My Authors
Read all threads
திமுக எதிர்ப்புக்கு காரணம் எது..? யார்..?

திராவிட, திமுக எதிர்ப்புக்கு பின்னால் இரண்டு மிக முக்கிய சட்டங்கள் உள்ளது.
மன்னர் கால ஆட்சியிலும் அதற்கு பிறகான ஆங்கிலேயர்கள் ஆட்சியிலும் அனைத்திலும் பார்ப்பன ஆதிக்கமே இருந்தது. சுமார் 3.2 சதவிகிதம் மட்டுமே இருந்த பார்ப்பனர்கள் சகல துறைகளிலும் பெரும்பான்மையான வாய்ப்புகளை தாங்கள் மட்டுமே அனுபவித்து வந்தனர். முன்னர் மன்னர் காலங்களில் இருந்த அதிகாரமும்,
கல்வியும் அவர்களுக்கு இந்த நிலையை கொடுத்திருந்தது.
அரசுக் குழு ஒன்றின் நிலை ஆணை (Board's Standing order - 128(2)), '"அரசு வேலைகளில் ஒரே ஒரு சாதியாரின் ஆதிக்கம் இருப்பதை" 9.3.1894 அன்று வெளியிட்டது.
இதன் பின்னர் பார்ப்பனர் அல்லாதவர்களின் நலனுக்காக பலரால் பல முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டன. பார்ப்பனர் அல்லாதவர்களுக்கான ஒரு அரசியல் இயக்கமாக 1916ல் நீதிக்கட்சி தொடங்கப்பட்டது.
1920 ல் ஆட்சி அமைத்த நீதிக்கட்சி அனைத்துத் வகுப்பினர்க்கும் கல்வி வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் முதல இட ஒதுக்கீடு மசோதாவை 1921ல் நிறைவேற்றியது. அது சட்டமாக 1927 நவம்பர் 4ல் நடைமுறைக்கு வந்தது.
அதுவரை கல்வி, அரசு வேலை வாய்ப்பு எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பார்ப்பன ஆதிக்கத்துக்கு இது பெரிய இடியாக அமைகிறது.
1928 முதல் 1950 வரை இடஒதுக்கீடு சட்டம் பின்பற்றப்பட்டு வந்தது. இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த செண்பகம் துரைராஜன் மற்றும் அதே பார்ப்பன சமுதாயத்தை சார்ந்த மாணவர் சீனிவாசன் என்பவராலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் 6/6/1950ல் வழக்கு தொடுக்கப்பட்டது.
27/7/1950ல் இட ஒதுக்கீடு செல்லாது என்று நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

அப்போது நீதிக்கட்சி திராவிடர் கழகம் என்ற பெயரில் பெரியார் தலைமையில் இயங்கி வந்தது. எந்த நீதிக்கட்சி இட ஒதுக்கீடு சட்டம் இயற்றியதோ அதன் தலைவராக தற்போது இருந்த பெரியார்,
மீண்டும் இட ஒதுக்கீட்டை வழங்கும் வகையில் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி போராட்டத்தை முன்னெடுத்தார்.

இந்தத் தீர்ப்பால் மக்களுக்கு ஏற்பட இருக்கிற ஆபத்தை உணர்த்துகிற வகையில்,
"30 ஆண்டுகளாக நாடு முழுவதும் நல்லறிவாளர்கள் பேசிப் பேசி ஆதரவு திரட்டினர். அந்த வகுப்புவாரி முறை, இதோ சட்ட விரோதம் என்று ஆகிவிட்டது. அமைச்சர்களே என்ன செய்யப்போகிறீர்கள்? சமூக நீதியைக் காக்கப் போரிடப் போகிறீர்களா? அல்லது சந்து பொந்து தேடி அலையப்போகிறீர் களா? நேர்மையாளர்களே!
நாட்டுத் தலைவர்களே! நிலைமையைக் கவனியுங்கள். எதிர்கால வேலைத் திட்டம் என்ன?" என்று உரிமைக் குரல் எழுப்பினார் திமுக தலைவர் அறிஞர் அண்ணா. (அப்போது அண்ணா எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு பொன் விலங்கு என்ற தலைப்பில் உள்ளது.)
திக, திமுக மற்றும் மாணவர்கள் போராட்டத்தை கையில் எடுத்தனர். போராட்டம் பெரிய அளவில் சென்றதால் மத்திய அரசு பணிந்தது.

2.6.1951 அரசியல் அமைப்புச் சட்டம் திருத்தப்பட்டு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
18.6.1951ல் அந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவரால் ஒப்புதல் வழங்கப்பட்டது. திக, திமுக, தமிழர்களால் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் முதல் முறையாக திருத்தப்பட்டது.
நீதிக்கட்சியால் பறிபோன அதிகாரம் நீதிமன்றத்தால் கிடைத்தது என நினைத்த பார்ப்பனர்கள் நினைப்பு பெரியார், அண்ணாவால் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. திராவிட எதிர்ப்புக்கு பின்னால் இருக்கும் முதல் சட்டம் இது.
இரண்டாவதாக அதே நீதிக்கட்சி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இன்னொரு முக்கிய சட்டம், இந்து சமய அறநிலைய சட்டம்.

1924 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் சட்டமன்றத்தில் இந்து சமயத் அறநிலையத்துறை மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.
நிறைவேற்றப்பட்ட மசோதா வைசிராயினுடைய கையொப்பம் பெற்று 1925 ஆம் ஆண்டு ஜனவரியில் சட்டமாக்கப்பட்டது.

1925 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. சில மாற்றங்களுடன் 1926 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 இல் மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறநிலையச் சட்டம் உருவானது.
அதுவரை கோயில், கோயில் நிர்வாகம், கோயில் சொத்துக்களில் பார்ப்பன ஆதிக்கமே இருந்து வந்த நிலையில், இந்த சட்டத்தால் அவர்கள் ஆதிக்கம் குறைந்தது.

இட ஒதுக்கீடு, இந்து சமய அறநிலைய சட்டம் இது இரண்டும் பார்ப்பன ஆதிக்கத்தை முடக்கியது.
மொழியில் உயர்ந்தது சமஸ்கிருதம், மனிதனில் உயர்ந்தவர் பார்ப்பனர் என்று இருந்த நிலையை உடைத்தது திராவிட இயக்கம். இதுவே நீதிக்கட்சி, திக, திமுக வரை அவர்கள் கோபம் தொடர காரணம்.

பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று 1974-ல் சட்டம் இயற்றி கோயில்
கோயில் கருவறையிலும் இட ஒதுக்கீட்டை ஏற்படுத்தி பார்ப்பன ஆதிக்கத்தை தடுக்க பார்த்தார். இதன் பிறகு அவர்கள் திமுகவை எதிரியாகவே பார்க்க தொடங்கினர்.
இட ஒதுக்கீடு சட்டத்தின் தொடர்ச்சியாக திமுக மத்திய ஆட்சியில் பங்கு பெற்று சமூக நீதிக் காவலர் பிரதமர் வி.பி.சிங் அவர்களால் இந்தியா முழுமைக்கும் (BC+MBC) பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டு சட்டத்தை நிறைவேற்றியதால் பார்பனர்கள் பரம்பரை எதிரியாகவே திமுகவை கருத தொடங்கினர்.
அது மட்டுமல்லாமல் அதுவரை பக்தி இலக்கியங்களை மட்டுமே உயர்த்தி பிடித்திருந்ததை மாற்றி, திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற தமிழ் நூல்களை கலைஞர் உயர்த்தி பிடித்தார். திருக்குறளையும், திருவள்ளுவரையும் தமிழின் ஒரே அடையாளமாக கலைஞர் மாற்றினார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை கலைஞர் பெற்றார்.
அதுவரை சமஸ்கிருதமே உயர்ந்த மொழி என்று காட்டப்பட்டு வந்த பிம்பம் கலைஞரால் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்த காலத்திலுமா பார்ப்பன ஆதிக்கம் என்று கேட்கலாம், மத்திய அரசு செயலாளர்கள் 89 பேரில் OBC (BC+MBC) ஒருவர் கூட இல்லை. (ஆதாரம் கீழே)
இட ஒதுக்கீடு சட்டம் இருக்கும் இந்த காலத்திலேயே இப்படி என்றால் அந்த காலத்தில் எப்படி இருந்து இருக்கும் என்று எண்ணி பாருங்கள். அதே நேரத்தில் இட ஒதுக்கீடு சட்டம் இருக்கும் இந்த காலத்திலும் பாஜக அரசு யாருக்கான அரசாக இருக்கிறது என்பதையும் பாருங்கள்.
பாஜகவின் எண்ணத்திற்கும் செயலுக்கும்
அனைத்து வகையிலும் எதிராகவும், தடுப்பாகவும் இருக்கும் இயக்கம் திமுக. எனவே தான் திமுகவை எந்த வகையிலாவது முடக்க முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

தற்போது தேர்தல் அரசியலால் பலரும் திமுகவை எதிர்த்தாலும் அவர்களுக்கு பின்னால் கண்ணுக்கு தெரியாத ஒரு நூல் ஆதரவு இருக்கும்.
திமுகவை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை ஆதரிப்பார்கள். திமுக மீது ஊழல் குற்றச்சாட்டு சொல்லிவிட்டு, திமுகவை எதிர்ப்பவர் ஊழல் குற்றவாளியாக தண்டனை பெற்று இருந்தாலும் அவர்களை ஆதரிப்பார்கள். திமுக மீது நில அபகரிப்பு குற்றச்சாட்டு சொல்லிவிட்டு,
திமுகவை எதிர்ப்பவர் அரசு நிலத்தையே அபகரித்து இருந்தாலும் ஆதரிப்பார்கள். திமுக மீது சாதிய குற்றச்சாட்டு சொல்லிவிட்டு, திமுகவை எதிர்ப்பவர் சாதித் தலைவராக இருந்தாலும் ஆதரிப்பார்கள். திமுகவை எதிர்த்தவர்கள், தேர்தல் அரசியல் காரணங்களுக்காக ஆதரிக்க தொடங்கினால்
அடுத்த நிமிடமே அவர்களை போற்றியவர்களாலேயே மிக மோசமாக தூற்றப்படுவார்கள.

திமுக எதிர்ப்புக்கும் ஆதரவுக்கும் இடையில் இருப்பது ஒரு நூல் (இடைவெளி) தான்

#DMKFacts
Missing some Tweet in this thread? You can try to force a refresh.

Enjoying this thread?

Keep Current with Babu Vmk

Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

Twitter may remove this content at anytime, convert it as a PDF, save and print for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video

1) Follow Thread Reader App on Twitter so you can easily mention us!

2) Go to a Twitter thread (series of Tweets by the same owner) and mention us with a keyword "unroll" @threadreaderapp unroll

You can practice here first or read more on our help page!

Follow Us on Twitter!

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3.00/month or $30.00/year) and get exclusive features!

Become Premium

Too expensive? Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal Become our Patreon

Thank you for your support!