My Authors
Read all threads
கருணாநிதியின் ஊழல்கள்

தமிழ்நாட்டில் ஊழல் என்ற வார்த்தையே 1969-1976 திமுக ஆட்சி காலத்தில் தான் அதிகமாக பிரபலமானது.

அதை பிரபலப்படுத்தியவர் கருணாநிதி என்ற தகவல் பலருக்கும் தெரியாத ஒன்று.பலம் பொருந்திய நேர்மையான தலைவராக விளங்கிய அண்ணாத்துரை
தம்பி வா தலைமையேற்க வா”
என அழைத்தது என்னவோ நெடுஞ்செழியனைத்தான். ஆனால்,1969 பிப்ரவரி 3 ல் அண்ணா இறக்கிறார்.

அவர் இறந்தவுடன் நெடுஞ்செழியன் இடைக்கால முதலமைச்சராக இருக்கிறார்.

பின்னர் சிறிது நாட்களில் நடந்த பொதுக்குழுவில் எம்.ஜி.ஆரின் ஆதரவு மற்றும் சில பிரமுகர்களின் ஆதரவு
காரணமாக கருணாநிதி முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருணாநிதி அரியணை ஏற முக்கியமானவர் எம்.ஜி.ஆர்,

ஆனால் அதே எம்.ஜி.ஆரே பிற்காலத்தில் கருணாநிதி தலைமையிலான அரசின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டது தான் அரசியல் திருப்பங்களில் அதிமுக்கியமான காட்சி. .
அவையே கருணாநிதி பதவியிழந்திருந்த 13 ஆண்டு கால வனவாசத்துக்கும் அடிப்படை காரணம்,ஒவ்வொரு முறை முதல்வரான போதும் ஒவ்வொரு விதமான ஊழல் புகார்கள்,

திமுக உதயமான காலத்திலிருந்து உதயநிதி இளைஞரணி தலைவரான காலம் வரையிலுமாக திமுகவை உலுக்கிய ஊழல் குற்றச்சாட்டுகளின் தொகுப்பு தான் இந்த தரேட்,
1975-ம் ஆண்டு இந்தியா முழுமைக்கும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல மாநில அரசுகள் கலைக்கப்பட்டன.

அந்த வரிசையில் 1976-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியும் கலைக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து 1969 முதல் 1976 (7 வருடம்) வரையிலான கருணாநிதியினுடைய ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற 28 ஊழல் குற்றச்சாட்டுகளைப் பட்டியலிட்டு மத்திய அரசிடம் வழங்கினார்,

தி.மு.க விலிருந்து வெளிவந்து அதிமுக எனும் புதிய கட்சி உருவாக்கியிருந்த எம்.ஜி.ஆர்.
1. மேகலா பிக்சர்ஸ் ஊழல்,
2. அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல்,
3. டிராக்டர் ஊழல்,
4. கருப்பு பணத்தில் கோபாலபுரம் இல்லம்
விரிவாக்கம்,
5. முரசொலி ஊழல்,
6. திருவாரூர் வீட்டு ஊழல்,
7. ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல்,
8. கோபாலபுரம் வீட்டு மதிப்பு ஊழல்,
9. ஊழல் அதிகாரியை காப்பாற்றி முறைகேடு
செய்தது,
10. வீராணம் ஊழல்
11. பூச்சி மருந்து தெளிப்பு ஊழல்
12. மணி அரிசி ஆலை கடன் ஊழல்,
13. ஜெ.கே.கே. குழுமத்தின் விற்பனை வரி
ஏய்ப்பு ஊழல்,
14. சமயநல்லூர் மின்திட்ட ஊழல்,
15. குளோப் தியேட்டர் வாடகை சட்டத் திருத்த
ஊழல்,
16. பிராட்வே டைம்ஸ் ஊழல்,
17. சர்க்கரை ஆலை ஊழல்,
18. கூட்டுறவு சங்க ஊழல்,
19. மது ஆலை ஊழல்,
20. கொடைக்கானல் & பழனி சாலை ஊழல்,
21. தி.மு.க. அறக்கட்டளைகள் ஊழல்,
22. நில ஆக்கிரமிப்பு & கொலை குற்றச்சாட்டு,
23. ஊழல், கிரிமினல் குற்றவாளிகளுக்கு
ஆதரவு,
24. தொழிற்சங்க ஊழல்,
25. ஊடகங்களுக்கு மிரட்டல்,
26. மின் திருட்டு,
27. எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல்,
28. இழப்பீட்டு தொகை ஊழல்

28 ஊழலையும் பட்டியலிட்டால் Twitter தாங்காது முக்கியமானதை பற்றி மட்டும் பதிவிடுகிறேன்,
ஏற்கனவே பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த காலத்தில் ஆட்சி நிர்வாகத்தின் சகல நுணுக்கங்களையும் அறிந்திருந்தார்.

இதன் தொடர்ச்சியில் ஆட்சிக்கு வந்த பிறகு எப்படி அதில் நுணுக்கமான, வெளியே தெரியாத வகையில் ஊழல் செய்ய வேண்டும் என்ற கலையை நன்கு கற்று தேர்ச்சி பெற்று சாணக்கியனாக விளங்கினார்
இந்தக் 28 குற்றச்சாட்டுகளில் இல்லாத ஊழல் ஒன்று உள்ளது அது தான் கட்டுமரத்தின் ஆட்சியின் முதல் ஊழல் கூவம் நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம் தொடங்கியது.

அன்றைய காலகட்டத்தில் கூவம் நதியை தூய்மைப்படுத்த ரூ 3 கோடி ஒதுக்கப்பட்டது. இது செலவழிக்கப்படவில்லை.
இந்த நிதி என்ன ஆயிற்று என்று கம்யூனிஸ்டு உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு அங்கு வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன என்று கருணாநிதி பதிலளித்தார். அடுத்த நாள் கூவத்தில் முதலை என்று வதந்தி கிளப்பி விடப்பட்டது. சாக்கடையில் எப்படி முதலை வரும்?
என்ற அடிப்படையான கேள்வியை தாண்டி இந்த வதந்தி திட்டமிட்டு பரப்பப்பட்டது.பின்னர் பணியாளர்கள் கூவத்தில் வேலை செய்ய பயப்படுகிறார்கள் என்றும் அதனால் வேலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என்றும் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.இதன் பின்னர் அந்த நிதி என்ன ஆனது என்றே தெரியவில்லை.
இதன் தொடர்ச்சியில் பெரும் ஊழல் என்பது குளோப் தியேட்டர் ஊழல்

அண்ணாசாலையில் இருக்கும் இந்த தியேட்டர் கட்டிடம் வட இந்தியாவை சார்ந்த குஷால்தாஸ் என்பவருக்கு சொந்தமானது
இந்த கட்டிடத்தை வரதராஜன் பிள்ளை என்பவர் 25 ஆண்டுகளாக குத்தகைக்கு எடுத்திருக்கிறார்.குத்தகை கட்டணமாக குஷால் தாஸுக்கு
ஆண்டுதோறும் 5000 ரூபாய் கொடுக்கிறார் வரதராஜன் ஆனால், தியேட்டர் நடத்துவதால் இவருக்கு வாரந்தோறும் வரவு 8000 ரூபாய். ஆண்டுக்கு நாலு லட்சத்து பதினான்காயிரம்.

வரதராஜப் பிள்ளைக்கு கிடைக்கும் இந்த வருமானத்தைப் பார்த்தும்,எதிர்ப்பு தெரிவிக்காத குஷால்தாஸ், குத்தகை காலம் முடிவடைந்ததும்,
குத்தகையை புதுப்பிக்க விருப்பமில்லை என்று தெரிவிக்கிறார்

வாரம் 5000லாபம் பார்க்கும் வரதராஜப்பிள்ளை இதனை தக்க வைக்க எனக்கே விற்று விடுங்கள் என்று அடிமாட்டு விலைக்கு கேட்கிறார் இதனால் குஷால்தாஸ் வழக்கு தொடுக்கிறார் வழக்கு பல்வேறு விசாரணைக்குப் பிறகு உச்சநீதிமன்றத்துக்கு செல்கிறது.
உச்சநீதிமன்றம், குஷால் தாஸூக்கு ஆதரவாக தீர்பபளிக்கிறது. அது மட்டுமல்லாமல் ஆறு வார காலத்திற்குள் இடத்தைக் காலி செய்து, உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.

இந்நிலையில் இதனை எப்படியாவது தன் வசப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்த வரதராஜ பிள்ளை,
அன்றைய ஆட்சியாளர்களை சந்திக்க விரும்பினார் அதற்காக அன்றைய திமுகவின் அதிகார மையமாக விளங்கிய முரசொலி மாறனை அணுகுகிறார்.

அவர் அதற்காக அமைச்சர் ப.உ.சண்முகத்தை சந்திக்க சொல்கிறார்.

உடனே வரதராஜ பிள்ளை அமைச்சர் ப.உ.சண்முகத்தை அணுகி இதற்கான தீர்வு என்ன என்று கேட்கும் போது,
சட்டதிருத்தம் கொண்டு வந்து உங்களுக்கே அந்த இடத்தை சொந்தமாக்கிக் கொள்ளுமாறு செய்கிறோம். அதற்காக சில லட்சங்கள் தேவைப்படுகிறது என்றார்.

அதற்கான முன் பணமாக அன்றைய மதிப்பில் ரூ 30000 கொடுக்கப்படுகிறது பின்னர் முதலமைச்சர் கருணாநிதியை சந்திக்குமாறு அவருக்கு அறிவுறுத்தப்படுகிறது.
அவரை சந்திக்க சென்ற வரதராஜபிள்ளையிடம் கருணாநிதி பேரம் பேசுகிறார் பின்னர் சில பல ஆயிரங்கள் கைமாறுகின்றன.

இதன் தொடர்ச்சியில் உடனடியாக சட்டமன்றத்தில் இதற்காக சட்டத்திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

அது தான் நீண்ட காலமாக குத்தகைக்கு இருந்தால் அந்த இடத்தை சம்பந்தப்பட்டவர்
உரிமையாக்கிக் கொள்ளும் வகையிலான தமிழ்நாடு குத்தகைதாரர் சட்டம்.

இந்த சட்டம் உடனடியாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு அதே வேகத்தில் அவருடைய ஒப்புதலைப் பெற்று நடைமுறைக்கு வந்தது இதன் மூலம் குளோபல்தியேட்டர் இடம் வரதராஜபிள்ளைக்கு சொந்தமானது
திமுகவின் அடுத்த பெரும் ஊழல் என்பது விவசாய நிலங்களுக்கு பூச்சி மருந்து அடிப்பது. அதாவது அன்றைய இந்திராகாந்தி அரசு விவசாய நிலங்களின் மேம்பாட்டிற்காக அந்த நிலங்களை பூச்சிகளிடம் பாதுகாக்க வேண்டி தனியார் நிறுவன ஹெலிகாப்டர்கள் மூலம் பூச்சி மருந்து அடிக்க நிதி ஒதுக்கீடு செய்தது.
அதனை மாநில அரசுகள் தங்கள் சிறிய பங்களிப்புகள் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்றது இதனைத் தொடர்ந்து சில தனியார் நிறுவனங்கள் கருணாநிதியை அணுகின வேறு ஒரு நிறுவனம் அன்றைய திமுகவின் மிக முக்கிய பிரமுகரான அன்பில் தர்மலிங்கத்தை அணுகியது அதற்காக அவர் சதுர அடி கணக்கில் கமிஷன் பேரம் பேசினார்.
அதன் பிறகு கருணாநிதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது பின்னர் அது இறுதி செய்யப்பட்டு இறுதியில் அந்த நிறுவனத்திற்கே டெண்டர் வழங்கப்பட்டது. இங்கு
கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்பது சம்பந்தப்பட்ட துறை அமைச்சரான சத்தியவாணி முத்துவிற்கே தெரியாமல் இத்தனை திரைமறைவு பேரங்களும் நடந்தன
இறுதியில் தன் பணிகளை ஆரம்பித்த அந்த நிறுவனமும் கமிஷன் அதிகரிப்பு, இயங்கு செலவு அதிகரிப்பு காரணமாக பணியை பாதியில் நிறுத்தியது. இதனால் அரசுக்கு
பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

தி.மு.க-வின் வரலாற்றில் இன்றளவும் பேசப்பட்டு வரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது வீராணம் ஊழல்,
1970களில் சென்னை குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரியிலிருந்து நெய்வேலிக்கு அருகில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்துக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு
அங்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது 200 கிலோ மீட்டர் தரைவழியாகப் பதிக்கப்பட்ட குழாய்கள் மூலமாக சென்னைக்குக் கொண்டு வருவதுதான் திட்டம்.

இந்தத் திட்டத்துக்காக பல்வேறு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. ஆனால்,இந்தத் துறையில் முன்னனுபவம் இல்லாத, கருணாநிதி தன்னுடைய மனசாட்சி
எனக்கூறிய முரசொலிமாறனுக்கு நெருங்கிய நண்பரான சத்யநாராயணன் என்பவருடைய நிறுவனத்துக்கு இந்த டெண்டர் இறுதி செய்யப்படவே இந்த டெண்டரில் முறைகேடு
நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன 1970-களில் இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 16 கோடி ரூபாய்,

இதற்கான கமிஷன் தொகை பல லட்சங்கள்
முரசொலி மாறன் மூலமாக கருணாநிதியிடம் வழங்கப்பட்டன.

மேலும் வேலை தொடங்கவும் குழாய் அமைக்கும் தொழிற்சாலை தொடங்கவும் முன்பணம் வேண்டும் என்று இந்த நிறுவனம் அரசிடம் கோரிக்கை வைத்தது.

நிதித்துறை செயலாளரின் எதிர்ப்பையும் மீறி இந்த நிறுவனத்திற்கு முன்பணம் ரூபாய் 3.9 கோடி வழங்கப்பட்டது,
வீராணம் திட்டத்திற்கான வேலையை தொடங்கி முடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் அது பதித்த குழாய்கள் எல்லாம் கீறல் விழத்தொடங்கின.

ஆங்காங்கே பணிகள் பாதியில் நின்றன. இறுதியில் தன் சோக நிலையையும் எதார்த்ததையும் எழுதி வைத்து விட்டு சம்பந்தப்பட்ட நிறுவன உரிமையாளர் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த 28குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா தலைமையில் கருணாநிதி செய்த ஊழல்களை விசாரிக்க ஓர் ஆணையத்தை
அமைத்தார் இந்திராகாந்தி

28ஊழல் குற்றச்சாட்டுகளையும் விசாரித்து 1988ஆம் ஆண்டு 1600பக்கங்கள் கொண்ட தனது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்தது.
அதில் கருணாநிதி ஆட்சிகால ஊழல்கள் விரிவாகவும் நுணுக்கமாகவும் விசாரணை செய்யப்பட்டன இதற்காக பல தனியார் நிறுவனங்களின் அதிபர்கள் அரசு அதிகாரிகள்
விசாரிக்கப்பட்டனர்

அதில் பல ஊழல்கள் நேரடியாக நிரூபிக்க முடியாத அளவில் விஞ்ஞானபூர்வமான வழிகளில் செய்யப்பட்டிருக்கின்றன என்று சொல்லப்பட்டது.
இதுவே பிற்காலத்தில் திமுகவுக்கு விஞ்ஞானபூர்வ ஊழல் செய்யும் கட்சி என்ற நிலையான பெயரை வாங்கித்தந்தது

தன் ஆட்சிகால ஊழல் நடவடிக்கைகளில் இருந்து தப்புவதற்காக எமர்ஜென்சி காலத்தில் தன் ஆட்சியை கலைத்து,தன் கட்சியை பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கிய இந்திரா
காந்தியுடன் மீண்டும் கருணாநிதி
கூட்டணி வைத்தார். இதன் மூலம் இந்த விசாரணை கிடப்பில் போடப்பட்டது

சர்க்காரியா சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில் சிபிஐ வழக்கு பதிவு செய்தது ஆயினும் போதிய ஆதாரங்கள் இல்லாததால் எல்லாம் வழக்குகளில் இருந்து விடுதலை
செய்யப்பட்டனர் பின்னர் 1980களில் வழக்கானது திரும்பப்பெறப்பட்டது,
ஆனால் இன்றளவும் திமுகவின் மீதான களங்கமாக இந்த சர்க்காரியா கமிஷன் அறிக்கை இருக்கிறது திமுகவை திணறடித்த இந்த ஊழல் குற்றச்சாட்டுகளில் யாரும்
தண்டனை அனுபவிக்கவில்லை,என்றாலும் ஊழல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது,

1996 to 2001 மற்றும் 2004 to 2009 வரை ஊழல்கள் பகுதி 2ல் பார்ப்போம்
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with SSR

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!