H Raja Profile picture
Aug 22, 2019 6 tweets 1 min read Read on X
எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில் அத்தனைபேருக்கும் நமது வணக்கங்கள்...

பாரதம் விடுதலை பெற்றபோது காஷ்மீர் மன்னர் ஹரிசிங்கிற்கு இந்தியாவுடன் சேர்வது சரியா தவறா என்ற குழப்பம் இருந்தது. இது விஷயமாக அவர் பேசுவதற்காக சர்தார் வல்லபாய் பட்டேல் அன்று ஆர்எஸ்எஸ் அகில பாரத தலைவராக...1/6
இருந்த ஸ்ரீ குருஜி (மாதவ சதாசிவ கோல்வல்கரை) அனுப்ப முடிவு செய்தார் அதற்கு ஸ்ரீ குருஜியும் சம்மதம் தெரிவித்தார்.

ஸ்ரீ குருஜி டெல்லியிலிருந்து விமானம் மூலம் 1947 அக்டோபர் 17 அன்று ஸ்ரீநகர் சென்றார். மறுநாள் ஸ்ரீ குருஜி அரண்மனைக்குச் சென்றதும் மன்னர் ஹரிசிங் அவரது மனைவியும் ...2/6
வாசலுக்கு வந்து வரவேற்றனர்.

மன்னர் ஹரிசிங்குடன் ஸ்ரீ குருஜி பேச்சுவார்த்தை நடத்தினார். பாரதத்துடன் சேர்வதால் தனக்கு உள்ள கஷ்டங்களை மன்னர் ஹரிசிங் ஸ்ரீ குருஜியிடம் எடுத்துரைத்தார். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்ட ஸ்ரீ குருஜி காஷ்மீர் பாரதத்துடன் தான் இணைய வேண்டும் என்பதற்கான...3/6
தேச நலன் சார்ந்த காரணங்களை விளக்கினார்.மன்னருக்கு இருந்த சந்தேகங்கள் கொஞ்சம்கொஞ்சமாக நீங்கின. ஸ்ரீ குருஜியின் பேச்சு அவரது மனதை மாற்றியது.இருந்தாலும் ஸ்ரீ குருஜி கூறிய கருத்துக்கள் பற்றி தான் யோசிப்பதாக தெரிவித்தார்.

ஸ்ரீநகரில் இருந்து டெல்லி திரும்பிய ஸ்ரீ குருஜி,காஷ்மீர்...4/6
மன்னருடன் நடத்திய பேச்சுவார்த்தை பற்றி சர்தார் வல்லபாய் பட்டேலிடம் விளக்கினார்.

பாரதத்துடன் ஜம்மு காஷ்மீரை இணைப்பதற்காக மன்னர் ஹரி சிங்கின் அதிகாரபூர்வமான கடிதம் அக்டோபர் 26 ஆம் தேதி பட்டேலுக்கு வந்து சேர்ந்தது...5/6
காஷ்மீரை பாரதத்துடன் இணைத்ததில் முக்கிய பங்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஸ்ரீ குருஜிக்கு இருந்தது என்பது வரலாறு...6/6

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with H Raja

H Raja Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @HRajaBJP

Nov 28, 2020
மகான்களின் வாழ்வில்

எத்தனையோ மகான்கள் இந்த ஞானம் பூமியில் அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்...

குளிர் காற்று ஊசியாகத் துளைத்தது. மடத்தின் வராண்டாவில் குறுக்கும் நெடுக்குமாய் கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம் போல கையில் கோலுடன் குலாவிய அந்த சுவாமி குளிரால் நடுங்கினார். 1/6
அவர் மனதில் அப்போது ஆசையொன்று தலை தூக்கியது. 'கம்பளி சால்வை ஒன்று இருந்தால் எவ்வளவு இதமாக இருக்கும்' என்று நினைத்தார். சற்று நேரத்தில் அந்த ஆசையை முற்றிலும் மறந்து போனார்.

மறுநாள் பக்தர் ஒருவர் புதுச்சால்வை ஒன்றை அந்த சுவாமிக்கு காணிக்கையாக்கினார்.
சுவாமி திடுக்கிட்டார். 2/6
அவருடைய ஆன்மீக விழிப்புணர்வு எழுந்து நின்றது:'ஆ, என்னுடைய சின்ன ஆசையைக் கூட ஆண்டவன் பூர்த்தி செய்துவிட்டார். இதுபோலவே என் மனதில் ஏதாவது தீய எண்ணங்கள் புகுந்து, அதுவும் நிறைவேறினால் நான் என்ன ஆவேன்!'
இந்த சிந்தனை உதித்த உடனே கடவுளிடம் அவர் மனமுருகப் பிரார்த்தனை செய்தார்;

3/6
Read 6 tweets
May 18, 2020
திராவிட அரசியல்...

சாராய ஃபேக்டரியை நடத்திக்கொண்டே டாஸ்மாக்கை மூடச் சொல்வதும்,

இந்தி சொல்லிக்கொடுக்கும் பள்ளிகள் நடத்திக்கொண்டே இந்திய எதிர்ப்பதும்,

கர்நாடகாவிடமிருந்து தண்ணீர் தரவில்லையென்றால் தமிழ்நாடு தனி நாடு ஆகுமெனச் சொல்லிக்கொண்டே...
ஜோலார்பேட்டை தண்ணீர் சென்னைக்கு தரவிடமாட்டோமென்கிறதும்,

தன்னுடைய பிள்ளைகளை பல லட்சங்களை கட்டி பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டே...

அதே கல்வியை கிராமத்து ஏழைகளுக்கு இலவசமாக தரும் நவோதயாவை எதிர்ப்பதும்...

இந்துமத நம்பிக்கைகளை கேவலப்படுத்தி பேசிக்கொண்டே...
கிறிஸ்துவ, இஸ்லாமிய மதகூட்டங்களில் பங்கேற்பதும்...

லட்சக்கணக்கான கோடிகளை சொத்து சேர்த்து வைத்துக்கொண்டு...

ஊழலை நடமாட விடமாட்டோம் என்பது தான்

திராவிட அரசியல்!
Read 6 tweets
Dec 17, 2019
சுதந்திரப் போராட்டத்தில் வ.உ.சி. சுமார் 6 வருட காலம் சிறைவாசம் அனுபவித்தார். சிறையில் செக்கிழுத்து எண்ணற்ற துன்பங்களை அனுபவித்தார். அவர் விடுதலையாகி வெளியே வந்தபோது சிறைவாசலில் அவரது மனைவி, சுப்ரமணிய சிவா உள்பட நான்கு பேர்களே இருந்தனர்.
கோடிக்கணக்கில் கொள்ளையடித்து, சுமார் 15 நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்த ப.சிதம்பரம் ஊழல் வழக்கில் கைதானார். சிறையில் கட்டில், தலையணை, வெஸ்டர்ன் டாய்லெட், டி.வி., வீட்டிலிருந்து சாப்பாடு என எல்லா வசதிகளையும் கேட்டுப் பெற்றார்.
சிறைவாசம் அவரது உடல் நலனை மிகவும் பாதித்துவிட்டது என்றும் அதனால் எட்டு கிலோ எடை குறைந்துவிட்டது என்றும் அவருடைய வழக்கறிஞர்கள் அழாத குறையாக கெஞ்சி, கூத்தாடி ஜாமீன் பெற்றனர்.
Read 10 tweets
Dec 16, 2019
தெரிந்த கதை தெரியாத வரலாறு..!

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பார்கள். அது என்ன கம்பன் வீட்டு கட்டுத்தறி என்பதை சற்று விரிவாக விளக்கமாக பார்ப்போமா.

ஒருமுறை புலமையில் மிகவும் தேர்ந்த அம்பல சோமாசி என்ற புலவர் கம்பரைக் காண வந்தார்.அவருக்கு தான் அனைத்தும் கற்றோம் என்ற 1/9
செருக்கு மிகுந்துள்ளது. கம்பரின் வீட்டிற்கு வந்த பொழுது அவர் வீட்டிற்கு முன்னால் சாணி தட்டும் ஒரு பெண்மணியிடம் கம்பர் எங்கே என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி கம்பரை காண்பதற்கு நிறைய பேர் வந்திருக்கிறார்கள் கூட்டம் மிகுந்து உள்ளது ஆதலால் சற்று காத்திருங்கள் காணலாம் என்று 2/9
கூறியுள்ளார்.

அவருக்கு உடனே கோபம் வந்தது. ஒரு சாணி தட்டும் ஒரு பெண்மணி கேட்டால் உண்டு இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்க வேண்டும் இது என்ன இவ்வளவு பேசுகிறாயே நீ என்ன கம்பரிடம் தமிழ் படித்திருக்கிறாயா என்ன என்று கேட்டார்.மேலும் மிகவும் வாயாடியாக இருக்கிறாயே என்றும் 3/9
Read 9 tweets
Dec 4, 2019
தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினையழித்திடுவோம்..
இது பாரதியின் வரிகள் என்று
படித்த மாத்திரத்திலயே அனைவரும் அறிந்திருப்போம்.

ஆனால்.. இந்த வரிகள் எழுத காரணமாக இருந்தவர்தான் "நீலகண்ட பிரம்மச்சாரி"

உலகிற்கே சோறு போடும் தஞ்சை மண்ணில் பிறந்தவர். சுதந்திர போரில் சிறைசென்று 1/8
விடுதலையாகி வெளியே வந்தபின், உண்ண உணவின்றி மதராஸ் கடற்கரையில் நடந்து கொண்டிருந்தார்.

அம்மா.. பசிக்கிறதே என்ன செய்வேன் நான்?
பகலெல்லாம் பாரதத் தாயின் விடுதலை பிரச்சாரம். இரவிலே கரியை பூசி அடையாளத்தை மறைத்துக்கொண்டு "அம்மா.. தாயே.. ராப் பிச்சைம்மா" என்று வயிற்று பிரச்சாரம். 2/8
பகல் பொழுதுகளில் நெஞ்சில் சுதந்திர கனல் கனக்கிறது. இரவில் வயிற்று பசிக் கனல் கனக்கிறது.

இரவில் இவர் பிச்சை எடுக்கும் போது அடையாளம் கண்டு கொண்ட ஒருவன் இவரை ஏளனமாக கேட்டான். "இதற்கு நீ சிறையிலேயே இருந்திருக்கலாமே? வேளாவேளைக்கு சரியாக சாப்பாடு போடுவார்கள் அல்ல என்றான் நக்கலாக. 3/8
Read 8 tweets
Dec 1, 2019
#ஸ்படிகமாலை

1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார். திடீரென்று பெரியவா அவரிடமும், அங்கு இருந்தவர்களிடமும், ”மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார். 1/12
யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார்,”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?

யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார். அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர். பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்துவிட்டு, மற்றொரு கேள்வியை 2/12
வீசினார்,” குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?” மீண்டும் அமைதி.

ஸ்ரீசரணர் புன்னகையுடன் சொல்ல ஆரம்பித்தார...

“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் 3/12
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(