🌺Bharatha Varsham and Sanadhana Dharmam🌺
#BharathVruksh
🌿க்ஷத்ரிய தர்மம் 🌿
க்ஷத்ரியர்களில் நாட்டை ஆளும் மன்னர், மந்திரிகள், போர் வீர்ர்கள், சேவகர்கள், ஒற்றர்கள், தூதர்கள், அரசின் கீழ் வேலைகள் செய்வோர், நிஷாதர்களின் அரசன், நிஷாதர்கள் ((காடுகளில் வாழும் வேடர்கள்),
ஆற்றங்கரைகளில் குடியிருந்து நாட்டைக் காக்கும் வீர்ர்கள், என அனைவருமே அடங்குவர்.
ஆரம்பத்தில், க்ஷத்ரிய தர்மம் என ஒன்று பொதுவானதாக இருந்தது. பின் அவ்வகை மனிதர்களை வழிநடத்த, முதல் க்ஷத்ரியன் என்று ஒரு தலைவன் உருவாக்கப்பட்டான். இந்த க்ஷத்ரிய தர்மத்திற்கும் வாழ்க்கைக்கான விதி முறைகள்
உருவாக்கப்பட்டன. அதில் முதல் க்ஷத்ரியனுக்கு, அவனது வாழ்வின் விதிமுறைகள் கடினமானதாக மாற்றப்பட்டது.
மக்களைக் காக்க அரசாங்கம் என ஒன்று அமைக்கப்பட்டது. அவனது ஆளுகைக்கு உட்பட்ட இடங்களின் முடிவில் அரசாங்கத்தின் எல்லைகள் குறிக்கப்பட்டன.
1) முதல் க்ஷத்ரியன், ப்ராமணர்களை ரக்ஷிப்பது முதல் கடமை என்பதும் க்ஷத்ரிய தர்மத்தில் வந்தது. அதன் காரணம் குருவிடம் அனைத்து அஸ்த்ர வித்தைகளையும் ராஜ நீதி, ராஜ தந்த்ரம் போன்றவற்றையும் கற்கின்றனர்.
பிற முனிவர்களும் யோகிகளும் ஸ்வயமாக வந்து மக்களுக்குத் தேவையானவற்றை
சொல்லிக் கொடுப்பதுடன், இடர் நீக்கும் அனைத்து காரியங்களையும் செய்கின்றனர். ஆனால் அதற்கு அவர்கள் எவ்வித ப்ரதிபலனும் எதிர்பார்ப்பது இல்லை. அதனால், அவர்களுக்குத் தேவையானவற்றை முதல் கடமையாக எண்ணினர்.
2) கல்வி கற்போருக்குத் தேவையான எழுத்து ஓலைகள், தொழிலுக்கான யந்த்ரங்கள் மற்றும்
இட வசதிகளையும் செய்து தந்தனர்.
3) தங்கள் ஆளுமைக்கு உட்பட்ட, எல்லை வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பில், யார் ஆட்சி புரிகிறார் என்பதைப் பார்த்தவுடன் பிறர் அறிந்து கொள்ளும் வகையில் தேசத்தின் கொடி ஒன்று உருவாக்கப்பட்டு, அது தேச எல்லைகளிலும், கோட்டை மதில்களிலும் பறக்க விடப்பட்டது.
4) போரிலும், அரசனின் ரதம் தவிர, பிற வீரர்கள் தங்கள் முதுகில் தேசியக்கொடியைக் கட்டியிருந்தார்கள். இது இறந்தது எந்த தேசத்து வீரன் என்பதை அறிவதற்காக இருந்தது.
5) மக்களுக்கு உணவளிக்கும் தாண்யங்கள் தயாரிக்கும் நிலங்களைத் தனியாகவும், பிற தொழில் செய்வோரின் தொழில்களுக்குண்டான இடங்களைத்
தனியாகவும், அவர்களது தொழில்களுக்கு ஏற்ற இடத்தில் பிரித்து அமைத்தனர்.
6) மக்களின் தொழில் அடிப்படையிலான வாணிபங்கள் செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தந்தனர்.
7) அரசாங்கத்தில் நாட்டின் வசிப்பிடங்களுக்கு ஏற்ற இருப்பிட, தொழில் வசதிகளைச் செய்தனர். இருப்பிட வகைகளை முன்னேற்றினர்.
8) மக்களின் ஒவ்வொரு விஷயத்திற்கும் தேவையான நலன்களை அறிந்து தர மக்களிலிருந்தே ஒவ்வொரு தொழிலுக்கேற்ற தலைவனையும், நாட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை மக்களோடு ஒன்றாய் கலந்து, அறிந்து வர ஒற்றனையும் தேர்ந்தெடுத்தார்கள்.
9) இவை அனைத்தையும் தெரிந்து, அவற்றிற்கான தீர்வுகளைத் தர
மந்திரிகளை நியமித்தார்கள்.
10) மந்திரிகளின் ஒருமித்த முடிவுகளை, தர்மத்தின் அடிப்படையில் ஆலோசித்து முடிவெடுக்க ப்ரதான மந்திரி ஒருவரைத் தேர்ந்தெடுத்தார்கள்.
11) அவற்றில் சந்தேகமோ சிக்கலோ ஏற்படுகையில், அதனை தர்மத்தின் வழி செயலாற்றுவதற்கான தீர்வையும்,
போரின் வேளையில் எவ்வாறு தர்மம் தவறாத தந்திரத்துடன் செயல்பட வேண்டும் என்பதை சொல்லித்தரவும் ராஜகுரு என ஒரு ப்ராமணரை நியமித்தார்கள்.
12) இறுதியில் தனக்கு வரும் தகவல்களைக் கொண்டு, மந்திரிகளுடன் கலந்தாலோசித்து, ஒரு அரசன் பொதுமக்களின் நன்மைக்குத் தேவையான காரியங்களை
முடிவெடுத்து அறிவித்தான். இதில் ராஜகுருவாகத் திகழ்ந்தவரைத் தவிர அனைவரும் க்ஷத்ரியர்களே…. பிறர் இல்லை…. இவர்களின் வாழ்க்கையின் தர்மத்திலும் சில முக்கிய விதிமுறைகள் இருந்தன.
13) எவ்வாறு அரசன் அண்டை நாடுகளுடன் நட்புறவு வளர்த்துக் கொள்ள, அந்நாட்டின் இளவரசிகளை மணம்புரியலாம்
எனக் கூறப்பட்டதோ, அதே போல அன்றைய வீரர்களுக்கும் பிற நாட்டின் பெண்களைத் திருமணம் செய்து கொள்வதில் தடை இல்லை. எத்தனை திருமணம் வேண்டுமானாலும், அவனால் காப்பாற்ற முடிந்த அளவிற்கு செய்து கொள்ளலாம். இது நாட்டிற்கும் பாதுகாப்பானது.
14) இவர்கள் வாழ்வில் எங்கும் சென்று வரலாம்.
பிற நாடுகளுக்குச் சென்று வென்றால், அங்கும் சில – பல வீரர்கள் ஆரம்பத்தில் தங்கியிருந்து, அந்நாட்டின் போக்கை கவனித்து ஒற்று அனுப்ப வேண்டும். அதனால், சொந்த குடும்பம் ஒன்றே ஒன்று இருந்தால் சிரமம் என்பதால், வென்ற நாட்டிலேயே திருமணம் செய்து, அங்கே தங்கியிருக்கவும் உரிமை இருந்தது.
15) நிரந்தரமாக ஒரு ஊருக்குச் செல்லும் வீரர்களுக்கு சொந்த நாட்டிலிருந்து, அடையாள முத்திரை வழங்கப்பட்டதாகவும் புராணத்தில் உள்ளது.
16) இவர்களுக்கு சொந்தம், உறவு, நல்ல நாட்கள், துக்க நாட்கள், பண்டிகைப் பொழுது என எதுவும் நிரந்தரம் கிடையாது.
எந்நேரமும் எந்நொடியும் இவர்கள் தேச சேவைக்காக மட்டுமே தன்னை அர்ப்பணித்து வாழ வேண்டும் என்பது தர்மமாக்கப்பட்டது.
17) இவர்களின் மனைவிகளுக்கும், கணவன் போரில் இறந்தால், மறுமணம் செய்து வாழ வேண்டும் என்பதும் தர்மமாக்கப்பட்டது. இவர்களுக்கு குழந்தைகள் பெறுவதில் கட்டுப்பாடுகள் இல்லை.
மேலும், குடும்பத்தின் பாதுகாப்பிற்காக ஒரு க்ஷத்ரியன் ஒரே குடும்பத்திலிருந்து சகோதரிகளை மணந்து கொள்ளலாம் எனவும் விதிக்கப்பட்டது.
18) ஆண்கள் முழுக்கால் மறைக்கும்படி, வேஷ்டியைக் கச்சமாகப் பிரித்தணிய வேண்டும். இடையில் வேஷ்டியின் மேல் ஒரு இடை வஸ்த்ரம் இடுப்பை இறுக்கி அணிய வேண்டும்.
மேலாடையாக ஒரு சட்டை அணியவேண்டும். கையில் காப்பு அணியவேண்டும். காலில் தண்டை அணியவேண்டும். செருப்பு கண்டிப்பாக அணியவேண்டும்.
19) பெண்கள் மார்க்கச்சம் அணிய வேண்டும். இடையில் ஆண்கள் போலவே இடை வஸ்த்ரம் அணியவேண்டும். கால்களை மறைக்கும் அளவு தரை தொடாதபடி புடவை அணியவேண்டும்.
தலைக் கொண்டையை மறைத்து, வஸ்த்ரத்தால் மூட வேண்டும்.
20) க்ஷத்ரியர்களுக்கு மட்டும் எப்போதும் குறுவாள் வைத்துக் கொள்ளும் உரிமை உண்டு. அது ஆணாகிலும், பெண்ணாகிலும். இவ்வுரிமை பிற வர்ணத்தவருக்குக் கிடையாது.
இவர்கள் பெண்களுக்கோ, குழந்தைகளுக்கோ, முதியவர்களுக்கோ முக்கியத்துவம் தராது
வலிமை காட்டினால், அத்தகைய வீரர்கள் தண்டிக்கப்பட்டனர். அவர்களது அஸ்திரங்கள் பறித்து, க்ஷத்ரியப் பணியிலிருந்து விலக்கினால், அதுவே பெரிய அவமான தண்டனையாகக் கருதப் பட்டது.
இன்று போல் அன்றைய காலத்தில் ஓய்விற்கான வயது வரம்புகள் இல்லை. எனவே, ஒரு க்ஷத்ரியன், தன் உடலில் வலு உள்ளவரை
தேசத்திற்காக வாழ்ந்து தான் ஆக வேண்டும். எவ்வித அரசாங்க வேலை எனினும் செய்தாக வேண்டும், அதில் வித்யாசம் பார்க்கக் கூடாது எனும் தர்மமும் இருந்தது.
என்னதான் உடல்வலிமை இருந்த போதிலும், அஸத்யம் உரைத்தாலோ, தர்மத்தின் வழியற்ற ஏதேனும் ஒன்றை உடல் வலிவின் காரணமாகச் செய்தாலோ,
அவர்களுக்கு மரண தண்டனை அல்லது வனவாசம் தண்டனையாக விதிக்கப் பட்டது. அரசாங்கத்திற்கு துரோகம் செய்யும் க்ஷத்ரியர்கள், குடும்பம், சொந்தம், உற்றார், உறவினர், சம்மந்திகள் என கூட்டத்தோடு நாடு கடத்தப்பட்டார்கள். இவனுக்கு மரண தண்டனை விதித்தால், அவன் சார்ந்த ஒருவன் பழிவாங்கும் எண்ணத்தில்
மீண்டும் அரசுக்கு தொந்தரவாக இருப்பான் என்பதே முக்கிய நோக்காக இருந்தது.
இவர்கள் வாழ்க்கை, நாட்டின் எல்லைகள் எத்தனை தூரம் பிற நாடுகளை வென்று விஸ்தரிக்கப் படுகின்றதோ, அதுவரை மட்டுமே உண்டு. அரசன் உத்தரவு இல்லாமல் இவர்கள் நாடு தாண்டியோ, கடல் தாண்டியோ செல்லக் கூடாது.
இவர்களுக்கும் ப்ராமணர்களைப் போலவே பூநூல் உண்டு. இவர்களும் த்ரிகால ஸந்த்யாவந்தனம் செய்தார்கள். த்ரேதாயுக காலத்தில் க்ஷத்ரியர்களாதலால் இவர்கள் மாமிஸம் உண்டதாக எந்தவித புராணத்திலும் கூறப்படவில்லை. இவர்களுக்கு அரசாங்கத்திலிருந்து அதிகம் அண்ணம், காய்கறி,
பழங்கள் மற்றும் சன்மானங்கள் அளிக்கப்பட்டன. க்ஷத்ரியர்களுக்கு, அவர்கள் குடும்பத்தைப் பார்த்துக் கொள்ள ஊதியம் வழங்கப்பட்டது. எல்லா பொது இடங்களிலும், இவர்களுக்கான மரியாதை வழங்கப்பட்டது. இவர்கள் வாழ்க்கை, போரினையும், காவல், வேட்டை போன்றவற்றையுமே அடிப்படையாகக் கொண்டதால்,
இவர்களுக்கு ஆடை ஆபரணங்கள் பெரிதாக அளிக்கப்படவில்லை. முழங்கால் வரை பஞ்ச கச்சமும், இடையில் ஒரு பெரிய துண்டும், மேல் அங்கியில் தற்காப்புக் கவசமுமே முக்கியமானதாக இருந்தது.
அதனால், இவர்கள் வாழ்க்கை முறைக்கு ஒத்துவராத ஆடை ஆபரணங்கள் அணிந்து, அவற்றால் ஏதாவது அஸௌகர்யம்
ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், அவற்றை அணியக்கூடாது என்பது தர்மமாக்கப் பட்டது.
ஒரு ப்ராமண குருவிற்கு அடுத்ததாக, க்ஷத்ரியர்களுக்கு மட்டுமே ஆயுதங்கள் வைத்துக் கொள்வதற்கான அதிகாரம் அளிக்கப் பட்டிருந்தது. அவர் ஏதோ ஒரு காரணத்தால் க்ஷத்ரிய வர்ணத்திலிருந்து விலகிவிட்டால்,
அவரது ஆயுதங்களை அரசிடம் சமர்ப்பித்துவிட வேண்டும். அவர்களின் தலைவன் ஆனையின்றி, விலங்குகள் தவிர மனிதர்கள் மீது எவ்வித ஆயுதத்தையும் இவர்கள் ப்ரயோகப்படுத்தக் கூடாது என்பதும் தர்மமாக்கப்பட்டது.
இது தவிர, இவர்களைச் சில பகுதிகளாகப் பிரித்து, ஊழியத்திலிருக்கும் காலம் போக,
ஒவ்வொரு ஆண்டும் சில மாதங்கள் இவர்கள் யோகம், த்யானம் போன்றவற்றைப் பழகி, புதிதாக உருவாக்கப்பட்ட போர்முறையின் பயிற்சியையும் கூடவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவர்களில் ஒரு பகுதியினரது காலம் முடிந்து ஊழியத்திற்குத் திரும்புகையில், அடுத்த பகுதி வீரர்கள் செல்வர்.
இது எப்பொழுதும் விழிப்பு நிலையில் இருக்கும் மனதை அமைதிப்படுத்தவும், மனதை ஒருமைப்படுத்தவும், அதன்மூலம் இன்னும் தனது மனதின் சக்தியை அதிகப்படுத்தி, அதே சமயத்தில் பயிற்சிக்கலையை முழுதும் பழகிப்பார்ப்பதற்குமான காலம்…
ஆனால், இது விடுப்பு எனும் கணக்கில் வராது.
அப்போதும், இவர்கள் பணியில் இருப்பவர்களே என்பதால், அதற்கான ஊதியமும் அளிக்கப்பட்டது.
இவர்களது வாழ்க்கை முறைக்கான விதிமுறைகளே க்ஷத்ரிய தர்மம் எனப்பட்டது.
☘️தொடரும்☘️
🍁வாஸவி நாராயணன்🍁
@threader_app compile
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
