Dr.Strange Profile picture
Dharmo Rakshati Rakshitah - Protect the Dharma, Dharma will protect you!

Jun 5, 2021, 6 tweets

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சூழ்ச்சி செய்துதானே மஹாபாரதாப் போரை வென்றார்? என்று பலரும் கேட்பதுண்டு. 

ஆம் சூழ்ச்சி செய்தே கிருஷ்ணர் வென்றார் !

கௌரவர் அணியில் பீஷ்மர், குரு துரோணாச்சாரியர், கர்ணன் என்னும் பல வல்லவர்களைச் சூழ்ச்சி செய்து தன் பக்கம் சேர்த்துக் கொண்டார் சகுனி

யாதவர்களின் படை அனைத்தையும் துரியோதனன் பெற்றான். கிருஷ்ணனின் வழிகாட்டுதல் மட்டுமே பாண்டவர்களுக்குக் கிடைத்த ஒரே ஆயுதம். `என்னை விடவும் சூழ்ச்சிக்காரன் நீ’ என்று சகுனி கூறியதும் ‘ஆம். சூழ்ச்சியின் நோக்கம் தர்மம் என்றால் சூழ்ச்சியும் தர்மமே’ என்றார் கிருஷ்ணர்

இருப்பினும் கிருஷ்ணர் இந்த போரின் முடிவில் தன் சாம்ராஜ்யமே அழியும் என்பதை நன்கு உணர்ந்தார். காந்தாரியின் சாபத்தால், துவாரகையில் அதர்மம் தலைதூக்கி, தன்னால் எதையும் தடுக்க இயலாமல் மனம் நொந்து முக்தி அடைந்தார். சூழ்ச்சியில் வரும் வெற்றி பாவம்.

அதன் கர்மத்தை அனுபவிக்கத் துணிந்த பின்பே கிருஷ்ணன் பாண்டவர் அணியில் சேர்ந்தார்.

இப்படி காலத்தின் கட்டளைகளுக்கு நானும் கீழ் பணிவேன் என்று உணர்த்தினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling