Dr. S Sylvester Darvin - (ழகரம் நோக்கி) Profile picture
இயற்கை மருத்துவ ஆய்வாளன் (ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்), Researcher, Proud தமிழன், SriLankan, Admin of ழகரம் நோக்கி
Jan 9, 2022 12 tweets 2 min read
தினமும் திரிகடுகம் ,திரிபலா எடுத்துக்கொண்டால்  எப்போதும் ஆரோக்கியம்
சங்கக்காலம் முதற்கொண்டே நம் தமிழர்கள் சித்தமருத்துவத்தில் 
சிறந்து விளங்கியுள்ளனர்.  இவர்கள் கண்டுபிடித்த மும்மருந்து மற்றும் முப்பலை என்ற இரண்டு மருந்துகளை ஒரு மனிதன் தன் வாழ் நாளில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அவனுக்கு எந்த வித நோய்களும் அண்டாது.
மேற்சொன்ன மும்மருந்து என்பது திரிபலாசூரணம் ஆகும்.  

இந்த திரிபலா சூரணத்தில் மூன்று மூலிகை மருந்துகள் உள்ளது. 

கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றும் உள்ளது.
Jan 8, 2022 14 tweets 2 min read
உடல் சூடு அதிகமாக இருப்பதே கருத்தரிக்காமைக்கான முதல் காரணம்: -அனுபவ மருத்துவம்

பெண் உடலில் காரத்தன்மை குறைந்து, அமிலத்தன்மை அதிகமானால், ஆணிடமிருந்து பெற்ற உயிரணு, அந்த அமில உடலில் வாழ முடியாமல் போகிறது. அதாவது அதிகமான அமிலத்தன்மையால் கர்ப்பப்பையானது கொதிகலனாக மாறுகிறது. கொதிக்கிற தண்ணீரில் ஓர் உயிர் எப்படி வாழும்?

உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளத்தான் அந்தக் காலத்தில் எண்ணெய் குளியல் பின்பற்றப்பட்டது. இன்றோ... அதெல்லாம் பட்டிக்காட்டுத்தனம்! நாகரிக மோகத்தில் நாம் கைவிட்ட நல்ல விஷயங்களில் இதுவும் ஒன்று.
Jan 8, 2022 7 tweets 1 min read
அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் கொண்ட வில்வம் !!

வில்வத்தின் இலை, பூ, காய், கனி, வேர், பிசின், பட்டை, ஓடு என வில்வத்தின் அனைத்துப் பாகங்களும் மருத்துவ குணம் கொண்டவை. வில்வத்தின் காய், இலை, வேர் இவற்றை மணப்பாகு, ஊறுகாய், குடிநீர் என பலவகைகளிலும் உட்கொள்ளலாம். வில்வத்தை தைல முறையிலும் தலைக்குத் தேய்க்கப் பயன்படுத்தலாம்.
Dec 12, 2021 12 tweets 2 min read
தயவுசெய்து தினமும் நடந்து செல்லுங்கள்.

உங்கள் கால்களை இரண்டு வாரங்களுக்கு அசைக்கவில்லை என்றால், உங்கள் உண்மையான கால் வலிமை 10 வருடங்கள் குறையும்.

டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு, முதியவர்கள் மற்றும் இளைஞர்கள், இரண்டு வாரங்கள் செயலற்ற நிலையில் இருந்தால் கால் தசை வலிமை மூன்றில் ஒரு பங்கு பலவீனமடையலாம் என்கிறது. இது 20-30 வருடங்கள் முதுமையடைவதற்கு சமம்
கால் தசைகள் பலவீனமடைவதால், நாம் மறுவாழ்வு மற்றும் உடற்பயிற்சிகள் செய்தாலும், மீட்க நீண்டகாலம் பிடிக்கும். நடங்கள். அதனால்,
Dec 11, 2021 6 tweets 1 min read
உடல் எடை விரைவில் கூட:

உடலுக்கு எவ்வித தீங்கையும் ஏற்படுத்தாமல், உடல் எடையை அதிகரிக்க சித்தர்கள் காலம் முதல் இன்று வரை பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு முக்கிய மருந்தாக அஸ்வகந்தா இருந்து வருகிறது. இது தசைகளின் உடல் மற்றும் பலத்தை அதிகரிக்க உதவியாக இருப்பதாக பல்வேறு ஆய்வறிக்கைகள் கருத்து தெரிவித்துள்ளது.

இந்த அஸ்வகந்தா பொடியை, உட்கொள்வதை நிறுத்தி விட்ட பின்போ அல்லது உட்கொள்வதை குறைத்து வந்த பின்போ கூட, உடலில் உருவான தசைகளின் எடை நீண்ட காலத்திற்கு அப்படியே இருக்கும்.
Dec 26, 2020 19 tweets 2 min read
தேனும் லவங்கப் பட்டையும்

உலகத்தில் கெட்டு போகாத ஒரே  உணவு தேன் தான்! அதிகபட்ச மாற்றம் எதுவென்றால்,  தேன் உறைந்து கிறிஸ்டல்களாக மாறும். அப்போது சூடான தண்ணீரில் தேன் பாட்டிலை வைத்தால் இளகி மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிடும். தேனை சூடு படுத்தக்கூடாது தேனை மைக்ரோவேவிலோ அல்லது அடுப்பிலோ வைத்து சூடு செய்தால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து விடும்.
உலகில் எல்லா பகுதிகளிலும் கிடைக்கும் உணவு தேன்.
தேன் எனும் அற்புத உணவு.தேனின் மருத்துவ குணங்கள் சொல்லி தீராதது.
Sep 13, 2020 33 tweets 4 min read
உடல் எடை குறைக்க வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டிய 20 உணவுகள் :

காலை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள். அவை, தர்பூசணி, பப்பாளி மற்றும் கருப்பு திராட்சைப் பழங்கள். மேலும் சுப்பர் பூட்ஸ் (super foods) என்று அழைக்கப் படும் கிரீன் டீ, முழு தானிய ரொட்டி வகைகள் மற்றும் மரக்கோதுமை ஆகும்.

உங்கள் உடல் எடை அதிகரித்துக் கொண்டே போகிறதா? அதை பற்றி இனி கவலை கொள்ள வேண்டாம். உடல் எடையை குறைப்பதற்கு
May 20, 2020 20 tweets 3 min read
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும். 3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட
Mar 24, 2020 21 tweets 3 min read
டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர்.
எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போடுங்கள். உண்மைகளை உணருங்கள்.2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே அறிந்து கொள்ளுங்கள். முதலில் நல்ல செய்திகள் —
• COVID-19 பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு.
• 1950லேயே கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் குடும்பத்தின் புதிய வைரஸ்தான் இது. அவ்வளவே.
• இதற்கு முன்னும் மனிதர்களைத் தாக்கி இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால்
Feb 15, 2020 8 tweets 2 min read
பூண்டு அற்புதபலன்கள்

வறுத்த 6 பூண்டுகளை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா?
பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.
Dec 18, 2019 16 tweets 2 min read
கடலை மிட்டாய் ஏன் சிறந்த ஸ்நாக்ஸ் தெரியுமா?

இன்று ஸ்னாக்ஸ் என்ற பெயரில் எதை எதையே வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் அது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்று கூட யோசிப்பதில்லை! அதுமட்டுமல்ல முந்திரி பாதாம் பிஸ்தா இவற்றில்தான் சத்து அதிகம் என்றும் நினைக்கின்றோம். உண்மையில் உடலுக்கு அனைத்து நன்மைகளையும் அள்ளி தரும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய எளிய விலை குறைவான ஸ்னாக்ஸ் ஒன்று உள்ளது. அது நம்ம கடலைமிட்டாய் தான். இதில் கடலையும் வெல்லமும் சேர்ந்து ஒரு அருமையான சுவையான மற்றும் பல மருத்துவ நன்மைகளை நமக்கு அள்ளிக் கொடுக்கிறது.
Dec 10, 2019 23 tweets 3 min read
பழங்கள் சாப்பிடும் முறை

எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால்,அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று.
நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை 'எப்படி' அதுவும் 'எப்போது' சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம். பழங்களைச் சாப்பிடும் சரியான முறை என்ன?
பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல!!
பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும்!!
பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு,
Sep 18, 2019 6 tweets 1 min read
மூலிகைகளும் அதன் சத்துக்களும்

1. அத்தி - இரும்புச்சத்து
2. அம்மான் பச்சரிசி - வெள்ளிச்சத்து
3. அக்கிரகாரம் – செம்புச்சத்து
4. ஆத்தி – இரும்புச்சத்து, தாமிரச்சத்து
5. ஆவாரம் – செம்புச்சத்து 6. ஆரைக்கீரை – இரும்புச்சத்து
7. ஆவாரை, ஆடாதொடா, கற்றாழை, – தாமிரச்சத்து
8. ஊமத்தை – இரும்புச்சத்து, உப்புச்சத்து
9. எட்டி – இரும்புச்சத்து, கந்தகச்சத்து
10. எள்ளு, கடுகு – கந்தகச்சத்து
11. கத்திரிக்காய் – மெக்னீசியம்
12. கரிசலாங்கண்ணி – தங்கச்சத்து, வெள்ளிச்சத்து