Raghul Baskar Profile picture
Trade unionist,Marxist. keen on Labour laws
Oct 26, 2023 7 tweets 1 min read
Factories act இன் படி ஒரு நாளைக்கான வேலை நேரம் 9 மணி நேரம்,வாரத்திற்கு 48 மணி நேரம்.

ஒரு நாளைக்கு 9 மணி நேரத்தையோ, வாரத்திற்கு 48 மணி நேரத்தையோ வேலை நேரம் தாண்டினால் overtime வழங்க வேண்டும்.

Overtime என்பது 'twice of wages'.

இந்த factories act 1881 இல் ஆண்டில் முதன்முதலில் Image அறிமுகப்படுத்தப்பட்டு 1948 இல் பல சீர்த்திருத்தங்களுடன் நடைமுறைப்படுத்தப்பட்டது.

அதாவது நவீன உபகரணங்கள், கணினி மென்பொருள் இல்லாத பெரிய அளவில் உடலுழைப்பை நம்பி தொழிற்சாலைகள் இருந்த காலகட்டத்தில் இயற்றப்பட்ட சட்டம்.அப்போதே வாரத்திற்கு அதிகபட்ச வேலை நேரம் 48 மணி நேரம்தான்.
Jan 16, 2023 10 tweets 2 min read
ரிஸ்வான் என்கிற 23 வயது இளைஞர் உணவு டெலிவரி செய்ய சென்ற போது உணவை ஆர்டர் செய்தவரின் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று அவரை தாக்க முயற்சிக்கிறது,அதில் அவர் எதிர்பாராத விதமாக மூன்றாம் தளத்திலிருந்து கீழே விழுந்து பலத்த காயம் ஏற்படுகிறது.பலத்த காயத்துடன் மருத்துவமனையில்… …அனுமதிக்கப்பட்ட ரிஸ்வான் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துவிட்டார்.
Dec 28, 2022 10 tweets 2 min read
TTF Vasan போலவே எங்கள் ஊரில் ஒரு நண்பர் DJF VLOGS என்கிற ஒரு You tube channel வைத்திருக்கிறார்.வெறும் 39‌ மணிநேரத்தில் கோவையிலிருந்து லடாக் சென்ற TTF வை போல, திருத்துறைப்பூண்டியிலிருந்து-லடாக்கை மூன்று நாளில் அடைவதுதான் திட்டம்.வீட்டில் தஞ்சாவூர் கிளம்புகிறேன் என்று சொல்லிவிட்டு லடாக் கிளம்புகிறார்.

கையில் பண இருப்பு வெறும் 3000 ரூபாய்தான்,Sponsorகளை நம்பி லடாக் வரை பயணம் செய்ய வேண்டும்,நான் செய்வது சரியா தவறா,கழுத்தை நெறிக்கும் கடன்,லடாக் சென்று வந்தால் எதாவது மாறுமா என்று பார்க்கலாம் என்றுதான் அவருடைய வீடியோ தொடங்குகிறது.
Oct 21, 2022 8 tweets 1 min read
Via இரா முருகவேள்

காந்தாரா திரைப்படம் படுமோசமான மக்கள் விரோத சினிமா.

வனத்தில் வாழும் மக்கள் தங்கள் நிலங்களை ரிசர்வ் காடாக மாற்ற வனத்துறையின் கையில் ஒப்படைக்க வேண்டும் என்கிறது.

காட்டுப் பன்றி வராக அவதாரம். அதை வேட்டையாடுவது தெய்வ குற்றம் என்கிறது. நாட்டுப்புற தெய்வம் வனவாழ் மக்களை பிடித்து வனத்துறை அதிகாரி கையில் ஒப்படைக்கிறது. அப்போது ஏதோ சமஸ்கிருத பாட்டு முழங்குகிறது.

ரிசர்வ் காட்டில் மக்களின் நில உரிமைகள் அங்கீகரிக்கப் படும் என்று அப்பட்டமான பொய் சொல்கிறது.
Aug 12, 2022 5 tweets 1 min read
தங்களது கையாலாகாத தனத்தை மறைப்பதற்காக‌ பாஜக எடுத்திருக்கிற தற்போதைய weapon இந்த freebies.

கடந்த 5 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் write off செய்யப்பட்ட கார்ப்பரேட் கடன் தொகை கிட்டத்தட்ட 9 இலட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய்.

Write off என்றதுமே சங்கிகள் write off is different...Waiver is different என்று சங்கை கடிக்க வந்துவிடுவார்கள்.அதற்கும் சிறிய விளக்கம்.

தள்ளுபடி என்பது அரசாங்கம் ஒரு கடனை 100 சதம் தள்ளுபடி செய்வது எடுத்துக்காட்டு கல்வி கடன்கள்.மொத்தமாக தள்ளுபடி செய்தாலும் அதனால் ஏற்படும் இழப்பு மிகச்சிறியது.
Apr 23, 2022 8 tweets 1 min read
வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது சத்தியமங்கலம் மற்றும் அதனை சுற்றியிருக்கிற காடுகளில் வாழும் பழங்குடியின மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாதவை. வீரப்பனுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேவாரம் தலைமையிலான அதிரடிப்படை சத்தியமங்கல காடுகளில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் தங்களுடைய ஒடுக்குமுறையை செலுத்தினர்.காடுகளை மட்டுமே நம்பி வாழ்ந்த பழங்குடியின மக்களின் காடுகளுடனான உறவு இந்த அதிரடிப்படையால் முறிக்கப்பட்டது.
Apr 23, 2022 5 tweets 1 min read
வெள்ளையர்கள் 'நீக்ரோ' என்ற சொல்லை முழுமையாக கூட சொல்வதில்லை 'நிக்கர்'என்று சொல்லி மலினப்படுத்துவார்கள்.நிறவெறி கொண்ட வெள்ளையர்கள் மட்டுந்தான் இப்படி வெறுப்பில் இச்சொல்லை ஆள்கிறார்கள் என்று சொல்வதற்கில்லை. கொஞ்சம் காலத்துக்கு முன்னர் நான் பணியாற்றிய கல்லூரியில் வேதியியல் பேராசிரியராக இருந்த ஒருவர் அமெரிக்கா செல்ல இருந்தார்.மெத்த படித்த இந்தியர்களின் குறிக்கோள் அமெரிக்காவில் பணிபுரிவதும் குடியேறுவதும்தானே.அந்தச் சமயத்தில் அவரைச் சந்திக்க நேர்ந்தபொழுது,'உங்க அமெரிக்க பயணம் எப்போ?
Apr 22, 2022 4 tweets 1 min read
மத நிறுவனங்கள் நடத்தும் நாடகங்களில் சாத்தானுக்கு கருப்பு நிற உடைகளுக்கு பதிலாக 'சிகப்பு' நிற உடைகள் அணிவிக்கப்பட்டது...

அந்த சிகப்பு நிறம் வளர்ச்சி எதிரானது....
அந்த சிகப்பு நிறம் அறிவியலுக்கு எதிரானது....
அந்த சிகப்பு நிறம் பெண் விடுதலைக்கு எதிரானது....
அந்த சிகப்பு நிறம்.. ஜனநாயகத்துக்கு எதிரானது...என்கிற பிரச்சாரங்கள் ரஷ்ய புரட்சியை எதிர்த்து உலகமெங்கும் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டன.

பொய் பிரச்சாரங்களுக்கு பதிலடியாக,உலகின் முதல் செயற்கைக்கோளை(sputnik) கம்யூனிஸ்ட் ரஷ்யா விண்ணில் செலுத்தியது.
Apr 20, 2022 5 tweets 1 min read
ராஜாவை சாதியை வைத்து வசைபாடுபவர்கள் இயல்பிலேயே சங்கிகள்,இருக்கிற கட்சி,அமைப்பு எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் மனரீதியில் வலதுசாரிகளோடு இணக்கத்திலிருப்பவர்கள்.அவர்களுடைய ராஜா வை பற்றிய விமர்சனம் ஆழ் மனதில் ஊறியிருக்கும் தலித் வெறுப்பிலிருந்து வருவது.அதற்கு எதிர்வினையாற்றுவது அறம் மறுபுறம் ராஜாவின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்கள் சிறுபான்மையினர் நலன்,பாசிச எதிர்ப்பு என்று புள்ளிகளிலிருந்து வைக்கப்படுவது.Constructive விமர்சனங்களையும் 'தலித் என்பதால் தான் தாக்கப்படுகிறார் என்று ஒளிந்துக்கொள்வது escapism'.இளையராஜாவின் அரசியல் நிலைப்பாட்டை......
Dec 25, 2021 6 tweets 1 min read
கீழத்தஞ்சையை 'கம்யூனிச' பேய் பிடித்திருக்கிறது என்று அன்றைய முதல்வர் இராஜாஜி எழுதினார்.ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் காவிரி டெல்டாவில் பண்ணையார்களுக்கு எதிராக நடந்த கிளர்ச்சியை தடுக்க முடியாமல் திக்குமுக்காடியது வரலாறு. வேறு வழியே இல்லாமல் 'The Tanjore pannaiyal protection act,1952' என்கிற தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கான சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்கியது அன்றைய தமிழக அரசு.
Dec 16, 2021 10 tweets 1 min read
சில நாட்களுக்கு முன் கருவாடு விற்கும் ஒரு‌‌ பாட்டியை பேருந்திலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் நியாபகம் இருக்கிறதல்லவா... இதேப்போல கருவாடு விற்ற பாட்டி ஒருவரின் கதை எனக்கு தெரியும்.வேதாரண்யம் இந்தியன் வங்கிக்கு மிக அருகில்தான் அந்த பாட்டி கருவாடு கூடை ஒன்றை வைத்து வியாபாரம் பார்த்துக்கொண்டிருப்பார்.ஒவ்வொரு முறை அந்த வங்கியின் ஊழயர்கள் வெளியில் செல்லும்போதும் எழுந்து ஒரு வணக்கம் வைப்பார்…
Dec 16, 2021 7 tweets 1 min read
Zomato நிறுவன ஊழியர் இந்தி தேசிய மொழி என்று வாடிக்கையாளர் ஒருவரிடம் கூறி சமூக வலைதளங்களில் பேசுபொருளான சில நிமிடங்களில் அந்த ஊழியர் நிறுவனத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தனது twitter handle இல் வெளியிடுகிறது.அதாவது எந்த முன்னறிவுப்புமின்றி அந்த ஊழியர் பணியிலிருந்து… …வெளியேற்றப்படுகிறார்‌.

'Natural justice' என்றொரு பதம் இருக்கிறது.குற்றம்சாட்டப்பட்டவரும்தன்‌ பக்கம் இருக்கிற நியாயத்தை முன் வைப்பதற்கான வாய்ப்பு அது‌.எப்பேர்ப்பட்ட வழக்குகளில் சிக்கியவருக்கும் தன் பக்கம் இருக்கிற நியாயத்தை முன்வைக்க முழு உரிமை உண்டு.