My Authors
Read all threads
ஆட்சியில் இருப்பவர்களே!
ஒரு நாள் காலம் உங்களை மண்டியிடச் செய்யும்:-
மருத்துவர்கள் சுகாதார பணியாளர்களை தாக்கினால் 7ஆண்டு சிறை தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கும் வகையில் மத்திய அரசு அவசரச் சட்டம் இயற்றியுள்ளது. இப்போதாவது மருத்துவர்களின் முக்கியத்துவத்தை அரசு
உணர்ந்துகொண்டது மகிழ்ச்சி, வரவேற்கவேண்டியது.
கொஞ்சம் பின்னோக்கி போவோம்.

இந்த ஆண்டின் துவக்கத்தில் ஒரு கூட்டத்தில் பேசிய பிரதமர், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மருத்துவர்களை வெளிநாட்டு சுற்றுலாவிற்கு அழைத்து செல்கின்றன , பெண்களை அனுப்பி வைக்கின்றன என்றார். பிரதமரின் இந்த
பேச்சுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடுமையாக கண்டனத்தை தெரிவித்தது, அவர் சொன்னதற்கான ஆதாரத்தை வெளியிடவேண்டும் அல்லது மன்னிப்பு கோரவேண்டும் என்று கோரியது.
கடந்தாண்டு தமிழகத்தில் பல்வேறு நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை அரசு எவ்வளவு மூர்க்கத்துடன்
கையாண்டது என்பது எல்லோரும் அறிந்ததே. சமூகவலை தளத்தில் எவ்வளவு மோசமான கருத்துக்களை சங் பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் எடுத்துவைத்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும்.
2017 ஆம் ஆண்டு மும்பையில் மருத்துவர் தாக்கப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு கோரி மருத்துவர்கள் வேலை நிறுத்தப்
போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம், "இவ்வளவு பயப்படும் நீங்கள் எப்படி மக்களுக்கு மருத்துவர்கள் பார்ப்பீர்கள், அச்சம் இருந்தால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு வீட்டிலேயே இருங்கள்" என்றது. மருத்துவத் துறையில் தவறே நடக்கவில்லை என யாரும் சொல்லவில்லை
ஆனால் விதிவிலக்காக நடைபெறும் சில தவறுகளை பொதுமைப்படுத்துவது எவ்வாறு சரியாக இருக்கும்?
மருத்துவர்களை பற்றி இவ்வளவு தூரம் தவறாக பேசியவர்கள், இன்று சுகாதார பணியாளர்களுக்காக கைதட்டுங்கள், தீபங்கள் ஏற்றுங்கள் என்றும், கோவிட்டை எதிர்த்து போர் புரிபவர்கள் எல்லாம் வீரர்களே என்று
சொல்லும் நிலைக்கு காலம் அவர்களை தள்ளியிருக்கிறது. காலம் சொல்லிக் கொடுத்த மகத்தான பாடம் இது.
"வரும் ஏப்ரல் மாதம் முதல், தேசிய குடிமக்கள் பதிவேடு தொடர்பான கணக்கெடுப்பு நடப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது" என்று உட்சபட்ச அகங்காரத்துடன் பேசினார் மத்திய உள்துறை அமைச்சர்.
இன்றைக்கு அவரே வெளியே வரமுடியாமல் வீட்டினுள் முடங்கியுள்ளார்.
அரசுகளே, அதிகாரத்தில் இருப்பவர்களே, அதிகாரம் என்பது நிரந்தரமானது அல்ல. காலமும் இயற்கையும் மனிதன் வகுக்கும், வகிக்கும் எந்த அதிகாரத்தையும் எப்போது வேண்டுமானாலும் சமன் செய்யும், சரி செய்யும்.
மக்களிடம் செல்லுங்கள், அவர்களுக்கு என்ன தேவை என்று தெரிந்துகொண்டு செயல்படுங்கள், மாண்புடன் நடந்துகொள்ளுங்கள், 130 மக்களில் நீங்கள் ஒருவர், பல கோடிக்கணக்கான உயிர்களில் நீங்கள் ஒரு சிறு புள்ளி கூட கிடையாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
130கோடி
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with G. Sundarrajan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!