சென்றுவாருங்கள் “தாத்தா” என்னுடைய அப்பாவின் அப்பா ஆக தான் உங்களை பார்த்தேன். எங்கள் குடும்பத்தின் மேல் அவ்வளவு அன்பு உங்களுக்கு. நீங்கள் எங்கள் வீட்டில் இருந்த ஒரு ஒரு நாளும், எனக்கு நினைவிருக்கிறது. எங்கள் வீட்டில் அந்த அறை இன்னிக்கு யோசித்தாலும் நீங்கள் இருக்கின்ற #HinduMunnani
மாறி தான் தோன்றுகிறது. அவ்வளவு அன்பு காட்டினீர்கள் எங்கள் மேல். என் அக்கா விற்கு இருதய பிரச்னை சிறிய வயதில் இருந்த பொழுது வந்து "சரி ஆயிடும், அழாத டா" என்று அப்பாவிடம் சொன்னீர்கள். சிகிச்சை இற்கு செல்லவேண்டிய அக்கா, சிகிச்சை வேண்டாம் சரி ஆகி விட்டது என்று மருத்துவர்கள் சொன்னார்
அவர்களே நம்ப வில்லை. அவ்வளவு ஷக்தி உங்கள் வார்த்தைக்கு. பெயர் வைத்ததே நீங்கள் தான். ஆசையாக என்றும் என் அப்பா அம்மா கூப்பிடுவது போல் “குட்டால்” என்று கூப்பிடுவீர்கள். உங்களை சுற்றி இருக்கும் காவலர்களின் துப்பாக்கி எல்லாம் வாங்கி பாத்திருக்கிறேன்.
அந்த 10-12 வயசில் அந்த துப்பாக்கி எல்லாம் எனக்கு பெரிய விஷயம். இது போல் நூறு நினைவுகள் கூறலாம். சுற்றி பாதுகாவலர்கள் இருந்தாலும் எங்கள் வீட்டு அறையில் நீங்கள் மட்டும் தான், சந்தோஷமாக இருந்தோம் அந்த மாதங்கள் நீங்கள் இருந்தபொழுது. ஒரு ஒரு வாரமும் வந்து சாப்பாடு தரும்பொழுது விரும்பி
சாப்பிடுவீர்கள். மனதார ஆசிர்வாதம் செய்திருக்கிறீர்கள். இப்பவும் செய்வீர்கள், எங்களை மேலிருந்து பார்த்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். ஒரு தீபாவளி எங்களோடு besant nagar வீட்டில் கொண்டாடுனீர்கள். அப்பொழு எனக்கு பதினாலு வயது.
அப்பொழு எனக்கு பதினாலு வயது. அப்பொழுது தான் என்னிடம், உங்கள் தலையில் ஏன் அந்த காவி தொப்பி என்று கேட்டபொழுது அந்த கதையை சொன்னீர் எனக்கு. மாடியில் பட்டாசு வைத்தோம், எங்களோடு சேர்ந்து இருந்தீர்கள். ஹிந்து முன்னணி தலைவராக ஒருபொழுதும் உங்களை நான் பார்க்க வில்லை.
என் தாத்தா ஆக தான் பார்த்தேன், பார்ப்பேன். காயத்ரி மந்திரத்தின் ஷக்தி ஐ சொல்லி கொடுத்தீர்கள். எப்பொழுதும் காயத்ரி மந்திரத்தை சொல்லி கொண்டே இருப்பீர்கள். உங்களிடம் இருந்து கற்றுகொண்டவை பல. என்னை பார்த்தவுடன் "வா வா வா" என்று சிரிப்பீர்கள். மறக்கவே முடியாத அனுபவத்தையும்,
பாடங்களையும் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் சொல்லி கொடுத்திருக்குறீர்கள். எங்கள் குடும்பம் மிகவும் கடமை பட்டு இருக்கிறது உங்களுக்கு. அம்மா விற்கும் அப்பா விற்கும் வாத வேறுபாடுகள் இருக்கும்பொழுதெல்லாம் அவர்களை சேர்த்து வெய்துருக்குறீர்கள்.
நாங்கள் இன்றைக்கு இப்படி இருப்பதற்கு முக்கிய பங்கு உங்களையே சேரும்.
எல்லா நல் அனுபவங்களுக்கும், உங்களுடன் வருஷ கணக்கில் கூட இருக்கும் பாக்கியத்தை கொடுத்ததற்கு நன்றி “தாத்தா”.
இம்மண்ணை விட்டு பிரிந்தாலும், எனக்கும் என் குடும்பத்தாருக்கும் “தாத்தா” ஆக எப்பொழுதும் இருப்பீர்கள் எங்களோடு. சென்று வாருங்கள். 🙏
என்றும் உங்களின் பேரன்,
குட்டால் ❤️
Share this Scrolly Tale with your friends.
A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.
