My Authors
Read all threads
Herd immunity

கொஞ்சம் அடிப்படை அறிவியல் தெரிந்து கொள்வோம்.
நமது இரத்தத்தில் இரண்டு பிரிவுகள் இருக்கிறது. 55%பிளாஸ்மா 45%உள்ள இரத்த அணுக்கள்
இந்த இரத்த அணுக்கள் மூன்று வகையானது
1)இரத்த சிவப்பு அணுக்கள் - இதில் உள்ள ஹீமோ குளோபின் ஆக்சிஜன் கொண்டு செல்லக் கூடியது
2)இரத்த வெள்ளை அணுக்கள்
3)இரத்தத் தட்டுகள் - (platelets) இது தான் டெங்கு போது குறைந்த அணுக்கள்.
இந்த மூன்றில் எதிர்ப்புச் சக்தி என்பது இரத்த வெள்ளை அணுக்களால் ஆவது. இதில் ஐந்து வகையான அணுக்கள் இரண்டு தொகுப்புகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
அவற்றில் முக்கியமானது இரண்டு
1)நியூட்ரோபில் (Neutrophils) இவை பாக்டீரியா தொற்றுக்கு எதிராக செயல்படுவை. எனவே நாம் இப்போது இதை விட்டு விடலாம்.
2) லிம்போசைட் (Lymphocytes)
இவை தான் இந்த வைரஸ் தொற்றுதலுக்கு எதிராக பணி புரிகின்றன.

அதாவது வைரஸ் எனப்படும் Antigen உடம்பில் நுழையும் போது Antibody எனப்படும் எதிர்ப்புச் சக்தியை இந்த B Lymphocytes உற்பத்தி செய்கிறது.
இவை இரண்டும் சமன்படுத்திய போது வைரஸ் கிருமிகள் அழிகின்றன. இந்த Antibody இரண்டு வகைப்படும். IgM முதலிலும் அப்புறம் IgG நிரந்தரமாகவும் இருக்கும்.

இதில் இந்த வினை immune Reaction எனப்படும்.
இந்த வினை நிகழ்த்தி நமது உடம்பில் விளைவுகளை ஏற்படுத்துவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவிற்கு வைரஸ் கிருமிகள் தேவை. இந்த குறிப்பிட்ட அளவு விட குறைவான நோய் கிருமிகள் தாக்குதல் நடத்தும் போது, இவை நமது உடம்பில் எதிர்ப்புச் சக்தி தூண்டி விடும்.
போதுமான அளவில் எதிர்ப்புச் சக்தி உண்டாகி அந்த குறைவான கிருமிகளை அழித்து விடும்.மேலும் இந்த கிருமிகள் அடுத்த தடவை வரும் போது இந்த எதிர்ப்பு சக்திகள் இந்த நோயைப் பரவ விடாமல் தடுத்து விடும்.
இங்கே தான் நாம் அடிக்கடி பயன்படுத்தும் இரண்டு வார்த்தைகள் வருகிறது.
ஒன்று Asymptomatic carrier. அதாவது குறைந்த அளவு நோய் கிருமிகள் கொண்டவர், ஆனால் நோய் அறிகுறிகள் இல்லாமல் இருப்பவர்.

இரண்டாவது Herd immunity அதாவது தமக்குத் தெரியாமலேயே இந்த வைரஸ் கிருமிகள் தாக்குதலுக்கு உட்பட்டு இந்த நோய் எதிர்ப்புச் சக்தியை உருவாக்கிக் கொண்டு இருப்பவர்.
இந்த Herd immunity என்பது நமநு ஊரில் எப்போதும் இருக்கும் நோய்களான வயிற்றுப் போக்கு ஜலதோஷம் போன்றவற்றுக்கு நாம் பெற்று இருப்போம். ஏனெனில் நமது ஊரில் உள்ள சுகாதாரம் குறைந்த உணவு நிலையங்களில் நாம் சாப்பிடும் போதோ அல்லது கூட்டமான ஜனத் திரள், திருவிழாக்கள் போன்றவை
தற்போது கொரோனாவிற்கு வருவோம்.

இந்த Herd immunity இந்த கொரோனாவிற்கு உள்ளதா?
இல்லை என்பதே பதில் ஆகும். ஏனெனில் இது உலகத்திற்கே புதிய வைரஸ்.
ஒரு சமூகத்தில் இந்த Herd immunity உருவாகக் வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பங்கு சமூகம் இந்த கிருமியால் பாதிக்கப்பட்டு எதிர்ப்புச் சக்தி உருவாகி இந்த கிருமியும் சமூகத்தில் ஒரு அங்கம் என்று நிலை பெற வேண்டும். அப்போதுதான் இதற்கான Herd immunity இந்தச் சமூகத்தில் உருவாகும்.
இப்படி மூன்றில் இரண்டு பங்கு சமூகத்திற்கு எதிர்ப்புச் சக்தி அதாவது Herd immunity உருவாக்கப் பட்டு அதன் மூலம் முறியடிக்கப் பட்ட நோய் போலியோ. இந்த போலியோ சொட்டு மருந்து அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் வழங்கப்பட்டது
அதாவது மொத்த சமூகத்திலும் இந்த தடுப்பூசியில் உள்ள போலியோ கிருமி அறிமுகம் செய்யப்பட்டு, அதற்கான எதிர்ப்புச் சக்தியை தூண்டி விடப்பட்டது.
இதனால் மொத்த சமூகத்திலும் இந்த தடுப்பூசி போலியோ வைரஸ் நுழைந்தது.
இந்த தடுப்பு மருந்து கொடுக்காத ஆட்களுக்கும் அவர்களை அறியாமல் இந்த கிருமி உடலுக்குள் புகுந்து எதிர்ப்புச் சக்தியை உருவாக்கியது. சமூகத்தில் உள்ள மக்கள் அனைவரும் போலியோ விற்கு எதிரான எதிர்ப்பு சக்தியைப் பெற்றார்கள்.
இந்த முறை தான் இந்த தடவை இங்கிலாந்தில் கொரோனாவிற்கு எதிராக பின்பற்றப் படும் என்று அந்த நாட்டு பிரதமர் அறிவித்தார். எனவே கொரோனா வைரஸ் இந்த தடவை இல்லை என்றாலும் இந்த வருடம் வரும் குளிர் காலத்தில் எப்படியும் பரவத் தான் போகிறது.
எனவே நாட்டு மக்கள் அனைவரும் இந்த கொரோனா வைரஸ் கிருமிகளை எதிர் கொண்டு நாம் எதிர்ப்புச் சக்தி பெற்றுக் கொள்ளுவோம்.
எனவே கொரோனாவிற்கு யாரும் அஞ்சத் தேவை இல்லை. காய்ச்சல் கண்ட அனைவரும் டெஸ்ட் செய்து கொள்ள அவசியம் இல்லை.
எனவே தீவிரமாக பாதித்த நோயாளிகள் மட்டும் மருத்துவ மனைக்கு வர வேண்டும் என்று இங்கிலாந்தில் முதலில் கூறப்பட்டது.

ஆனால் தடுப்பூசி கொடுக்கும் Herd immunity என்பது பக்க விளைவுகள் இல்லாதது. அங்கு பயன்படுத்தப்படும் வைரஸ் கிருமிகள் அதனுடைய வீரியத்தை இழக்க வைத்தவை.
ஆனால் கொரோனா எனப்படும் வீரியம் நிறைந்த (virulence) வைரஸ் கிருமிகள் உடன் விளையாடும் இந்த Herd immunity உருவாகும் என்ற விளையாட்டு வைத்துக் கொள்ளக் கூடாது என்பதை இந்த உலகம் விரைவில் உணர்ந்து கொண்டது.
தடுப்பூசியினால், மற்ற வைரஸ்களால் வரும் எதிர்ப்பு சக்தி வேறு கொரோனாவில் வரும் எதிர்ப்பு சக்தி வேறு என்பது தான். ஏனெனில் கொரோனா இதற்கு முந்தைய வைரஸ் ஆன SARS விட பத்து மடங்கு அளவில் ஆட்களை கொல்லக் கூடிய சக்தியுடன் இருக்கிறது என்பதை WHO தெரிவித்து இருக்கிறார்கள்.
ஏனெனில் இந்த வீரியத்திற்கு விலை கொடுப்பது மதிப்பு மிகுந்த மனித உயிர்கள் என்ற பிறகு உலகம் முழுவதும் இந்த வைரஸ் கிருமிகளுக்கு எதிரான Herd immunity என்ற கொள்கை பின்வாங்கப் பட்டு விட்டது.
இந்த நோய் பாதித்தவர்களை முற்றிலும் தனிமைப் படுத்தியும், சமூக விலகல் போன்ற சொல்லிக் கொடுத்த நடைமுறைகள் கடைப்பிடித்தும் மட்டுமே நாம் இந்த கொடிய தாக்குதலில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும். எப்படியும் இந்த வைரஸ்க்கு தடுப்பூசி வரும் வரையில் இந்த மாதிரி தடுப்பு ஆட்டம் தான்
இதை விடுத்து எத்தனை நாளைக்கு இப்படி இருப்பது என்று சோர்வு அடையாமல் இன்னும் 12 மாதங்களுக்கு கண்ணாம் மூச்சி விளையாட்டு விளையாட பழகிக் கொள்வது உசிதம் ஆனது.
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with சில்வி

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!