My Authors
Read all threads
பொருளும், உப பொருளும்..
தனிப்பட்ட அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை விலக்கி வைத்து, நடைமுறை உண்மைகளை அறிய விரும்புவோர் மட்டும் படிக்கவும்.
1. பெட்ரோல், டீசல் : க்ரூட் ஆயில் இதன் மூலப்பொருள். அதை இறக்குமதி செய்து, ரிஃபைனரிகள் மூலம் பிரிக்கும் போது, பெட்ரோல், கெரொசின், டீசல், பாரஃபின் ,
மெழுகு, சமையல் எண்ணெய் (யெஸ்), தார், ஜெலடின், என இன்னும் பல உப பொருட்கள் கிடைக்கும். இந்த உப பொருட்களின் மதிப்பும் அடங்கியதுதான் நமது டீசல் விலை. உப பொருட்களே இல்லையெனில் டீசல்,பெட்ரோல் விலை பல மடங்கு கூட்டியாக வேண்டும்.
2. அரிசி : அரிசி ஆலை வைத்திருப்போர்கள் அறிவார்கள்.. அரவை
கூலிக்காக மட்டும் அரிசி ஆலை இயங்குவதில்லை. அரசு தரும் அரவைக் கூலி மின் கட்டணத்துக்குக் கூட போதாது. அரிசி அரைக்கும் போது கிடைக்கும் தவிடு (அதிலிருந்து பிஸ்கெட் செய்ய எண்ணெய் எடுக்கப்படுகிறது) தான் அவர்களின் நிஜ லாபம். தவிடு எனும் உபபொருள் இல்லையெனில் அரிசி விலை கூட்டியாக வேண்டும்.
3. பயிர் வித்துகள் : எள் முதல் மணிலா வரையிலான பயிர்களை அரைத்து எண்ணெய் எடுக்கும்போது, அதன் உப பொருளாக பிண்ணாக்கு கிடைக்கும். மாட்டுத் தீவனம் முதல் பிஸ்கெட் வரை பயன்படுத்தப்படும் பிண்ணாக்கு இல்லையெனில், எள், மணிலா இந்த விலை போகாது. விவசாயிகள் அதைப் பயிரிட மாட்டார்கள். எண்ணெய் விலை
கூடியாக வேண்டும். இப்படி பல பொருள் - உப பொருள் உதாரணங்கள் உள்ளன. சில பொருட்களில் உப பொருள் மிக விலை அதிகமாகி, அதை மட்டும் எடுத்துக் கொண்டு பொருளை கடலில் கொட்டுவதும் உண்டு. சரி.. விஷயத்துக்கு வரலாம்..
4. கரும்பு : இது நம் நாட்டுப் பயிரே அல்ல! வெள்ளையர்களால் இறக்குமதி செய்யப்பட்டு
இங்கே பயிரிடப்பட்டு, லண்டனுக்கு சர்க்கரையாக ஏற்றுமதி ஆன ஒன்று. நமக்கு இனிப்பு என்றால் அது பனைவெல்லம், கருப்பட்டிதான்.
சர்க்கரை போதை நமக்குப் பழக்கியவுடன், நாம் ஆர்வமுடன் கரும்பு பயிரிடத் தொடங்கினோம். 40 ஆண்டு முன் வரை அரசு மட்டுமே விவசாயிக்களுக்காக் கரும்பு ஆலைகளை நடத்தி வந்தது.
மெல்ல நாட்டில் குடிப்பழக்கம் பரவலாகி, மது விற்பனை அதி வேகத்தில் உயரத் தொடங்கியதை தனியார் முதலாளிகள் கண்டு கொண்டு, தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அனுமதி வாங்கினர். காரணம், கரும்பிலிருந்து சர்க்கரையுடன் உப பொருட்களாக மொலாஸஸ், எத்தனால் போன்றவை கிடைக்கும். அதிலும் எத்தனால் பயன்பாட்டை
அண்மையில்தான் அறிவோம். மொலாஸஸில் இருந்து எரி சாராயம் (ஸ்பிரிட்) எடுத்து அதிலிருந்து பல்வேறு மது வகைகளை ஆலைகள் மூலம் உற்பத்தி செய்ய, தனியாக மது ஆலைகளையும் தொடங்கினர். அடுத்தக் கட்டமாக மது ஆலைகளே தனிப்பட்ட பிராண்ட்களை (மெக்டோவெல்ஸ், சிவாஸ்) தொடங்கி, அரசுக்கும் தனியாருக்கும்
விற்றன. இப்போது, நாட்டின் சர்க்கரைத் தேவையை விட பல மடங்கு அதிகமாக உற்பத்தி செய்கிறோம். பல லட்சம் டன் சர்க்கரை குடோன்களில் தேங்கி உள்ளன. எக்ஸ்போர்ட் ஆர்டர் கிடைப்பதற்கேற்ப அவை செலவிடப்படுகிறது. தனியார் குடோன்களில் ஸ்டாக் இருக்கும் சர்க்கரையை அடமானமாக வைத்து வங்கிகளில் கடன் பெற்று
அரசு கரும்பு விவசாயிகளுக்கான மானியத்தை தரும் சூழல்தான் இப்போது. உபரி இருந்தும் சர்க்கரை ஆலைகள் தொடர்ந்து இயங்குவதின் ஒரே காரணம், அதன் உப பொருளான மொலாஸாஸ். மது ஆலைகள் மூடப்பட்டால் மொலாஸஸ் தேவைப்படாது. எனவே சர்க்கரை ஆலைகள் ஒரு மாதம் மட்டுமே ஓடும். அதற்கேற்பவே கரும்பு கொள்முதல்
செய்யப்படும். ஏற்கனவே வெட்டு ஆர்டருக்காக மாதக்கணக்கில் காத்திருந்து, கரும்பை வயலிலேயே காய விடும், (சமயங்களில் கொளுத்தி விடும்) விவசாயிகள் கதி என்னாகும்? கரும்பின் விலையில் பாதிக்கு பாதி அரசு மானியமாக தருவதால்தான் இந்தளவு கரும்பு நடவே நடக்கிறது. ஆகவே, மது ஆலைக்கும், கரும்பு
விவசாயத்துக்குமான தொடர்பு கற்பனை கதை அல்ல. நாம மது ஆலைகளை மூடினாலும், கரும்பு ஆலைகள் தங்களது மொலாஸஸை வேறெங்காவது விற்றால்தான் இயங்கவே முடியும். ஆனால், அப்படி வேறெங்கும் விற்க முடியாது. காரணம் சர்க்கரை கார்ட்டெல். (Sugar Cartel). பெரிய மர்மக் கதையான இது பற்றி அடுத்த பாகமாக
எழுதுகிறேன். இதுவரையில் எழுதிய எனது கருத்துகளில் தகவல் பிழை இருக்கலாம். ஆனால் பொருட்பிழை இருக்க வாய்ப்பே இல்லை. அரிசி ஆலை உரிமையாளராகவும், கரும்பு விவசாயியாகவும், சர்க்கரை ஆலை லோடு ஏற்றுபவராகவும் கிடைத்த பற்பல அனுபவங்களின் அடிப்படையில் எழுதிய தொகுப்பு இது. மீண்டும் சொல்கிறேன்..
அரசியலுக்காக மனசாட்சியை விற்றுப் பிழைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. இதை என்னை அறிந்தவர்கள் புரிந்து கொண்டால் போதும். நான் மிடாஸ் ஆலையில் பங்குதாரனும் இல்லை, திமுக சார்புள்ள ஆலைக்கு உரிமையாளனும் இல்லை. நாட்டின் சகலமும் அரசியலாக்கப் படும்போது, அதில் தெரிந்தே கலக்கப்படும் விஷத்தைப்
பிரித்தெடுக்க உதவ வேண்டியது இப்போதைக்கு அறிவுசார் தளத்தில் அனைவரின் முக்கியமான கடமை. தவற விட்டால், சாதி, மத அரசியலில் சிக்கி இன்னும் பல ஆண்டு தமிழகம் பின்னோக்கி இழுத்துச் செல்லப்படுவதை நாம் வேடிக்கைப் பார்க்க வேண்டி இருக்கும். எனவேதான் இந்த நீண்ட திரி.
அடுத்த பாகம் விரைவில்..
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with SKP KARUNA

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!