Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture
Poet, Author, Writer, Samskritam Teacher, Temple Architecture and Cultural Science Researcher, and a Proud SANADHANA BHARATHY... MODI KA PARIWAR👍

Jul 3, 2020, 23 tweets

🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺

#BharathVruksh

கச்ச அனுஜாமி – நீ போகலாம், உனக்கு நான் அனுமதி அளிக்கிறேன்
ரணார்திதஸ்த்வம் – இன்றைக்கு நன்றாக யுத்தம் செய்து அடிபட்டுக் களைத்திருக்கிறாய் ராத்ரிம்சரராஜ லங்காம் – இரவில் சுற்றும் ராக்ஷஸர்களின் ராஜனே

லங்காம் ப்ரவிஷ்ய – மீண்டும் இலங்கைக்குள் போய்க்கொள்…

ஆஷ்வாஸ்ய – களைப்பு நீங்க ஆஸுவாஸப் படுத்திக்கொண்டு
நிர்யாஹி ரதீச தன்வீ – ரதத்தில், அம்புவில் எடுத்து மீண்டும் யுத்தத்திற்கு வா
ததா பலம் த்ரக்ஷ்யஸி மே ரதஸ்தஹ – அப்போது எனது பலத்தை நீ பார்க்கக் காட்டுகிறேன்…

என்கிறார்.

இதைத்தான் கம்பன், தனது கவிநடையில் அழகாக, மனதில் தைத்து நிற்கும்படி,

”ஆளையா! உனக்கு அமைந்தன மாருதமறந்த
பூளையாயின கண்டனை; இன்றுபோய் போர்க்கு
நாளவா எனநல்கினன் – நாகிளங் கமுகின்
வாளைதாவுறு கோசல நாடுடை வள்ளல்”

அரக்கர்களை ஆள்கின்ற ஐயா! உனது படைகளனைத்தும்,

பெருங்காற்றில் உதிர்ந்து பறக்கும் பூக்கள் போலாயின. எனவே இன்று போய் நாளை வா என்றான், இளங்கமுகு (கமுகு – பாக்கு) மரத்தில் மீன்கள் துள்ளி விளையாடும் நீர்-நில வளம் கொண்ட கோஸல தேசத்து வள்ளலாகிய ராமன் என்று வர்ணிக்கிறார்.

அப்படியும் அவனதை அவமானமாக நினைத்து ராமரைக் கொல்ல யத்தனித்தானே

ஒழிய, மனம் திருந்தவில்லை. இறுதியில் ராமரின் பானத்தால் ஸம்ஹாரம் செய்யப்பட்டான். மண்டோதரியும், பிற மனைவிகளும் துயருற்றுக் கதறினர். அண்ணனுக்கான ஈமக்கடன்களைத் தான் செய்ய வேண்டுமென விபீஷணன் ராமரிடம் கேட்க,

Temple Preah Khat at AngkorWatt : A pediment depicting the battle of Lanka.

“என்னிடம் கேட்பதேன் விபீஷணா… இது உன் கடமை அல்லவா? சென்று நிறைவேற்று….”

எனக்கூறிய ராமர், எதிரியே ஆனாலும், அவன் ஒரு மன்னன் ஆனதால், அவனுக்குரிய இறுதி மரியாதைகளைச் செய்தார் ராமர்.

ராவண வதமும் ஆனது. அசோகவனத்தில் அமர்ந்திருந்த ஸீதையை நோக்கி, ராம-லக்ஷ்மணரும் ஹனுமனும் வந்தனர்.

ஸீதா தேவி மகிழ்ச்சியோடு ராமரை நோக்கி வந்தாள். ஸீதையைக் கண்ட ராமர் புன்சிரிப்போ, மகிழ்ச்சியோ, ஆனந்தமோ இன்றி, அமைதியாக நின்றார்.

Divurumpola Temple – The sacred site where Sita Devi took her oath and performed the Agni Pariksha

லக்ஷ்மணனும் விபீஷணனும் பதறிப்போய் ராமரிடம் அவரது செயலுக்குக் காரணம் கேட்க,

“என் மனைவி மேல் எனக்கு ஸந்தேகமில்லை…. ஆனால், இத்தனை காலம் இவள் இங்கே ஒரு அஸுரனின் கோட்டையில் வாழ்ந்து வந்திருக்கிறாள்.

இவளை இப்படியே அழைத்துக் கொண்டால், இவள் நடத்தை பற்றிப் பேசி,

உலகம் இவளைத் தூற்றுமே என்றுதான் யோசிக்கிறேன்…. இவள் களங்கமற்றவள் என்பதை இந்த உலகில் நிரூபிக்க வேண்டாமா??”

என்றார். இதைக்கேட்ட ஸீதை,

“எனது கற்பின் வலிமை உண்மை என்றால், நான் இப்போதே அக்னிப் பரீட்சை செய்து எனது கற்பை நிரூபிப்பேன் இவ்வுலகுக்கு”

எனக்கூறி,

லக்ஷ்மணனை தீமூட்டச் சொன்னாள். அங்கேயே அக்னி வளர்த்து, அதில் இறங்கினாள். அவளது கற்பின் நெருப்பு அக்னியையும் சுட்டதோ என்னவோ? அக்னிதேவன் அவளை அப்படியே வெளியில் ஏந்தி வந்தார்.

“ராமா… துன்பத்திலும், ஒரு கணமும் உனை மனதினின்று பிரியாத இக்கர்புடை மகளை நீ என்னில் இறக்கியது தவறு.

இவள் துளியும் குற்றமற்றவள். அப்பழுக்கற்ற ஸீதையை இவ்வாறு பேசியது தவறு என உணர்ந்து, அவளை ஏற்பாயாக. இது எனது ஆணை…”

என்றார். ராமரின் இந்த சோதனைக்கான காரணத்தை தேவர்கள் அறிவர். ஸீதை அக்னியிலிருந்து மீண்டும் வந்த பின்னர், அவரகளை வாழ்த்தி மறைந்தனர்.

இவள் துளியும் குற்றமற்றவள். அப்பழுக்கற்ற ஸீதையை இவ்வாறு பேசியது தவறு என உணர்ந்து, அவளை ஏற்பாயாக. இது எனது ஆணை…”

என்றார். ராமரின் இந்த சோதனைக்கான காரணத்தை தேவர்கள் அறிவர். ஸீதை அக்னியிலிருந்து மீண்டும் வந்த பின்னர், அவரகளை வாழ்த்தி மறைந்தனர்.

🌱விபீஷணன் பட்டாபிஷேகம் 🌱

பின்னர், விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்து, உடனடியாக அயோத்தி கிளம்பினார். விபீஷணன் அவரை சற்று தங்கி, ஒரு நாளாவது ஓய்வெடுத்துப் போகுமாறு வேண்டினார். ஆனால் ராமரோ,

“எனது கானக வாசம் நிறைவுற்றது. அங்கே எனது தாய் தந்தையையும் இழந்து,

எங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பார். இப்போது கிளம்பினால் தான் மூன்று மாதத்திற்குள் சென்று சேர முடியும்”

என்றார். அதற்கு விபீஷணன் அவரைச் சமாதானம் செய்து,

“ஹே ராமா…. கலங்காதே! எனது ஒன்றுவிட்ட தமையன் குபேரன் தான் இந்த லங்காபுரியை ஆண்டு வந்தான்.

என் அண்ணன் ராவணன் அவனை வென்று, விரட்டியடித்து, இந்நாட்டைக் கைப்பற்றினான். இங்கே குபேரன் வைத்திருந்த விமானங்கள் அண்ணனிடம் உள்ளன. அதில் நீங்கள் விரைவாக அயோத்தியை அடையலாம்.”

”மேலும் அவன் வைத்துள்ள புஷ்பக விமானம் என்னும் விமானத்திற்கு, ஓட்டுநர் தேவையில்லை.

உனது மன அலைகளைக் கட்டுப்படுத்தி அதில் செலுத்தி, எந்த வேகத்தில், எவ்வளவு உயரத்தில், எத்திசையில் போக வேண்டும் விமானம் என நினைக்கிறாயோ, அந்த எண்ண அலைகளை க்ரஹித்து, அது அவ்விதமே உம்மைக் கொண்டு சேர்க்கும்.

நீங்கள் அயோத்தியை மூன்று மணி நேரத்தில் சென்று அடையலாம்.

எனவே, குளித்து உணவு மட்டுமாவது உண்டு கிளம்புவாய் ராமா…”

என வேண்டினார். அவ்விதமே, அவர் உணவு கொண்டு, விபீஷணனிடம் விடைபெற்று, மனைவியுடனும் தம்பியுடனும் மீண்டும் அயோத்தி திரும்பினார் ராமர். ராமர் அயோத்திக்கு புஷ்பக விமானத்தில் வருகையில், வானிலிருந்து தெரியும் இலங்கையின் அழகை,

”இலங்கை ராவணனின் எண்ணற்ற விமானங்களால், அழகாக ஜொலிக்கிறது…”

என வர்ணிக்கிறார்.

Source : Valmiki Ramayanam – Yudha Kaandam – Sargam 20.

5000years old Pushpaka Vimana of Ravana Found An Ancient Vimana found in the cave of Afghanistan said to be used in Maha Bharat.

Reference :

இதனிடையே தந்தை மரணத்தால் கைகேயி மனமுடைந்து,

”என்னால் தான் கணவன் மாண்டார், ராமன் வனம் சென்றான், பரதன் எனது முகத்தை இறுதிவரைப் பார்க்க மாட்டேன் என்றான்…. இத்தனைக்கும் காரணமான நான், இனி ராமன் வந்து அழைக்கும் வரை வெளியில் வர மாட்டேன்…”

எனக்கூறி தன் அறையிலேயே 14 ஆண்டுகள் சிறையிருந்தாள். ராமபிரான் திரும்பி வந்து,

கைகேயியை அழைத்து, அவளை வணங்கினார். நந்திக்ராமத்தில் துறவியாக வாழ்ந்து வரும் தம்பி பரதனிடம் தாம் திரும்பிவந்த செய்தியைச் சொல்ல ஹனுமானை அனுப்பினார்.

பரதனைச் சந்தித்த ஹனுமான், நடந்த எல்லாவறறையும் விரிவாகக் கூறினான். அண்ணன் திரும்பிய செய்தி கேட்டுப் பரவசம் கொண்ட பரதன்,

நந்திக்ராமத்தில் தனைத் தேடி ராம – லக்ஷ்மணரும் ஸீதையும் வருவது கண்டான். கண்ணீர் பொங்கியவனாக ஓடிவந்த பரதன் ராமரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். அவர் அவனைச் சமாதானம் செய்தார்.

”இனி இத்துடன் ராஜ்ய பொறுப்பை தங்களிடம் ஒப்படைத்துவிட்டேன் அண்ணா…”

எனக்கதறிய பரதனை அணைத்துக் கொண்டார்.

@threader_app compile

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling