Vasavi Narayanan (Modi is My Familyman) Profile picture
Poet, Author, Writer, Samskritam Teacher, Temple Architecture and Cultural Science Researcher, and a Proud SANADHANA BHARATHY... MODI KA PARIWAR👍

Sep 23, 2020, 46 tweets

🌺ஆகாயப் பதிவுகள்... / Akashic Records of Chitra Guptan....🌺

#BharathVruksh

வணக்கம் நண்பர்களே…. இந்த தலைப்பைப் படித்தவுடன் எங்கோ கேள்விப்பட்டது போல் இருக்கிறதா?

ஆம்… நாம் தவறு செய்கையிலெல்லாம் நமது முன்னோர்கள்,

“நீ பண்ணற ஒவ்வொன்னையும் சித்ரகுப்தன் கணக்கு எழுதி வச்சிண்டிருப்பான்… தப்பு பண்ணினா, அதைப் பார்த்து தண்டனை தருவான்…”

என நமது சிறு வயதில் காதில் ஓதியது நினைவுக்கு வருகிறது அல்லவா? ஆம்… அன்று நம் முன்னோர் கூறியது உண்மை என்பதை இன்று ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

அவர்கள் அதனை அறிவியல் ரீதியாக மட்டுமே விளக்கிக் கூறியுள்ளனர். ஆனால், அது எவ்வாறு நம் வாழ்வில் தொடர்புடையதாகிறது என்பதை, வேத ஸ்லோகங்கள் மற்றும் விஞ்ஞானத் தரவுகளோடு இங்கே பார்ப்போம்.

மேலும், இது ஒரு ஆன்மாவின் முடிவு தொடர்புடைய விஷயம். அதனால், அதற்குக் கடவுளாக நாம் போற்றும்

யமதர்மனையும், அவரது Assistant கணக்காளர் சித்ரகுப்தனையும் வணங்கி இதை எழுத ஆரம்பிப்போம்.

"ஓம் சூரிய புத்ராய வித்மஹே
மகா காலாய தீமஹி
தந்நோ யமஃப் ப்ரசோதயாத்"

(யமதர்ம காயத்ரி மந்த்ரம்)

”ஓம் லேகினி ஹஸ்தாய வித்மஹே
பத்ர தராய தீமஹி தந்நோ சித்ரஃப் ப்ரசோதயாத்”
(சித்ரகுப்த காயத்ரி மந்த்ரம்)

நம் முன்னோர் இவர்களையும் ஸ்லோகத்தில் வணங்கத் தவறவில்லை.

📒அக்ர சந்தனி📒

நம் அனைவருக்கும், ஹிந்து மதம் என அழைக்கப்படும் ஸநாதன தர்மத்தில்... கடவுள், ஆன்மா, பிறவி, கர்மா, மறு பிறவி, ஸ்வர்க்கம், நரகம் போன்றவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை உண்டு.

ஒரு ஆன்மாவானது, ப்ரம்மனின் படைப்பினால் இப்புவியில் ஒரு உயிராக, ஒரு தேகத்தினைச் சேர்ந்து தோன்றுகிறது; விஷ்ணு பகவானின் பாதுகாப்பில் வாழ்ந்து, நன்மை, தீமைகள் புரிந்து; ருத்ரன் எனும் சிவபெருமானால் யமன் மூலம் நமது உடலிலிருந்து பிரிகிறது.

இதில் படைப்பினை நேரடியாக ப்ரம்மா செய்கிறார்.

விஷ்ணு ஜீவன்களைக் காக்கிறார்…. ஆனால் ருத்ரனோ, தர்மவானாகிய யமதர்மன் மூலம் நமது ஆன்மாவை இவ்வுடல் விட்டுப் பிரிக்கிறார்.

இதில் சித்ரகுப்தர் எங்கிருந்து வந்தார்? அவர் யார்?

சித்ரகுப்தர் (ஸமஸ்கிருதம்: चित्रगुप्त – rich in secrets) ஸநாதன தர்மத்தின்படி கடவுளாக உள்ளவர்.

புராண கூற்றுக்களின்படி பூலோகத்தில் மனிதர்கள் பண்ணும் பாவ, புண்ணியங்களைப் பற்றிய முழு விபரங்களையும் பதிவு செய்துவைப்பது இவர் தொழிலாகும்.

அக்ர சந்தனி என்பது தான் நமது சித்ரகுப்தன் கையில் இருக்கும் கணக்குப் பதிவு ஏட்டின் 📒பெயர்.

மனிதர்கள் பண்ணும் தீய மற்றும் நல்ல செயல்களுக்கு ஏற்றாற்போல; பாவம் பண்ணுபவர்களை நரகத்திற்கும், புண்ய கார்யங்கள் பண்ணுபவர்களை ஸ்வர்க்கத்திற்கும் அனுப்ப, இவரது ஏடுகளில் உள்ள அவர்களின் கர்மாக்களை வைத்தே முடிவு செய்வார் யமதர்மன்.

🍂புராணக் கூற்றுக்கள்🍂

மரணக் கடவுளான யமன், பூவுலகிலிருந்து ஆன்மாக்களை அழைத்துச் செல்வதற்கான காரண விபரங்களை; தான் எவ்வாறு அறிந்து அதன்படி அழைத்துச் செல்வது? என்பதை பிரம்மாவிடம் விளக்கிச் சொல்லும்படி கேட்டார்.

அவரோ சிவபெருமானிடம் செல்லும்படி அறிவுறுத்தினார்.

சிவபெருமான் சித்திரகுப்த மகாராஜாவை யமனுடன் அனுப்பி,

“புவியில் வாழும் ஜீவன்களின் பாப, புண்ய கணக்குகளைக் குறித்து வைக்கும் பணிக்கு இவனை நியமனம் செய்கிறேன். இவனது ஏட்டின் கணக்குப்படி, ஒரு ஆன்மாவை எவ்விதம் அழைத்து வருவது என்பதையும், அதன் பாப, புண்யக் கணக்குகளுக்கு ஏற்றவாறு

அவற்றின் கர்ம பலன்களை நிர்ணயிக்கவும் உன்னால் முடியும். அதன்பின், இவ்வாத்மாவின் கணக்குகளை ப்ரம்மனிடம் நீ ஸமர்ப்பித்தால், அதன் அடுத்த பிறவியை அவரும் இக்கணக்கைக் கொண்டே நிர்ணயிப்பார்…”

என வாழ்த்தி, சித்ரகுப்தனை இப்பணிக்கு அமர்த்துகின்றார்.

சித்திரகுப்தனும் புவியில் பிறக்கும் ஆத்மாக்களின் பிறப்பு முதல் இறப்பு வரை, அவை செய்த அனைத்துக் காரியங்களையும் எழுதி வைக்கின்றார். இவ்வாறு இவர் எழுதும் குறிப்புகளையே நமது புராணத்தில் சித்ரகுப்தன் கணக்கு என்கின்றனர்.

தமிழ்நாட்டில் (கருணீகர்) *கர்ணிகர்* மற்றும் வட இந்தியாவில்

காயஸ்தர் ஆகிய சமூகத்தினர், சித்திரகுப்தனைக் கடவுளாக வணங்குகின்றனர்.

(இதை நன்றாக மனதில் இருத்தி கொள்ளுங்கள். மேற்கண்ட இரு சமூகத்தின் பெயர்களும் ஸமஸ்க்ருதச் சொற்கள். அவற்றின் அர்த்தம்...
🍃கர்ணிகர் – செவி வழி வரும் ஒலியின் தொடர்புடைய செயல்களைச் செய்பவர்
🍃காயஸ்தர் – எழுத்தாளர்)

மேலே கூறிய கர்ணிக, காயஸ்த சமூகத்தினர் சித்ரகுபதனை, தங்களின் பாவ, புண்ய கணக்குகளை எழுதி, தமக்கு ஸ்வர்க்க நரகங்களைத் தருபவர் என்பதால், தெய்வமாகத் தொழுகின்றனர்.

“இவ்வார்த்தைகள் ஏன் ஒரு சமூகத்தின் பெயருக்குக் காரணமானது?”

”இவர்களுக்கும் சித்ரகுப்தனுக்கும் என்ன சம்பந்தம்?”

“இதற்கும் அறிவியலுக்கும் சம்மந்தம் உள்ளதா?”

“புராணங்களில் அறிவியல் எங்கிருந்து வந்தது?”

போன்ற அனைத்துச் சந்தேகங்களுக்கும் பதில்களைப் பார்க்கலாம்…

ஸமஸ்க்ருதத்தில் கர்ணம் என்றால் காது. கர்ணிகர் என்றால் செவி, ஒலி அலைகள், எண்ண அலைகள் ஆகியவற்றின் தொடர்புடைய செயல்களைச் செய்பவர்.

காயஸ்தர் என்றால் எழுத்தாளர். நம் கர்மா, ஒலி அலைகளையும் உள்ளடக்கியது. அவற்றை கவனித்து எழுதி வைக்கும் கடவுள் சித்ரகுப்தன், அவற்றை செவியால் கூர்மையாக உள்வாங்கி, எழுதுகிறார் எனும் காரணத்தால், அவரை வணங்குகின்றனர்.

அவரது தொழிலின் பெயரையே தனது சமூகத்தின் பெயராக வைத்துக் கொண்டுள்ளனர்.

இதுவே இச்சமூகங்களின் பெயருக்கான காரணம்.

இவர்கள், கர்மாக்களின் மூலம் மட்டுமே வாழ்க்கை அமையும் என்பதை ஏற்பதால் சித்ரகுப்தனையே முதன்மைத் தெய்வமாக வழிபடுகின்றனர். இவரே கர்ம வினையை மாற்ற முடியும் என்றும் நம்புகின்றனர்.

சித்ரகுப்தன் என வர்ணிக்கப்படுபவர், நம் கர்மாக்களை எழுதி வைக்கிறார் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். அப்படியானால்...

ஒவ்வொரு மனிதனும் என்னென்ன செய்கிறான் என்பதை அவர் ஒருவர் எப்படி அறிகிறார்?

எப்படி அத்தனையையும் எழுதி வைக்க முடியும்?

போன்ற சந்தேகங்கள் வருகிறதல்லவா?

இதற்குச் சற்று அறிவியலை ஆராய்வோம்.

நம் ஒவ்வொருவரின் உள்ளும் ஒருவித மின்காந்த சக்தி இருக்கின்றது. இதைத் தான் The Intelligence Information Field – IIF என்கின்றோம்.

இந்த மின்காந்த சக்தியே, நம் உடலின் உணர்ச்சிகள், நமது எண்ணங்கள், மரபணுக்களின் தன்மைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி,

நம்மை வழி நடத்துகின்றது. ஒரு மனிதனின் அனைத்து எண்ண அலைகளும் இந்த IIF ல் பதிவாகி விடுகின்றது. இன்னும் புரியும்படி சொல்லப் போனால்...

நாம் ஒருவருடன் நேரில் பேசுகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். நம்மைப் பொறுத்தவரை…

“நம் மனதில், நாம் சொல்ல வேண்டிய விஷயம் உதிக்கிறது.

அது நாம் சொல்ல வேண்டிய வார்த்தைகளாக வாய் வழியே ஒலியலைகளாக மாறி வருகிறது... பின்னர் எதிரில் இருப்பவர் காது ஒலியலைகளை ஈர்த்துக் கொண்டு, அதனை மூளைக்கு அனுப்புகிறது, மூளை அதைப் புரிய வைக்கிறது…”

என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறோம்?? அது முழுதும் சரியல்ல. பாதிதான் சரி.

“நாம் பேச வேண்டிய விஷயம் முதலில் நம் மனதில் தோன்றுகிறது.
அது எண்ண அலைகளாக மாறி நமது மூளைக்குச் செல்கிறது.
அதை நமது மூளை வார்த்தைகளாக மாற்றி, ஒலியலைகளாக வாய் வழியே தருகிறது.
அவை விண்வெளியில் சென்று பதிவாகின்றன...

பின்னர் விண்வெளியிலிருந்து மீண்டும் ஒலி அலைகளாகவே

திரும்பி வருகின்றன.
கேட்பவர் செவி, ஒலியலைகளை ஈர்க்கிறது. அவற்றைத் தனது மூளைக்கு அனுப்புகிறது.
மூளை ஒலியலைகளை மீண்டும் எண்ண அலைகளாக மாற்றி மனதுக்கு அனுப்புகிறது…”

இன்னும் எளிதில் புரியும்படி சொல்ல வேண்டுமானால், நமது அலைபேசியிலிருந்து செல்லும் ஒலி அலைகள்,

நெட்வொர்க் ஸ்டோரேஜைச் சென்றடைந்து அங்கே பதிவாகின்றன, பின்னர் நாம் தொடர்பு கொள்ளும் எண்ணுக்கு அவை திரும்பி வருகின்றன, அதை அவர் கேட்க முடிகிறது.

இதே டெக்னிக் தான். இவ்விதமாக நாம் பேசுவது, நினைப்பது, செய்வது போன்ற எல்லாவற்றிலும் நமது எண்ண அலைகள் இருக்கின்றன.

அவையே விண்வெளியில் சென்று பதிவாகின்றன.

புராணத்தின் படி இவற்றைத்தான் நம் ஸநாதன தர்மத்தில் முன்னோர்கள், கர்ம வினை, சித்ரகுப்தன் பதிவுகள், ஞானமயக் கோசம் என்றெல்லாம் கூறியிருக்கின்றனர்.

நம் மன உணர்வுகள், குணங்கள் எல்லாம் இந்த IIF ன் மூலம் தான் இயக்கப்படுகின்றது.

இது நம் தாயின் கர்ப்பகால எண்ணங்கள், நம் பூர்வ ஜென்ம எண்ணங்கள் ஆகியவற்றை உள்வாங்கி, அதன்படி நம்மை இயக்குகின்றது. இதுதான் நம் கர்மவினை என்பது.

தீவிரமான தியானத்தினால் மனப்பயிற்சி பெறலாம், அத்தகைய தீவிர மனப்பயிற்சியால் மட்டும் தான் IIF ஐ மாற்ற முடியும், நம் சித்தர்கள் செய்தது போல்.

இவ்வாறு பதிவாகும் எண்ண அலைகள் பற்றி நவீன விஞ்ஞானம் என்ன சொல்கிறது?

🔎அறிவியல்🔍

Quantum Physics (க்வான்டம் பிஸிக்ஸ்) கூறும் ரகசியம்...

Sound Technology யாலும், Photon Technology யாலும், மனோசக்தியைப் பெற்று, நாம் அனைத்தையும் சாதிக்க முடியும் என்று இக்கால Quantum Physics

தெள்ளத் தெளிவாக அல்ல, அக்கால வேத சாஸ்திரங்கள் கூறியதையே மீண்டும் கூறுகின்றது.

Sound Technology – கோயில்களின் அமைதியில், நம் காதுகளில் விழும் ஆத்மார்த்தமான ஸமஸ்க்ருத வேத மந்திரங்கள், கோயில் மணியோசை போன்றவை.

Photon Technology – வீடுகளிலும் கோயில்களிலும் நாம் ஏற்றும் தீபங்களின் சுடர், கற்பூரம், விளக்கு ஆகியன.

அதீத அமைதி குடிகொண்டிருக்கும்படி, மலைகளிலும், குன்றுகளிலும், ஊர் எல்லைகளிலும், ஆற்றங்கரையின் அருகாமைகளிலும் தான் பொதுவாகக் கோயில்கள் இருந்தன.

மேலும் சற்று மேடான இடங்களில் தான் கோயில்கள் இருக்கும். அங்கிருக்கும் கல்தூண்களும், சுட்ட செங்கற்களும், அதன் கர்பக்ருஹத்தின் உள்கட்டுமான அமைப்பும், Cosmic Energy எனப்படும் அண்டவெளி ஆற்றலைக் கலசம் மூலம் இழுத்து உள்ளே இறக்கும்.

அவை இந்த வேத மந்த்ர ஒலிகள் மற்றும் விளக்கு,

கற்பூர தீப ஒளிகள் போன்றவற்றின் மூலம் நம்மை வந்து சேரும். இதன் பலன், விரைவாக நமது மனம் நமது கட்டுப்பாட்டிற்குள் வரும்.

ஒருமித்த மனதின் வேகம் மிகவும் அதீதமானது. நாம் நம்பமுடியாத அளவிற்கானது. நமது ஸநாதன தர்மத்தில், எல்லாவற்றையும் விட வேகமானது மனம் என்பர்.

ஒளியானது ஒரு வினாடிக்கு 1,86,000 மைல் வேகத்தில் பயணம் செய்து ஓராண்டில் கடக்கும் தொலைவை, *ஒளி ஆண்டு* என்பர். இந்த வேகத்தை எதுவும் எட்ட முடியாது, இதற்கு அருகில் கூட வரமுடியாது என்கிறது நவீன விஞ்ஞானம்.

ஆயினும் *மனோவேகம்* என்பது 500 ஒளி ஆண்டுக்கு அப்பால் உள்ளதையும்,

ஒரு நொடியில் நினைக்கும், அடையும் சக்தி கொண்டது. ஆனால் அவ்வேகத்தில் நாம் போக முடியுமா? நினைப்பது வேறு, போவது வேறு அல்லவா?

ஆயினும் நமது சாதுக்கள், சந்நியாசிகள், ரிஷிகள், சித்தர்கள் எல்லோரும், அந்த வேகத்தில் செல்ல முடியும் என்கின்றனர். அதாவது, நமது மனத்தின் எண்ண அலைகளைக் கொண்டு,

அதனை ஒருமித்து, எந்த விஷயம் நமக்குத் தேவையோ அதை க்ரஹிக்க முடியும் அண்ட வெளியிலிருந்து என்கின்றனர்.

ஏற்கனவே, நமது எண்ண அலைகள் அண்டவெளியில் பதிவாகின்றன என்பதை நாம் பார்த்தோம். இது இந்த சதுர்யுகத்தில்....

இதே போன்று பல்லாயிரம் சதுர் யுகங்கள் கடந்துவிட்டன.

அவற்றிலும் நாம் இதே போல் பிறவியெடுத்து வாழ்ந்து மடிந்திருக்கிறோம். அதன் முழு எண்ணப்பதிவுகளும் அண்டவெளியில் இருக்கும்.

அவற்றிலிருந்து, முன்பு இதே போன்ற சதுர்யுகத்தில் இப்பிறவிக்கு என்ன நடந்தது என்பதை க்ரஹித்து, அதையே நமக்கு எதிர்கால வாக்காக சித்தர்களும் முனிவர்களும் சொல்கின்றனர்.

இவ்வலைகளில் உள்ள இக்குறிப்புகள், இப்ரபஞ்சம் அழிந்து, அடுத்த ப்ரம்மா வரும்வரை இருக்கும். பின் மீண்டும், ஒரு ப்ரளயம் வந்து, அண்ட சராசரங்களும் மாறும் போது, மறுபடி ஒரு ப்ரம்மா தோன்றுவார்.

அப்போது மீண்டும் இதே எண்ண அலைகளின் பதிவுகள் துவங்கும்.

இவ்வலைகளின் பதிவுக்கேற்றபடி தான் நமது வாழ்க்கை தொடரும். ஒவ்வொரு வினைக்கும், கட்டாயம் எதிர்வினை உண்டு என்பதையும் நாம்,

Newton’s Third law
“Every Action has an Equal and Opposite Reaction”

என்பதில் விஞ்ஞான பூர்வமாகப் பார்த்துள்ளோம். அதேதான் இங்கும்….

நம் எண்ணங்கள் நேர்மறையானால் அதற்கேற்ற நற்பலன்களும், எதிர்மறையானால் அதற்கேற்ற தீயபலன்களும் அந்த எண்ணம் சார்ந்தவரிடம் திரும்ப வரும்.

அவை நேரடியாகவும் வரும், இல்லையெனில் நாம் யாருக்கு என்ன நன்மை/தீமை செய்தோமோ, அல்லது செய்ய நினைத்தோமோ அவரது எண்ன அலைகளின் வழியாக சொல்களாகவோ

செயல்களாகவோ திரும்ப வரும். அதையொட்டி, அவ்வெண்ண அலைகளுக்கேற்ப அடுத்த பிறவியில் வாழும் இடமும், நாம் பிறக்கும் குடும்பமும் இருக்கும்.

எண்ணப்பதிவுகளின் பலனுக்காகவே அந்த ஆன்மா அடுத்து ஒரு உடலைக் கொண்டு பிறக்கும். இதுவே கர்மவினை என்று நமது ஸநாதன தர்மத்தில் கூறப்படுகின்றது.

இந்த எண்ணப் பதிவுகளையே சித்ரகுப்தன் எழுதி வைக்கும் நமது பாவ புண்ணியக் கணக்குகள் என முன்னோர் கூறினர்.

நண்பர்களே…. சற்று சிந்தித்துப் பாருங்கள்…

நமது முன்னோர்கள் சொன்ன அநேக விஷயங்கள், கதைகள் எல்லாம் அறிவியல். ஆனால், அவற்றைப் புரிந்து கொள்ளும் பக்குவம் நமக்கில்லாத காரணத்தால்

அவற்றைக் குழந்தைகளுக்குக் கூறும் கதை போல உருவகப்படுத்திக் கூறியிருக்கிறார்கள்.

அதை Decode செய்து அறிவியலோடு சேர்த்துப் பார்க்கையில், நமக்கு அக்கதைகளின் அறிவியல் விளங்கும்….

பெருமை கொள்வோம்…. ஸநாதன தர்மத்தைக் கொண்ட இந்த பாரதத்தில் பிறந்ததற்கு !!

🍁வாஸவி நாராயணன்🍁

இது எளிமையாக புரிவதற்காக எழுதப்பட்ட பதிவு. இன்னும் அறிவியல்பூர்வ விளக்கம் வேண்டுவோர், இவை பற்றிய ஆய்வுத் தளங்களில் உள்ளவற்றைப் பார்த்துக் கொள்ளுங்கள் சகோதரர்களே... நன்றி.

🍁வாஸவி நாராயணன்🍁

@threader_app compile

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling