வில்லாதி வில்லன் 2.0 Profile picture
Oct 17, 2020 5 tweets 2 min read
நேற்று நீட் தேர்வில் வென்ற அரசு பள்ளி மாணவர் யாரென்று தெரியுமா?

அரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு தன் அரசு பள்ளி ஆசிரியர் வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா அவர்களால் கடந்த வருடம் தத்தெடுக்க பட்டு படிக்க வைக்க பட்ட மாணவர் தான் ஜீவித் குமார். அமெரிக்காவில் உள்ள தோழர் காட்வின் 75000 ரூபாய் மற்றும் பலரிடம் சபரிமாலா அவர்கள் உதவி திரட்டி கடந்த ஒரு வருடமாக நாமக்கல்லில் உள்ள பயிற்சி மையத்தில் இந்த மாணவனை படிக்க வைத்துள்ளனர்.

தற்போது 664 மதிப்பெண் பெற்ற தேசிய அளவில் அரசு பள்ளி மாணவர்களில் முதல் இடம் பெற்றுள்ளார்
Sep 3, 2020 6 tweets 2 min read
சமீபத்துல நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி விமானநிலையத்தில் அவங்களுக்கு நடந்த அவமதிப்பு பற்றிச் சொல்லியிருந்தாங்க. எனக்கும் அதேபோல ஒரு சம்பவம் நடந்திருக்கு. 2011-ஆகஸ்ட்ல ‘ஆடுகளம்’ படத்தை கனடா, மான்ட்ரியால் பிலிம் பெஸ்டிவலில் ஸ்கிரீன் பண்ணிட்டு இந்தியாவுக்குத் திரும்ப வர்றோம். Image டெல்லி ஏர்போர்ட் இமிகிரேஷன்ல இருந்தவர் என்கிட்ட இந்தில பேசினார். ‘ஸாரி... எனக்கு இந்தி தெரியாது’ன்னு ஆங்கிலத்தில் சொன்னேன். ‘கியா... கியா... யு டோன்ட் நோ மதர் டங் ஆஃப் திஸ் கன்ட்ரி?’ன்னு கேட்டார். நான் ‘என் அம்மா பேசுற மொழி தமிழ். அதுதான் என்னோட தாய்மொழி.
Jul 23, 2020 5 tweets 1 min read
பத்து வருசம் முன்ன விஜய் டிவில அகரம் சார்பில் விதைனு ஒரு நிகழ்ச்சி நடத்துனாங்க தமிழகம் முழுவதும் இருந்து அந்த வருடம் 12 ஆம் வகுப்பு முடிச்ச மாணவர்களை கூப்பிட்டு வந்து இருந்தாங்க அதுல ஒரு மாணவர் தான் நந்தகுமார் பெரம்பலூர் பக்கத்துல ஒரு குக்கிராமம் அப்பா அம்மா ரெண்டு பேரும் குவாரில கூலிக்கு கல் உடைகிறவங்க வீட்டுல மின்சாரம் கிடையாது அரசு பள்ளி சத்துனவு தெருவிளக்குல படிப்புனு படிச்சு 12th 1160 மார்க் Medical Cutoff 199 அதுல நீங்க என்ன ஆகனும்னு ஆசை படுறீங்கனு கேப்பாரு