வணக்கம் நண்பர்களே. நான் எழுதும் தொடரில் என்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு, நான் அறிந்த, கேட்டுத் தெளிந்த விளக்கங்களைத் தருகிறேன். கருத்துக்கள் வேறுபடலாம்.
இத்தளம் சண்டையிட அல்ல. எதிர் கருத்துக்கள் உள்ளவர்கள் பண்பான முறையில் கேட்கலாம்.
கேள்வி : 1
ஹிரண்யாக்ஷஸன் கடலுக்கு அடியில் பாய் போல பூமியைச் சுருட்டி வைத்த கதை பற்றிக் கூற முடியுமா?
1) நமது புராணங்களின் படி, வராஹ அவதாரம் என்பது,
**இரு பெரிய கொம்புகளைக் கொண்ட பன்றி உருவம் கொண்டு விஷ்ணு பகவன் எடுத்த அவதாரம். அவர் கடலுக்கு அடியில் இருந்த பூமியை, இரு கொம்புகளுக்கு இடையே எடுத்து வெளியில் கொண்டு வந்தார்**
எனக் கூறப்பட்டுள்ளது.
இதுவும் ஓரளவு ஒத்துத் தான் போகின்றது. English naturalist Charles Darwin (1809–1882) என்பவர்
1)கடல் நிலைகள் ஓரிடத்தில் இருந்து விலகி, பூமியில் நிலங்களின் தோற்றம், அதாவது ஜம்புத்வீபத்தின் முழுமையான
3) பூமியின் வட கோளார்த்தம் நிலப்பரப்பாகவும், பெரும்பாலான தென் கோளார்த்தத்தின் நிலப்பகுதி கடலுக்கு அடியிலும் இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
(இதற்கு அறிவியல் ரீதியாக காரணமும் சொல்லப் படுகின்றது. அதாவது,
இதன் மூலம் புவி மேலோட்டின் மொத்த பரப்பு தொடர்ந்து அப்படியே இருக்கும். அடுத்த தட்டில் இவ்வகை நகர்வுகள் நகரும்.
எனவே கடலுக்கடியில் மாற்றங்கள் ஏற்பட்டு, நிலம் முழுவதும் மூடப்பட்டிருக்கும். அது வெளியில் ஜம்புத்வீபமாக வந்ததையே இப்படிக் கதையாகக் கூறியிருக்கிறார்கள் என Hindu Mythology and Geological Research பற்றி ஆராய்ந்த ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதன்படி, அதில் கூறப்பட்டுள்ளவை அனைத்தும் உண்மை என்றும், பல விஷயங்களை நிரூபிக்கும் அளவிற்கான விஞ்ஞான அறிவு இன்னும் நம்மிடம் வளரவில்லை, அநேகமாக பின்னாளில் கண்டறியப் படலாம் என்றும்
எது உண்மையாகினும், புராணக்கதை மற்றும் அறிவியல் என இரு கூற்றும் கொடுத்துள்ளேன்.
ஏற்பு உங்களைப் பொறுத்தது.
கேள்வி: 2
காளி தன் காலடியில் ஏன் சிவபெருமானை மிதித்துக் கொண்டிருக்கிறாள்?
பதில்:
இதற்கு அத்வைதம் படித்த ஒருவர் விளக்கம் தந்தார்.
1) தாந்த்ரீக காளி
(ஆண் என்பது அசைவறு நிலையைக் கொண்டது. பெண் என்பது ஆக்கம், நிலைப்பு, அழிவு ஆகிய மூன்றும் கொண்டது)
2) வேதம் விளக்கும் காளி
(ஆபரணம், ஆடை, அலங்காரம், உணர்வுகளால் கட்டுப்படுத்தப் படாத
3) ரக்தபீஜன் என்று உருவகப் படுத்தப் படும் தீய சக்திகளை அழித்ததும், மனதின் நல்ல சக்தி நிலை கொள்ளாது தவித்ததாம். நிலையாமையின் உச்சத்தில் அது ஸ்மரனை இழந்த நிலையை சிவனின் மேல் இருப்பது போல
4) காளி மாதா
சக்தியை ஏற்கும் ஸ்வாஸத்தை குழந்தை விடும் முன் அதுவும் சவம் போல் தான் இருக்குமாம். தாயின் ஸ்பரிசம்
5) ஸ்மஸான காளி
இடது காலை சிவனின் மேல் கொண்டு, வலது கையில் ரத்தம் சொட்ட வாளை ஏந்திய காளியின் உருவகம், மனிதன் இறந்ததும், அந்த சடலத்தை என்ன செய்து எரிக்க வேண்டும்
இவை எல்லாம் தாண்டி, பொது வாக்கின் படி, **சக்தி இல்லா சிவம் என்பது சவமே. அந்த இயற்கை சக்தியை நாம் அடைய மனம் ஒன்ற வேண்டும். அதைக் குறிக்கவே, சிவனின் இதயத்தில் கால் வைத்து காளி என்னும் சக்தி உருவகப் படுத்தப் பட்டது**
மேற்கொண்டு கூறப்பட்டுள்ள அனைத்தும் தரவுகள் முலம் அறிந்து, அதை கற்றோரிடம் உறுதிப் படுத்தி எழுதியது. ஏற்பது அவரவர் விருப்பம் மட்டுமே.
🍁வாஸவி நாராயணன்🍁