My Authors
Read all threads
இப்போ என்ன ?

கோயில்களுக்கு அதிக பணம் கொடுத்து பராமரிக்கிறார்கள்.

அதை பள்ளிகளுக்கும் மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள்,

இதானே ?

சரி நம்ம கொஞ்சம் பேசுவோமா ?

தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களின் பராமரிப்புக்கு ஆண்டுதோறும் 4கோடி முதல் 6கோடி ரூபாய் மட்டுமே மானியமாக அரசு வழங்குகிறது,
மாறாக தமிழக கோயில்கள் அரசிற்கு ஆண்டுதோறும் ரூ 3000 கோடி வருவாய் ஈட்டுகிறது கோவில் பராமரிப்பு செலவு போக, மீதம் 2995 கோடி ரூபாய் அரசாங்கத்திடம் தான் உள்ளது,

ஏற்கனவே அரசாங்கம் அதைத்தான் செய்து வருகிறது.. கோயில்கள் மூலம் பெறப்படும் வருமானத்தில் சுமார் 2500 கோடி ரூபாய்,
ஆண்டுதோறும் பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகளின் கட்டுமானத்திற்கும், அதில் பணிபுரிபவர்களுக்கு சம்பளமாகவும் வழங்கப்பட்டு வருகிறது... இதுதவிர கோவில்களின் நேரடி கண்காணிப்பில்
54 பள்ளிகள் (CBSE உட்பட),கல்லூரிகள் செயல்படுகின்றன,

33 கருணை இல்லங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்து சமய அறநிலையத் துறையின் கீழே உள்ள கோயில்களின் எண்ணிக்கை 44,121

இதுதவிர கிராம பூசாரிகளின் கட்டுபாட்டில் உள்ள கோயில்களின் எண்ணிக்கை 2,00,000

சுமார் 2லட்சத்து 50ஆயிரம் கோயில்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன

இவற்றுள் பெரும்பாலானவை ஆயிரம் வருடங்களாக தமிழகத்தில் இருந்து வருகிறது.
ஒரு சில கோயில்கள் கடந்த நூற்றாண்டில் கட்டப்பட்டன,

#திருட்டுதிராவிட ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் பெயர் சொல்லும் அளவிற்கு எந்தக் கோயிலும் கட்டப்படவில்லை

60 ஆண்டுகளாக கோயில்களில் தமிழக அரசு முதலீடு செய்யவில்லை ஆனால் ஆண்டுதோறும் ஆயிரம் முதல் 3 ஆயிரம் கோடி வருமானம்
ஈட்டக்கூடிய கோவில் சொத்துக்களை முழுமையாக அனுபவித்தது,

கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் கோயில்களின் மூலம் பெறப்பட்ட நிதியை கொண்டு இத்தனை காலம் ஆட்சி நடத்தி வந்துள்ளது

தமிழ் மன்னர்கள் தங்கள் காலத்தில் கட்டியமைத்த கோவில்கள் தான் இன்றைய காலத்திலும் தமிழக மக்களுக்கு பயன் தருகிறது.
தமிழக கோயில்களின் கீழ் உள்ள நிலங்களின் சொத்துவிவரம் -

சுமார் 7 லட்சம் ஏக்கர் நிலங்கள்..

இவைகளுள் ஐந்து லட்சத்திற்கும் மேலான நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளது,

தமிழ் நாட்டுக்கே தெரியும் யார் இந்த தனியார் அமைப்புனு #திருட்டு_திமுக
மீதியுள்ள இரண்டு லட்சம் ஏக்கர் குத்தகை பணம் தான் தமிழக அரசுக்கு வருகிறது, பெரும்பாலான கோயில்களின் ஒரு ஏக்கர் குத்தகை நிலத்திற்கு ஆண்டுதோரும் 40 ரூபாய் மட்டுமே பெறப்படுகிறது..

ஒரு ஏக்கர் ஒரு வருஷத்துக்கு 40 ரூபாய், உலகத்துல இந்தமாதிரி ஒரு வ்யவாரம் எங்கயும் நடக்காது,
இந்த முறைகேடுகளை கண்டுபிடிக்க சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினால், பல லட்சம் கோடிகள் தமிழக அரசிற்கு வரக்கூடும்,

அந்தப் பணத்தில் AIMS தரத்திலான மருத்துவமனைகளை மாவட்டம்தோறும் அமைக்க முடியும்,

IIT, IIM போன்ற கல்லூரிகளை அதிக அளவில் தமிழகத்தில் நிறுவ முடியும்,
1858-ல் இந்தியாவின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு நேரடியாக சென்றது. தங்கள் மீது இந்திய மக்களுக்கு இருந்த வெறுப்பை குறைக்கவும், நம்பிக்கையை வளர்க்கவுமான தேவை அப்போதைய பிரிட்டிஷ் அரசுக்கு இருந்தது. இதனால்,மத விவகாரங்களில் பிரிட்டீஷ் அரசு தலையிடாது'
என்ற வாக்குறுதியை அளித்தது,

கோவில் நிர்வாகத்தை தமிழர்களே கவனித்துக்கொள்ள அனுமதி அளித்தது,

கோவில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் தெரியவர, 1920-ல் பனகல் அரசர் முதலமைச்சராக இருந்தபோது, மதராஸ் மாகாணத்தில் (ஆந்திரா கேரளா மைசூர் உட்பட)இருந்த அனைத்து திருக்கோயில்களையும் அரசின்
கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சித்தார் இதற்காக 1922-ல் இந்து பரிபாலன சட்டத்தை முன்மொழிந்தார்,

1959-ஆம் ஆண்டின் தமிழ்நாடு இந்து சமய அறக்கொடைகள் சட்டம் 22 ஜனவரி 1960, 1ஆம் தேதியன்று அமலுக்கு வந்தது.இதன்படி இந்து சமய கோயில்களை நிர்வகிக்க தனியான அரசுத்துறை உருவாக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றதும் கோவில்களின் நிலங்கள் மற்றும் குளங்கள் காணாமல் போயின 60 ஆயிரம் கோயில்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக சுருங்கியது..

50,000 கோயில் குளங்கள் 2000 ஆக குறைந்தது கோவில் நிலங்கள் 2 லட்சமாக சுருங்கியது பலநூறு தங்க ரதங்கள் வெறும் 63 ஆக குறைந்தது,
கோவில் சொத்துக்கள் சூறையாடப்பட்டன,கோவில்களில் உள்ள சாமி சிலைகள் திருடப்பட்டன பல கோடிக்கு வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டன,

யார் திருடியது? திருட சொன்னவன் யார்? அனுபவிப்பது யார்? அதை கண்டுபிடிக்க வந்தவருக்கு நேர்ந்த கதி என்ன நடந்தது என்னனு ஊர் அறியும்
தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாறு கோயில்களின் மூலமாகத்தான் அடையாளம் காணப்படுகிறது,

பிற நாடுகளில் உள்ளது போல இங்கு அருங்காட்சியங்கள் அதிக அளவில் இல்லை கோயில்களே அருங்காட்சியங்களாக இருக்கின்றன,

செப்பேடுகளும் கல்வெட்டுகளும் நமது வரலாற்றை பறைசாற்றுகின்றன,
ராஜேந்திரசோழன் 1000ஆண்டுகளுக்கு முன் மலேசியா,இந்தோனேசியா,கம்போடியா மீதான படையெடுப்பின் மூலம் நமது கப்பற்படையின் வலிமை தெரிகிறது

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் மூலமாக வடநாடு படையெடுப்பு தெரியவருகிறது

சேரன் செங்குட்டுவன் இமய மலை படையெடுப்பின் மூலம் தமிழரின் போர் வலிமை தெரியவருகிறது
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பேரூர்(கோயம்புத்தூர்) திருக்கோயில் கல்லணை கட்டிய கரிகால சோழனால் கட்டப்பட்டது.

சிதம்பரத்திலுள்ள நடராஜர் சிலை உலக அறிவியல் கழகத்தின் சுவிட்சர்லாந்து அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இப்படி எண்ணற்ற வரலாற்று பொக்கிஷங்களாக நமது கோயில்கள் உள்ளன.
கோயில்களின் மூலம் பெறப்படும் வருமானத்தில்தான் பல லட்சம் பேருக்கு இலவச அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

கோயில்கள் நடத்தும் 54 பள்ளிகளில் பிளஸ் 2 முடிக்கும் மாணவ மாணவியர்களுக்கு கல்லூரி படிப்பிற்கு 100% scholarship வழங்கப்படுகிறது.
முன்னாள் ராணுவ வீரர்களுக்கு திருக்கோயில் பாதுகாப்பு வேலை வழங்கப்பட்டு இருக்கிறது,

இதுதவிர மனநல காப்பகம் ,முதியோர் இல்லங்கள் ,சித்தா மருத்துவமனைகள், ஆங்கில மருத்துவமனைகளும் கோயில்களால் நடத்தப்பட்டு வருகின்றன,

வருடந்தோறும்ஏழைகளுக்கு கோவில் பணத்தில் இலவச திருமணங்கள் நடைபெறுகின்றன
அதுமட்டும் இல்லாமல் சுற்றுலா மூலம் அரசுக்கு வருமானம் வருகிறது,

கோவிலை புறம் பேசுபவர்கள் இனியாவது சமூக பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்,

தமிழர்களின் நாகரிகத்தின் மேல் போர் தொடுப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழர்களின் மத உணர்வுகளை காயப்படுத்துவதை கைவிட வேண்டும்.
மதம் மாற மூளை சலவை எந்த கோவில்களில் செய்யப்படுவதில்லை,

மருத்துவமனை முக்கியம், கல்வியும் முக்கியம் அதை சொல்லிவிட்டு போங்கள் தடுப்பதற்கு யாரும் இல்லை,

எதற்கு கோவிலை ஒப்பிட்டு பேசுகிறீர்கள்??

#நமச்சிவாய வாழ்க🙏
#SSR
நன்றி.
சித்தர்பூமி & ஆனந்தவிகடன்
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with SSR

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!