My Authors
Read all threads
நன்றி:- தினமலர்,keelainews,FB,BBC,Wiki,Google 🙏

சமூக நலன் சார்ந்த விழிப்புணர்வு கட்டுரை:-

கொரோனா வைரஸ்:-

சீனாவில் துவங்கி இன்று உலகம் முழுதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உருவாக சீனாவின் உயிரி ஆயுத ஆய்வகமே காரணம் என்ற தகவல்
வேகமாக பரவி வருகிறது.

அதை பற்றி ஒரு அலசல் :-
உலகில் பல நாடுகள் இரும்புத்திரை நாடுகளாக இருந்தன.

இரும்புத் திரை என்பது 1945ல் இரண்டாம் உலகப் போரின் முடிவிலிருந்து 1991ல் பனிப்போரின் முடிவு வரை ஐரோப்பாவை
இரு பிரிவுகளாகப் பிரித்திருந்த நில எல்லையையும் அவற்றுக்கிடையிலான கொள்கை ரீதியிலான முறுகலையும் குறிப்பிடுகிறது.
தொழில்நுட்ப முன்னேற்றம் பல நாடுகளின் இரும்புத்திரைகளை உடைத்து விட்டன. இதுவரை உடையாமல் இருக்கும் முக்கிய இரண்டு இரும்புத்திரை நாடுகள்,

சீனாவும், வடகொரியாவும்,

இரும்புத் திரை போல, சீனாவின் எல்லையினைக் குறிக்க "மூங்கில் திரை" எனுஞ் சொல் பயன்படுத்தப்படுகிறது.
வடகொரியா சிறிய நிலப்பகுதி. மக்கள் தொகையும் குறைவு. எனவே நிர்வகிப்பது சுலபம்,

ஆனால் சீனா பிரம்மாண்ட நிலப்பரப்பை கொண்டது,

மக்கள் தொகையும் மிகவும் அதிகம்.
உலகிலேயே அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழும் சீனாவில் 56 வகை இன மக்கள் உள்ளனர், இவர்களுள் 93% ஹன் இனத்தவர்.
இருப்பினும் சீனாவில் இருந்து அரசு அனுமதியின்றி எந்த தகவலும் வெளியே வராது,

கூகுள்,பேஸ்புக்,டுவிட்டர், வாட்ஸ் ஆப் உள்ளிட்ட அனைத்துமே சீனாவுக்கென தனியாக உள்ளன,

அப்படிப்பட்ட நாட்டில் இருந்து தான் இந்த கொரோனாவைரஸ் பரவி வருகிறது.
தன் நாட்டு செய்தியும், வைரசையும் தடுக்க முடியாமல் தவிக்கிறது சீனா,

இதில் பல விஷயங்களை வெளியிடாமல், வெளிவர விடாமல் தடுத்து வருகிறது,பலர் உயிரிழந்த பின்,வேறு வழியின்றி வைரசின் நுண்ணோக்கி வடிவத்தை வெளியிட்டது,
அது வெளிவந்த பின் பல அதிர்ச்சிகரமான விஷயங்கள் வெளிவர துவங்கியுள்ளன.
இந்த வூகான் மாகாணத்தில் உயிரி ஆயுத (பயோ வெப்பன்) ஆய்வு மையத்தை சீனா நடத்தி வருகிறது,

குண்டு சத்தமின்றி வெறும் உயிரி தாக்குதல் மூலம் பிற நாட்டை அழிப்பதற்கான ஆராய்ச்சி மையம்
சுருக்கமாக சொல்வதென்றால் தசாவதாரம் படத்தில் விஞ்ஞானி கமல் ஒரு உயிர்-வேதியியல் வைரஸ் ஆயுதத்தைக் கண்டுபிடிப்பார் . அதை சாப்பிட்டவுடன் வளர்ப்பு குரங்கு செத்துப் போக அதன் உடல் சிதைவுகள் பூமியில் பரவினால் உயிரினங்கள் அழிந்துபோகும் என்பதால், உடனே அதை ஆய்வகத்தோடு அழித்து விடுவார்.
இது முக்கியமாக இந்திய ராணுவத்தை குறி வைத்து தான் தொடங்க பட்டதாக புலப்படுகிறது,

சமீபத்திய பிரச்சனையில் இந்தியாவிடம் பின் வாங்கிய பிறகு இந்தியா மீது கடும் வன்மமாக இருக்கிறது சீனா,

ஏற்கனவே சீனா மீது உலக நாடுகளுக்கு சந்தேகம் உண்டு.
ஆய்வு மையம் பற்றிய கேள்வி எழும்போதெல்லாம்,அது உயிரி ஆயுத ஆய்வகம் அல்ல உயிர்க்கொல்லி தடுப்பு மருந்து ஆய்வகம்'என முற்றுப்புள்ளி வைக்கும்

ஏற்கனவே சார்ஸ் எபோலா வைரஸ்கள் பரவிய போதும் சீனா மீது சில நாடுகள் சந்தேகம் தெரிவித்தன.ஆனால் தனக்கு இருக்கும் பலத்தால் சந்தேகத்தை முறியடிக்கும்.
இப்போது நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதால் விஷயத்தை கசிய விடுகிறது,

யாராவது இதற்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்து விட மாட்டார்களா என்று ஏங்கி தவிக்கிறது சீனா,

அதனால் தான் விஷத்தை கசிய விடுகிறது,
என உலக நாடுகள் சந்தேக்கின்றன ,
முதல் கட்ட நடவடிக்கையாக, வைரஸ் உருவானதற்கு வவ்வால் காரணம் என கூறி வூகான் சந்தையை முதலில் மூடியது இருப்பினும் வைரஸ் அசுர வேகத்தில் பரவவே வூகானுக்கு அவசரம் அவசரமாக சீல் வைத்தது.

கெரோனா வைரசின் நுண்ணோக்கி படம் வெளியானதும் பீதியில் உறைந்துள்ளார்கள் சீனா மக்கள்.
ஆஸ்திரேலியாவில் உள்ள உயிர்க்கொல்லி வைரஸ் தடுப்பு ஆராய்ச்சி மையம் அதை போன்ற வைரசை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் கொரோனாவிற்கு தடுப்பு மருந்து தயாரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,

கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் நோயாளிகளிடமிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்தோம்.
அதில் வவ்வால்களின் மரபணுக்கள் காணப்படுகின்றன. சார்ஸ் வைரசின் மரபணுவும் உள்ளது.

வூகான் மாகாணத்தில் உள்ள ஹூவானன் கடல் உணவு சந்தையில் விற்கப்பட்ட வவ்வாலில் இருந்து தான் இந்த வைரஸ் பரவியுள்ளது. என சீன ஆய்வாளர்கள் அறிக்கை வெளியிட்டனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட நோயாளிகளும் அந்த சந்தைக்கு சென்றவர்கள் இல்லை.

வேறு நபர்கள் மூலம் இவர்களுக்கு பரவியுள்ளது' என குறிப்பிட்டுள்ளனர்.

நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாரிடம் இருந்து பரவியது என்பதை ஆய்வாளர்கள் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வூகானில் துவங்கி பீஜிங், ஷாங்காய் நகரங்களிலும் தொடர்கிறது

அமெரிக்கா,தென்கொரியா,இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா பரவி வருகிறது,
அங்கு நிலவி வரும் 4-5 டிகிரி கடும் குளிர் நோயை வேகமாக பரப்பி வருகிறது சீதோஷண நிலை மாறினால் மட்டுமே நோயின் தாக்கம் குறையும் என்பதே இன்றைய நிலை
சார்ஸ், எபோலா,என உயிர்க்கொல்லி வைரஸ்கள் இந்தியாவில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தவில்லை,

அதே போன்று தான் கொரோனாவும்' என்கின்றனர் மருத்துவர்கள்.

இதற்கு முக்கிய காரணம் இந்தியாவின் தட்பவெப்ப நிலை. இங்கு நிலவும் கடும் வெப்பம் எந்த வைரசையும் சுட்டெரித்து விட கூடியது.
இந்தியா ஒரு பரந்த துணைக் கண்டமாக இருப்பதனால் இந்தியாவின் தட்பவெப்ப நிலை(Climate of India) இந்தியாவின் தட்பவெப்பக்காலநிலை பலதரப்பட்டதாக உள்ளது.

அதனால் தட்பவெப்பக்காலநிலை இந்நாட்டு மக்களின் வேளாண்முறை,உணவு, உறைவிடம்,வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது
மனித இனம் இன்றும் பூமியில் நிலைத்து இருக்கிறது என்றால் அதற்கு காரணம் நம் பூமியில் அமைந்துள்ள சாதகமான சூழ்நிலை,

காற்று, நீர், மண், மற்றும் வேளான்மை ஆகிய நான்கும் மனிதன் இன்னும் புவியில் உயிருடன் இருக்க காரணமான முக்கிய இயற்கை சக்திகள்.
தட்பவெப்பக்காலநிலையின் அங்கங்களான வெப்பநிலை, காற்று அழுத்தம், காற்று வீச்சு, ஈரப்பதம் மற்றும் மழையானது இது நீராகவோ, உறைந்த தூவிப்பனி வீழ்வாகவோ இருக்கலாம்

தட்பவெப்பக்காலநிலையின் அங்கங்களின் உள்ள மாறுபாடுகள் பலதரப்பட்ட தாவர வகை அல்லது செடிகொடி முளைக்கும் முறையாக அமைகிறது
நேற்று என் பதிவில் அறிவியலுக்கும் ஆன்மிகத்திற்கும் முடிச்சி போடவேண்டாம் என பல அறிவாளி நண்பர்கள் சிலாகித்திருந்தார்கள்.

அவர்களுக்காக:-
ஹாஸ்பிட்டல் இன் பெக்சன் இதழில் கொரோனா வைரஸ் பற்றிய ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன அதில் ஆய்வு மைய பேராசிரியர் கண்டர்கம்ப் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் சராசரியாக 4 முதல் 5 நாட்கள் வரை உயிரோடு இருக்கும்,

குறைந்த வெப்ப நிலை,காற்றில் இருக்கும் அதிகப்படியான ஈரப்பதம் ஆகியவை கொரோனா வைரசின் வாழ்நாளை அதிகரிக்கும்,
காற்றிலோ,தரையிலோ கூட 9 நாட்கள் வரை உயிரோடு இருக்கும்.

இதுவரை இந்த வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை.
இந்த வைரஸ் தொற்றுக்கு என்று பிரத்தியேக சிகிச்சை முறை எதுவும் கண்டறியப்படவில்லை,

தற்போதைக்கு இந்த வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்வதே முக்கியமான தாகும்.

இந்த வைரஸ்கைகள் வழியாகவும், காற்று மற்றும் அடிக்கடி தொடும் பொருட்களில் இருந்தும் பரவக்கூடும்.
நமது தேசம் தட்பவெப்பக்கால நிலை,வாழ்க்கை முறை, மற்றும் உணவு பழக்கவழக்கங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது.

நம் நாட்டிலே நம் முன்னோர்கள் தட்பவெப்பக்கால நிலை,வாழ்க்கைமுறை மற்றும் உணவு பழக்கவழக்கங்களில் ஒவ்வொரு கடவுளின் பெயரால் மக்களை கட்டுபடுத்தி மனித உயிர்களை பாதுகாத்து வைத்தனர்.
வெப்பமண்டல காலநிலை (Tropical Climate)
வறண்ட காலநிலை (Dry Climate)
குறை மித வெப்பமண்டல காலநிலை (Warm Temperate Climate)
குளிர்ந்த மித வெப்பமண்டல காலநிலை (Cool Temperate Climate)
துருவ காலநிலை (Ice/Polar Climate)

எம்முன்னோர்கள் சொல்லியிருக்கும் ஆன்மிக அறிவுரை,
ஒவ்வொன்றுக்கும் பின்னால் 1000ஆண்டுக்கால அனுபவம் சார்ந்து அறிவியலும் கலந்திருக்கிறது

தட்பவெப்பக்கால நிலை உணர்ந்து வாழ்வியல் முறையையும் உணவு பழக்கவழக்கதையும் வகுத்தனர் முன்னோர்கள்

எதை எந்த காலநிலை உண்ணவேண்டும் உண்ணகூடாது என சொல்லி வைத்தனர் விரதம் இருக்க சொல்லியதும் அறிவியலே.
விசேஷ வீட்டில் வாழை மரம் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது,

விரதம் இருந்து முடிக்கும்போது அகத்திக் கீரை சாப்பிட சொன்னது,

வெள்ளி, செவ்வாய் வீடு முழுக்கச் சாம்பிராணிப் புகை போட சொன்னது,

வாசலில் சாணி தெளித்து நிலைப்படியில் மஞ்சள் தடவ சொன்னது,

வீட்டில் துளசி செடியை வளர்க்க சொன்னது,
அரசமரத்தை சுற்ற சொன்னது,

இது போல நிறைய,

சார்ஸ், எபோலா கொரோனா என உயிர்க்கொல்லி வைரஸ்கள் அறிவியல் சார்ந்து Biowar ஆக வந்ததும் சரி வௌவால் ,பறவை மற்றும் எந்த விலங்குகில் இருந்து வந்தாலும் சரி எம் முன்னோர்கள் வகுத்த ஆன்மிக பாதையில் பயணித்து அனைத்தையும் ஒரு கை பார்ப்போம்.
பிற உயிர்களை புசிக்கும் விலங்குகள் போல வாழ்ந்த மனிதனை மனிதனாக மாற்றியது ஆன்மீகமே,

ஆனால் இங்கே கலாச்சாரம் பண்பாடு வாழ்வியல் முறை என்பது மதம் சார்ந்தே இருக்கிறது ஆன்மிகம் என்பது இந்துக்களுக்கானது மட்டும் என
கடவுள் மறுப்பு கொள்கையாளர்கள் ஆன்மீகத்தையே விமர்சனம் செய்கிறார்கள்,
உண்மையில் பகுத்தறிவு என்பது கடவுள் மறுப்பு கொள்கையல்ல அது உண்மையான ஆன்மீகத்தை அறிவதே ஆகும்,

பகுத்தறிவு என்பது அறிவுக்குப் பொருத்தமான மடமை,

அறிவியல் என்பது பகைவர் இல்லாத உலகத்தை கொடுக்கும்.(சீனாவின் கணக்கு),

ஆன்மிகம், பகையே இல்லாத உலகத்தை கொடுக்கும் (இந்தியாவின் கணக்கு),
மனித குல மகிழ்ச்சியை தீர்மானிப்பது ஆன்மிகமே
நாட்டு மக்களின் மகிழ்ச்சிக்காக ஆன்மிக அரசியலை முன்னெடுத்து என் தலைவர் வருகிறார் வழிவிடுங்கள் ஆண்டவன் அவர் பக்கம்.

என்றும் அன்புடன் :-
#சூப்பர்ஸ்டார்_வெறியன்_SSR.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with SSR

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just three indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!