🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺
#BharathVruksh
🌿3 : 4 : 5🌿
🌱வர்ணங்களும்….. பிரிவுகளும்…..🌱
வர்ணங்கள் என்னும் வகையில், நான்கு வித தொழில்கள் அடிப்படையில் வந்ததால், அவற்றின் இயல்புகளை ஒட்டி, அவ்வர்ணங்களை ஏற்று வாழ்வோருக்கும் சில நியதிகள் விதிக்கப்பட்டன.
இவ்விடத்தில் முக்கியமாக ஒன்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
ஸத்ய யுகம் எனப்படும் க்ருத யுகம் முதல், ஒருவர் தான் சார்ந்த வாழ்வுமுறைக்கு ஏற்றவாறு எப்படி தனது உணவு, உடை, நித்யகர்மா, பழக்க வழக்கம், கல்வி, தனிமனித ஒழுக்கம், வசிப்பிடம், தொழில், குடும்பம், ஆன்மீகம், சமூகம் போன்றவற்றை
அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதை, அவர்களது வாழ்க்கை வசதிக்காகவும், பாதுகாப்பிற்காகவும், கருத்துச் சிதறல்கள் இல்லாமல் ஒருமித்த எண்ணத்தோடு தன் வாழ்வை கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் மட்டுமே அவர் அவருக்கானவற்றை மட்டும் கற்றுத் தந்து வாழ வைத்தார்கள்.
அந்த யுகத்தில் வாழ்ந்தவர்கள், தான் தேர்ந்தெடுத்த வாழ்வியல் வர்ணத்தில், தனக்கு எந்த வித வாழ்வுமுறை கற்றுத் தரப்படுகிறதோ…. அதை அப்படியே ஏற்றார்கள். எனவே க்ருத யுகத்தில் இது பெரியதாக கருதப்படவில்லை.
த்வாபர யுகம் வருகையில், சற்றே தீய சக்திகளும் நுழைகிறது
மக்கள் மனதில் என்பதைக் கண்டோம். அப்போது, இதே வாழ்க்கைக்கான வழிமுறைகளை தர்மம்…
அதாவது இதுவே சரியானது எனும் வகையில் கூறினர். அப்படியென்றால், த்வாபர யுகத்தில், சரி…. தவறு என்பது சற்று எல்லா இடத்திலும் ஸ்திரம்பெற ஆரம்பித்திருக்கிறது என்பது புரிகிறது.
இவ்விடத்தில், ஹிரண்யன், மஹாபலி போன்றோர் கூட தவறு செய்தார்களே? எனும் கேள்விகூட சிலருக்கு வரும். ஆனால், சற்று யோசித்துப் பாருங்கள்…
ஜகத்தில் எங்கோ ஓரிருவர் மட்டுமே தவறு புரிந்தனர். அதுவும் கூட அதீதமான அதிகாரம் உச்சத்தில் இருந்து, அந்த ஆணவம் கண்களை மறைத்தவர்களே அப்படி இருந்தனர்.
மற்றவர்கள் எல்லோரும் ஸத்ய வாழ்க்கையே வாழ்ந்தனர். ஆனால் த்வாபர யுகத்தில் அது சற்று அதிகமாகி விட்டிருந்ததைப் பார்க்க முடிகிறது அல்லவா? அதனால் ஸத்ய யுகத்தில் சொல்லப்பட்ட வழிமுறைகள்…. தர்மம் எனக் கூறப்பட்டது.
இது ஒருவிதத்தில் பார்க்கப் போனால்,…. சரி, தவறு என்பதே தர்மம், அதர்மம்
எனக்கூறப் பட்டிருப்பதாகத் தெரிகிறது.
”பிறர் யார் சரி தவறு என்பதை ஒரு தனி மனிதனது வாழ்வில் நிர்ணயிக்க?” என யாரேனும் கேட்டால், அதற்கு பதில் இரண்டு…
1) சமுதாயம் என்று வரும்போது, அதன் ஒழுங்குமுறைகளை நிர்ணயித்தால் மட்டுமே அது நல்லமுறையில், ப்ரச்சனைகள் இல்லாத்தாக இருக்கும்.
அப்படியெனில் மனிதனின் வாழ்வில் சரி… தவறு… போன்றவற்றை நிர்ணயிக்க ஒருவர் வேண்டுமல்லவா?
2) சரி என்பதும் தவறு என்பதும் இவ்விடத்தில் ஆணையாக அல்ல… இவ்வாறு இருந்தால் வாழ்க்கை சுலபமாக ப்ரச்சனையற்றதாக இருக்கும் என்பதை சரி என்றும் அவ்வரைமுறைக்குட்பட்டு வாழாத போது வாழ்க்கை கஷ்டமாகவும்
ப்ரச்சனையோடும் இருக்கும் என்பதை தவறு என்றும் சொன்னதாகக்கூட எடுத்துக் கொள்ளலாம்.
இவ்வகையில் பார்த்தால், சரி என்பதை தர்மம் என்று கூறப்பட்டிருப்பதை நாம் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கவே முடியாது.
🌱விஷ்ணு புராணம்🌱
த்யாயன் க்ருதே
யஜன் யக்ஞை: த்ரேதாயாம்
த்வாபரே அர்ச்சயன்
யதாப்நோதி ததாப்நோதி
கலௌ ஸங்கீர்த்ய கேஸவம்
த்வாபர அர்ச்சனை:
பத்ரம் புஷ்பம் ப்ஹலம் தோயம்
யோமே ப:க்த்யாம் ப்ராச்சதி
ததஹம் ப:க்த்யு பக்ருதம்
அஷ்டாமி ப்ரயதாத்மந:
(உடல் நலம்பெற காஞ்சிப் பெரியவர் பரிந்துரைத்தது)
அஸ்மிந் பராத்ம நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித் பத்ம யோஹிநி |
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ ||
(திருமங்கை ஆழ்வார் பாஸுரம்)
குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார்படு துயராயின வெல்லாம்
நிலந்தரம் செய்யும்நீர் விசும்பருளும் அருளொடு பெருநில மளிக்கும் |
வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற தாயினு மாயின செய்யும்
நலந்தரும் சொல்லைநான் கண்டுகொண்டேன் நாராயணா வெனும்நாமம் ||
🌱ப்ராமண தர்மம்🌱
ப்ராமணருக்கான தர்மம் என்பதில் பெரிதும் யாரும் வழுவாது தான் வாழ்ந்துள்ளனர். ப்ராமணர்கள் வாழ்க்கை முறையில் வகுக்கப்பட்டிருந்த நெறிகள் அவர்களுக்கும் பிறருக்கும் பயனுள்ள விதமாக இருந்தது.
ஜகத்தே வாழ; ஸ்ரீ சைலேச தயாபத்ரத்தில் உள்ள த:னியன்
”அடியார்கள் வாழ! அரங்கநகர் வாழ!
சடகோபன் தன்டமிழ் நூல் வாழ!
கடல் சூழ்ந்த மண்ணுலகம் வாழ!
மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!!”
1) ஒரு நாளைக்கு மூன்று வேளைக்கான தலை முழுகும் உடல் சுத்தம், அவர்களின் உடல் சூட்டைத் தணித்தது.
2) பருத்தியினாலான ஆடை, சரியான உடல் உஷ்ணத்தைக் காத்தது. குளிருக்கு சூடு தந்து, வெயிலில் உஷ்ணத்தை இழுத்து வெளியேற்றிப் பாதுகாத்தது.
அதில் அவர்கள் கொண்ட காவி வர்ணம், மனதிற்கு அமைதி தரும் ஒரு நிறமாதலால் அது அனாவஸ்யக் கோபத்தைத் தடுத்தது.
3) த்ரிகால ஸந்த்யாவந்தனம் எனும் வழிபாட்டு முறை, அவர்களின் மனவலிமையையும் நினைவாற்றலையும் அதிகமாக்கி, மனக்கட்டுப்பாட்டுக்கும் வழிவகுக்கிறது.
4) லோக க்ஷேமத்திற்காக யக்ஞம் செய்வதும் அவர்களது தர்மமாக இருந்தது. அதே சமயத்தில் இயற்கையை ஒட்டியும் விஞ்ஞான ரீதியாகவும் இருந்ததால்,
பிற மனிதர்களின் வாழ்வும் ஆரோக்யமும் நல்விதமாக இருக்க இவர்களால் தன் வாழ்வை அர்ப்பணிக்க முடிந்தது.
5) வேத மந்த்ர ஒலிகளில் ஏற்படும் நேர்மறை அதிர்வலைகளால், இவற்றைக் கேட்போருக்கு மன அமைதி, நேர்மறை சக்தி ஆகியவை கிடைத்தது.
6) அநேகமாக அவர்கள் வாழ்க்கை நதிதீரங்களில் அமைந்தது.
இது அமைதியான சூழ்நிலையத் தந்ததால் அவர்களால் நல்ல த்யானம் மூலம் மன ஒருமைப்பாட்டினைக் கொண்டுவர முடிந்தது.
7) கோயில்கள் எனும் தாத்பர்யம் ப்ரும்மாண்டமாக இல்லாமல், சிறு குகைக் கோயில்கள் போன்று வர ஆரம்பித்திருந்தன. அவை, நமக்கு மேலான சக்தியை....
தனிமைப்படுத்தி வணங்கும் வித்ததிற்காகக் கூட தோன்றி இருக்கலாம்.
8) சமூகத்துக்குத் தான் கற்றதைக் கற்பிக்க, குருகுலக் கல்வி என்பது வந்துவிட்டது. இவர்களில் ப்ராமண வர்ணத்தில் வாழ விரும்பியோர்க்கு, முதலில் அனைத்துக் கலைகளும் கற்பிக்கப்பட்டன.
பின்னர் அவர்கள் தங்கள் வாழ்க்கை வகையை அவர்களே முடிவு செய்தார்கள்.
9) ரிஷியாகப் போவோர் ப்ரும்மத்தை உணர்ந்து மேலும் பல விஷயங்களைக் கற்றனர்.
10) ஞானிகள் அவற்றை ஆய்ந்து வெளிப்படுத்தினர். முனிவர்கள் இத்தர்மத்தின் வழிமுறையை வாழ்ந்து காட்டி, பிறருக்கும் நன்மைகள் செய்து வந்தனர்.
இறுதியாக குருவாக ஆனவர்கள், எப்போதும் நவீன கண்டுபிடிப்புகளுக்கேற்ப தம்மை புதுப்பித்துக் கொண்டு, அவற்றை அந்தந்த வர்ணத்தின் கல்வியைத் தேர்ந்தெடுப்போர்க்கு கற்றுத் தந்தனர்.
11) தனக்கு எனத் தேவைகள் ஏதும் ஏற்படுத்திக் கொள்ளாது ஸ்வய எதிர்பார்ப்பின்றி வாழ்ந்ததால்,
இவர்களால் பிறர் நலனுக்காக மட்டுமே வாழ முடிந்தது.
12) தேடி வந்து கல்வி பயிலும் மாணவர்கள் மனமகிழ்ந்து தரும் குருதக்ஷினை மட்டுமே இவர்கள் பெற்றனர்.
எனவே ஆரம்பத்தில் இருந்த ப்ராமணம் எனும் வர்ணத்தில் ரிஷிகள் பொதுவாக சமுதாயத்தில் கலக்கவில்லை.
இவர்கள் பெரும்பாலும் தனிமையைத் தேடி, காடுகள், மலைகள், குகைகள் போன்ற அதீத அமைதி கிடைக்கும் இயற்கை இடங்களில் வசிக்கத் துவங்கினர்.
எனவே அவர்களுக்கு வம்சாவளி என்பது பெரும்பாலும் இல்லை. இருந்தாலும், இவர்களைப் போலவே இருந்திருக்கிறர்களா என்பது கேள்விக்குறியே.
இவர்களுக்குத் தனி சமூகம் தேவைப்படவில்லை. ப்ரும்மம், இவர்களது உடல் இரண்டு மட்டுமே இவர்களுக்கு. அதனால் இவர்கள் வாழ்வின் நடைமுறைப் பெயரில் ஜாதி என்பது உருவாக வாய்ப்பில்லை.
இரண்டாவதாக ஞானிகள். இவர்கள், மேலே கூறியது போன்ற ரிஷிகளிடம் முக்திக்கான வழி,
உணர்தல் போன்றவற்றை கற்றுக் கொள்வார்கள்.
அதை தினமும்... தன் ஒரு ஆத்மாவுக்காக பயன்படுத்தாமல், அதன் சக்திகளை மூலக்காரணங்களோடு ஆய்ந்து, அதை எவ்வாறெல்லாம் உபயோகப் படுத்த வேண்டும் என்பதை உலகுக்குக் கூறினர். எனவே இவர்களும் சற்று தனித்தே காடு, மலை, நதிதீரம் போன்ற இடங்களில் வசித்ததால்,
இவர்களுக்கும் சமுதாயத்தில் அதிகம் ஒட்டுதல் இல்லை… அதே சமயம் சமுதாயத்தைப் பிரியவுமில்லை. எனவே இவர்கள் வாழ்வின் நடைமுறைப் பெயரிலும் ஜாதி என்பது உருவாக வாய்ப்பில்லை.
மூன்றாவதாக முனிவர்கள் / சித்தர்கள்.... இவர்கள் ஞானம் பெற்று, வாழ்வை நல்லவிதமாக நடத்துவதற்கு உண்டான
வகைகளை உருவாக்கக் காரணமாயினர். அதற்கான காரியங்களைச் செய்வதற்கு மக்களுக்கு எடுத்துரைத்து, அருகிருந்து செய்யவைத்து, அதற்கான வழிமுறைகளைச் சரிசெய்து, வாழ்க்கை முறையை மக்களுக்கு உயர்த்திக் கொடுத்தனர்.
தேவைப்படும் இக்கட்டான நேரங்களிலெல்லாம் மக்களிடம் வந்து அவர்களுக்கான
துயர்துடைக்கும் கார்யங்களில் ஈடுபட்டனர். மேலும், இவர்களில் பலர், தங்களிடம் உள்ள, தாம் கற்ற அனைத்தையும் பாடல்களாக, செயுளாகச் சொல்லித் தந்ததால், மக்கள் மனதில் அவை அழியாதிருந்து, அடுத்த தலைமுறைக்கும் போனது.
இவர்களும் தங்களுக்கான இடம் என ஒன்று இல்லாமல், நாடோடி போன்றே,
சமுதாயம் சார்ந்து சிலகாலம், பின் தம்மை மேலும் சக்தியூட்டிக் கொள்ள சில காலம் என வாழ்ந்ததால், இவர்கள் வாழ்வின் நடைமுறைப் பெயரிலும் ஜாதி என்பது உருவாக வாய்ப்பில்லை.
இறுதியாக ஆச்சார்யன் எனப்படும் குருமார்கள். இவர்கள் சமுதாயத்தில் ஒரு ஓரத்தில் வாழ்ந்து, சமுதாயத்தை விட்டும் பிரியாது,
அதே சமயம் மிகவும் நெருக்கமாகவும் இல்லாது வாழ்ந்தனர். இவர்களே அடுத்த தலைமுறைக்கு தாம் கற்ற அனைத்து வித்தைகளையும், முனிவர்கள் சமுதாயத்துக்குச் செய்யும் கார்யங்களின் வழிமுறை முதல், வாழ்க்கையை வாழ்வதற்குச் செய்யும் தொழிலின் வழிமுறை வரை, அனைத்தையும் கொண்டு சென்றவர்கள்.
ஒவ்வொரு வர்ணத்தாருக்கும், அவரவர் தேவைக்கு என்ன கற்றுத்தர வேண்டும் என்பதைப் பிரித்து, அதில் மட்டுமே அதிகம் கவனம் கொள்ளவும், அதே சமயத்தில் பொதுவான வாழ்க்கை நெறிமுறைகளை விடாமல் எவ்வாறு செய்யவேண்டும் என்பதையும் கற்றுத் தந்தனர்.
இவர்கள் பூஜைகள், யக்ஞங்கள் என அனைத்தையும்
பொதுமக்களின் வாழ்வுக்காக நடத்தியுள்ளனர். இவர்களது வாழ்வில், அநேகமாக ஒரு குருவின் சீடனுக்கு, தந்தையுடனேயே சிறு வயது முதல் அதிகம் இருப்பதால், அனைத்துக் கலைகளும், பாடங்களும் ஸ்திரமாக மனதில் பதிகின்றன.
மேலும், தேவைப்படும் போதெல்லாம் தனது சந்தேகங்களையும் தீர்த்துக் கொண்டு,
பயிற்சி பெற முடிந்தது. எனவே இவர்கள் வாழ்வின் நடைமுறை தான் சமுதாயத்தில் முதன்முதலில் ப்ராமணம் என்னும் வர்ணத்தின் ப்ராமணன் என்னும் ஜாதியாக அறியப்பட்டிருக்க வேண்டும்.
இதில் அநேகமாக அனைவரும் லிங்க ஸ்வரூபத்தை அதிகமாக வழிபட்டது தெரிகிறது. அதே சமயத்தில், மக்களிடத்தில்,
ஆண் – பெண் இருவரும் திலகம் வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. ஸீதை விஷ்ணுவை வணங்கியதும் தெரிகிறது. எனவே கண்டிப்பாக த்ரேதாயுகத்தில் சைவம், வைஷ்ணவம் என்னும் மார்க்கங்கள் இல்லை என்பதும் புரிகிறது.
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
