ஊரடங்கு இன்னும் முடியவில்லை. நாளை பெருநாளா நாளைக்கழிச்சுப் பெருநாளா தெரியவில்லை.
மாலை ஆறு மணிக்கு வீட்டிலுள்ள பிள்ளைகள் மொட்டை மாடியேறி பிறை தெரிகிறதா எனப் பார்த்தார்கள். இதுவரை தெரியவில்லை. நோன்பு இருபத்தி ஒன்பது முடிந்து விட்டது.
அந்த சிற்றூரின் ஐந்தாவது தெருவிலுள்ள மூன்றாவது வீட்டின் பாரூக் மட்டும் இன்று பிறை தெரியக்கூடாது என்று துவா செய்து கொண்டிருந்தான்.
என் துவாவைக் கேளு'. என்று மனத்தினுள் வேண்டிக் கொண்டிருந்தான்.
நிக்கிய லேய்' என்று மம்மது சத்தமிடவும் 'ஒ..'
என்று 'உம்மா இன்னா வந்திட்டேன்' எனக் கீழிறங்கி
வீட்டினுள் ஓடினான். '
தட்டிலயிருந்தா இறங்கி வாறே'
என்று அன்புடன் கூறிய தாயைக் கனிவுடன் பார்த்தான்.எதுக்கு உளிச்சேம்மா
ஒருவட்சம் நாள பெரு நான்னா இடியாப்பமும் உறட்டியும் செய்யணும். மாவு இல்ல .மக்களே . இப்பத்தான் பாத்தேன். வாப்பாட்ட செல்லுல செல்லிட்டேன். வாங்கி வச்சிரிக்கும்.
போளா ம்மா. வாப்பா வரும்போ கொண்டு வருமில்லா . வெறுதே நான் எதுக்குப் போணும்?
அங்க வச்சிட்டு வந்துன்னா
பெருநாளைக்கு என்ன செய்ய? சொப (சுபஹ்) தொழுதுக்கு மின்னயே மாவு கிண்டி வைச்சாதான் நேரம் சரியாவும்.
ஒனக்க கூட்டுக்காரனுக்க வீட்டுல கொடுக்காண்டாமா?
'ஓ... அப்ப நான் போறேன் '
பாரூக்கின் தந்தை கரீமின் காய்கறிக் கடையில் நல்ல வியாபாரம். சமூக இடைவெளி இல்லை
பாரூக்கைக் கண்டதும்
'வா மோனே. மாஸ்க்
போட்டுட்டு வந்தியா?
இங்கன இருந்து பைசாவ மட்டும் வாங்கி
பெட்டிலப் போடு மக்களே. நாம ஒண்ணிச்சு வீட்டுக்குத் திரும்பலாம்'
வெள்ளரிக்காய், கத்தரிக்காய் ,மாங்காய்
என அடித்துப் பிடித்து
வாங்கினார்கள். ஏழுமணிக்கு போலீஸார் வந்து கண் ஜாடையிலே
கடையைப் பூட்டச் சொன்னார்கள்.
'வாப்பா, அன்சருக்கு
வீட்ல சாதனம் ஆரு
வாங்கிக் கொடுப்பா. பாவம். நம்ம கொஞ்சம்
மரக்கறி கொண்டு குடுப்பமா?'
மாவுப் பொட்டலங்களை
எடுத்துக் கொண்டான்.
வாப்பா அன்சர் வீட்டுக்கு
வைத்திருந்த பையைப்
பார்த்தான். மொதல்லயே எடுத்து வச்சிட்டேன் மக்கா. ஆண்டவன் நமக்குத் தாரதில
எள்ளுப் போலத்தான் குடுக்கமுடியுது.
நமக்கு நெறய பைசா வந்தா
நெறயக் கொடுக்கலாம் மோனே'
தெரு வழியே வாப்பாவைப் போகச் சொன்னான்.
உட்பக்கம் தாழிட்டிருந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். அன்சரும் அவன் தங்கையும் கதவைத் திறந்து ஆவலுடன் எட்டிப் பார்த்தனர்.
'வ அலைக்கும் அஸ்ஸலாம்' என்று பதில் கூறியபடி இருசக்கர வண்டியின் கைப்பிடியில் தொங்கவிட்டிருந்த காய்கறிப் பையை எடுத்துக் கொடுத்தான் பாரூக்.
'அஸ்ஸலாமு அலைக்கும் மாமா என்று
கரீமிடம்
வ அலைக்கும் அஸ்ஸலாம் என்று பதில் கூறியபடி இருசக்கர வண்டியின் கைப்பிடியில் தொங்கவிட்டிருந்த காய்கறிப் பையை எடுத்துக் கொடுத்தான் பாரூக். 'நாளைக்கோ ஞாயிறாச்சயோ பெருநாளுக்கு நம்ம வீட்லயிருந்து சாப்பாடு வந்திரும் என்ன மக்கா?
'அவனையும் தங்கச்சியையும் மட்டும் நம்ம வீட்டுக்குக் கொண்டு போலாமா வாப்பா?
ஒருவரோடும் விளையாட முடியாது ஏங்கிப் போயிருந்தான்
பாரூக்.
'கொஞ்சம் பொறுதிப்படு மக்கா'
என்று மட்டும் சொன்னார்.
கொண்டு போய் அதற்குள்ளிருந்த பலகாரங்களையும்
காய்கறிகளையும் எடுத்து வைத்துக்
கொண்டிருந்தான்.
அவன் தாயார் அழுது
கொண்டிருந்தாள். ஆதரிக்க தாய் தகப்பனில்லாதவள்.
உதவி செய்பவர்களை உள்ளே அழைக்க முடியாத காலக் கொடுமை. யாரும்
தெருவைத் தாண்டி வருவது மில்லை. என்ன செய்ய?
கிணணத்தப்பம், சுக்கப்பம் எல்லாம்
கொண்டு வந்தாங்கோ.
அன்சருக்கு மம்மதுக்கு
மைதீனுக்கு எலலாருக்கும் கொடுத்தோம். இந்தப் பெருநாளைக்கு ஒருத்தருமே வரல'
'இதெல்லாம் ஷைத்தானுக்க வேலதான வாபபா' என்றான் பெரிய மனுஷன் போல.
என்று நினைக்கையில்
கைபேசி அலறியது.
அன்சரின் தாயார் குரல் 'காக்கா இஞ்ச கொஞ்சம் வரமுடியுமா?'
மனைவியையும் அழைத்துக் கொண்டு கரீம் அன்சர் வீட்டிற்கு
விரைந்தார். அங்கே அரசின் ஆம்புலன்சிலிருந்து ஒரு மெலிந்த மனிதர்
இறங்கினார் வீட்டினுள் செல்லுமுன் திரும்பி அனைவருக்கும் ஸலாம் கூறினார். அவ்வளவுதான்.
அல்லாஹூ அக்பர் ' என்ற முழக்கம் விண்ணதிர எழுந்தது. சுற்றிலும் அத் தெருவின் மக்கள் முகமலர்ந்து வரவேற்றனர். கரீம் தெருக்காரர்களை திகைப்புடன் நோக்கினார்.
இருபது நாட்களின் முன்பு
அன்சரின் கண்ணும்மா வழுக்கி விழுந்து விட
அக்கம் பக்கத்தினர்
எப்படியோ அந்த மூதாட்டியை மருத்துவமனையில் சேர்த்தார். கேரளாவின்
பண்ணையொன்றில்
வேலை பார்த்த அன்சரின் வாப்பாவிற்கு
தகவல் கூறினார்கள்.
அவரது சகோதரர்கள்
மும்பையில் பிழைக்கப் போயிருந்தனர். ஒத்தையில பிள்ளைகளைப் பார்த்துக் கொண்டு மனைவி தவிப்பாளே! எப்படி வர?
காரை நிறுத்திய
சுகாதார அதிகாரிகள் அனுமதிச் சீட்டைப் பார்த்தனர். இறங்கச் சொன்னார்கள்.
ஏற்கனவே மெலிந்த உடல் கவலையாலும்
வெயில் காய்ச்சிக் கொண்டிருந்தது.
இறங்கியதும் விசர்த்து வடிந்தவர் தும்மினார்.
முகக்கவசம் பறந்து விழ
அடுக்கடுக்காய்த் தும்மினார்.
பருவநிலை மாறுபாடு
என்று அதிகாரிக்குத் தெரியாதல்லவா?
உடனே தகவல்கள்
சேகரிக்கப்பட்டன.
ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டது.
கொண்டு வந்த பணம்
பொருட்கள் எல்லாம்
அவருடனே இருந்தன.
ரேசன் கடை அரிசியும் சிலர் கரீமிடம் கொடுத்தனுப்பிய
ஜகாத் பைசாவும் அவர்களின் வயிறு
வாடாமல் பார்த்துக் கொண்டன. அன்சரின் வாப்மாவின் மருந்துச்
செலவுக்கு கரீம் சிறிது பணம் கொடுத்தார்.
வாப்பாவை வரவேற்றதைப் பார்த்து மகிழ்வுடன் வீடு திரும்பினர் பாரூக்கின் பெற்றோர்.
'மோனே பாரூக்கு . அன்சருக்க வாப்பா வீட்டுக்குத் திரும்பியாச்சி.
இப்ப சந்தோசம்தானா?
என்று மகனிடம் கேட்டனர்.
மகிழ்ச்சியில் அவன் முகம் மலர்ந்தது.
வாப்பா? இன்னி அன்சரும் தங்கச்சியும் வாப்பாயத் தேடிக் கரைய மாட்டாங்கோ.
உம்மா நான் ஓடிப் போய்
மாமாயப் பாத்திட்டு வரட்டுமா?'
அவனுக்கு நண்பனின் சிரிக்கும் முகம் காண ஆசை.
'யா ரப்பே . இதுகளுக்க
மனம் கண்டாவது நீக்கம்பு சொவக்கேட்ட
தீத்து வை ரஹ்மானே'
அன்னை அரிசியை ஊறப் போட்டாள்.
'உம்மா கிண்ணத்தப்பமா செய்யப் போறம்மா?
அன்சரு வீட்டுக்குண்டா?'
' அப்போ ஒறட்டி கறியாணம் வேண்டாமா?
'ஓ..எனக்க உம்மா எனக்கு தாரதுபோல
அவனுக்கும் தருவான்
னு தெரியுமேன்னு'
என்று கூறிக் கொண்டு
அவளைக் கட்டி முத்தமிட்டான்.
பாரூக் கண்ணை மூடி வேண்டிக் கொண்டிருந்தான்.
கட்டாயம் பெற தெரியட்டும். அன்சருக்க வாப்பா வந்தாச்சு.'என்று கண்மூடி
நின்றான் .
'அன்னா பெற தெரியுது ' பிள்ளைகளின்
கூச்சலைக் கேட்டு
கண்களைத் திறந்து வானத்தைப்
பார்த்தான்.
இன்னமும் கருக்காத மேல்வானில் ஒரு மெல்லிய சந்தனக் கீற்றாய் பிறை இவனைப் பார்த்தது.
தட்டிலயிருந்தா-மாடியிலிருந்தா
உளி(விளி)-அழைப்பு
செல்லிட்டேன்-சொல்லிட்டேன்
வரும்போ-வரும்போது
வெறுதே-வீணாக
ஓர்மையில்லாது-நினைவின்றி, மறந்து
சுபஹ்-அதிகாலைத் தொழுகை
ஊரின் பெயர்
கிண்ணத்தப்பம்-இனிப்பு வட்டிலில் அவிப்பது
சுக்கப்பம்-காரம்
சீடை போலானது
பிடிமானம்-பற்றுதல்
ஷைத்தான்-சாத்தான்
இஞ்ச-இங்கே
இக் கதையில்
வாப்பாவின் அம்மா
கட்டாயக் கடமை
நீக்கம்பு சொவக்கேடு
-பாழாய்ப்போன நோய்
ரஹ்மானே-இறைவனே
ஒறட்டி-பச்சரிசிமாவு ரொட்டி
கறியாணம்-கறிக்குழம்பு