, 32 tweets, 4 min read Read on Twitter
🌷இன்றைய வ.வலாற்று ஆய்வுத் துளி.... மஹாபாரதம்.🌷

நண்பர்களே... தற்போது கீழடி நாகரிகம் வெளியில் வந்து கொண்டு இருக்கிறது. அதில் நிறைய பானை ஓடுகளும், அதில் பிராமி எழுத்துக்களும், பானைகளும் கிடைத்துள்ளன. (மேலும் சில ஸநாதன தர்ம அடையாளங்கள் இருந்ததாகவும், அவை தற்போது வெளியில்
சொல்லப்பட வில்லை என்றும் நம்பிக்கைக்கு உரிய சிலரால் சொல்லவும் படுகிறது. சரி. கத்திரிக்காய் முற்றினால் கடைக்கு வந்துவிடும். அதை விடுவோம்.)

இந்தப் பானை ஓடுகளில் எழுதப்பட்ட எழுத்துக்கள் *பிராமி* எனக் கண்டறியப் பட்டுள்ளது. அதில் உள்ள பல பெயர்கள் கூட தெரிவிக்கப் பட்டுள்ளன.
அவற்றில் முக்கியமான மூன்றை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம்.

1) இடும்பன் 2) இடும்பி 3) சேயோன்.

மஹாபாரதத்தில், ஆதி பர்வத்தில், பாண்டவர்கள் வனவாசம் செய்யும் போது ஓர் கானகத்தில், இரவுநேரம் பாண்டவர்கள் தாயுடன் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். பீமன் எனப்படும் விருகோதரன்,
காவல் காத்திருந்தான். அப்போது, அந்த வனத்தில் வசிக்கும் *இடும்பன்* என்னும் அசுரன், தேக வலிமை மிக் கபாண்டவர்களைக் கண்டான். நர மாமிசம் உண்ணும் அவன் வாயில் நீர் ஊறியது. தங்கை *இடும்பி* யை அழைத்து, அவர்கள் யாரென அறிந்து வரச் சொன்னான்.

இடும்பியும், அழகிய பெண்ணுருவில் அங்கே சென்றாள்.
அங்கே பீமன் விழித்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவனது முக தேஜஸும், உடல் அழகும், அகன்ற மார்பும், உறுதியான தோள்களும், 3 மடிப்போடு விரிந்த கமலம் போன்ற விழிகளும் கண்ட இடும்பி அவன் மேல் காதல் கொண்டாள்.

"என் தமையனுக்காக இவர்களைக் கொல்வதைக் காட்டிலும், இவரை மணந்தால் மகிழ்வேன்" என்று
எண்ணியபடி, தலையில் பூக்களும், மெல்லிய ஆபரணமும், மனம் கவரும் உடையுடன் கூடிய தோற்றமும் கொண்ட.டு அவனை நெருங்கினாள்...

"இந்த கானகத்தில், இந்த இருளில் விழித்து அமர்ந்திருக்கும் வீரரே, இங்கே இடும்பன் என்றொரு நரமாமிசம் உண்ணும் அசுரன் இருப்பதை அறியீரா? தெய்வீக ஒளியுடன் உறங்கும்
இவ்வீரர்களும், மெண்மை மேலோங்கிய அந்தப் பெண்மனியும் யார்?" என்றாள்.

"இருளில் இங்கே வந்து என்னிடம் பேசும் அழகிய பெண்ணே, நீ யார்? இங்கே இருப்பவர்கள் எனது தாயும் தமையனரும். நீ எதற்கு இந்த நேரத்தில் கானகத்தில் அலைகிறாய்?" என்றான்.

"என் பெயர் இடும்பி. நான் இடும்பனின் தங்கை.
அவன் உங்களை உண்ண ஆசைப் படுகிறான். எனவே உங்களைப் பற்றி அறிந்து வரச் சொன்னான்!"

"ஆனால், அழகு செறிந்த வீரரே... நான் தங்கள் அழகில் மயங்கி விட்டேன். என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்! எனக்கு வானில் பறக்கும் வித்தை தெரியும்! நான் உங்கள் அனைவரையும் சுமந்து சென்று வேறாடத்தில் சேர்ப்பேன்!
புஜபராக்கிரமரே! நீங்கள் என் இடையில் ஏறிக் கொள்ளுங்கள்! நாம் இருவரும் நல்ல இயற்கை வளமிக்க இடத்திற்கு சென்று, நமது வாழ்வைத் துவங்குவோம்!" என்றாள்.

ஆனால் பீமன் அவர்களைத் தூக்கத்தில் இருந்து எழுப்ப மறுத்து விட்டான். மேலும்,

"மயக்கும் கண்களைக் கொண்டவளே, அழகிய இடை உடையவளே!
அவர்களைத் தனியே விட்டு, உன்னுடன் வந்து வாழ மாட்டேன். அந்த அசுரனை நான் வதம் செய்வேன்! மருண்ட பார்வை உடையவளே! உன்னையும் அவனிடம் இருந்து காப்பேன். கலங்காதே!" என்றான்.

அவள் எவ்வளவோ கேட்டும், பீமன் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டான். வெகு நேரம் ஆகியும் தங்கை திரும்பாததைக் கண்ட
இடும்பன் அவளைத் தேடி வந்தான். அங்கே அவள் மானிட வடிவில் நின்று உரையாடுவது கண்டு, அவள் காதலில் வீழ்ந்து விட்டாள் என்பதை உணர்ந்து, அவளைக் கொலை செய்ய வந்தான்.

"இடும்பி, கேவலம் ஒரு மானுடனிடம் காதல் கொண்டு, நம் அசுர குலத்துக்கே தீராத அவமானம் சேர்த்து விட்டாய்! இதோ, உன்னையும் கொன்று,
இம்மானுடர்களையும் கொன்று விழுங்குகிறேன்.." என்று அலறியபடி, வேகமாக வந்தான். அண்ணன் பலம் தெரிந்த இடும்பி, பயந்துபோய் பீமனின் பின்னால் மறைந்து நின்றாள்!

"இடும்பா! என்ன இருந்தாலும் அவளொரு பெண்! காதல் எனும் வேதனையை அவளுக்களித்த காம தேவனிடம் சண்டையிடு! ஒரு பெண்ணை வதைக்காதே!" என்றான்.
அவன் பேச்சை இடும்பன் காதில் வாங்கவில்லை. எனவே பீமன் அவனுடன் யுத்தம் செய்யத் துவங்கினான்.

அவர்களுக்கு இடையே மோதிக் கொள்ளும் போது எழுந்த சப்தத்தால், தூக்கம் கலைந்து எழுந்த பாண்டவர்களும் குந்தியும், அங்கே வாயு புத்திரன் பீமன் இடும்பனுடன் வாயு வேகத்தில் மோதுவதைக் கண்டனர்.
அவர்களின் மோதல், இரு மலைகள் மோதிக் கொள்வது போல் அதிர்ந்தது. கானகம் முழுதும் கர்ஜனைக் குரல் கேட்டது.

இறுதியில் பீமன், இடும்பனைத் தலைக்குமேல் தூக்கி, நூறுமுறை சுற்றிக் கீழெறிந்து, முதுகில் கார் லைத்து நசுக்கினான். அவனது தலையும் கால்களும் இரு கைகளால் பிடித்து, அவனை மடக்கி உடைத்து,
இரு துண்டங்களாகப் பிய்த்து எறிந்தான்!! அதற்குள் இடும்பியைக் கண்ட குந்தியும், தருமரும் அவளைப்பற்றி விசாரித்தனர். இடும்பியும் முழு கதையும் சொன்னாள். அதற்குள் திரும்பிவந்த பீமன்,

"அழகிய பெண்ணே! என்ன இருந்தாலும் நீ அசுர குலத்தைச் சேர்ந்தவள்! உன் அண்ணனை நான் கொன்றதை மனதில் கொண்டு,
எங்களை என்றேனும் பழிதீர்க்க எண்ணுவாய்... எனவே, நீ எங்களை விட்டுப் போய்விடு!" என எச்சரித்தான்.

ஆனால் இடும்பி, குந்தியை வணங்கி, "நன் மகவுகளை ஈன்றெடுத்த தாயே! இவரைக் கண்டதில் இருந்து, இவரோடு வாழ வேண்டும் எனும் ஏக்கத்தால் வாடுகிறேன். பெண்ணின் மனதை நீங்கள் அறிய மாட்டீர்களா??
எனக்கு அவரைக் கணவராகத் தந்து, என் னைஉங்கள் சேடியாய் நினைத்து வாழ்வு தர வேண்டுகிறேன்!!" என்றாள்.

குந்தியும் பீம னைசமாதானப் படுத்தி, அவளை ஏற்கச் சொன்னாள். தருமர் அவளிடம்
"பகலெல்லாம் அவனுடன் சந்தோஷமாக இரு! ஆனால் இரவில் அவனை இங்கே விட்டுவிட வேண்டும்! உன் வாக்கைக் காப்பாற்றுவாயா?"
என்று கேட்டார். வாக்களித்த இடும்பியும் அவ்வாறே நடந்தாள். அதனால் அவள் மேல் நம்பிக்கை கொண்ட குந்தி, அவளை பீமனுடன் தனித்து வாழ அனூப்பினாள்...

ஆனால் பீமனோ இடும்பியிடம்,
"என் தாயின் வாக் கைஏற்று உன்னை மணந்தேன். ஆனால், ஒரு குழந்தை பிறக்கும் வரை தான் நான் உன்னுடன் இருப்பேன்!
பின் என் குடும்பத்தாரிடம் மீண்டும் சேர்ந்து விடுவேன்!!" என்றான். இடும்பி அதை ஏற்று, அவனுடன் சந்தோஷமாக வாழ்ந்தாள். அவர்களுக்குப் பிறந்த பிள்ளை தான் *கடோத்கஜன்* (கடம் - பானை. பானைத் தலை உடையவன் எனப் பொருள்.) என்பவன்.

அதன் பின் அவனைப் பிரிந்த இடும்பியும் கடோத்கஜனும், அவர்கள் தம்மை
நினைத்த நொடியில் வந்து நிற்போம் என உறுதி அளித்தனர். பீமன் மீண்டும் பாண்டவர்களுடன் வந்து சேர்ந்தான்....

இத்தனை பெரிய கதை எதுக்கு???

*இடும்பன்* மற்றும் *இடும்பி* என்ற பெயர்கள் மஹாபாரதத்தில் எப்படி, எங்கே வருகின்றன என்பது தெரிந்து விட்டால், தேவையற்ற கேள்விகளைத் தவிர்க்கலாம்.
🍁அடுத்தது, முதலாவதாக, *மஹாபாரதம்*, *ஸமஸ்கிருத* மொழியில் வியாசரால் எழுதப் பெற்றது. இது *ஸநாதன தர்மத்தை* சொல்கிறது. இப்போது பாடத் திட்டத்தில் சேர்க்கக் கூடாது என சிலர் போராடும் *பகவத்கீதை*, இதில் தான் வருகிறது.

மஹாபாரதத்தின் காலம், ஒவ்வொரு ஆய்வாளரால், ஒவ்வொரு விதமாக
கணக்கிடப்பட்டு, கூறப்படுகிறது. ஆனால், ஸநாதன தர்மத்தில், வேதத்தில் கூறப்பட்டுள்ள நாட்காட்டியின் கணக்கின்படி, அது *துவாபர யுகத்தில்* நடந்தது. அது முடிந்து, தற்போது கலியுகம் ஆரம்பித்து 5,000 வருடங்கள் ஆகிவிட்டது.

எனவே, 5,000 வருடங்களுக்கு முன்பே இந்தப் பெயர் ஸநாதன தர்மத்தில் உள்ளது
என்பதைக் கொண்டு பார்க்கும் போது, கீழடி தமிழன் நாகரிகம் தான். அப்போது இந்து மதம் என தற்போது அழைக்கப்படும்,
🌺ஸநாதன தர்ம வாழ்க்கை முறைக்கான அடையாளம் ஏதும் இல்லை🌺 எனக் கூற முடியாது. மேலும் போகப்போக ஏதேனும் கிடைத்து விட்டால், அசிங்கப்பட வேண்டயிருக்கும்.

இரண்டாவதாக, குருக்ஷேத்திரப்
போரில், உபயோகப் படுத்திய அஸ்திரங்களை, நாம் ஏதோ வில் அம்பு வடிவில் மட்டுமே உள்ளது என நினைக்கிறோம். அது தவறு என்பதை, இரண்டு ஆண்டுகளுக்கு முந்தைய ஆஸ்ரீவு ஒன்று கூறியுள்ளது. இந்தோனேஷியாவில் உள்ள ஒரு மிகப் பெரிய நிலப் பரப்பு, அணு ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலத்தின் அடையாளம் என்கின்றனர்.
மேலும், அதை மஹாபாரதத்தின் குருக்ஷேத்திரப் போர் நடந்த காலம் எனவும், அப்போதே, விஞ்ஞானம் மிகவும் முன்னேறி இருந்துள்ளது என்றும் கூறுகின்றனர்.

மூன்றாவதாக, அணுகுண்டு வெடிப்பு இந்தோனேஷியாவில் நடந்துள்ளது என்கையில், மொத்தமாக பாரதம் எவ்வளவு பெரிதாக இருந்திருக்க வேண்டும் என யோசியுங்கள்.
இறுதியாக, அந்தப் பெயர்கள் இங்கும் இருப்பதால், அன்றைய காலத்தில் நாம், தமிழன் எனப் பிரிந்து வாழவில்லை. உலகில், முக்கியமாக *அன்றைய பாரத நிலப்பரப்பு* முழுதும் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் எல்லா இடத்திலும் பரவலாக இருந்திருக்கிறது. இதில், வர்ணாசிரமத்தில் கூறப்பட்டு இருப்பது போல்,
ஒவ்வொரு இடத்தில் வாழ்க்கை முறைதான் மாறுபட்டு இருந்திருக்கிறது. பாரதத்தில் தமிழன், ஆரியன் எனும் பிளவு இல்லை. மேலும், முன்பெல்லாம் *சிந்துவெளி நாகரிகம், ஹரப்பா, மொகஞ்சதாரோ* என்பவை வாழ்க்கை முறைக்கான ஆரம்ப ஊர்கள் எனப் படித்தோம்.

அடுத்து ஆதிச்ச நல்லூர் வந்தது. தற்போது கீழடி...
இன்னும் இதுபோல் பல புதிய கண்டுபிடிப்புகள் வருகையில், ஆய்வாளரின் முடிவு மாறிக் கொண்டே இருக்கும். அவர்கள் தற்போது காலக் கணக்கு கூறுவது, சில வேதியியல் பரிசோதனையைக் கொண்டு தான்.

ஆனால், அவையும் தவறெனத் தெரியவரும் காலம் வந்தால், அடுத்து வருவதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். ஒருவேளை இதை விட
பழைய நாகரிக சான்று, வட நாட்டில் கிடைத்தால் என்ன செய்யப் போகிறோம்??? அது தமிழகம் என்று சண்டையிட முடியுமா?

எனவே, முன்னோர் வாக்கை ஏற்று, தமிழும் சமஸ்கிருதமும் பாரத தேசத்தில் வழங்கப்பட்டு வந்த இரு மொழிகள். இவற்றைக் கடைபிடித்து வாழ்ந்த நம் முன்னோர்கள் மேம்படுத்தி வைத்த வாழ்க்கை தான்
ஸநாதன தர்மம். அதில் கூறப்பட்டு இருக்கும் *சேயோன்* என்பவன் *முருகப் பெருமான்*. அவரை எல்லோரும் வங்கி உள்ளனர்.

அவர், சிவனின் மகன், விநாயகர் தமையன், திருமாலின் தங்கை மகன், எனவே, நாங்கள் ஓர் குடும்ப வாரிசுகளே... என்று மனதில் ஏற்று விட்டால், ஒற்றுமை ஓங்கும்.
பேதம் அற்ற நிலையில் நாம் மேலும் வெல்வோம்.

எனவே இந்த சேயோன், இடும்பன், இடும்பியை முதலில் புரிந்து கொள்வோம். பிளவு இன்றி வாழ்வோம்!!!🍁

🌷வாஸவி நாராயணன்🌷
@threader_app pls compile
Missing some Tweet in this thread?
You can try to force a refresh.

Like this thread? Get email updates or save it to PDF!

Subscribe to Viswa Roopi
Profile picture

Get real-time email alerts when new unrolls are available from this author!

This content may be removed anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!