதில்
1/2
Feb 3, 2023 12 tweets 3 min read
சென்ற வியாழக்கிழமை முதல் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பற்றி எழுதி வருகிறேன்.

உண்மையை சொல்வதென்றால் எனக்கு இது ஒரு வெப் சீரிஸ் பார்ப்பது போல படு சுவாரசியமாக இருக்கிறது.

ஒவ்வொரு நாளும் இந்த நிகழ்வின் வழியாக படிக்க படிக்க நிறைய கற்றுக் கொள்கிறேன்.
1/1 பங்குச்சந்தையை பற்றி தியரியாக படித்த பல விஷயங்கள் எனக்கு பிராக்டிக்கலாக நடந்து புரிய வைத்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு வாய்ப்பு நமக்கு அவ்வளவு எளிதில் கிடைக்காது.

இதற்கு முன்பு 1990களில் ஹர்ஷத் மேத்தா ஊழல் நடந்த போது நான் சிறுவன்.1/2
Feb 2, 2023 20 tweets 3 min read
சீமானுக்கு திமுகவின் வரலாறு தெரியுமா? - கொதிக்கும் திமுக தொண்டர்

சென்னை மெரினா கடற்கரையில் வங்கக்கடலில் கலைஞரின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. கடற்கரை ஓரம் அமைக்கப்படுவதால் இந்திய ஒன்றிய அரசின் கடற்கரை ஓர பாதுகாப்பு அமைப்பு, Image தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் ஜனவரி 31 ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இதில் பலதரப்பினரும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.