கடந்த செவ்வாய்கிழமை மாலை நான்கு மணிக்கு ஹைதராபாத்திலிருந்து புறப்பட்டது அந்த டெம்போ டிராவலர் வேன்.. ஒரு இளைஞர் மற்றும் 13 இளம்பெண்கள் அடங்கிய குழுவில் அனைவரும் ஐதராபாத் ஐடி கம்பெனிகளில் பணியாற்றும் தமிழ்நாட்டின் திருநெல்வேலி தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.!
வேகமாக ஓட்டிக்கொண்டிருக்கும் வேன் டிரைவருக்கு இரவு பத்து மணியளவில் அவரது டிராவல்ஸில் இருந்து போன் வருகிறது.. இரவு 12 மணி முதல் பிரதமர் அறிவித்த ஊரடங்கு உத்தரவு குறித்த தகவல் அது.!