My Authors
Read all threads
🌺கேள்வி - பதில்.....🌺

வணக்கம் நண்பர்களே. நான் எழுதும் தொடரில் என்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, நான் அறிந்த, கேட்டுத் தெளிந்த விளக்கங்களைத் தருகிறேன். கருத்துக்கள் வேறுபடலாம்.

இத்தளம் சண்டையிட அல்ல. எதிர் கருத்துக்கள் உள்ளவர்கள் பண்பான முறையில் கேட்கலாம்.
அல்லது தவறென அவர்கள் தரப்பு ஆதாரத்துடன் விளக்கலாம். என் படிப்பறிவிற்கு சரி எனப்பட்டதை ஏற்பேன். பிடிக்காதவர்கள், தேவையற்ற வார்த்தைகள் தவிர்க்க, தொடரைத் தவிர்க்கலாம். நன்றி🙏

கேள்வி : 1

ஹிரண்யாக்ஷஸன் கடலுக்கு அடியில் பாய் போல பூமியைச் சுருட்டி வைத்த கதை பற்றிக் கூற முடியுமா?
பதில்:

1) நமது புராணங்களின் படி, வராஹ அவதாரம் என்பது,
**இரு பெரிய கொம்புகளைக் கொண்ட பன்றி உருவம் கொண்டு விஷ்ணு பகவன் எடுத்த அவதாரம். அவர் கடலுக்கு அடியில் இருந்த பூமியை, இரு கொம்புகளுக்கு இடையே எடுத்து வெளியில் கொண்டு வந்தார்**

எனக் கூறப்பட்டுள்ளது.
முன்னோர்கள் அறிவியலை, நாம் புரிந்து கொள்ள முடியாததை, கதைகளாக உருவகப் படுத்திக் கூறியுள்ளனர். மேலும் பூமியில் உயிர்களின் பரிணாம வளர்ச்சியே தசாவதாரம் என்று கூறப்படுகின்றது.

இதுவும் ஓரளவு ஒத்துத் தான் போகின்றது. English naturalist Charles Darwin (1809–1882) என்பவர்
தனது பரிணாம வளர்ச்சி பற்றிய ஆராய்ச்சிப் புத்தகத்தில் கொடுத்துள்ளதும் நம் தசாவதாரமும் ஒரே மாதிரி தான் உள்ளன. அதை வைத்து அந்தக் கதையை Decode செய்து பார்த்தால், அதில்

1)கடல் நிலைகள் ஓரிடத்தில் இருந்து விலகி, பூமியில் நிலங்களின் தோற்றம், அதாவது ஜம்புத்வீபத்தின் முழுமையான
தோற்றத்தையே கடலுக்கு அடியில் இருந்து பூமியை வெளியில் கொண்டு வந்தது என்று கூறியுள்ளனர்.
2) பூமியின் இரு ரேகைகளான கடக ரேகை மற்றும் மகர ரேகையை வராஹத்தின் இரு பெரும் கொம்புகள் என்று கூறியுள்ளனர்.

3) பூமியின் வட கோளார்த்தம் நிலப்பரப்பாகவும், பெரும்பாலான தென் கோளார்த்தத்தின் நிலப்பகுதி கடலுக்கு அடியிலும் இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
4) சில ஆய்வாளர்களின் கணக்குப்படி, வராஹத்தின் இரு கொம்புகளின் இடையே பூமி இருந்தது என்று சொல்லப் படுவது, வட கோள் நடுவிலும், இரு துருவமும் நிலப்பரப்பு வெளியில் தெரியும் படியும் ஆனது என்பதைக் குறிப்பதாகச் சொல்கின்றனர்,

(இதற்கு அறிவியல் ரீதியாக காரணமும் சொல்லப் படுகின்றது. அதாவது,
ப்ரளயத்தால் பூமி முழுதும் நீர் சூழ்ந்து, உரியினங்கள் வாழாமல் போனதாகவும், பின், மஸ்யம் எனப்படும் நீர் வாழ் மீன், கூர்மம் எனப்படும் நீர் – நில வாழ் ஆமை, அதன் பின்னர் நில வாழ் வராஹம் போன்ற Lystrosaurus தோன்றியது என்றும் கூறுகின்றனர்.அதுவும் இந்த Lystrosaurusன் எலும்புக்கூடு தற்போது
கிடைத்தது, கிட்டத்தட்ட நம் வராஹ அவதாரம் பற்றிக் கூறப்படும் காலத்தை ஒட்டியது என்கின்றனர். அவ்வுயிரினம் தற்போதைய Antarctica, India, China, Mongolia, European Russia and South Africa. நிலங்கள் உள்ள இடங்களில் வாழ்ந்திருக்கும் என்கின்றனர்.)
5) Plate Tectonics எனப்படும், கண்டத்தட்டு இயக்கவியலில், கண்டத் தட்டுகள் சார்பு இயக்கம் மூலம் வருடத்திற்கு கிட்டத்தட்ட சுழியத்திலிருந்து 100 மி.மீ வரை நகர்கின்றன.

இதன் மூலம் புவி மேலோட்டின் மொத்த பரப்பு தொடர்ந்து அப்படியே இருக்கும். அடுத்த தட்டில் இவ்வகை நகர்வுகள் நகரும்.
இது படிக்கட்டு கொள்கை எனவும் கூறப்படுகிறது.

எனவே கடலுக்கடியில் மாற்றங்கள் ஏற்பட்டு, நிலம் முழுவதும் மூடப்பட்டிருக்கும். அது வெளியில் ஜம்புத்வீபமாக வந்ததையே இப்படிக் கதையாகக் கூறியிருக்கிறார்கள் என Hindu Mythology and Geological Research பற்றி ஆராய்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தற்போது, உலகின் பல இடங்களிக், நமது வேத புராணங்கள் பற்றிய முழுவேக ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது.

அதன்படி, அதில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மை என்றும், பல விஷயங்களை நிரூபிக்கும் அளவிற்கான விஞ்ஞான அறிவு இன்னும் நம்மிடம் வளரவில்லை, அநேகமாக பின்னாளில் கண்டறியப் படலாம் என்றும்
அந்த ஆய்வாளர்கள் அடித்துக் கூறுகின்றனர்.

எது உண்மையாகினும், புராணக்கதை மற்றும் அறிவியல் என இரு கூற்றும் கொடுத்துள்ளேன்.
ஏற்பு உங்களைப் பொறுத்தது.

கேள்வி: 2
காளி தன் காலடியில் ஏன் சிவபெருமானை மிதித்துக் கொண்டிருக்கிறாள்?

பதில்:
இதற்கு அத்வைதம் படித்த ஒருவர் விளக்கம் தந்தார்.
அதன் படி, காளியான சக்தியின் ஸ்வரூபத்தை 5 விதமாக உருவகப் படுத்தி உள்ளனர். அவை
1) தாந்த்ரீக காளி
(ஆண் என்பது அசைவறு நிலையைக் கொண்டது. பெண் என்பது ஆக்கம், நிலைப்பு, அழிவு ஆகிய மூன்றும் கொண்டது)

2) வேதம் விளக்கும் காளி
(ஆபரணம், ஆடை, அலங்காரம், உணர்வுகளால் கட்டுப்படுத்தப் படாத
உருவம் கொண்ட இயற்கைச் சக்தியைக் கொண்டது. இதுவே அசைவறு நிலை கொண்ட சவத்தை ஆட்கொள்கிறது)

3) ரக்தபீஜன் என்று உருவகப் படுத்தப் படும் தீய சக்திகளை அழித்ததும், மனதின் நல்ல சக்தி நிலை கொள்ளாது தவித்ததாம். நிலையாமையின் உச்சத்தில் அது ஸ்மரனை இழந்த நிலையை சிவனின் மேல் இருப்பது போல
உருவகித்தனர். மனம் தன் சுய நிலைக்கு வந்ததும், தன் உடல் தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் போனதை உணர்ந்து வருந்தியதாம். அந்நிலயில்லாது தவித்த சக்தியை நர்த்தன காளி என்றனராம்.

4) காளி மாதா
சக்தியை ஏற்கும் ஸ்வாஸத்தை குழந்தை விடும் முன் அதுவும் சவம் போல் தான் இருக்குமாம். தாயின் ஸ்பரிசம்
பட்டவுடன் தன் குழந்தை முழு ப்ரான சக்தி பெறுமாம். அதை உணர்த்தத் தான் தாயாக காளியின் காலின் கீழ் சிவ பெருமான் உள்ளார்.

5) ஸ்மஸான காளி
இடது காலை சிவனின் மேல் கொண்டு, வலது கையில் ரத்தம் சொட்ட வாளை ஏந்திய காளியின் உருவகம், மனிதன் இறந்ததும், அந்த சடலத்தை என்ன செய்து எரிக்க வேண்டும்
எனும் வழிமுறை உணர்த்த உருவகப் படுத்தப் பட்டது.

இவை எல்லாம் தாண்டி, பொது வாக்கின் படி, **சக்தி இல்லா சிவம் என்பது சவமே. அந்த இயற்கை சக்தியை நாம் அடைய மனம் ஒன்ற வேண்டும். அதைக் குறிக்கவே, சிவனின் இதயத்தில் கால் வைத்து காளி என்னும் சக்தி உருவகப் படுத்தப் பட்டது**
என்று விளக்கினார். சிவசக்தியின் உருவகம் பற்றிய கூற்றும் இதுவும் ஒன்றாக இருப்பது போல் பட்டதால், அதை என்னால் ஏற்க முடிந்தது.

மேற்கொண்டு கூறப்பட்டுள்ள அனைத்தும் தரவுகள் முலம் அறிந்து, அதை கற்றோரிடம் உறுதிப் படுத்தி எழுதியது. ஏற்பது அவரவர் விருப்பம் மட்டுமே.

🍁வாஸவி நாராயணன்🍁
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Vasavi Narayanan

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!