கல்வி நீதியை காவு வாங்கும் சாதி- எவிடென்ஸ் கதிரின் முகநூல் பதிவு
பக்கத்தில் வராதீர்கள்.நாற்றம் அடிக்கிறது.சாக்கடை நாற்றம்.படிக்க வரிங்களா? யாரையாவது காதலித்து இழுத்து கொண்டு போக போறிங்களா? உங்கள் ஆளுங்களுக்கு எதற்கு படிப்பு? உங்களை பார்த்தாலே அருவருப்பாக இருக்கிறது.
இந்த வார்தைகளை சொன்னது ஏதோ ஒரு சாதி இயக்கத்தின் சாதி வெறியன் அல்ல.பள்ளிக்கூடத்தின் ஆசிரியை.இதனால் மன ரீதியாக வேதனை அடைந்த ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் இரண்டு தலித் மாணவிகள், கடந்த 15 பிப்ரவரி 2023 அன்று பள்ளிக்கூடத்தின் கழிவறையில் இருந்த பினாயிலை குடித்து உள்ளனர்.