திரு ஆவினன்குடி பற்றி யாரும் அறியா தகவல்கள் இன்று இந்ந உலகத்திற்கு அறிவிக்க உள்ளேன். உலகத்தை நிர்ணயம் செய்யக்கூடிய ஐந்து சக்திகள் ஒரே ஆலயத்தில் இருப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.

1
திரு -என்றால் மகாலட்சுமிதனம் , தான்யம் ,செளபாக்கியம் தரக்கூடியவள்.ஆ-காமதேனுகேட்கும் வரங்களை அள்ளிக்கொடுப்பவள்.இனன் -சூரியன்ஜாதக தோஷத்தை நிவர்த்தி செய்யக்கூடியவர்.

2
கு-பூமாதேவிபூமி தோஷங்கள், பூமி விற்பனை, பூமி வாங்க அருள் கொடுப்பவள்.டி-அக்னி உடல்கோளாறுகள், தீய சக்திகள், நெருங்கமால் நம்மைக்காப்பவர்.

3
ஒருமுறை கைலாயத்தில், லக்ஷ்மி , காமதேனு, சூரியன், பூமாதேவி, அக்னி ஆகியோர் சிவபெருமானிடம் சென்று “ஐயனே எங்கள் அனுக்கிரங்களை அசுரர்களின் பிரார்த்தனைகளுக்கு தந்து அருளியதால் ஏற்பட்ட தோஷங்களை நிவர்த்தி செய்யுங்கள் எனக் வேண்டிக் கேட்டபோது,

4
எம்பெருமான், “நீங்கள் தென் திசையில் நெல்லி வனத்தில் தங்கி தவம் செய்யுங்கள், அங்கு எனது சக்தி உங்களுக்கு அனுக்கிரகம் செய்யும் என்று சொன்னார்”. இச்செய்தி அசுரர்களுக்கு தெரியவர,

5
சிவபெருமான் பிரம்மனை, வேடனாக சென்று நெல்லி வனத்தில் தவம் செய்து கொண்டு இருக்கும் தேவர்களின் தவத்தைக் காக்குமாறு கூறினார் . அதன் பொருட்டு திருஆவினன்குடி சன்னதியில் பிரம்மா ஈரேழு உலகத்தில் எங்குமே இல்லாத வடிவத்தில் இங்கே வேடுவனாக காட்சி அளிக்கிறார்.

6
அச்சமயத்தில் நாரதமுனி கொண்டு வந்த ஞானப்பழத்திற்காக முருக பெருமான் மயில் மீது வலம் வரும் போது, திருஆவினன்குடி யில் தவம் செய்து கொண்டிருக்கும் தேவர்களின் தவத்தினால் ஈர்க்கப்பட்டு கோடி பிரகாசமாக மேற்கு திசையில் மயில் மீது அமர்ந்து

7
குழந்தை வேலாயுத சுவாமி யாக தேவர்களுக்கு அருள்பாளிக்கிறார்.
அசுரர்களை அழிக்க உதித்த வெற்றி வேலனை உடனே ஓடோடி வந்து தரிசித்த மயூரபடை சேனைத் தளபதி வீரபாகுவும் இங்கே உள்ளார். இத்திருக்கோவிலில் மேலும் சிவ ஸ்வருபமான க்ஷேத்ரபால பைரவர், தக்ஷிணா மூர்த்தி தெய்வங்கள் அருள்பாளிக்கிறார்கள் .8
இந்திரன் தனது ஆணவத்தால் சிவயாக பிரசாதத்தை ஏற்றுகொள்ளமால் இருந்தமையால் சனிபகவான் கோபம் கொண்டு இவரை பிடித்து இந்திர பதவியை இழக்க செய்தார்.

9
இந்திரன் சிவபெருமானிடம் ஓடோடி மன்னிப்பு கேட்க, எங்கு கிழக்கு நோக்கி சனி இருப்பானோ அங்கு போய் மலர்களால் அர்ச்சித்து வர உனக்கு இந்திர பதவி கிடைக்கும் என சிவபெருமான் கூறினார்.

10
இந்திரனும் திருஆவினன்குடியில் கிழக்கு திசையில் உள்ள அதீத சக்தி வாய்ந்த சனிபகாவானிடம் அர்ச்சித்து பரிகாரம் செய்து கொண்ட இந்திரன் இத்தலத்தின் வெளி பிராகராத்தில் காட்சியளிக்கிறார். பதவி இழந்தவர்கள் இங்கு அபிஷேக ஆராதனை செய்து வர இழந்த பதவியை திரும்பப்பெறுவர்.

11
இங்கு அதிகாலை முதலில் கணபதிக்கு பூஜை , சிவபூஜை செய்த பிறகே முருகப்பெருமானுக்கு அபிஷேக பூஜைகள் நடைபெறுகிறது.மேலும் இங்கு வடக்கு நோக்கி காட்சி தரும் துர்க்கை அம்பிகை மனோபலம் அளிப்பவளாக உள்ளாள்.

12
அறுபடைகளில் மூன்றாவது படை வீடாக திருஆவினன்குடி போற்றப்படுகிறது. அருணகிரிநாதர் பாடிய திருப்புகழை கேட்டு
மகிழ்ந்து முருகப்பெருமான் அவருக்கு ஜெப மாலை தந்தருளிய
க்ஷேத்திரம் இது.

13
“அதிசயம் அனேக முற்ற பழனியம்பதி” என்ற பெயருக்கு ஏற்றார் போல, தீய சக்திகள் மற்றும் தீய எண்ணங்கள் உடையவர்கள் இத்திருக்கோவிலை தரிசனம் செய்ய இயலாது. இங்கு அனுதினமும் வரும் பக்த அன்பர்களிடம் கேட்டு பாருங்கள், பிரச்சனைகள் என்றால் அங்கு வேல் வரும்.
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா . .

🇮🇳
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!