ஈழ வியாபாரி Profile picture
பங்கர் பிரபா | தரவாடு சைமன் | RX 100

Jun 13, 2021, 10 tweets

புலிகளால் படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் :

அமிர்தலிங்கம் இவர் அகிம்சாவாதி.
தமிழர்களின் நலனுக்காக தொடர்ந்து போராடியவர்.
இவர் தமிழ்மக்கள் மத்தியில் மிகுந்த நல்ல பெயர் எடுத்தவர் இவர் சார்ந்த தமிழர் விடுதலை கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் ஆனார்.

அவருக்கு முன் எந்த தமிழரும் எதிர்கட்சி தலைவர் அந்தஸ்த்துக்கு வந்தது இல்லை

1983 ல் தமிழர்க்கு எதிரான சட்ட திருத்தத்தை கண்டித்து அந்த பதவியை துறந்தார்.

அமைதிப்படை இலங்கையில் செயல்பட்ட காலத்தில் சிங்கள பிரேமதாசா அதை எதிர்த்தார் .

இந்திய அரசு படை எடுத்து வந்திருப்பதாக சிங்களவர் கருதினர். அதனாலேயே ராஜிவ்வை ஒரு சிங்கள சிப்பாய் துப்பாக்கி கட்டையால் தாக்க மூயான்றான். இந்த சூழ்நிலையில் புலிகளும் அமைதி படையை எதிர்த்தனர்

அதேவேளை அமிர்தலிங்கம் அமைதிபடையால் மக்களுக்கு பாதுகாப்பு என்று கருதினார் . மேலும் ராஜிவை

ஜெயவர்தனே ஒப்பந்ததை ஆதரித்தார் புலிகள் அதை ஏற்று இருந்தால் தமிழர்க்கு தனி மாகாணம் கிடைத்து இருக்கும்

இதனிடையே யோகேந்திரன் என்ற அகிம்சாவாதி அரசியல்வாதியுடன் சேர்ந்து எல்லா தமிழ் இயத்தையும் ஒன்றினைக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டார்.

யோகேந்திரன் புலிகளையும் அனுகினார் தாராளமாக சேர்ந்து செயல்படலாம் என்ற ஆர்வம் காட்டிய புலிகள் பேச்சுவார்த்தைக்கு கொழும்பில் உள்ள அமிர்தலிங்கம் வீட்டுக்கு 3 புலிகள் பிரதிநிதிகளை 13 ஜூலை 1989 அன்று அனுப்பி வைத்தனர் விசு ,சிவகுமார் ,விக்னா என்ற மூவரும் வந்தனர்.

தாங்கள் பேச்சுவார்த்தைக்கு வரும் பொழுது சோதனை இட கூடாது அது தங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் என புலிகள் முன் நிபந்தனை வைத்து இருந்தனர் இவர்களும் தமிழர் நலனுக்காக தானே போராடுகிறார்கள் நம்மளை ஏன் கொல்ல போகிறார்கள் என்று அப்பாவியாக நம்பிய அமிர்தலிங்கமும் , யோகேஸ்வரனும் அவர்களை

சோதனை இட கூடாது என்று பாதுகாப்பு அதிகாரிக்கு உத்தரவிட்டனர்

அவர்கள் வந்து அறையில் பேச்சு வார்த்தையும் நடந்தது
அப்பொழுது துப்பாக்கியை எடுத்து அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் சுட்டு கொன்றனர்

இவர்கள் வந்ததுமுதலே இவர்கள் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பாதுகாவலர் நிஸ்ஸாங்க் உடனே

அறையில் நுழைந்து இவர்கள் மூன்று பேரையும் சுட்டு கொன்றார்

புலிகள் ராஜிவ் கொலையை போலவே இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என சாதித்தனர். கொன்றவர்கள் இவர் இயக்க ஆட்கள் என்ற பொழுதும் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயன்றனர்

இங்கே 2000 ம் அண்டுக்கு பிறகு புலி ஆதரவு ஆட்கள் இந்த

படுகொலையை மாத்தையா தான் இந்திய உளவுத்துறை திட்டத்தின் படி செய்ததாக சொன்னார்கள்.

இந்த படுகொலை நடந்தது 1989 மாத்தையாவை புலிகள் அமைப்பு துரோக குற்றம் சாட்டியது.
1993 ல் இந்த 4 வருடத்தில் அமைப்பில் என்ன நடக்குதுனு கூட தெரியாமல் பிரபா அப்பாவியாவா இருந்தார்

புலிகள் எப்பொதும் தைரியமாக கொலை செய்வார்கள்.
அது அநியாய படுகொலை என்பதால் ஒத்து கொள்ள தொடை நடுங்குவார்கள். இப்படி பல படுகொலையில் நாடகம் ஆடி உள்ளனர்.

#அறிவோம்ஈழம்

Share this Scrolly Tale with your friends.

A Scrolly Tale is a new way to read Twitter threads with a more visually immersive experience.
Discover more beautiful Scrolly Tales like this.

Keep scrolling