My Authors
Read all threads
தலைவரும் அரசியலும்:-

1991 தேர்தல் வெற்றிக்கு பிறகு ஜெ அம்மையார் மாவட்டங்களுக்கு செல்லும் போது ரசிகர் மன்றங்களின் வீச்சைப் பார்த்து பொறாமையுடன் கடந்திருக்கிறார்,

1992 அதிமுக மதுரையில் மாநாடு நடத்த தேதி கேட்கும் போது ஜெ சொன்ன தேதி அண்ணாமலை பட ரிலீஸ் தேதி கட்சியினர் கேட்கிறார்கள்.
அன்றுதான் வைக்க வேண்டும் என்று தீர்க்கமாக சொன்னார்,

மதுரை நகரில் அவர் நுழையும் போது அவர் மாநாட்டுக்கு இணையான வரவேற்பு அண்ணாமலை படத்துக்கும் இருந்தது.

கட்அவுட் போஸ்டர்களையும் பார்த்து கோவத்தின் உச்சிக்கு சென்றார்,

இது தான் தலைவர் உடனான முதல் உரசல்.
அடுத்து போயஸ் கார்டன் ட்ராபிக் ஜாம் சம்பவம்,

தலைவர் கார் மற்றும் மக்கள் வாகனங்களை பிளாக் பன்னி ரொம்ப நேரம் காக்க வச்சாங்க பொறுமை இழந்த தலைவர் காரை விட்டு இறங்கி டீ கடையில் ஒரு சிகரெட் ஒரு டீ அடிக்க கூட்டம் அலைமோதியது,

அந்த அம்மாவால வெளியே போக முடியாத அளவுக்கு டிராபிக் ஜாம்,
விஷயம் அவங்க காட்டுக்கு போக போலீஸ் எல்லாம் என்ன செய்யனு முழிக்க,

வேற வழி இல்லாம அந்த அம்மா அவர் கார் போகட்டும் சொல்ல பின்பு தலைவருக்கு பின்னாடி அவங்க போனாங்க கடும் கோபத்தோட,

அடுத்து 1995 ல் சிவாஜி சாருக்கு செவாலியே விருது வழங்கப்பட்ட போது நடந்த பாராட்டு விழா:-
சிவாஜி சாருக்கு உரிய மரியாதை செய்யவில்லை என ஜெயலலிதா மேடையில் இருந்தபோதே பேசினார் இதனால் தலைவர் - ஜெயலலிதா மோதல் உச்சத்துக்கு போனது,

ஓடிப்போய் சிவாஜி சார் காலைத்தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொண்டார், எல்லோரும் பேசி முடித்த பிறகு நன்றியுரை சொல்ல வந்தார் தலைவர்.
வெறும் நன்றியுரை தானே இதில் என்ன பேசிவிடப் போகிறார் என்றுதான் எல்லோருமே நினைத்தார்கள்,

நன்றியுரை ஆற்றிய இருபது நிமிடமும் மொத்தக் கூட்டத்தையும் தன் கட்டுக்குள் வைத்திருந்தார், இத்தனைக்கும் விழாவில், சிவாஜி சாரை வாழ்த்திப் பேசுகிறவர்கள் பட்டியலில்தான் தலைவர் பெயர் இருந்தது.
ஆனால் நான் நன்றியுரை சொல்கிறேன் எனக் கேட்டு வரிசையை மாற்றிக்கொண்டார்,

விழாக் குழுவினர் குடுத்த லிஸ்ட்டை அப்படியே மடித்துப் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு பேசினார் தலைவர்,

வார்த்தைகள் அனைத்தும் அக்னி ரகம் பேசிக்கொண்டே போனவர் திடீரென ஜெயலலிதா பக்கம் திரும்பி விரலைச் சொடுக்கிக்
நான் ரொம்ப டென்ஷனா இருக்கேன்,எனச் சொல்லி படபடவெனப் பேச ஆரம்பித்தார்.
கைத்தட்டல்கள் ஒலித்துக் கொண்டிருக்க,

மேடையில் அமர்ந்திருந்த ஜெயலலிதா கூட்டத்தை சலனமில்லாமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்
யார் தவறு செய்தாலும் தட்டிக் கேட்பேன் எனப் பேசிய தைரியத்தைப் பலரும் பாராட்டினார்கள்.
விழா முடிந்ததும் நேரு மைதானத்தை ஓப்பன் காரில் வலம் வந்த போது எழுந்த கரவொலிகள் ஜெவுக்கு என்றைக்கும் மறந்திருக்காது,

சிவாஜி கட்டித் தழுவினார் திரையுலகப் பிரமுகர்கள் பலரும் கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னார்கள் தான் இருக்கும் மேடையிலேயே இப்படி ஒரு தாக்குதலை ஜெயலலிதா சந்தித்ததில்லை.
அடுத்து பாட்ஷா படத்தின் வெற்றி விழா:-

பம்பாய் படத்திற்க்கு எதிர்ப்பாக மணிரத்னம் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

தமிழ்நாட்டில் வெடிக்குண்டு கலாச்சாரம் பரவிவிட்டது என்றார் தலைவர்,

பாட்ஷா படத்தின் தயாரிப்பாளரும் தலைவரின் நண்பருமான
அதிமுக அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரும் திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் அந்த விழாவில் கலந்துகொண்டது ஜெயலலிதாவுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது,

அதனால் ஆர்.எம்.வீரப்பன் அமைச்சர் பதவியை பறித்தார் அதுவும் ரஜினிக்கு கோபத்தை ஏற்படுத்தியது.
வளர்ப்பு மகன் திருமணம், வழக்கறிஞர் விஜயன்,சண்முகம்சுந்தரம் தாக்குதல், மகாமக மரணங்கள்,சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு என 1991-1996 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் அவலம் இந்தியா முழுவதும் எதிரொலித்தது,

அதிமுக ஆட்சிக்கு வந்தால் இனி தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்றார்.
தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததுடன் நிற்காமல் மாவட்டம் வட்டம் கிளைவரை தன்ரசிகர்களின் வீச்சை காண்பித்து வேலை வாங்கினார்
துறைமுகம் தொகுதியில் கலைஞருக்காக திமுக செய்த விளம்பரங்களில் எல்லாம் சூப்பர்ஸ்டார் ரஜினியின் ஆதரவு பெற்ற வேட்பாளர்ன்னு தான் பிரச்சாரமே செய்தார்கள்.
பலர் நினைப்பது போல தலைவர் சப்போர்ட் செய்யவில்லை என்றாலும் திமுக வென்றிருக்கும் எனும் எண்ணம் இருக்கிறது

இங்கு தான் அரசியல் வரலாறு தெரியாதஅறிவாளிகளின் மடத்தனம் வெளிப்படுகிறது,

தமிழ்மாநில காங்கிரஸ் எனும் கட்சி எப்படி உருவானது ஏன் உருவானது,காங்கிரெஸை உடைத்து அதை உருவாக்கியவர் யார்,
அந்த கட்சியின் சின்னம் என்ன, அது எப்படி திமுகவோடு கூட்டணி சேர்ந்தது என்ற வரலாறு தெரியாத முட்டாள்களுக்கு எப்படி புரியும் அதெல்லாம்,

திமுக 182/173 தொகுதிகளில் கூட்டணி கட்சியான தமாகா 40/39 இடங்களிலும் வெற்றி பெற்றது.

காரணம் தலைவர்.

இது தான் திமுக வின் கடைசி மெஜாரிட்டி ஆட்சி.
பாரதிராஜா தலைவரை விமர்சித்துவிட்டு நெய்வேலி சென்று போராட்டம் செய்தார்,

ஒட்டுமொத்த திரையுலகமும் பின்னால் சென்றது நண்பர் கமலும் தான்,

மறு நாள் தன்னந்தனியாக சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார் எவ்வித அறிவிப்பும் இல்லை,ரசிகர்களுக்கு அழைப்பும் இல்லை ஆனால் சேப்பாக்கம் ஸ்தம்பித்து போனது
தலைவரின் செல்வாக்கு அப்படி திரை உலகிலிருந்து யாரையும் அழைக்கவில்லை ஆனால் ஒட்டுமொத்த திரையுலகமும் தானாக வந்து மண்டியிட்டது கமல்,விஜயகாந்த்,ஸ்டாலின் உட்பட,

உட்கார்ந்த இடத்திலிருந்தே சாதித்துக் காட்டினார் தலைவர்,

ஜெ மூச்சுக் கூட விடவில்லை இதெல்லாம் வரலாறுகள்,
ஜெ,கலைஞர் என இரு பெரும் ஆளுமை இருக்கும் போதும் அரசியல் செய்தவர் என் தலைவர்,

வரலாறு தெரிஞ்சுக்கோங்க இது என் தலைவர் பாயுற நேரம் ஓரமா உக்காந்து கதறாம வெடிக்கக் மட்டும் பார்க்கணும்,

ஆன்மிக அரசியலை முன்னிறுத்தி தலைவர் வெல்வார் 2021 வெற்றி நமதே 🤘

#சூப்பர்ஸ்டார்_வெறியன்_SSR
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with SSR

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!