மருத்துவரிடம் கேட்டால் ஆடோ மாடோ விஷயம் அல்ல,அது சமைக்கபடும் எண்ணெய்தான் விஷயம் என்கின்றார்கள்,ஆக சுத்தமான எண்ணெய்க்கு
இதை சுருக்கி சேமித்தால் பின் திடீரென மருத்துவ செலவுக்குத்தான் சென்று நிற்கும் என்கின்றார் உடல்நல நிபுணர்கள்
இப்படியாக ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் வந்தபொழுது அரிசி வகையறாவிலும் வந்தது
அரிசியும் உடல்நலம் காப்பதில் மிக முக்கிய பங்கு
உண்மையில் அரிசி என்பது நெல்லை வேகவைத்து எடுக்கபடவேண்டும்,இன்னும் பல விஷயங்கள் உண்டு அதுதான் சத்தான அரிசி
இப்பொழுது வருவதெல்லாம் பாலிஷ் ரைஸ்,அவை நெல்லாக இருக்கும்பொழுது அவிக்கபடுவதுமில்லை, பக்குவபடுத்தபடுவதுமில்லை எல்லாம் குப்பை
சாமை,வரகு,குதிரைவாலி, சோளம்,கேழ்வரகு எல்லாம் அதனை ஈடுகட்டுகின்றன,அரிசி இல்லா வாழ்வு சாத்தியம் உறுதியாக சொல்லலாம் நிச்சயம் சாத்தியம்
அரிசி விளைய ஆற்றுகரை அவசியம்,இன்னும் பல விஷயங்கள் உண்டு, விளையவைப்பது சிரமம்
ஆனால் சாமை,வரகு போன்றவை அப்படி அல்ல,
ஒரு காலத்தில் அரிசி பணக்காரர் உணவாகவும்,வரகு வகையறா ஏழைகள் உணவாகவும் இருந்திருகின்றது ஏழைகள் ஆயினும் ஆரோக்கியமாக இருந்திருக்கின்றார்கள்
அவர்கள் கூலியே வரகு,சாமை, கேழ்வரகு என்றுதான் இருந்திருக்கின்றது
பின் அரிசி எல்லா இடத்திலும் வியாபித்துவிட்டது,இந்தியா போன்ற நாடுகளில் அரிசி மிக முக்கிய இடத்தை பிடித்ததும், இந்த சிறுதானியம் பின்னால் தள்ளபட்டதிலும் வியாபாரம், உலக அரசியல்,கார்பரேட் என
இப்பொழுது தேடிபோனால் வரகு, சாமை எல்லாம் அரிசியினை விட பன்மடங்கு விலையில் இருக்கின்றது
காலசக்கரம் என்பது இதுதான்
இன்று அக்கால பணக்கார உணவான அரிசி எங்கும் சல்லி விலையில் கிடைக்கின்றது, ஆனால் அன்று ஏழைகளின் உணவாக இருந்த சிறுதானியத்தின்
தமிழகம் என்றல்ல எல்லா நாட்டு உணவு பொருளும் இப்படித்தான் மறைந்துவிட்டு அரிசி கோதுமை பார்லி என வந்து நிற்பதாக சொல்கின்றார்கள்.
அன்று பணக்கார உணவாக கருதபட்டவை எல்லாம் அடிமாட்டு விலைக்கு வந்தாயிற்று.
இதுதான் உணவு உலகம் கண்டுவிட்ட முன்னேற்றமாம்
உண்மையில் பின்னோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றது.
எதை நோக்கி இவ்வுலகம் ஓடிகொண்டிருக்கின்றது என்றால் எதெல்லாம் மிக எளிதாக கிடைத்ததோ
உண்மையில் யார் ஏழைகள் என்றால் இனி வரப்போகும் எதிர்கால சந்ததியினர்தான்
அவர்களுக்கு நல்ல சத்தான உணவு என எதுவும் எளிதில் கிடைக்க போவதில்லை போலிருக்கின்றது.