அண்ணாவுக்குப் பின் திமுகவின் தலைமைப் பொறுப்பேற்று ஐம்பதாண்டுகள் அதை வழிநடத்தியவரும் தமிழ்நாட்டின் அதிக நாள் முதல்வருமான கருணாநிதி தன்னுடைய கடைசிக் காலத்தில் குடும்ப மருத்துவருமான எழிலனிடம் ஒருநாள் அண்ணாவைப் பற்றி நெடுநேரம் பேசிக்கொண்டிருக்கிறார்.
“இன்னும் இருபதாண்டுகள் உயிரோடு அண்ணா இருந்திருந்தால் திமுக எப்படி இருந்திருக்கும்?”
கொஞ்ச நேரம் மௌனமான கருணாநிதி நிதானித்துச் சொல்கிறார், “திமுக ஒரு சர்வதேச முன்மாதிரிக் கட்சியாக மாறியிருக்கும்; தமிழர்கள் சர்வதேசத்தால் பேசப்படும் சமூகமாக மாறியிருப்பார்கள்!” 1/6